Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'ஆதிகேசவன்' பாணி மோசடி-இரு நைஜீரியர்கள் கைது ஏப்ரல் 10, 2007 சென்னை: வெளிநாட்டு நிதியுதவி பெற்றுத் தருவதாக சென்னை ஆதிகேசவன் பாணியில் ஏமாற்றி பணம் பறிக்க முயன்று, பணம் கொடுக்காத ஆத்திரத்தில், கட்டுமான காண்டிராக்டரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய நைஜீரிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பல கோடி பணத்தை ஸ்வாஹா செய்து இப்போது கைதாகி கம்பி எண்ணி வருகிறார். அதே பாணியில், சென்னையைச் சேர்ந்த சிலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற இரு நைஜீரிய இளைஞர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர…

  2. ஓடு பாதையில் இருந்து விலகி மண்ணில் சிக்கிய டெல்லி விமானம்: 169 பயணிகள் உயிர் தப்பினர் புதுடெல்லி, ஏப். 9- தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி வந்தது. 169 பயணிகள் இருந்தனர். சர்வதேச விமான நிலையத்தில் காலை 6.26 மணிக்கு தரை இறங்கியது. அப்போது விமானத்தின் சக்கரங்களை இயக்கும் கியர் சரியாக வேலை செய்ய வில்லை. இதன் முன் சக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டது. இதனால் விமானம் ஓடு பாதையைவிட்டு விலகி மண்ணில் ஓடி நின்றது. ஓடு பாதையைவிட்டு விலகி ஓடினாலும் விமானம் வேறு எந்த பொருளிலும் மோதவில்லை. நிலை தடுமாறி கவிழவும் இல்லை. சக்கரங்கள் மண்ணில் சிக்கி அப்படியே நின்று விட்டன. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் …

  3. பிரிட்டிஷ் இளவரசரின் இராணுவ நண்பர் ஈராக் குண்டுவெடிப்பில் பலி [09 - April - 2007] பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் நெருங்கிய நண்பரும், இராணுவ வீரருமான ஜோன்னா யார்க் டையர் ஈராக்கில் நடந்த கார்குண்டு வெடிப்பில் பலியானார். ஈராக்கில் முகாமிட்டுள்ள பிரிட்டன் படையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜோன்னா யார்க் டையர் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் நெருங்கிய நண்பர். பிரிட்டனில் சான்தர்ஸ்ட் மிலிட்டரி அகாடதமியில் இருவரும் ஒன்றாக பயிற்சி பெற்றவர்கள். டையர் வியாழக்கிழமை சக வீரர்களுடன் ஈராக்கின் பார்ஸா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த குண்டு வெடித்ததில் டையர் உட்பட 4 வீரர்கள் பலியாயினர். `டையர் இறந்த தகவல் கேள்விப்பட்டதும், இளவரசர் …

  4. அமெரிக்காவை அதிர வைக்கும் ஜிஹாத் இணையத் தளங்கள் ஆப்கானிஸ்தானில் செப்டெம்பர் 11 இற்கு பின்னர் பாரிய தோல்வியை சந்தித்த அல்-ஹைடா மீண்டும் பலம் பொருந்திய அமைப்பாக சர்வதேச அளவில் ஒன்றிணைந்தமைக்கு ஜிகாத்தின் இணையத்தளங்களின் செயற்பாடுகளே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி ஆப்கானிஸ்தானில் உள்ளதாக வெப் தளங்களில் செய்தி பரவி, சில நிமிடங்களில் அவர் இருந்த பகுதியில் தாக்குதல் இடம்பெற்றது. "இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதமயப் படுத்தப்படுவதற்கு இணையமே எவ்வித சந்தேகமுமின்றி முக்கிய காரணம்" என்கிறார் பிரிகேடியர் ஜெனரல் ஜோன் கஸ்டா. ஈராக், ஆப்கானிஸ்தானிற்கான மத்திய கட்டளைப் பீடத்தின் புலனாய்வு பிரிவின் தலைவராக இவர் பணி…

  5. தூய்மையான நகரம்: சென்னைக்கு 2வது இடம் ஏப்ரல் 08, 2007 பெங்களூர் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. 2வது இடம் சென்னைக்கு கிடைத்துள்ளது. லைப்பாய் சோப்பு நிறுவனம் நாட்டிலேயே சுகாதாரமான, ஆரோக்கியமான நகரம் எது என்ற கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இதில் நாட்டிலேயே மிகவும் சுகாதாரமான, ஆரோக்கியமான நகர் என்ற பெருமை சண்டிகருக்குக் கிடைத்துள்ளது. இந்த நகருக்கு 144 புள்ளிகள் கிடைத்துள்ளது. 2வது இடம் சென்னைக்குக் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தை கொல்கத்தா பிடித்துள்ளது. பெங்களூர் 4வது இடத்தில் உள்ளது. சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக லைப் பாய் …

