Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் நேற்று முன்தினம் சத்தியப்பிரமாணம் செய்தார். நியூயோர்க்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் ஐ.நா. பொதுச்சபையில் தலைவர் ஹாயா றாஷிட் அல் காலியாவின் முன்னிலையில் பான் கி மூன் தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஐ.நா.பொதுச் செயலாளர் கொபி அனான் உட்பட முக்கிய ஐ.நா. அதிகாரிகளும். பல்வேறு நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர். பான் கி மூன் ஜனவரி முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஏற்கவுள்ளார். தனது முன்னோடியான கொபி அனானின் சேவைகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த பான் கி மூன் தான் அவருடைய வழியிலேயே செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் உ…

  2. டைம்ஸ் சஞ்சிகையின் விருது You Tube இணையத்தளத்திற்கு [Monday December 18 2006 02:20:44 PM GMT] [யாழ் வாணன்] பிரபல டைம்ஸ் சஞ்சிகை இவ்வருடத்திற்கான சிறந்த விருதை என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ளது. 1927ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதருக்கான விருதை தெரிவு செய்து வழங்கி வரும் டைம்ஸ் சஞ்சிகை ஒருசில காலகட்டங்களில் சர்ச்சைக்குரிய சிலரையும் தனது விருது பட்டியலில் உள்ளடக்க தவறவில்லை. இருப்பினும் இம்முறை ஒரு இணையத்தளத்திற்கு விருது வழங்கி புரட்சியை ஏற்படுத்தி விட்டது டைம்ஸ் சஞ்சிகை. இதற்கு முக்கிய காரணமாக அது சுட்டிக்காட்டுவது என்னவென்றால் குறிப்பிட்ட இணையத்தளம் மூலமாக உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள், பல வித்திலும், பல்வேறு விடயங்களை பெற்று, அற…

  3. சென்னை அருகே கார்- லாரி பயங்கர மோதல்: 10 பேர் நசுங்கி சாவு சென்னை, டிச.16- சென்னை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில், 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களில் 9 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். நெஞ்சை உருக்கும் இந்த கோர விபத்து, சென்னையை அடுத்த கோவளம் அருகே நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு இந்திரா நகரை சேர்ந்தவர், அந்தோணியார் அடிமை. அவருடைய மைத்துனர், ராஜசேகர். தங்கச்சி மடத்தை சேர்ந்த இவருடைய தம்பி ரமேசுக்கு, கொரியா நாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக நேற்று, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்புவதற்காக, ராஜசேகர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காரி…

  4. பாலஸ்தீன காஸா பகுதியில் ஹமாஸ் பிரிவைச் சேர்ந்த நீதிபதி அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அங்கு உள்நாட்டுப் போர் நடக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த விபரம் வருமாறு; காஸா பகுதியிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் பாஸம் அல்ஃபரா (28). இவர் ஹமாஸின் ஆயுதம் ஏந்திய படைப்பிரிவிலும் அங்கம் வகித்து வந்தார். இந்நிலையில், அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியே காரில் வரும் போது அடையாளம் தெரியாத சிலர் அவரைக் காரை விட்டு வெளியே இழுத்துப் போட்டனர். பின்னர் அவரை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர். இதில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் , ஜனாதிபதியின் ஃபதா கட்சியினரே இக்க…

  5. கனடாவில் டொரன்றோ நகரில் கடந்த திங்கட்கிழமை இலங்கையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் தமிழ் குடும்பப் பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தக் குடும்பப் பெண் அவர் வசிக்கும் வீட்டின் (9 ஆவது மாடிக்கு) கீழுள்ள குப்பை போடும் இடத்திலிருந்து பலத்த காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சனிபுரூக் வைத்தியசாலையில் விரைந்து அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது சந்தேகத்துக்கிடமான மரணமென நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் பெயர் கூட வெளியிடப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளைஇ குறித்த பெண்ணின் கணவரின் பெயர் தவகுமார் செல்வராஜா (வயது- 28) என தெரிவிக்கப்பட்டுள்ள…

  6. கனிமொழி - குமுதம் - முழு பேட்டி! "விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது. ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனு…

  7. அக்கா கல்யாணத்திற்குத் தடை: தங்கை தற்கொலை டிசம்பர் 12, 2006 - தட்ஸ்ரமிழ். சென்னை: தான் அழகாக இருந்ததால் அக்காவின் திருமணம் தடைபடுவதை எண்ணி வருத்தமுற்ற தங்கை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரேமா, மீனாட்சி என்ற மகள்களும், குமார் என்ற மகனும் உள்ளனர். பிரேமாவை விட மீனாட்சி சற்று அழகாக இருப்பார். இதனால் பிரேமாவைப் பெண் பார்க்க வருபவர்கள் எல்லாம் மீனாட்சியையே விரும்பினர். இதனால் பிரேமாவின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இதனால் பிரேமா மனம் உடைந்தார். அவரது வருத்தத்தைப் பார்த்து மீனாட்சியும் மனம் உடைந்தார். தன்னால்தானே அக்காவின் திருமணம் தடைப்படுகிறது என அவர் வருந்த…

  8. மனிதத்தை பிய்த்தெறிந்த சாதி மகாராட்டிரா மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கயர்லாஞ்சியில் வாழ்ந்த ஒரே தலித் குடும்பத்தினைச் சேர்ந்த 4 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதியினரை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக அக்குடும்பத் தலைவரான பய்யாலால் போட்மாங்கே வீட்டில் இல்லாத போது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் 2006, செப்டம்பர் 29-ஆம் நாள்.. மாலை 5 மணிக்கு பய்யாலாலின் மனைவி சுரேகா, 19 வயது மகள் பிரியங்கா, 23 வயது மகன் ரோஷன், பார்வையற்ற 21 வயது மகன் சுதிர் ஆகிய நால்வரையும், வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்துள்ளனர். நால்வரின் ஆடைகளையும் உருவி, உடம்பில் துணியேயின்றி ஊரின் மய்யப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொட…

  9. முத்த சர்ச்சையில் வசுந்தரா பெண்களுக்கு எதிரானவர்கள் கிளப்பி விடும் சர்ச்சை இது * "முத்த' விவகாரத்திற்கு வசுந்தரா பதில் புதுடில்லி: ""பெண்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் தான் கிரண் மஜும்தாருக்கு நான் முத்தம் கொடுத்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் இப்படி பேசுகின்றனர்,'' என்று ம.பி., முதல்வர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் வசுந்தரா ராஜே சிந்தியா. 53 வயதாகும் வசுந்தரா மேல்நாட்டு நாகரிகத்தில் வளர்ந்த ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த ஒரு அழகிப் போட்டியில், பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தாரைக் கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்தார் வசு…

  10. காதலர்களை அடித்து விரட்டிய விஎச்பி!! டிசம்பர் 11, 2006 அகமாதாபாத்: அகமதாபாத்தில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளை விசுவ இந்து பிரிஷச் அமைப்பைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் பிரம்பால் அடித்து விரட்டியடித்தனர். பூங்காவில் இளம் காதல் ஜோடிகள் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் சிலர் கையில் பிரம்புகளுடன் பூங்காவிற்குள் நுழைந்தனர். அப்போது அவர்கள் கண்ணில் பட்ட காதல் ஜோடிகளை பிரம்பால் அடித்து விரட்டினர். இதுகுறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில், பெண்களை போகப் பொருளாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்களை இந்த சமூகத்தில் இருந்து விரட்டியடிக்க விரும்புகிறோம், அதற்காகவே இந்த நடவடிக்கை என்றார். இந்தச் சம்பவத்தில் பிரம்படி…

  11. ஆக்கிரமிப்புக்கெதிரான நோர்வேயின் ஆயுதம் தாங்கிய போராட்டம் யேர்மனியப்படைகளுக்கான விநியோகத்தைத் தடுக்கும்முகமாக நோர்வேஜிய கடற்பரப்பிலே கண்ணிவெடிகளை தாம் விதைத்துள்ளதாக பிரித்தானியாவும் பிரான்சும் அறிவித்த மறுநாளே ஹிட்லர் தலைமையிலான யேர்மனியப்படைகளால் 1940 ஏப்ரல் 9 அன்று நோர்வே தாக்கப்பட்டது. 2ஆம் உலகயுத்தத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இத்தாக்குதலானது அரசியல் மையங்களை மட்டுமன்றி சாதாரண நோர்வே தேசத்துப் பொதுமக்களைக்கூட வியப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால் 1ஆம் உலகயுத்தத்தைப்போலவே 2ஆம் உலகயுத்தத்திலும் எந்தத் தரப்பையும் சாராது நடுநிலமை பேணுவதனூடாக யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற அவர்களின் கணிப்புகளை முற்றிலும் பொய்யாக்கும்…

  12. இலங்கைக்கு ஆயுதம்: இந்திய தளபதி ஒப்புதல் டிசம்பர் 11, 2006 - தட்ஸ்ரமிழ் கொழும்பு: இலங்கை கடற்படைக்கு ரேடார்கள், சோனார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுத தளவாடங்களை விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறியுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் இனவெறித் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கைக்கு எந்தவிதமான ஆயுத உதவியையும், இந்தியா வழங்கக் கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகள் செய்யப்பட மாட்ட…

