உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26588 topics in this forum
-
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும். https://…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,662ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 179 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா கிருமித் தொற்றால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கை 1,005 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 90 பேர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கிருமித் தொற்று பரவியுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்று…
-
- 0 replies
- 406 views
-
-
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகாமையில் சுமார் பத்துமைல் தொலைவில் உள்ள டேட்டன் நகரில் வசிக்கும் தம்பதியினர் கடந்த 25-ம் தேதி மாலைநேரத்தில் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடி, சூரியன் மறையும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது, விமானப்படைத்தளத்தின் மேல்பகுதியில் வானத்தில் ஒரு மர்மப்பொருள் வட்டமிட்டபடி மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர்கள் வியந்தனர். அந்த காட்சியை மிக நெருக்கமாக வீடியோவாக பதிவு செய்துள்ள அவர்கள், வேற்றுகிரகவாசிகளான ‘ஏலியன்ஸ்’ குறித்த ஆராய்ச்சிகளை நடத்தி வரும் ‘செக்யூர் டீம் 10’ என்ற குழுவிற்கு அந்த வீடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளனர்.இத…
-
- 0 replies
- 602 views
-
-
இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க 3 நாடுகள் எதிர்ப்பு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது வியன்னா, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்யுமாறு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவுக்கு அணு எரி பொருள் வினியோகம் செய்ய 3 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினி யோகம் செய்து வருகிறது. இந்தியா - கடந்த 1974 ஆம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இத னால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அம லில் …
-
- 0 replies
- 922 views
-
-
தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இ…
-
- 0 replies
- 449 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று அமெரிக்காவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன. அலபாமா மாகாணத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 77% மருத்துவ சேர்க்கை நிறைவடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு …
-
- 0 replies
- 406 views
-
-
சென்னை: தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 7.32 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, தர்மபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அம்மாவட்டத்திலுள்ள நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியன்று தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க கோரி செங்கொடி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வ…
-
- 0 replies
- 593 views
-
-
பிரான்ஸ் குடியேறிகள் பிரிட்டனில் தஞ்சம் கோரலாமா? பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட் பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட், பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவை இன்று சந்திக்கும் போது, குடியேறிகள் பிரான்ஸில் இருக்கும்போது ஜக்கிய ராஜ்யத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்கின்ற கருத்தை நிராகரிப்பார் என்று மூத்த பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க இவ்விரு அமைச்சர்களும் பாரிஸில் சந்திக்கின்றனர். பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவ் நகரத்திற்கு வெளியே இருக்கும் முகாம் ஒன்றில் வாழ்ந்து வரும் குடியேறிகள், பிரான்ஸ் மண்ணில் இருந்து கொண்டே பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை வ…
-
- 0 replies
- 686 views
-
-
டெல்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 632 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் சமாதானத்துக்கான புதிய நம்பிக்கை; ஐம்பதாண்டுகால ஆயுதமோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. * ஹிலரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்புக்கு இடையிலான முதல் நேரடி விவாதத்துக்கு தயாராகிறது அமெரிக்கா; அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?—ஆராய்கிறது பிபிசி. * விவசாய நெருக்கடிக்கு புதுவகை தொழில்நுட்பத்தீர்வு; கென்யாவின் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் செல்பேசி விவசாயம்.
-
- 0 replies
- 387 views
-
-
கனேடிய மாகாணங்களுக்குள் பரவிய அமெரிக்க காட்டுத் தீ அமெரிக்க மேற்கு கடற்கரையில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, மத்திய மேற்கு, கனடா மற்றும் வடக்கு நியூயோர்க்கின் சில பகுதிகளுக்கு கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரையில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் எரிந்துள்ளது. இந்த நிலையில், அந்த நெருப்பிலிருந்து வரும் புகை இரண்டு பெரிய சதுப்பு நிலங்களில் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவற்றில் ஒன்று மேற்கு அமெரிக்கா முழுவ…
-
- 0 replies
- 419 views
-
-
பிரெக்ஸிட்: நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உருவாக்கி யுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரிட் டன் பிரதமர் தெரசா மே, இதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்த் தால் அதில் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐரோப்பிய கூட்ட மைப்பிலிருந்து பிரிட்டன் வெளி யேறிய பிறகு அதன் நடவடிக் கைகள் எப்படி இருக்கும் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட் டன் நாடாளுமன்றத்தின் இறை யாண்மையை…
-
- 0 replies
- 274 views
-
-
அல்-கொய்தாவின் 2 ஆம் தளபதி ஆப்கான் படையினர் நடத்திய தாக்குதலில் பலி! பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த அல்கொய்தாவின் மூத்த தலைவரான அபு முஹ்சின் அல் மஸ்ரி உயிரிழந்துள்ளார். அமெரிக்க படையினரால் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் ஆப்கான் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிய தேசிய பாதுகாப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்-கொய்தாவின் இரண்டாவது தளபதி என்று நம்பப்படும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த அல்-மஸ்ரி, ஆப்கானின், மத்திய காஸ்னி மாகாணத்தில் நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பணியகம் சனிக்கிழமை தாமதமாக வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அமெர…
-
- 0 replies
- 391 views
-
-
அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் ஈரானின் கொள்கையும் மாறும் [23 - March - 2009] * ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஹாமெனி அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்படுமானால் தமது கொள்கையிலும் மாற்றம் ஏற்படுமென ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதொல்லா அலிஹாமெனி தெரிவித்துள்ளார். ஈரானிய மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த வீடியோ செய்திக்கு பதிலளிக்கும் முகமாகவே இதனைத் தெரிவித்துள்ள ஹாமெனி அமெரிக்காவிடமிருந்து இதுவரை உண்மையான மாற்றம் எதுவும் வெளிப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார். நீங்கள் மாறினால் எமது நடத்தையும் மாறுமெனக் குறிப்பிட்டுள்ள ஹாமெனி ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெர…
-
- 0 replies
- 631 views
-
-
டிரம்பின் அதிகார வேட்டையை கட்டுபடுத்த ஓபாமா திட்டம் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான கொள்கையை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதற்காக முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை அழிப்பதற்கு ஓபாமா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2001 ஆம் ஆண்டு இரட்டைகோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் வரும் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பற்றிய தரவுகள் தேசிய குடிவரவு அடிப்படையின் கீழ் அமெரிக்காவால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு அவர்களை தீவிர கண்கானிப்பிற்கு உட்படுத்தி வரும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்களின் வருகை க…
-
- 0 replies
- 453 views
-
-
பிரித்தானியாவின் நிலக்கீழ் புகையிரத சேவை பணிப்புறக்கணிப்பால் பாதிப்பு – பலமில்லியன் பயணிகள் அவதி:- பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பல மில்லியன் பொது மக்கள், அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று காலை குறித்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் போக்குவரத்துளை மேற்கொள்வதில், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தது என, குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களால் நான்கு மில்லியன் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது ! …
-
- 0 replies
- 314 views
-
-
ஜெயலலிதா பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் - நாஞ்சில் சம்பத் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய போது, ’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும…
-
- 0 replies
- 2.4k views
-
-
அலெக்ஸி நவால்னிக்கு... விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்: ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை! கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ஏழு நபர்களும் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்கு சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அமெரிக்காவுடன் எடுக்கப்பட்ட தடைகள், தாக்குதலைத் திட்டமிடுவதற்கு அல்லது நடத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இலக்காகக் கொண்டது என்று பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ரஷ்ய அரசாங்கத்தின் இரச…
-
- 0 replies
- 324 views
-
-
ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடு 12 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது. …
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
உக்ரைன் போர்: பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு நாடுகளுக்குள்ளும் விவாதம் நடந்து வரும் நிலையில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது. புதன்கிழமை செல்லும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஐரோப்பாவின் பதில் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது https://athavannews.com/2022/1281434
-
- 0 replies
- 147 views
-
-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவோடு பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்தைக் கொண்டு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொண்டது. இதன் போது தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகள் நிகழ்த்திய நீதிக்குப் புறம்பான மனிதப் படுகொலைகளுக்கு ஒப்பான மனிதப் படுகொலைகளை பாகிஸ்தான் படைகள் நிகழ்த்தி கடந்த செப்டம்பர் திங்களில் இருந்து இதுவரை 238 பேரை படுகொலை செய்துள்ளமையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று பகிரங்கப்படுத்தியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பென்ற பெயரில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் உலகெங்கும் மனிதப்படுகொலைகளை எந்த அச்சுறுத்தலும் இன்றி குற்றச்சாட்டுக்களுக்கும் இடமின்றி.. நிகழ்த்…
-
- 0 replies
- 530 views
-
-
மரண தண்டனையை ஒழித்த மலேசியா! மரண தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றன. ஆனால், தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டால் அதன்பின்னர் கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு அச்சம் இல்லாமல் போய்விடும்; அதனால் குற்றங்கள் அதிகரித்து விடும் என தூக்கு தண்டனைக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும், தூக்கு தண்டனை அமலில் இருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலட்சியமாக உள்ளது. உலகிலுள்ள 195 நாடுகளில் 102 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 39 நாடுகளில் மரண தண்டனை நடைமு…
-
- 0 replies
- 230 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெற்றிருப்பதுடன், அதன் நேச அணியான ஜே.வி.பி. படுதோல்வியையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளன. வியாழக்கிழமை இடம் பெற்ற 266 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இச் செய்தி எழுதுகையில் வெளியான 250 சபைகளுக்கான முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 212 சபைகளின் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தது. இவற்றில் 8 மாநகர சபைகளும் 17 நகர சபைகளும் 187 பிரதேச சபைகளும் அடங்கும். ஐக்கிய தேசியக் கட்சி 3 மாநகர சபைகளையும் 13 நகர சபைகளையும் தன்வசமாக்கியுள்ளது. ஜே.வி.பி. திசமகராமை பிரதேச சபையில் மட்டுமே நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை வட, …
-
- 0 replies
- 738 views
-
-
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சிறுமி உயிரிழப்பு – 11 பேர் காயம் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட இந்தநிலநடுக்கம் 6.1 ரிக்டர் அலகாக பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 74000 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltami…
-
- 0 replies
- 186 views
-