உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26844 topics in this forum
-
ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019 ஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி அணிந்து தடியுடன் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு இ;டம்பெற்ற இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் , அவர்கள் ஏன் மக்களை தாக்கினார்கள்? என தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகள் மீதே இவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹ…
-
- 2 replies
- 818 views
-
-
ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட…
-
- 0 replies
- 595 views
-
-
கொலம்பியாவில் உள்ள ஹொண்டியுராஸ் தூதரகத்தில், கிறிஸ்துமஸ் விருந்தின்போது பாலியல் தொழிலாளர்கள் வந்து அவ்விடத்தில் பொருட்களைத் திருடி அட்டூழியம் செய்தனர் என்று வெளியாகியுள்ள தகவல்களை விசாரிக்கப்போவதாக ஹொண்டியுராஸ் அரசாங்கம் கூறுகிறது. பொகோட்டாவில் உள்ள இந்த தூதரகத்தின் ஊழியர்கள் தமது கிறிஸ்துமஸ் விருந்திலே குடித்துவிட்டு களியாட்டம் போடுவதற்காக பாலியல் தொழிலாளர்களை அழைத்திருந்தனர் என்றும், அந்த விருந்தின்போது அங்கிருந்த கணிணிகள், கைத்தொலைபேசிகள் போன்றவை திருடுபோயுள்ளன என்றும் ஹொண்டியுராஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. களியாட்டம் போடச் சென்றவர்கள் தூதரின் அலுவலக அறைக்குள் மலம் கழித்துவிட்டுச் சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஹொண்டியுராஸ் மற்றும் கொலம்பியா இடையே போதைமர…
-
- 1 reply
- 764 views
-
-
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தபட்சம் 272 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொமாயாங்குவா நகரிலுள்ள சிறைச்சாலையில் புதன்கிகிழமை காலை இத்தீவிபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதற்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகளின் கலகம் காரணமாக அல்லது மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஹொண்டுராஸ் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி டானியெலோ ஒரெல்லானா கூறியுள்ளார். http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 499 views
-
-
ஹொலிவுட் வெயின்ஸ்டீனின் முடிவில்லா பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் – அந்தரங்கங்களை வெளியிட்டார் அந்தரங்க செயலர்… ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். 65 வயதுடைய பிரபல ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் றைம்ஸ்’ இதழ் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர். அந்த வரிசையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் தற்போது இணைந்துள்ளா…
-
- 0 replies
- 251 views
-
-
ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில்…
-
- 0 replies
- 216 views
-
-
எகிப்திய ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக்கிற்கு இன்று ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்தினை தனது குடும்ப ஆட்சியாக ஆண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிளர்ச்சியாளர்கள் பலரை ