Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் குறித்து கடும் கண்டனம் பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பான தனது சட்டங்கள் மூலம் பிரிட்டன் ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத சந்தேக நபர்களை கால வரையறையின்றி சிறையிலடைக்கும் செப்டெம்பர் 11 இற்குப் பின்னரான சட்டங்களை நீதிமன்றம் நிராகரித்த பின்னர் 2005 இல் டொனி பிளயர் பாராளுமன்றம் மூலம் புதிய சட்டங்களைக் கொண்டு வந்திருந்தார். பயங்கரவாத சந்தேக நபர்களினது கடவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்வது அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட பல வகையான கட்டுப்பாடுகள் …

  2. சேலம் : சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஓடும் பைக்கில் இருந்து சாரைப்பாம்பு ஒன்று எட்டி பார்த்ததில், அதிர்ச்சி அடைந்த வாலிபர் பைக்கை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(28). இவர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிகிறார். நேற்று காலை தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வங்கியில் பணம் செலுத்த புது பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்துள்ளார். வங்கியில் இருந்து மீண்டும் பைக்கில் கிளம்பியுள்ளார். பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது "சைட் பாக்ஸ்'ல் இருந்து பாம்பு ஒன்று தலையை நீட்டியுள்ளது. இதை ராம்குமாரின் பைக்குக்கு பின்னால் மற்றறொரு பைக்கில் வந்தவர் கவனித்து, "பாம்பு, பாம்ப…

  3. காரைக்கால் : காரைக்காலில் நடந்த வேளாண் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வைத்திலிங் கம் மலர் அரங்குகளை சுற்றிப் பார்த்தார். ஒவ்வொரு ஸ்டால் களிலும் விவரங்களை கேட்டறிந்த வைத்திலிங்கம் வனத் துறை சார்பில் அமைக்கப்பட் டிருந்த பாம்புக் கூண்டுகள் பக்கமாக வந்தார். அப்போது வனத்துறை ஊழியர் ஒருவர் ஆர்வக் கோளாறில் கண்ணாடிக் கூண்டுக்குள் கைவிட்டார். நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்தவர் பொசுக்கென்று அமைச்சரின் கைகளில் திணித்தார். "ஏதோ பொக்கே போல' என்று நினைத்து கை நீட்டியவர் திடுக்கிட்டு பின்வாங்கினார். உடன் வந்த எம்.எல். ஏ.,க்கள் உற்சாகப்படுத்த "ஐயோ வேண்டாம்ப்பா' என் றபடி அலறி பின்வாங்கினார் அமைச்சர். உடன் வந்த கட் சிப் பிரமுகர் ஒருவர், "மனிதனை விட பாம்பு எவ் வளவோ தேவலை' என்று குரல் கொடுத்தார்…

  4. தன்சானியாவில் உயிர்களுக்கு உலை வைத்த சட்ட விரோத கந்தகக் குழாய்களை தீயுண்டது போல ஈழத்தில் நிகழ்வதெப்போது!!

  5. பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேர இரு கொரியாக்களும் இணக்கம் வட கொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ஏழு மாதங்களின் பின்னர் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் எல்லைகளுக்கப்பால் பிரிந்திருந்த குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இம் மாதமளவில் வீடியோ ஒளிப்பதிவுடன் கூடிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதமளவில் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் , வடகொரியாவுக்கான மனிதாபிமான உதவிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்ட ப…

  6. நேபாளத்தில் 113 வயது பெண்ணுக்கு குடியுரிமை சான்றிதழ் நேபாளத்தில் 113 வயது பெண்மணிக்கு முதன் முறையாக குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மேற்கு பகுதியில் மயாக்டி மாவட்டத்தில் உள்ளது கடானா கிராமம். மலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் 113 வயதான சரஸ்வதி ராய் என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார். இவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை குடியுரிமைச் சான்றிதழ் வழங்கினர்.

  7. 2008 ஒலிம்பிக் போட்டிக்கு முன் பெய்ஜிங்கிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற சீன அரசு திட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2008 இல் நடைபெறவுள்ளன. அதற்கு முன் அந்த நகரத்திலிருந்து பிச்சைக்காரர்களையும் வீதியோர வியாபாரிகளையும் வெளியேற்றிவிட சீன அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிச்சைக்காரர்கள் வீதியோரக் கடைக்காரர்கள் வீதிகளில் நின்றுகொண்டு விளம்பர பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் ஆகியோரை வெளியேற்றி, பெய்ஜிங் நகரத்துக்குப் புதுப் பொலிவூட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் வாழும் ஆதரவற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர், அநாதைச் சிறார்கள் உள்ளிட்டோரைக் கண்டு பிடித்து, அரசு நடத்தும் இலவச …

