Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஏ-9 வீதி திறப்பது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஆராய்வதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி [25 - November - 2006] [Font Size - A - A - A] இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் ஏ-9 பாதையை திறப்பது குறித்து ஆராயப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமருக்கும் வைகோவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து வைகோ இந்த சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொ…

    • 0 replies
    • 687 views
  2. நாராயணன், மேனன் சென்னையில் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை [25 - November - 2006] இலங்கையின் போர்ச்சூழல் தொடர்பாக தனது வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மூலம் கொழும்புக்கு கடும் கவலையைத் தெரிவித்திருக்கும் இந்தியா, மேனன் எடுத்துவரும் செய்தியை தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் கலந்தாராய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை நேற்று வெள்ளிக்கிழமை சென்னைக்கு அனுப்பியுள்ளது. கொழும்பிலிருந்து நேற்றுக்காலை சென்னைக்குச் சென்ற சிவ்சங்கர் மேனனும், எம்.கே. நாராயணனும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கருணாநிதியுடன் கலந்தாலோசனை நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைத் தலைவர்களுடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பாக …

    • 0 replies
    • 748 views
  3. ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம் ரணில் திங்கள் கொல்கத்தாவுக்கு பயணம் [25 - November - 2006] [Font Size - A - A - A] ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவாரகாலப் பயணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கிறார். உத்தராஞ்சல் மாநிலத்தின் தெஹ்ராடூனில் இடம்பெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுக்காக அங்கு செல்லும் ஜனாதிபதி ராஜபக்‌ஷ பின்னர் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதியின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை …

    • 0 replies
    • 643 views
  4. நவம்பர் 24, 2006 சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க கேரள அரசு தவறினால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி வாபஸ் பெற வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி யோசனை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றமே 142 அடி வரை அணையில் நீர் தேக்கலாம் என கூறி விட்டது. அப்படி இருக்கையில், தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்த ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை. நெய்வேலி அனல் மின் கழக பங்குகளை தனியாருக்கு விற்றால் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை திமுக வாபஸ் பெறும் என கருணாநிதி முன்பு மிரட்டி மத்திய அரசைப் பணிய வைத்தார். கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்த மத்திய அரசும்,…

  5. திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மிரட்டல் விடுப்பது போல பேசியிருப்பதைக் கண்டு நானோ, கேரள அரசோ பயப்பட மாட்டோம் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை கடற்படையை விட்டு கேரளா ஆய்வு செய்ய முயன்றதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசரக் கடிதம் அனுப்பினார். அதில், கேரள அரசின் செயல் சட்டவிரோதமானது, அப்பட்டமான அத்துமீறல். கேரள அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் டெல்லி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என எச்சரித்திருந்தார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்யவிருந்தது குறித்து ஏற்கனவே த…

  6. எல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி! Saturday, 25 November 2006 aமெரிக்காவின் Forbes Magazine (www.forbes.com) பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்கான அறிமுகம் யாதெனில், அப்பத்திரிகை மிகப் பெரும் அமெரிக்கச் செல்வந்தர்களில் ஒருவரான ஸ்டீவ் •போர்ப்ஸ் (Steve Forbes) என்பவரால் நடத்தப்பட்டு வருகிற, உலகெங்கிலும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைக் கொண்ட, விஸ்தாரமான வியாபார நுணுக்கங்களை, தகவல்களை உள்ளடக்கிய ஒரு புகழ் பெற்ற பத்திரிகை என்பதாம். ஸ்டீவ் •போர்ப்ஸ் 2000-ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, ஆரம்பச் சுற்றுகளிலேயே தோற்றுப் போனவர் என்பது ஒரு சிறிய உப தகவல். Forbes சஞ்சிகையானது வியாபாரத் தகவல்களுக்காக மட்டு…

    • 0 replies
    • 830 views
  7. கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்,ராதாரவி நவம்பர் 24, 2006 சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார். தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர். நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலைய…

    • 0 replies
    • 932 views
  8. குண்டு புரளி: சிக்கிய 6 வயது சிறுமி, சிறுவன்!!! நவம்பர் 21, 2006 சென்னை: சென்னை பொழிச்சலூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெடித்துச் சிதறப் போவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2வது வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியும், 5வது வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் 10 வயது அண்ணனும் போலீசாரிடம் மாட்டினர். சென்னை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. தீவிரவாதிகளை விட விளையாட்டுக்காக மிரட்டல் விடுப்போர்தான் அதிகரித்து வருகின்றனர். இதனால் போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டபோது, சென்னை காவல்துறை கலங்கி…

  9. கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  10. மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது. இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது. பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களா…

  11. நேபாளத்தில் அரசுக்கும் மாவோஜிட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய உடன்படிக்கை ஒன்று கைசாத்தாகியுள்ளது. இதன்படி மாவோஜிட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட இடைக்கால அரசு உருவாக்கப்படுவதோடு மாவோஜிட்டுக்களின் ஆயுதங்கள் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவும் உள்ளன. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த மாவோஜிட்டுக்களின் போராட்டம் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போராட்டத்தின் போது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6169746.stm இலங்கைக்கு இது ஒரு பாடமாகுமா? ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு இஸ்ரேல் பாணியிலான தாக்குதலை இஸ்ரேலிய ஆதரவுடன் நடத்தும் வரை இலங்கைப் பிரச்சனை என்பது பலஸ்த…

  12. சென்னை: அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் கொடுமைகள் நடப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் மாணவர்களை எந்த தனியார் பள்ளியாவது கொடுமைப்படுத்துவதாகத் தெரிய வந்தால் அந்தப் பள்ளியை அரசே ஏற்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சென்னை கொருக்குப்பேட்டையில், மாணவிகளிடம் ஒரு ஆசிரியர் செக்ஸ் சேஷ்டையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல, சேலம் அருகே ஓமலூரில் பிளஸ்டூ மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகிகளே கா…

  13. இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்து விட்டார். தெய்வ நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன். அவரை பாராட்டுகிறேன். அவர் லட்சிய பற்றுள்ளவர். -திரு.இல.கனேசன் இவ்வாறு கூறியுள்ளார். ....."ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார…

    • 5 replies
    • 5.6k views
  14. மதுரை: வழக்கு விசாரணைக்காக பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட கைதி, தனது அருகே அமர்ந்திருந்த பயணியின் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிய பலே சம்பவம் மதுரை அருகே நடந்தது. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓடும் ரயிலில் பயணிகளிடம் சூட்கேஸ் திருடுவதில் ஜெகஜால கில்லாடி. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இந் நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றில் இவரை ஆஜர்படுத்தவதற்காக அரசுப் பேருந்து மூலம் போலீஸார் வேலூரிலிருந்து அழைத்து வந்தனர். மதுரை அருகே மேலூரில் பஸ் வந்தபோது, அந்த பேருந்திலிருந்து ஒரு சூட்கேஸ் பறந்து ஜன்னல் வழியாக சாலையில் விழுந்தது. இதை பின்னால் வந்து கொண்டிருந்…

  15. ஈராக் போர் மிகப் பெரிய தவறு: பிளேர் நவம்பர் 19, 2006 லண்டன்: ஈராக் மீது போர் தொடுத்தது மிகப் பெரிய தவறு என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. அமெரிக்காவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் பிளேர், அமெரிக்க படைக்கு நிகராக தனது நாட்டு படை வீரர்களையும் போரில் ஈடுபடுத்தினார். அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான அமெரிக்க ஆதரவு படையினரின் கடும் தாக்குதலால் ஈராக் வீழ்ந்தது. சதாம் உசேனும் பிடிபட்டார். ஆனாலும் அமெரிக்கா சொன்ன முக்கியக் குற்றச்சாட்டான பேரழிவு ஆயுதக் குவியலில் ஒரு சின்ன இரும்புத் துண்டைக் கூட அமெரிக்கவால் மீட்க மு…

  16. தமிழ் மீனவர்களைக் கொன்று குவிக்கும் கொடிய சிங்களரோடு குலாவும் இந்தியா - இலெனின் தங்கப்பா இந்திய அரசைப் போன்ற கடைந்தெடுத்த கயவாளித் தனமான அரசு உலகில் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. சொல்லப்போனால் இலங்கையில் ஆட்சி நடத்தும் கொடிய இனவெறியரசாகிய சிங்கள அரசைவிட இந்திய அரசு இன்னும் கீழ்த்தரமானது. உண்மையாளர் நெஞ்சில் அருவருப்பை எழுப்பக்கூடியது. சிங்கள அரசின் இனவெறியும், ஈழத்தமிழர்களுக்கு அது இழைத்துவரும் கொடுமைகளும் அவர்களை ஒடுக்குவதற்காக அது பரப்பிவரும் பொய்களும் மேற்கொள்ளும் அரசியல் விரகாண்மைகளும், சில கயவர்களைக் காவுகொடுத்து விலைக்கு வாங்கும் மட்டமான நடைமுறைகளும் உலக வரலாற்றையே கறைப்படுத்தும் தன்மை வாய்ந்தவை; உண்மைதான். ஆனால் சிங்கள அரசு ஈழத்தமிழரைத்…

  17. இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு அமெரிக்கசெனட் அங்கீகாரம் [18 - November - 2006] மூன்று தசாப்தகால பகுதியில் முதல் முறையாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அணுசக்தி தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் சட்ட மூலத்திற்கு அமெரிக்க செனட் வியாழக்கிழமை அங்கீகாரமளித்துள்ளது. ஜனநாயக கட்சி தலைமையிலான புதிய செனட் ஜனவரி மாதத்தில் அமையவுள்ளது. இதற்கு முன்பாக குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டிலிருக்கும் செனட் குறிப்பிட்ட உடன்படிக்கை குறித்த வாக்களிப்பை நடத்தியது. இதன்போது, அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்தியா, ஈரானுடனான இராணுவ ஒத்துழைப்பை கைவிட வேண்…

    • 0 replies
    • 737 views
  18. அமெரிக்காவிலுள்ள குடியேறறவாசிகளை காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியும் 15 - November - 2006] அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட குடியேற்றவாசிகளை பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் காலவரையறையின்றி தடுத்து வைக்கலாமென தெரிவித்துள்ள புஷ் நிர்வாகம், இதற்கு எதிராக சாதாரண நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. குவன்டனாமோவில் பயங்கரவாத சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கும் குறிப்பிட்ட சட்டமூலம் அமெரிக்காவில் குடியேற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது என சட்டத்தரண…

  19. வியட்நாமுக்கு அமெரிக்க ஜனாதிபதி முதல் தடவையாக விஜயம் 18 - November - 2006] அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வியட்நாமுக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். யுத்தத்திற்குப் பிந்திய வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இரண்டாவது ஜனாதிபதி புஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை இரண்டாக பிளவுபடச் செய்த வியட்நாம் யுத்தத்திற்கு 30 வருடங்களுக்குப் பின்னர் அந்த நாட்டிற்குத் தான் விஜயம் மேற்கொண்டுள்ளமை இரு நாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். கடந்தகால நெருக்கடிகளிலிருந்து மீளலாம் என்பதை புலப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். வியட்நாம் அனுபவங்கள், பிரிவுகளை காலம் புலப்படுத்தும் என்பதை புலப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். வியட்நாமிய தலைநகர் ஹ…

  20. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது. பொறுமையை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை குறி வைத்து இலங்கை அரசு வெறித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 65 அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தவர்கள் இவர்கள். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியும் இச்செயலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில மாதங்களுக்கு …

    • 11 replies
    • 2.3k views
  21. காஞ்சிபுரம்: தமிழகத்தில் ரௌடிகள் வேட்டை தொடர்கிறது. காஞ்சிபுரம் அருகே பயங்கர ரௌடியான கொர கிருஷ்ணா என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கந்து வட்டி, மாமூல் வசூல் என பல வகையான ரௌடித்தனங்கள் செய்து வந்தவன் இந்த கொர கிருஷ்ணா. 40 வயதான இவனுக்கு கள்ளச்சாரயம் மூலம் பணம் குவிந்தது. இதனால் காஞ்சியில் மிகப் பெரிய பங்களாவைக் கட்டி வாழ்ந்து வந்தான். இவனுக்கு காட்பாடியிலும் நெமிலியிலும் பெரிய பங்களாக்கள் உள்ளன. காஞ்சியிலும் காட்பாடியிலுமாக தனது ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தான். 24 மணி நேரமும் குண்டர் படையோடு பல கார்களில் சுற்றுவது கொர கிருஷ்ணாவின் ஸ்டைல். இவன் மீது காஞ்சிபுரம் மாவட்டம் தவிர வேலூர், திருவண்ணாமல…

  22. சென்னை: பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம் தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச் சொல்வார். நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்…

  23. டெல்லி: ஜனாதிபதி அப்துல் கலாமே மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என 'த வீக்' நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். த வீக் ஆங்கில இதழும், சிஓட்டர் என்ற பிரபல கருத்துக் கணிப்பு நிறுவன¬ம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின. ஜூன் மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் கலாமுக்கு மீண்டும் அப்பொறுப்பை வழங்கலாமா, இப்பொறுப்புக்கு வரத் தகுதியான பிற தலைவர்கள் யார் என்பதுதான் கருத்துக் கணிப்பின் முக்கிய கேள்விகள். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கருத…

  24. சேலம்: பள்ளியில் மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதையடுத்து பொது மக்கள் அந்தப் பள்ளியை சூறையாடினர். சேலம் அருகே ஓமலூரில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த பெண்ணாகரத்தை சேர்ந்த சண்முகம்வெண்ணிலா தம்பதியின் மகளான சுகன்யா (வயது 17) கடந்த 16ம் தேதி முதல் காணாமல் போனார். விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி காணாமல் போனதையடுத்து பரபரப்பு நிலவியது. அந்த மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் பலனில்லை. இந் நிலையில் இன்று காலை அந்த பள்ளியில் இருக்கும் கிணற்றில் அந்த மாணவியின் பிணம் மிதந்தது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அந்த மாணவி அங்குள்ள கிறிஸ்தவ சாமியார்களால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அப் பகுதி பொது மக்கள் ப…

  25. இலங்கைத் தமிழர்களுக்கு 7 ஆயிரம் டன் உணவுப் பொருள் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுப்புகிறது சென்னை, நவ. 17: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 5200 டன் அரிசி, 1500 டன் சர்க்கரை மற்றும் 300 டன் பால்பவுடரை இந்திய அரசு அனுப்பி வைக்கும் என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் 45 பேரை இலங்கை ராணுவம் குண்டு வீசி படுகொலை செய்தது. அப் போது, Ôஇனிமேலும் மத்திய அரசு பொறுமை கடைப்பிடிக்க வேண்டுமாÕ என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார். முதல்வரின் அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்தார். யாழ்பாணத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடிவிட்டது. அதனால் உணவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.