    • 8 replies
    • 2.1k views
  6. சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் கிடுகிடு உயர்வு --------------------------------------------------------- சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது.சிங்கப ்பூர் பிரதமர் லீ சீயன் லூங்க், அமெரிக்க அதிபர் புஷ்ஷை விட மூன்று மடங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை விட நான்கு மடங்கு அதிகமாகவும் சம்பளம் பெற்று வருகிறார். லூங்கின் ஆண்டு வருமானம் 19 லட்சம் சிங்கப்பூர் டாலர். அவரின் அமைச்சரவை சகாக்கள், ஆண்டுக்கு 12 லட்சம் டாலர்கள் சம்பளம் பெறுகின்றனர். ஆனாலும், "அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சம்பளம், தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவாகவே இருக்கிறது' என கூறியதால், அரசாங்க பதவிகளுக்கு சம்பள…

  7. துõத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலைச் சுற்றி ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு கேட்டு தொந்தரவு செய்யும் போது சில நேரங்களில் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அது குறித்து கோவில் இணை ஆணையர் ராமராஜூ போலீசில் புகார் செய்தார்.டி.எஸ்.பி.,சாமித்஠?ுரை வேலு மற்றும் போலீசார் நேற்று கோவில் வளாகத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களைப் பிடித்தனர். அவர்களில் 50 ஆண்களை மட்டும் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து மாஜிஸ்திரேட் நாகேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் வேலூர் மேல்பாக்கத்திலுள்ள அரசு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். பெண்கள், உடல் நலம் குன்றியோர், ஊனமுற்றோர் போன்றோரை பஸ…

    • 15 replies
    • 2.4k views
  8. ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம் ஏப்ரல் 07, 2007 விழுப்புரம் விழுப்புரம் அருகே கார் ஒன்று மர்மமான முறையில் வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த 3 பேர் இறங்கினர். காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை ச…

  9. http://www.bbc.co.uk/tamil/ உங்கள் வாக்கு இலங்கையின் கூட்டு கடல் ரோந்து நடவடிக்கை திட்டம் தமிழக மீனவர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை கருத்து இல்லை முடிவுகள், பொதுமக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் என்ற அவசியமில்லை

    • 31 replies
    • 3.6k views
  10. நாய் செத்ததால் தம்பதி தற்கொலை! கர்நாடக மாநிலம் ஹுசூர் என்ற இடத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (66), அவரது மனைவி தாரா பாய் (63) ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள மீராபேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து அந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் சோதனை போட்டார்கள். அப்போது அங்கு ஒரு கடிதம் காணப்பட்டது. அதில், தாங்கள் பிரியமாக வளர்த்து வந்த நாய் செத்துவிட்டதால், அதன் பிரிவு தாங்காமல் சாக முடிவெடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். வயதான காலத்தில் தங்களுக்கு ஆதரவாக இருந்த "பப்பி'' என்ற நாய், இறந்த…

    • 11 replies
    • 2k views
  11. முன்னாள் ராணுவ வீரரை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற சம்பவம்: எஸ்.பி.க்கு சிறை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை கை விலங்கிட்டு இழுத்துச் சென்ற வழக்கில் முன்னாள் மாவட்ட (காஞ்சிபுரம்) காவல் கண்காணிப்பாளருக்கு, ஒருமாத சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. வாடிப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் நல்லகாமன் (74). இவர், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் பைரவ்சிங் வீட்டில் 1976-ல் ஒத்திக்கு குடியிருந்தார். அப்போது வீட்டைக் காலி செய்யுமாறு பைரவ்சிங் கூறியபோது, ஒத்திப் பணத்தை தந்தால் வீட்டைக் காலி செய்வதாக நல்லகாமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காவலர் பைரவ்சிங் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தா…

