உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26850 topics in this forum
-
ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா? மார்ச் 04, 2007 சென்னை: சல்வார் கமீஸ் உடையில் பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வந்த ஆசிரியையை, தேர்வு மையப் பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை டிஏவி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சித்ரா. இவருக்கு தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புப் பணிக்காக சித்ரா சென்றார். சல்வார் கமீஸ் உடையில் அவர் இருந்தார். அவரைப் பார்த்ததும் சுப்பையா பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி சித்ராவை தடுத்து நிறுத்தி…
-
- 29 replies
- 3.5k views
-
-
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேர இரு கொரியாக்களும் இணக்கம் வட கொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ஏழு மாதங்களின் பின்னர் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் எல்லைகளுக்கப்பால் பிரிந்திருந்த குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இம் மாதமளவில் வீடியோ ஒளிப்பதிவுடன் கூடிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதமளவில் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் , வடகொரியாவுக்கான மனிதாபிமான உதவிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்ட ப…
-
- 0 replies
- 726 views
-
-
நேபாளத்தில் 113 வயது பெண்ணுக்கு குடியுரிமை சான்றிதழ் நேபாளத்தில் 113 வயது பெண்மணிக்கு முதன் முறையாக குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மேற்கு பகுதியில் மயாக்டி மாவட்டத்தில் உள்ளது கடானா கிராமம். மலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் 113 வயதான சரஸ்வதி ராய் என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார். இவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை குடியுரிமைச் சான்றிதழ் வழங்கினர்.
-
- 0 replies
- 704 views
-
-
2008 ஒலிம்பிக் போட்டிக்கு முன் பெய்ஜிங்கிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற சீன அரசு திட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2008 இல் நடைபெறவுள்ளன. அதற்கு முன் அந்த நகரத்திலிருந்து பிச்சைக்காரர்களையும் வீதியோர வியாபாரிகளையும் வெளியேற்றிவிட சீன அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிச்சைக்காரர்கள் வீதியோரக் கடைக்காரர்கள் வீதிகளில் நின்றுகொண்டு விளம்பர பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் ஆகியோரை வெளியேற்றி, பெய்ஜிங் நகரத்துக்குப் புதுப் பொலிவூட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் வாழும் ஆதரவற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர், அநாதைச் சிறார்கள் உள்ளிட்டோரைக் கண்டு பிடித்து, அரசு நடத்தும் இலவச …
-
- 0 replies
- 615 views
-
-
பாகிஸ்தான் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் அங்குள்ள அல்-ஹைதா முகாம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். செனட்டின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினதும் செனட்டினதும் உறுப்பினர்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலில்லாத பகுதியில் உள்ள அல்-ஹைதா முகாம்கள் மீது ஆப்கானிலுள்ள அமெரிக்க படையினர் தாக்குதல் மேற்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளனர். 2001 இல் ஆப்கான் மீது தாக்குதலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட நியாயங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளலாம் என குடியரசுக் கட்சி செனட்டர் தெரிவித்துள்ளார். முஷாரவ் அல்-ஹைதாவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அல்லது நாட்டின் மீ…
-
- 1 reply
- 859 views
-
-
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கத்தியுடன் சென்று வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அதை வைத்து கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் மிரட்டினார். இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிசோரி ரோல்லா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கல்வி கற்பவர் சுஜித்குமார் வெங்கட்ராமொல்லா. 22 வயதான இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் உள்ள நிஜாமாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் வியாழனன்று கையில் கத்தியுடன், கடதாசி பை ஒன்றை எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் நுழைந்தார். அதில் வெடிகுண்டும், அந்திராக்ஸ் பவுடரும் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி எல்லோரையும் அழித்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டினார். உடனே பல்கலைக்கழக ஊழியர்கள் பொலிஸில் புகார…
-
- 1 reply
- 818 views
-
-
