உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26592 topics in this forum
-
மனித உரிமை மீறல்கள் : சென்னையில் 'மனிதம்" நடத்திய கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாக அரங்கில் 'மனித உரிமை மீறல்கள்" என்ற தலைப்பில் 09-12-2006 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மனித உரிமை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான மனிதம், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் திரு. அக்னி சுப்பிரமணியம் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களை வரவேற்றார். கருத்தரங்க தலைமையுரை ஆற்றிய திரு. பழ. நெடுமாறன் அவர்கள், 'மாந்த உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் நம் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லாச் சுதந்திரங்களுடன் வாழ்வதும், …
-
- 2 replies
- 1.1k views
-
-
சிலி நாட்டில் 1973 இல் சதிப் புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்றிய இராணுவ சர்வாதிகாரி Augusto Pinochet (ஒகஸ்ரோ பினோசே) தனது 91வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவர் தான் ஆட்சி புரிந்த 17 ஆண்டு காலத்தில் சிலியில் பல மனித உரிமை மீறல் குற்றங்களைச் செய்ததுடன் 3000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தவர். இருப்பினும் அதற்கான தண்டனையை இவர் அனுபவிக்கவில்லை. பினோசேக்கு எதிரான மக்கள் அவரின் இழப்புக் குறித்து வருத்தம் தெரிவிக்காத நிலையில் அவரின் இறுதி நிகழ்வுகளின் போது அரச மரியாதைக்குப் பதில் சாதாரண இராணுவ மரியாதைகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. உலகின் கொடிய இராணுவ சர்வாதிகாரிகளில் இவரும் ஒருவர். http://news.bbc.co.uk/1/hi/world/americas/6167237.stm
-
- 0 replies
- 864 views
-
-
சென்னை : சென்னையிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்தது ரயில்வே துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாக் காலங்களிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் குறிப்பிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது ரயில்வே துறையின் வாடிக்கை. சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து முன்கூட்டியே பத்திரிக்கைகள், டிவி செய்திகள் மூலமாக தெரிவிப்பதும் வழக்கம். ஆனால் 'கூட்ட நெரிசல்' காரணமாக விடப்பட்ட சிறப்பு ரயில் ஒன்றில், ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்த வினோதம் நடந்துள்ளது. சென்னையிலிருந்து வாரணாசிக்கு 2 நாட்களுக்கு முன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் …
-
- 1 reply
- 1.8k views
-
-
கேரள மாநிலம் பந்தளம் அருகில் அச்சன்கோவில் ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று மாலை இங்கு ஒரு இளம்பெண் குளிக்க வந்தார். அவர் குளிக்க தொடங்கிய போது சில வாலிபர்கள் அங்கு வந்து குளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த பெண்ணோ இங்கு பெண்கள் மட்டும்தான் குளிக்கலாம் என கூறினார். பின்னர் வாலிபர்கள் தங்கள் கையிலிருந்த மொபைல் போனால் அந்த பெண் குளிப்பதை படம் பிடிக்க தொடங்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெண்கள் குளிக்கும் இடத்தில் வந்து படமா எடுக்கிறீர்கள் என கேட்டு தர்ம அடி கொடுத்தனர். அவர்களை பிடித்து பந்தளம் போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீஜித், சுஜீத், தாரிஷ் ஆகிய 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். Thanks:Maalaimalar...
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு இரமநாதன் மகளிர் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், புதிய மாணவர்களிடம் நன்கொடையாக அதிக பணம் வாங்கி
-
- 26 replies
- 5.3k views
-
-
சினிமா பாட்டுப்பாடி கிண்டல் ரோட்டில் சிறுமியை கட்டிபிடித்த வாலிபர் கைது சென்னை, டிச. 7: சினிமா பாட்டுப்பாடி சிறுமியை நடுரோட்டில் கட்டிப்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங் கரைபட்டு அருகே உள்ள பாலவாயலை சேர்ந்தவர் ராமு என்கிற ராம்குமார் (வயது 25). இவர் வேலை எதுவும் பார்க்காமல் டிப்டாப்பாக ஆடை அணிந்து கொண்டு ரோட்டில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது வாடிக்கை என்று கூறப் படுகிறது. நேற்று மாலை ஒரு 16 வயது சிறுமி கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அந்த சிறுமியை பார்த்து "லூசு பெண்ணே! லூசுப் பெண்ணே!!' என்று வல்லவன் படத்தில் வரும் சினிமா பாட்டை பாடியபடி அந்த சிறுமியின் கையைப் பிடித்து நடனமாடுவதுபோல் இழுத்து நடுரோட்டிலேயே…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருப்பதி எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்கலாம் டிசம்பர் 04, 2006 திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விசேஷ நாட்களில் திருப்பதி ஏழுமலையன் கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேர்த்தி கடன் செலுத்தலாம். நாடு முழுவதிலும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள் 6060 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் ஏழுமலையானுக்கு தோங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படும். இத்திட்டத்துக்காக சென்னையைச் சேர்ந்த டெக் ஸோன், திருப்பதியை சேர்ந்த டிசிசி நிறுவனங்கள் தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்விரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் சேவை டிக்கொ…
-
- 7 replies
- 1.8k views
-
-
சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ஆபாசப் படம் பார்த்து, தன்னிடம் குறும்பு செய்ததாக அதே பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி (32), பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் நான் வேலை பார்த்து வந்தேன். அதே பள்ளியில் ஆசிரியராக சுந்தரராஜன் (51) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது நடவடிக்கைகள் படு மோசமாக இருக்கும். பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் பாட நேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்பு கதவு பூட்டப்பட்டு இருந்…
-
- 1 reply
- 977 views
-
-
திருவனந்தபுரம்: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்கள் பெற கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரிய¬ம், தபால் துறையும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரசாதத்தை தபால் மூலம் பெற செயல் அதிகாரி, திருவாங்கூர் தேவஸ்ம் போர்டு, சபரிமலை, பத்தனம்திட்டா, பின்கோடு 689713 என்ற முகவரிக்கு ரூ. 210 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புவோருக்கு ஒரு டின் அரவணை பாயாசம், ஒரு பாக்கெட் அப்பம், ஒரு பாக்கெட் பஸ்மம் மற்றும் சந்தன வில்லைகள், 10 மில்லி அபிஷேக நெய், ஒரு பாக்கெட் மாளிகைபுரத்து அம்மனின் மஞ்சள் மற்றும் குங்குமம், ஒரு பாக்கெட் வாவர் சுவாமியின் மிளகு மற்றும் விபூதி, ஒரு ஐயப்பனின் …
-
- 2 replies
- 1.2k views
-
-
40 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை தம்வசம் வைத்திருந்த பெண்மணி கைது. 40 லட்சம் ரூபா வரை பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை தம்வசம் வைத்திருந்த பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரவிருந்த பேரூந்து ஒன்றில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 50 வயதான பெண்மணி என காவல்துறையினர் தெரிவித்தனர். கைப்பற்ற வெளிநாட்டு நாணயங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. www.pathivu.com
-
- 1 reply
- 1.3k views
-
-
பிஜி தீவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது அந்நாட்டின் நாடாளுமன்றமும் முடக்கப்பட்டுள்ளது. [Tuesday December 05 2006 01:09:11 PM GMT] [யாழ் வாணன்] பிஜி தீவில் அரசு அதிகாரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அந்நாட்டின் நாடாளுமன்றமும் முடக்கப்பட்டுள்ளது. சுவா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா இத்தகவலை வெளியிட்டார். இதையடுத்து, பிஜி தீவில் கடந்த 20 ஆண்டுகளில் 4வது முறையாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிரதமர் லைசெனியா கராசியின் தலைமையிலான அரசு பல ஊழல்களை செய்துள்ளதாகவும் ராணுவத் தளபதி குற்றம்சாட்டினார். ராணுவப் புரட்சி ஏற்பட்டதையடுத…
-
- 5 replies
- 1.4k views
-
-