  13. மனித உரிமை மீறல்கள் : சென்னையில் 'மனிதம்" நடத்திய கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாக அரங்கில் 'மனித உரிமை மீறல்கள்" என்ற தலைப்பில் 09-12-2006 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மனித உரிமை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான மனிதம், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் திரு. அக்னி சுப்பிரமணியம் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களை வரவேற்றார். கருத்தரங்க தலைமையுரை ஆற்றிய திரு. பழ. நெடுமாறன் அவர்கள், 'மாந்த உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் நம் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லாச் சுதந்திரங்களுடன் வாழ்வதும், …

  14. இன்று மாலை 3.30 மணியளவில், கனடா ரொரன்டரோவில், உறை பனியினால் படர்ந்திருந்த, நீர்த்தேக்கம் ஒன்றின் மீது நடந்து சென்று கொண்டிருந்த இரு தமிழ் சிறுவர்கள், உறை பனி உடைந்ததால் உள்ளே விழுந்ததால் மரணமடைந்துள்ளனர். சம்பம் நடை பெற்றதை அடுத்து, ரொரன்ரோ அவசர சேவை நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் வந்து ஒருவரை மீட்டெடுத்தனர். பின்னர் தொடர்ந்தும் மற்றையவரை தேடி கிட்டத்தட்ட 2 மணி நேரத்தின் பின்னே கண்டு பிடித்ததாக, சம்பவத்தை நேரடிய அறிந்தவர்கள் கூறினர். இரு சிறுவர்களும், 15, 11 வயதை உடையவர்கள் என அறியப்படுகின்றது. ரொன்ரோ காவல் துறையினர் இதுவரை பெயர்களை வெளியிடாததால் அவற்றை எம்மால் வெளியிட முடியவில்லை. இவர்களின் மீட்பு பணியில் ஈடுபட்ட …

  15. சிலி நாட்டில் 1973 இல் சதிப் புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்றிய இராணுவ சர்வாதிகாரி Augusto Pinochet (ஒகஸ்ரோ பினோசே) தனது 91வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவர் தான் ஆட்சி புரிந்த 17 ஆண்டு காலத்தில் சிலியில் பல மனித உரிமை மீறல் குற்றங்களைச் செய்ததுடன் 3000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தவர். இருப்பினும் அதற்கான தண்டனையை இவர் அனுபவிக்கவில்லை. பினோசேக்கு எதிரான மக்கள் அவரின் இழப்புக் குறித்து வருத்தம் தெரிவிக்காத நிலையில் அவரின் இறுதி நிகழ்வுகளின் போது அரச மரியாதைக்குப் பதில் சாதாரண இராணுவ மரியாதைகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. உலகின் கொடிய இராணுவ சர்வாதிகாரிகளில் இவரும் ஒருவர். http://news.bbc.co.uk/1/hi/world/americas/6167237.stm

  16. பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும். http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm

  17. டிசம்பர் 09, 2006 சென்னை: சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல ஸ்ரீராம சமாஜம் (அயோத்தியா மண்டபம்) மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் எதிரே காவல் நிலையம் அருகே முழு உருவப் பெரியார் சிலையை நிறுவ பீடம் அமைக்கப்பட்டு, சிலை மூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்பு இரண்டு நாளுக்கு முன்பே விஷமிகள் சிலையின் கழுத்து பகுதி துண்டித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்புப் போராட்டத்தில் குதித்தன. மேலும், ராமர் படங்களுக்கு தீ வைத்து…

  18. சென்னை : சென்னையிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்தது ரயில்வே துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாக் காலங்களிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் குறிப்பிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது ரயில்வே துறையின் வாடிக்கை. சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து முன்கூட்டியே பத்திரிக்கைகள், டிவி செய்திகள் மூலமாக தெரிவிப்பதும் வழக்கம். ஆனால் 'கூட்ட நெரிசல்' காரணமாக விடப்பட்ட சிறப்பு ரயில் ஒன்றில், ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்த வினோதம் நடந்துள்ளது. சென்னையிலிருந்து வாரணாசிக்கு 2 நாட்களுக்கு முன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் …

  19. கேரள மாநிலம் பந்தளம் அருகில் அச்சன்கோவில் ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று மாலை இங்கு ஒரு இளம்பெண் குளிக்க வந்தார். அவர் குளிக்க தொடங்கிய போது சில வாலிபர்கள் அங்கு வந்து குளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த பெண்ணோ இங்கு பெண்கள் மட்டும்தான் குளிக்கலாம் என கூறினார். பின்னர் வாலிபர்கள் தங்கள் கையிலிருந்த மொபைல் போனால் அந்த பெண் குளிப்பதை படம் பிடிக்க தொடங்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெண்கள் குளிக்கும் இடத்தில் வந்து படமா எடுக்கிறீர்கள் என கேட்டு தர்ம அடி கொடுத்தனர். அவர்களை பிடித்து பந்தளம் போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீஜித், சுஜீத், தாரிஷ் ஆகிய 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். Thanks:Maalaimalar...