  8. பாகிஸ்தான் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் அங்குள்ள அல்-ஹைதா முகாம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். செனட்டின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினதும் செனட்டினதும் உறுப்பினர்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலில்லாத பகுதியில் உள்ள அல்-ஹைதா முகாம்கள் மீது ஆப்கானிலுள்ள அமெரிக்க படையினர் தாக்குதல் மேற்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளனர். 2001 இல் ஆப்கான் மீது தாக்குதலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட நியாயங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளலாம் என குடியரசுக் கட்சி செனட்டர் தெரிவித்துள்ளார். முஷாரவ் அல்-ஹைதாவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அல்லது நாட்டின் மீ…

  9. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கத்தியுடன் சென்று வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அதை வைத்து கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் மிரட்டினார். இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிசோரி ரோல்லா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கல்வி கற்பவர் சுஜித்குமார் வெங்கட்ராமொல்லா. 22 வயதான இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் உள்ள நிஜாமாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் வியாழனன்று கையில் கத்தியுடன், கடதாசி பை ஒன்றை எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் நுழைந்தார். அதில் வெடிகுண்டும், அந்திராக்ஸ் பவுடரும் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி எல்லோரையும் அழித்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டினார். உடனே பல்கலைக்கழக ஊழியர்கள் பொலிஸில் புகார…

  10. சீனாவின் மக்கள் தொகை 131 கோடி 44 லட்சம் வீரகேசரி நாளேடு சீனாவில் 2006ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சீனாவின் மக்கள் தொகை 131 கோடியே 44 இலட்சம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 51.5 வீதமானோர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் பெற்றோர் பெண் குழந்தைகளைவிட ஆண்குழந்தை பிறக்கவேண்டுமென்றே கருதுகின்றனர். ஒரு தம்பதி ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு சீனாவில் காணப்படுகின்றது. அந்த ஒரு குழந்தையும் ஆணாக இருக்க வேண்டுமென்பதே பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. இதனால் ஆண் குழந்தையின் பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது. பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் நடவடிக்கை பரவலாக நட…

  11. ஆதிதிராவிடர்’’ என்றுதான் குறிப்பிட வேண்டும்: அரசு உத்தரவு சென்னை, மார்ச்.3-: தலித், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதையும், எழுதுவதையும் விடுத்து இனி, ஆதிதிராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய அரசியல் அமைப்பின் 1950-ம் ஆண்டின் ஆதிதிராவிடர் ஆணையில் வெளியிடப்பட்ட ‘‘ஷெட்யூல்டு காஸ்ட்’’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் `அரிசன்' என்று அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ‘‘ஷெட்யூல்ட் காஸ்ட்’’ இனத்தவருக்கான நல இயக்ககம் ‘‘அரிசன நல இயக்கம்’’ என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், ‘‘அரிசன்’’ என்று அழைக்கப்பட்டு வருவதை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும…

  12. அமெரிக்காவில் கடந்த ஆண்டில் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு பெயர்களில் புயல் தாக்கியது. பெரும் உயிர்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள அலபாமா மாகாணத்தில் நேற்று திடீர் என்று புயல் வீசியது. சுழன்று அடித்த சூறாவளியில் ஏராள மான கார்கள் தூக்கி வீசப்பட்டன. வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சார கம்பங்களும் சரிந்து விழுந்தது. கடலில் ராட்சத அலைகள் வீசியது. கடலோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இந்த புயலில் சிக்கியும் வீடு இடிந்து விழுந்தும் 18 பேர் பலியாகி விட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மிசோரி மாகாணத்திலும் இந்த புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. அலபாமா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடம…

  13. சூப்பர் பம்பர் பரிசு ரூ. 10 கோடி தருவதாக கூறி இண்டர்நெட் மூலம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் தமிழக இளைஞர்களை குறி வைத்து தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. இதைப்பெறுவதற்காக பலர் தொடர்ந்து பணம் கட்டி வருகின்றனர். இதில் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் நமது மாலை மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பரபரப்பு அனுபவம் குறித்து தெரிவித்தனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். திரைப்பட வினியோகஸ்தர். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் இண்டர்நெட் லாட்டரியில் ரூ. 4 கோடி பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:- நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். தினம…