டிசம்பர் 05, 2006 சென்னை: பரங்கிமலை மேல் உள்ள சர்ச் வளாகத்தில் சமீபத்தில் நடந்த கொலை தொடர்பாக கைதாகியுள்ள 'சைக்கோ சாமி' ரமேஷ் பாபுவின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் இப்போது படு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். பரங்கிமலையின் மீது அமர்ந்துதான் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (செயின்ட் தாமஸ்) கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை மேற்கொண்டார். கி.பி. 72ம் ஆண்டு அவரை ஈட்டியால் குத்தி ஒருவர் கொலை செய்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு அப்பாவியின் ரத்தம் பரங்கிமலையை நடுங்க வைத்துள்ளது. நவம்பர் 26ம் தேதி சர்ச் வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளரான ஜேக்கப்பை ஒரு நபர் வெறித்தனமாக குத்திக் கொன்றான். மாலையில் நடந்த கொடூரக் கொலை, பல நூ…
-
- 3 replies
- 1.8k views
-
-
இராக்கில் வெற்றிபெறவில்லை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஒப்புதல் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க செனட் குழுவின் முன் ஆஜராகி இராக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று கூறியுள்ளார். இராக் தொடர்பாக கேட்ஸ் ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வருவார் என்பதற்காக அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று புஷ் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தார். இராக்கினை ஒரு கடுமையான குழப்ப நிலையில் விட்டு விட்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனத் தான் நம்புவதாக ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் கேட்க விரும்புவதை மட்டும் சொல்லக…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஹூஸ்டன்: கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் செல்லும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமை படைத்த சுனிதா வில்லியம்ஸ் வெள்ளிக்கிழமை விண்வெளிக்குப் பயணமாகிறார். இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா கடந்த 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் மூலம் விண்ணுக்குப் பறந்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையைப் படைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்புகையில், கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா மரணத்தைத் தழுவ நேரிட்டது. இந்த நிலையில் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு இன்னொரு அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான சுனிதா வில்லிம்யஸுக்குக் கிடைத்துள்ளது. சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா, தாயார் உர்சலின் பா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சில்மிஷ பாதிரியார் 'எஸ்கேப்'போராட்டம் டிசம்பர் 05, 2006 சென்னை: சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார். அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையர…
-
- 0 replies
- 701 views
-
-
பீஜித்தீவின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது பசுபிக் சமுத்திரத்தில் உள்ள நாடான பீஜித் தீவின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு இராணுவம் நேற்று கைப்பற்றியது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதிகாரபூர்வமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த அரச மெய்ப்பாது காவலர்கள் மற்றும் பொலிஸாரிடமிருந்து அவற்றைக் களைந்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்னர் அரசைக் கவிழ்த்த தேசியவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் இராணுவத் தளபதி அரசைக் கவிழ்க்கப்போவதாக தொடர்ந்து எச்சரித்து வந்தார். இந்நிலையில் நேற்று பொலிஸா…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிகாகோ: அமெரிக்காவின் மினசோட்டா நகரில் 6 முஸ்லீம் இமாம்களை, கைவிலங்கிட்டு வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்திற்குச் செல்லும் விமானத்தில் 6 இமாம்கள் பயணம் செய்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் 6 இமாம்களையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கினர். அவர்களை கைவிலங்கிட்டு கீழே இறக்கிக் கொண்டு வந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்ய…
-
- 37 replies
- 4.4k views
-
-