  12. கர்ப்பிணி நாடகமாடி குழந்தை கடத்திய பெண் கிருஷ்ணகிரி 10 மாதமாக வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு கர்ப்பிணியாக நாடகமாடி, தனது கணவர் வீட்டை ஏமாற்றியதோடு, மருத்துவமனையில் குழந்தையைத் திருடி, அதை தனது குழந்தை என்றும் கூறிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேர்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி விமலா. இவருக்கு குழந்தை இல்லை. இதனால் கொளஞ்சிக்கு 2வது கல்யாணம் செய்ய அவரது வீட்டினர் திட்டமிட்டனர். இதனால் பயந்து போன விமலா, தனது வாழ்க்கையைக் காப்பாற்ற எண்ணி ஒரு திட்டம் போட்டார். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் கர்ப்பமாக இருப்பாக கணவர் வீட்டாரிடம் தெரிவித்தார். இதனால் சந்தோஷமடைந்த கொளஞ்சியின் குடும்பத்தினர் வ…

  13. கம்பியூட்டர் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கடத்தியதாக அமெரிக்காவில் இந்தியர் கைது இந்திய ஏவுகணை திட்டம் மற்றும் ஆயுத தயாரிப்புக்கு அமெரிக்க கம்பியூட்டர் தொழில் நுட்பங்களை கடத்தியதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது;இந்தியாவை சேர்ந்தவர் பார்த்தசாரதி சுதன். தெற்கு கலிபோர்னியாவில் `சிர்ரஸ்' என்ற கம்பியூட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பொய் ஆவணங்களை காட்டி அமெரிக்க தயாரிப்பாளர்களிடம் பாதுகாக்கப்பட்ட கம்பியூட்டர் பாகங்களை வாங்கியதாகவும் சிர்ரஸ் நிறுவனம் சிங்கப்பூர் அலுவலகம் மூலமாக இந்தப் பாகங்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கம…

  14. இணைந்தோம் பிரிந்தோம் பாங்காக்: தாய்லாந்தைச் சேர்ந்த 9 மாத பெண் குழந்தைகளான இந்த இருவரும் சிக்கலான கோணத்தில் ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள். இருவரின் இதயங்கள், கல்லீரல்கள் பின்னிப் பிணைந்து கிடந்தன. இவர்களைப் பிரிப்பது மிகவும் ஆபத்தாக கருதப்பட்டது. எனினும், பாங்காக்கில் உள்ள சிரிராஜ் மருத்துவமனை டாக்டர்கள் இதை சவாலாக எடுத்துக் கொண்டனர். இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் 5 பேர் உட்பட 61 டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் இணைந்து இந்தக் குழந்தைகளை மாரத்தான் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தனர். இதயம், கல்லீரல் ஒட்டிப் பிறந்த ரெட்டையர்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாகப் பிரித்தது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. ht…

  15. சட்டசபையில் ஆபாச கூச்சல்-செருப்பு காட்டல்: 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! ஏப்ரல் 05, 2007 சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களை நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர். ஆபாசமாக கூச்சலிட்டபடியும், செருப்பைக் காட்டியும் அவர்கள் கோபமாக பேசியதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. 4 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டசபையில், இன்று பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனது துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து சி…

  16. ஈரானில் பாரிய தாக்குதலை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் போராளிகளுக்கு அமெரிக்கா உதவி [05 - April - 2007] [Font Size - A - A - A] ஈரானுக்குள் அதிகளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய கெரில்லா தாக்குதலொன்றை நடத்துவதற்கு பாகிஸ்தான் போராளிக் குழுவொன்றுக்கு அமெரிக்கா இரகசியமாக ஆலோசனைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்கி வருவதாக அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி ஏ.பி.ஸி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இத் தாக்குதலின் இலக்கு ஈரானிய அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உயிர்ச் சேதத்தை விளைவிப்பது அல்லது அவர்களை உயிருடன் பிடிப்பதாகும். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்…

  17. புவி வெப்பமடைதல் தொடர்பான வழக்கில் புஷ்ஷிற்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு புவி வெப்பமடைவதற்கு காரணமாகவுள்ள பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு உள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றம், புஷ் நிர்வாகத்திற்கு இதன் மூலம் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன்ட் டி ஒக்சைட்டையும் ஏனைய வாயுக்களையும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்ற தனது கொள்கையை அமெரிக்க சூழல் பாதுகாப்பு அமைப்பு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பச்சைக் குடில் வாயுக்கள் அவ்வாறு வெளியேறுவது வளி மாசடைதலுக்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரி…