  14. தமிழக மீனவருக்கும் அதே கதி! இலங்கை இந்தியக் கடல் எல்லையில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்களால் பதற்றநிலை குறிப்பாகத் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது. தமது அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்ளும் நோக்குடன், கடலுக்குச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களே இப்போது பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள். ""அலைகடல் மேலே அவனின் வாழ்க்கை யாருக்குத் தெரிகிறது? யாருக்குப் புரிகிறது?'' என்ற ஈழத்தின் பிரபல மெல்லிசைப் பாடலின் வரிகளை நினைப்பூட்டும் விதத்தில் தமிழக மீனவர்களின் நிலைமை இன்று மோசமாகியிருக்கின்றது. இலங்கைத்தீவின் கடற்கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு தமிழர் தாயகப் பிரதேசத்துக்குள் வருகின்றது. தமிழர் தாயகத்தின் மூலவளம் கொழிக்கும் இந்தக் கடலோரங்களைப் பயன்படுத்தவே மு…

    • 0 replies
    • 655 views
  15. பின்லேடன் உயிரோடு தான் இருக்கிறார் தலிபான் மார்ச் 02, 2007 லண்டன்: அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் தலிபான் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முல்லா ததுல்லா கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 (இந்த நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில்தான் ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றார்) தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ததுல்லா கூறுகையில், வட மேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஓசாமா பத்திரமாக இருக்கிறார். ஆனால் இப்போதைக்கு அவரை யாரும் எளிதில் பார்க்க முடியாது. அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று எங்களுக்கு நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வந…

  16. ஜ01 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ அமெரிக்கா அடுத்த மாதமளவில் ஈரான் மற்றும் சிரிய நாட்டுப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பிராந்திய மட்ட மாநாடு ஒன்றில் பங்கேற்க விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. பாக்தாத்தில் நடைபெறவிருக்கும் இப் பேச்சுவார்த்தையின் குறிக்கோள் ஈராக்கின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதாகும் என ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு ஈரான் மற்றும் சிரியாவே காரணமென அமெரிக்கா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும் பேச்சுகளில் அவர்களையும் உள்ளடக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இப் பேச்சுகள் ஈரானுடனான உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாகவும் இது அப் பிரதேசத்தில் அமைதிய…

  17. மன நோயாளி வயிற்றில் 'ஹார்டுவேர்' கடை! சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த மன நோயாளியின் வயிற்றில் 200க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அனைத்துப் பொருட்களும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. மதுரை அருகே உள்ள இளையாங்குடியைச் சேர்ந்தவர் ஜம்மு கான் (32). டெய்லரான இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மீண்டும் மன நலம் பாதிக்கப்பட்டது. மேலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் ஏதேதோ மர்மப் பொருட…

  18. ராஜஸ்தான் பாலைவனத்தில் அரியவகைத் தங்கப்படிமம் ராஜஸ்தான் பாலைவன குக்கிராமம் ஒன்றில்இ உலகின் அரிய வகை தங்கப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுஇ இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வைக் கண்டுபிடித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தெற்கில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பாலைவன கிராமம் ஜக்புரா. அங்கு தான் தங்கப்படிமம் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தங்கச் சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்க இரண்டு நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்துள்ளன. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க ஆய்வு நிறுவனமும்இ இந்திய தனியார் நிறுவனம் “மெட்டல் மைனிங் இண்டியா”வும் சேர்ந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. அவுஸ்திரேலிய நிறுவனத்தின் …

    • 0 replies
    • 787 views
  19. Started by கறுப்பி,

    வயது 8 எடை 99 லண்டன்: அதிக உடல் பருமன் இப்போது உலகளவில் பெரிய பிரச்னையாகி வருகிறது. உடல் கோளாறுகள், சாப்பாட்டு பழக்கங்களே இதற்கு காரணம். இப்படித்தான் லண்டனிலும். படத்தில் இருக்கும் சிறுவன் கானர் மெக்கிரட்டிக்கு 8 வயசுதான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த வயசில் 99 கிலோ எடை இருக்கிறான் கானர். அவனை ஆறுதலாக அரவணைத்து இருப்பது தாய் நிகோலா. தன் வயசு பையன்களின் சராசரி எடையை விட, மூன்று மடங்கு அதிக எடையுடன் இருக்கிறான் இந்த பொடியன். இன¤யும் இதே வேகத்தில் எடை அதிகரித்தால் ஆபத்து என்பதால், சிகிச்சை பெற இருக்கிறான் கானர். http://www.dinakaran.com

  20. இலங்கை சண்டையால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து: ஜெ. எச்சரிக்கை சென்னை: இலங்கையில் நடக்கும் சண்டையால் தமிழக மீனவர்களின் வாழக்கை கேள்விக்குறியாகி விட்டது என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்கள் அச்சுறுத்தலின்றி பத்திரமாக மீன் பிடிக்கவும், கரைக்கு திரும்பும் வகையில் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. கடந்த 25ம் தேதி அன்று நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆறு பேரில் கலியபெருமாள் என்ற மீனவர் இலங்கை க…

  21. இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம் (பிப்ரவரி 28, 2007): நாகை மாவட்ட மீனவரைச் சுட்டுக் கொன்ற பரபரப்பு நீங்குவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கலியபெருமாள் என்ற மீனவர் குண்டு பாய்ந்து இறந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ராமேஸ்வரம், தங்கச்…

  22. ‘முதல்வன்’ பாணியில் முதல்வர்... ஒரே நாளில் 125 பேர் சஸ்பெண்ட்! ‘‘நீங்க இந்தியாவோட மூத்த அரசியல் வாதிங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச சேதி... ஆனா, அடிப்படையில நீங்க ஒரு விவசாயிங்கறது பலபேருக்கு தெரியாத விஷயம். நீங்க பொறந்த மாவட்டம் உள்பட காவிரி டெல்டா விவசாயிங்களுக்கு உங்க காலத்துலயே ஒரு விடிவு வரணும்னு ஆசைப்படறோம். அது ஒருபக்கம் இருந் தாலும் உங்ககிட்ட நாங்க இன்னொரு கோரிக் கைய வைக்க பிரியப்படுறோம். பெரிசா ஒண்ணுமில்லீங்க... எங்க ஏரியா பக்கம் இருக்கற நெல் நேரடி கொள்முதல் நிலையங் கள்ல நடக்கற முறைகேடுகளை பெரிய மனசு வச்சு தீர்த்து வெச்சா அதுபோதும் எங்களுக்கு...’’ & இப்படி ஒரு வேண்டுகோள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பார்வைக்கு வர, புருவம் உயர்த்திய அவர் உ…

  23. திண்டுக்கல் ‘திடுக்’ சாதி வெறியில் பாதிரியார்? ‘‘தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதி வெறியைக் காட்டுகிறார், தேவாலய தலித் ஊழியரை சாதியைச் சொல்லி திட்டுகிறார்...”-----& பாதிரியார் பீட்டர் ராஜ் என்பவர் மீது இப்படியரு அதிர்ச்சிப் புகாரை அள்ளிவீசுகிறார்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தலித் கிறிஸ்தவர்கள். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத் துடன் வீற்றிருக்கிறது, தூய வளனார் பேராலயம். பீட்டர் ராஜ் இந்தப் பேராலயத்தின் பங்கு பாதிரியார். இவருக்கெதிராக கச்சைகட்டி நிற்கும் தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், கடந்த 18ம் தேதி பேராலயத்தின் திருப்பலி பூசையை நிறுத்தவும், தேவாலய கதவுகளை மூடவும் எத்தனித்திருக்கிறார்கள். மற்ற …

  24. விண்வெளிக்கான முதலாவது ரொக்கட்டை ஈரான் நேற்று வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்து. ஈரானில் தயாரிக்கப்பட்டதும் முற்றிலும், உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டதுமான ரொக்கட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்ளதாக விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைச்சர் டாக்டர் பஹ்ரமி அரச தொலைக்காட்சியில் தெரிவித்தார். எனினும் இவ்ரொக்கட்டின் பெயர் உட்பட மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவ்ரொக்கட்டானது விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்களை தாங்கிச் சென்றுள்ளது. 1995ஆம் ஆண்டு ஈரான்ரஷ்யா கூட்டுத்தயாரிப்பான ஸின்னா1 என்ற ரொக்கட் மூலம் தனது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதையடுத்து 3 ஆண்டுகளில் மேலும் பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.…

    • 8 replies
    • 1.7k views
  25. சென்னை: கல்யாணத்திற்கு முன்பே நடத்தையில் சந்தேகப்பட்ட மணமகனை, தாலி கட்டிக் கொண்ட அடுத்த நிமிடமே தாலியை கழற்றி எறிந்து புறக்கணித்து விட்டுச் சென்றார் மணமகள். சென்னை வளசரவாக்கம் வெங்கட சுப்பிரணி நகரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், ஆழ்வார் திருநகரைச் சேர்நத வள்ளிமயிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தையொட்டி கல்யாண மண்டபத்தில் அனைவரும் கூடியிருந்தனர். இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது மண்டபத்திற்கு வந்திருந்த ஒருவருடன் வள்ளிமயில் பேசியுள்ளார். இதைப் பார்த்த வெங்கடசுப்ரமணி, வள்ளியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்தார். இது வள்ளியின் காதுக்குச் சென்றது. தாலி கட்டுவதற்கு முன்பே இப்படி சந்தேகப்படுபவர் நாளை எப்படியெல்லாம் சநதேகப்படுவாரோ என்று நினைத்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.