சீனாவின் மக்கள் தொகை 131 கோடி 44 லட்சம் வீரகேசரி நாளேடு சீனாவில் 2006ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சீனாவின் மக்கள் தொகை 131 கோடியே 44 இலட்சம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 51.5 வீதமானோர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் பெற்றோர் பெண் குழந்தைகளைவிட ஆண்குழந்தை பிறக்கவேண்டுமென்றே கருதுகின்றனர். ஒரு தம்பதி ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு சீனாவில் காணப்படுகின்றது. அந்த ஒரு குழந்தையும் ஆணாக இருக்க வேண்டுமென்பதே பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. இதனால் ஆண் குழந்தையின் பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது. பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் நடவடிக்கை பரவலாக நட…
-
- 1 reply
- 799 views
-
-
ஆதிதிராவிடர்’’ என்றுதான் குறிப்பிட வேண்டும்: அரசு உத்தரவு சென்னை, மார்ச்.3-: தலித், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதையும், எழுதுவதையும் விடுத்து இனி, ஆதிதிராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய அரசியல் அமைப்பின் 1950-ம் ஆண்டின் ஆதிதிராவிடர் ஆணையில் வெளியிடப்பட்ட ‘‘ஷெட்யூல்டு காஸ்ட்’’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் `அரிசன்' என்று அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ‘‘ஷெட்யூல்ட் காஸ்ட்’’ இனத்தவருக்கான நல இயக்ககம் ‘‘அரிசன நல இயக்கம்’’ என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், ‘‘அரிசன்’’ என்று அழைக்கப்பட்டு வருவதை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு பெயர்களில் புயல் தாக்கியது. பெரும் உயிர்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள அலபாமா மாகாணத்தில் நேற்று திடீர் என்று புயல் வீசியது. சுழன்று அடித்த சூறாவளியில் ஏராள மான கார்கள் தூக்கி வீசப்பட்டன. வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சார கம்பங்களும் சரிந்து விழுந்தது. கடலில் ராட்சத அலைகள் வீசியது. கடலோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இந்த புயலில் சிக்கியும் வீடு இடிந்து விழுந்தும் 18 பேர் பலியாகி விட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மிசோரி மாகாணத்திலும் இந்த புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. அலபாமா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடம…
-
- 4 replies
- 888 views
-
-
சூப்பர் பம்பர் பரிசு ரூ. 10 கோடி தருவதாக கூறி இண்டர்நெட் மூலம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் தமிழக இளைஞர்களை குறி வைத்து தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. இதைப்பெறுவதற்காக பலர் தொடர்ந்து பணம் கட்டி வருகின்றனர். இதில் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் நமது மாலை மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பரபரப்பு அனுபவம் குறித்து தெரிவித்தனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். திரைப்பட வினியோகஸ்தர். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் இண்டர்நெட் லாட்டரியில் ரூ. 4 கோடி பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:- நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். தினம…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழக மீனவருக்கும் அதே கதி! இலங்கை இந்தியக் கடல் எல்லையில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்களால் பதற்றநிலை குறிப்பாகத் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது. தமது அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்ளும் நோக்குடன், கடலுக்குச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களே இப்போது பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள். ""அலைகடல் மேலே அவனின் வாழ்க்கை யாருக்குத் தெரிகிறது? யாருக்குப் புரிகிறது?'' என்ற ஈழத்தின் பிரபல மெல்லிசைப் பாடலின் வரிகளை நினைப்பூட்டும் விதத்தில் தமிழக மீனவர்களின் நிலைமை இன்று மோசமாகியிருக்கின்றது. இலங்கைத்தீவின் கடற்கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு தமிழர் தாயகப் பிரதேசத்துக்குள் வருகின்றது. தமிழர் தாயகத்தின் மூலவளம் கொழிக்கும் இந்தக் கடலோரங்களைப் பயன்படுத்தவே மு…
-
- 0 replies
- 653 views
-
-
பின்லேடன் உயிரோடு தான் இருக்கிறார் தலிபான் மார்ச் 02, 2007 லண்டன்: அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் தலிபான் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முல்லா ததுல்லா கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 (இந்த நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில்தான் ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றார்) தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ததுல்லா கூறுகையில், வட மேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஓசாமா பத்திரமாக இருக்கிறார். ஆனால் இப்போதைக்கு அவரை யாரும் எளிதில் பார்க்க முடியாது. அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று எங்களுக்கு நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வந…
-
- 2 replies
- 1k views
-
-
தன்சானியாவில் உயிர்களுக்கு உலை வைத்த சட்ட விரோத கந்தகக் குழாய்களை தீயுண்டது போல ஈழத்தில் நிகழ்வதெப்போது!!
-
- 24 replies
- 3.3k views
-
-
சேலம் : சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஓடும் பைக்கில் இருந்து சாரைப்பாம்பு ஒன்று எட்டி பார்த்ததில், அதிர்ச்சி அடைந்த வாலிபர் பைக்கை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(28). இவர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிகிறார். நேற்று காலை தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வங்கியில் பணம் செலுத்த புது பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்துள்ளார். வங்கியில் இருந்து மீண்டும் பைக்கில் கிளம்பியுள்ளார். பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது "சைட் பாக்ஸ்'ல் இருந்து பாம்பு ஒன்று தலையை நீட்டியுள்ளது. இதை ராம்குமாரின் பைக்குக்கு பின்னால் மற்றறொரு பைக்கில் வந்தவர் கவனித்து, "பாம்பு, பாம்ப…
-
- 24 replies
- 3k views
-
-
ஜ01 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ அமெரிக்கா அடுத்த மாதமளவில் ஈரான் மற்றும் சிரிய நாட்டுப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பிராந்திய மட்ட மாநாடு ஒன்றில் பங்கேற்க விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. பாக்தாத்தில் நடைபெறவிருக்கும் இப் பேச்சுவார்த்தையின் குறிக்கோள் ஈராக்கின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதாகும் என ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு ஈரான் மற்றும் சிரியாவே காரணமென அமெரிக்கா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும் பேச்சுகளில் அவர்களையும் உள்ளடக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இப் பேச்சுகள் ஈரானுடனான உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாகவும் இது அப் பிரதேசத்தில் அமைதிய…
-
- 1 reply
- 742 views
-
-
ராஜஸ்தான் பாலைவனத்தில் அரியவகைத் தங்கப்படிமம் ராஜஸ்தான் பாலைவன குக்கிராமம் ஒன்றில்இ உலகின் அரிய வகை தங்கப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுஇ இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வைக் கண்டுபிடித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தெற்கில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பாலைவன கிராமம் ஜக்புரா. அங்கு தான் தங்கப்படிமம் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தங்கச் சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்க இரண்டு நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்துள்ளன. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க ஆய்வு நிறுவனமும்இ இந்திய தனியார் நிறுவனம் “மெட்டல் மைனிங் இண்டியா”வும் சேர்ந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. அவுஸ்திரேலிய நிறுவனத்தின் …
-
- 0 replies
- 786 views
-
-
மன நோயாளி வயிற்றில் 'ஹார்டுவேர்' கடை! சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த மன நோயாளியின் வயிற்றில் 200க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அனைத்துப் பொருட்களும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. மதுரை அருகே உள்ள இளையாங்குடியைச் சேர்ந்தவர் ஜம்மு கான் (32). டெய்லரான இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மீண்டும் மன நலம் பாதிக்கப்பட்டது. மேலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் ஏதேதோ மர்மப் பொருட…
-
- 3 replies
- 1.1k views
-
-
திருப்பதியில் சாமியார் தலை துண்டித்துக் கொலை மார்ச் 01, 2007 திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நாத்ஜி அபோரிபாபா என்ற சாமியார் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வெங்கடாசலபதி கோவில் அருகே உள்ள தும்புரா தீர்த்தக் குளம் அருகே கடந்த 15ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வந்தவர் அபோரிபாபா சாமியார். திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில் பாபா சாமியார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது குடிலில் பிணமாகக் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபாவுக்கு 30க்கும் மே…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை சண்டையால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து: ஜெ. எச்சரிக்கை சென்னை: இலங்கையில் நடக்கும் சண்டையால் தமிழக மீனவர்களின் வாழக்கை கேள்விக்குறியாகி விட்டது என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்கள் அச்சுறுத்தலின்றி பத்திரமாக மீன் பிடிக்கவும், கரைக்கு திரும்பும் வகையில் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. கடந்த 25ம் தேதி அன்று நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆறு பேரில் கலியபெருமாள் என்ற மீனவர் இலங்கை க…