  18. 575 கி.மீ., வேகத்தில் ஓடும் மின்னல் ரயில் : புதிய சாதனை படைத்தது பிரான்ஸ் அரசு பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நேற்று, மணிக்கு 574.8 கி.மீ., வேகத்தில் அதிவேக மின்னல் ரயில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. அதிவேக ரயில்கள் தயாரிப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தண்டவாளத்தில் செல்லும் ரயில்களில் அதிவேக ரயில் என்ற சாதனை பிரான்சில் தான் முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1990ல் மணிக்கு 515 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு இச்சாதனை படைக்கப்பட்டது. ஜப்பானில் 2003ல் காந்த சக்தியால் இயங்கும் ரயில் மணிக்கு 581 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. உலகளவில் இது தான் அதிவேக ரயில். ஆனால், இந்த ரயில் தண்டவாளத்தில் செல்லாமல் அதற்கு மேலே வழுக்கிக் கொ…

  19. கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை ஏப்ரல் 03, 2007 டெல்லி: உலகிலேயே முதன்முதலாக கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை டெல்லியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை 108 அடி உயரத்தில் அனுமன் நின்ற நிலையில் விஸ்வ ரூப தரிசனம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 13 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு மற்றொரு முக்கிய சிறப்பம்சமும் இந்த அனுமன் சிலையில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு, பட்டனை இயக்கினால் அனுமன் இதயப்பகுதி திறந்து உள்ளிருந்து தங்கத்தாலான ராமர்-சீதா சிலை வெளியே தோன்றி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அனுமன் சிலையை பற்றிய தகவல்களை கின்னஸ் புத்தகத்தில் இ…

  20. மலேசியாவில் உலக தமிழ் பண்பாட்டு மாநாடு ஏப்ரல் 03, 2007 சென்னை: உலக தமிழ் பண்பாட்டு மாநாடு மலேசியாவில் நடக்கவிருக்கிறது. இதுக்குறித்து உலகத் தமிழ் பண்பாடு மாநாட்டின் இந்திய ஒருங்கிணைப்பாளர் அறவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பண்பாட்டு இயக்கம் மற்றும் மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலேசிய நாட்டு தலைநகரான கோலாலம்பூரில் உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு ஜூலை மாதம் 20,21,22 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. கட்டுரையாளர்கள் இந்த மாநாட்டுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி அனுப்பலாம். உலகத் தமிழர்களின் நிலை என்ற பொதுத் தலைப்பிலும், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை அன்று முதல் இன்று வரை என்ற சிறப்பு தலைப்பிலும் …

  21. வட மேற்கு பாகிஸ்தானில் பனி மழையால் பலர் மரணம் [03 - April - 2007] பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் பனி மழை காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிட்டிரால் பிராந்தியத்தின் வசிஜ கிராமத்தில் சனிக்கிழமை பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக பலர் காணாமல் போயுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனி மழை காரணமாக 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 வீடுகள் புதையுண்டுள்ளதுடன் 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தினக்குரல்

  22. தேர்தல் பிரசாரத்துக்காக நிதி திரட்டியதில் சாதனை படைத்தார் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் ஹிலாரி கிளின்டன் தனது பிரசாரத்திற்காக பெருமளவு நிதியை திரட்டியுள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னர் போட்டியிட்டவர்கள் திரட்டியதை விட அதிகமென தெரிவிக்கப்படுகின்றது. 2007 இன் முதலாவது காலாண்டுப் பகுதியில் ஹிலாரி 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டியுள்ளதாக அவரது பிரசார முகாமையாளர் தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி அல்-கோர் திரட்டிய தொகையை விட இது பல மடங்கு அதிகம். ஜனநாயக கட்சி சார்பில் 2008 இல் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரியே போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. …

  23. மேடையிலிருந்து விழுந்தார் இந்திய அமைச்சர் இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமதுக்கு சனிக்கிழமை இரவு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பஹ்ரைனில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கும்போது 5 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பஹ்ரைன் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த முருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிஃபா ஞாயிறுக்கிழமை அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். thinakkural.com

    • 3 replies
    • 1.3k views
  24. ஈரானில் பிரிட்டிஷ் தூதரகம் மீது கல்வீசி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ், தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கற்களை வீசியெறிந்துள்ளதுடன், வெடிகளையும் வீசியுள்ளனர். பிரிட்டனின் கடற்படையினர் ஈரானிய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஈரானை அடிபணிய வேண்டாம் என கோரும் கடும்போக்கு மாணவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனுக்கு மரணம், பிரிட்டிஷ் தூதுவரை நாடுகடத்த வேண்டும் என அவர்கள் கோஷமெழுப்பியுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும். பிரிட்டிஷ் கடற்படையினரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும…

    • 1 reply
    • 803 views
  25. 14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம் ஏப்ரல் 03, 2007 டெல்லி: தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.