கிரெம்ளினால் நஞ்சூட்டியதாக கருதப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மரணம் [25 - November - 2006] [Font Size - A - A - A] கிரெம்ளினால் நஞ்சூட்டப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ மூன்று வாரகால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் லண்டன் மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கண்காணிப்புப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த 43 வயது லிட்வினென்கோ வியாழக்கிழமை காலமானதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்த தவறியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு அவரை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. பொலிஸார் மரணத்திற்…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஈராக்கில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய அமெரிக்க படை வீரருக்கு 90 ஆண்டு கால சிறை [18 - November - 2006] ஈராக்கில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் குடும்பத்தினருடன் சேர்த்து கொலை செய்த அமெரிக்க இராணுவ வீரருக்கு 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான ஜேம்ஸ் பார்க் கருக்கே 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபீர் காசிம் அல்-ஜனாபி எனும் இந்த சிறுமியினதும் குடும்பத்தினதும் படுகொலைகளில் தனக்கு தொடர்புள்ளதை பார்க்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், தனது முன்னாள் சகாக்களுக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
¦துச்சேரி: புதுச்சேரியில் கல்யாணம் செய்து கொண்ட ஒரு மணி நேரத்தில் 'புத்தம் புது' கணவருடன் பரீட்சை எழுத கல்லூரி மாணவி வந்ததால் கல்லூரி வளாகத்தில் வியப்பு கலந்த பரபரப்பு நிலவியது. புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் படித்து வருபவர் செல்வி. கடலூரைச் சேர்ந்த இவருக்கும், புதுவை முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் நேற்று காலை முத்தியால்பேட்டையில் நடந்தது. கல்யாணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் வேகம் வேகமாக பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு காரில் செல்வியின் கல்லூரிக்கு விரைந்தனர். செல்விக்கு நேற்று பரீட்சை இருந்தது. இதனால்தான் கல்யாணம் முடிந்த கையோடு கணவரையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தார்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பீகாரில் ஓடும் ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து: 47 பேர் பலி பகல்பூர், டிச.3-:ஓடும் ரெயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 37 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 55 பேர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிழக்கு ரெயில்வே பிரிவில் அமைந்துள்ள அந்த ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம், பழுதடைந்து இருந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம், படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி இடிக்கப்படாமல் இருந்தது. அதிவேக ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்ததால், அதிர்வு காரணமாக அது இடிந்து விழும் நிலையில் இருந்திருக்கிறது. இந்த நிலையி…
-
- 9 replies
- 1.5k views
-
-
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. அவர் எதைச் செய்தாலும் பிரச்சனையாகிவிடுகிறது. ராஜ வம்சத்து பெண்ணான வசுந்தராவும் இந்திய பயோடெக்னாலஜி தொழில்துறையின் 'ராணி'யான கிரன் மசூம்தாரும் ஒரு நிகழ்ச்சியில் மௌத் கிஸ் கொடுத்து அன்பைப் பரிமாறியது இப்போது பிரச்சனையாகியுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த இருவரும் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்தபோது கை கோர்த்துக் கொண்டு, கட்டிப் பிடித்துக் கொண்டனர். அப்படியே இருவரும் இதழோடு இதழ் பதித்து ஒரு 'பச்சக்' கொடுத்துக் கொண்டனர். வெஸ்ட்டர்ன் கலாச்சாரப்படி அவர்கள் அதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டாலும் இந்த லிப்டுலிப் விவ…
-
- 1 reply
- 1.7k views
-
-
கியூபெக் தனியான `தேச இனம்' கனடிய பாராளுமன்றம் அங்கீகாரம் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடியப் பாராளுமன்றம் திங்கட்கிழமை வழங்கியுள்ளது. ஒன்றுபட்ட கனடாவுக்குள் கியூபெக்கைச்சேர்ந்தவர்கள் தனியான தேசத்தவரென அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய யோசனையில் கனடாவில் ஆட்சியிலுள்ள சிறுபான்மை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பதவியை துறந்திருந்தார். ஆயினும், திங்கட்கிழமை கனடிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கியூபெக்கைச் சேர்ந்த மக்களை தனியான தேசத்தவர் என்ற பிரேரணைக்கு 216 வாக்குகள் ஆதரவாகவும் 16 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்க…
-
- 0 replies
- 1k views
-
-
கண்ணீருடனும் ஆழ்ந்த கவலையுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். நாம் வசதியாக வேளா வேளைக்கு நல்ல உணவை சாப்பிடுகிற இந்த வேளைகளில் தமிழீழ மண்ணில் பட்டினியால் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்கள் என செத்துக்கொண்டிருக்கிறார்கள
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34 http://www.alaikal.com/index.php?option=co...2&Itemid=34
-
- 0 replies
- 934 views
-