    • 0 replies
    • 1.4k views
  20. சினிமா பாட்டுப்பாடி கிண்டல் ரோட்டில் சிறுமியை கட்டிபிடித்த வாலிபர் கைது சென்னை, டிச. 7: சினிமா பாட்டுப்பாடி சிறுமியை நடுரோட்டில் கட்டிப்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங் கரைபட்டு அருகே உள்ள பாலவாயலை சேர்ந்தவர் ராமு என்கிற ராம்குமார் (வயது 25). இவர் வேலை எதுவும் பார்க்காமல் டிப்டாப்பாக ஆடை அணிந்து கொண்டு ரோட்டில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது வாடிக்கை என்று கூறப் படுகிறது. நேற்று மாலை ஒரு 16 வயது சிறுமி கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அந்த சிறுமியை பார்த்து "லூசு பெண்ணே! லூசுப் பெண்ணே!!' என்று வல்லவன் படத்தில் வரும் சினிமா பாட்டை பாடியபடி அந்த சிறுமியின் கையைப் பிடித்து நடனமாடுவதுபோல் இழுத்து நடுரோட்டிலேயே…

  21. திருவனந்தபுரம்: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்கள் பெற கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரிய¬ம், தபால் துறையும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரசாதத்தை தபால் மூலம் பெற செயல் அதிகாரி, திருவாங்கூர் தேவஸ்ம் போர்டு, சபரிமலை, பத்தனம்திட்டா, பின்கோடு 689713 என்ற முகவரிக்கு ரூ. 210 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புவோருக்கு ஒரு டின் அரவணை பாயாசம், ஒரு பாக்கெட் அப்பம், ஒரு பாக்கெட் பஸ்மம் மற்றும் சந்தன வில்லைகள், 10 மில்லி அபிஷேக நெய், ஒரு பாக்கெட் மாளிகைபுரத்து அம்மனின் மஞ்சள் மற்றும் குங்குமம், ஒரு பாக்கெட் வாவர் சுவாமியின் மிளகு மற்றும் விபூதி, ஒரு ஐயப்பனின் …

  22. சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ஆபாசப் படம் பார்த்து, தன்னிடம் குறும்பு செய்ததாக அதே பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி (32), பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் நான் வேலை பார்த்து வந்தேன். அதே பள்ளியில் ஆசிரியராக சுந்தரராஜன் (51) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது நடவடிக்கைகள் படு மோசமாக இருக்கும். பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் பாட நேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்பு கதவு பூட்டப்பட்டு இருந்…

  23. 40 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை தம்வசம் வைத்திருந்த பெண்மணி கைது. 40 லட்சம் ரூபா வரை பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை தம்வசம் வைத்திருந்த பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரவிருந்த பேரூந்து ஒன்றில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 50 வயதான பெண்மணி என காவல்துறையினர் தெரிவித்தனர். கைப்பற்ற வெளிநாட்டு நாணயங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. www.pathivu.com

  24. பிஜி தீவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது அந்நாட்டின் நாடாளுமன்றமும் முடக்கப்பட்டுள்ளது. [Tuesday December 05 2006 01:09:11 PM GMT] [யாழ் வாணன்] பிஜி தீவில் அரசு அதிகாரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அந்நாட்டின் நாடாளுமன்றமும் முடக்கப்பட்டுள்ளது. சுவா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா இத்தகவலை வெளியிட்டார். இதையடுத்து, பிஜி தீவில் கடந்த 20 ஆண்டுகளில் 4வது முறையாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிரதமர் லைசெனியா கராசியின் தலைமையிலான அரசு பல ஊழல்களை செய்துள்ளதாகவும் ராணுவத் தளபதி குற்றம்சாட்டினார். ராணுவப் புரட்சி ஏற்பட்டதையடுத…

  25. இராக்கில் வெற்றிபெறவில்லை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஒப்புதல் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க செனட் குழுவின் முன் ஆஜராகி இராக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று கூறியுள்ளார். இராக் தொடர்பாக கேட்ஸ் ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வருவார் என்பதற்காக அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று புஷ் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தார். இராக்கினை ஒரு கடுமையான குழப்ப நிலையில் விட்டு விட்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனத் தான் நம்புவதாக ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் கேட்க விரும்புவதை மட்டும் சொல்லக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.