-
- 1 reply
- 724 views
-
-
இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம் (பிப்ரவரி 28, 2007): நாகை மாவட்ட மீனவரைச் சுட்டுக் கொன்ற பரபரப்பு நீங்குவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கலியபெருமாள் என்ற மீனவர் குண்டு பாய்ந்து இறந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ராமேஸ்வரம், தங்கச்…
-
- 0 replies
- 719 views
-
-
திண்டுக்கல் ‘திடுக்’ சாதி வெறியில் பாதிரியார்? ‘‘தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதி வெறியைக் காட்டுகிறார், தேவாலய தலித் ஊழியரை சாதியைச் சொல்லி திட்டுகிறார்...”-----& பாதிரியார் பீட்டர் ராஜ் என்பவர் மீது இப்படியரு அதிர்ச்சிப் புகாரை அள்ளிவீசுகிறார்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தலித் கிறிஸ்தவர்கள். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத் துடன் வீற்றிருக்கிறது, தூய வளனார் பேராலயம். பீட்டர் ராஜ் இந்தப் பேராலயத்தின் பங்கு பாதிரியார். இவருக்கெதிராக கச்சைகட்டி நிற்கும் தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், கடந்த 18ம் தேதி பேராலயத்தின் திருப்பலி பூசையை நிறுத்தவும், தேவாலய கதவுகளை மூடவும் எத்தனித்திருக்கிறார்கள். மற்ற …
-
- 0 replies
- 1.3k views
-
-
‘முதல்வன்’ பாணியில் முதல்வர்... ஒரே நாளில் 125 பேர் சஸ்பெண்ட்! ‘‘நீங்க இந்தியாவோட மூத்த அரசியல் வாதிங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச சேதி... ஆனா, அடிப்படையில நீங்க ஒரு விவசாயிங்கறது பலபேருக்கு தெரியாத விஷயம். நீங்க பொறந்த மாவட்டம் உள்பட காவிரி டெல்டா விவசாயிங்களுக்கு உங்க காலத்துலயே ஒரு விடிவு வரணும்னு ஆசைப்படறோம். அது ஒருபக்கம் இருந் தாலும் உங்ககிட்ட நாங்க இன்னொரு கோரிக் கைய வைக்க பிரியப்படுறோம். பெரிசா ஒண்ணுமில்லீங்க... எங்க ஏரியா பக்கம் இருக்கற நெல் நேரடி கொள்முதல் நிலையங் கள்ல நடக்கற முறைகேடுகளை பெரிய மனசு வச்சு தீர்த்து வெச்சா அதுபோதும் எங்களுக்கு...’’ & இப்படி ஒரு வேண்டுகோள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பார்வைக்கு வர, புருவம் உயர்த்திய அவர் உ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இளைஞர். மும்பையைச் சேர்ந்த வினோத்குமார் சிங்கேஸ்வர் சிங்குக்கு இளம்பெண் சங்கீதா மீது பைத்தியமான காதல். `எனக்கு 24 உனக்கு 19' என்று காதல் வானில் சிறகடித்துத் திரிந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர். அதற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமே? வினோத்குமார் வீட்டுத் தரப்பில் பிரச்சினையில்லை. பெண்ணின் அம்மா சம்மதத்தைப் பெற்றால் போதும். வினோத்குமாரும் தைரியமாகச் சென்று சங்கீதாவின் அம்மா மீனா லாலு பஞ்சாபியிடம் பெண் கேட்டார். `நான் சொல்கிற `நிபந்தனைக்கு' சரி என்றால் எனக்குச் சம்மதம்' என்றார் மீனா. சந்தோஷத்துடன் தலையசைத்தார் வினோத்குமார். ஆனால் அடுத்து மீனா விதித்த நிபந்தனை திடுக்கிட வைத்தது அவரை. அதாவது, ``நான் சொல்லும் ஆளை நீ காலி செய்தால் ப…
-
- 30 replies
- 5.3k views
-
-
வயது 8 எடை 99 லண்டன்: அதிக உடல் பருமன் இப்போது உலகளவில் பெரிய பிரச்னையாகி வருகிறது. உடல் கோளாறுகள், சாப்பாட்டு பழக்கங்களே இதற்கு காரணம். இப்படித்தான் லண்டனிலும். படத்தில் இருக்கும் சிறுவன் கானர் மெக்கிரட்டிக்கு 8 வயசுதான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த வயசில் 99 கிலோ எடை இருக்கிறான் கானர். அவனை ஆறுதலாக அரவணைத்து இருப்பது தாய் நிகோலா. தன் வயசு பையன்களின் சராசரி எடையை விட, மூன்று மடங்கு அதிக எடையுடன் இருக்கிறான் இந்த பொடியன். இன¤யும் இதே வேகத்தில் எடை அதிகரித்தால் ஆபத்து என்பதால், சிகிச்சை பெற இருக்கிறான் கானர். http://www.dinakaran.com
-
- 8 replies
- 1.7k views
-
-
புஷ்ஷின் உத்தரவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் ஈரான் மீது தாக்குதல் [26 - February - 2007] * நியூயோர்க்கர் சஞ்சிகை தகவல் ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டம் எதுவுமில்லையென புஷ் நிர்வாகம் தெரிவித்து வருகின்ற போதிலும் புஷ்ஷிடமிருந்து உத்தரவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் விமானத் தாக்குதலை மேற்கொள்வதற்கான தந்திரோபாயத்தை வகுப்பதற்கான குழுவொன்றை பென்டகன் ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயோர்க்கர் சஞ்சிகை இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கூட்டுப்படைகளின் அலுவலகத்திற்குள் இதற்கென விசேட திட்டமிடல் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க புலனாய்வு அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயோர்க்கர் தெரிவித…
-
- 0 replies
- 825 views
-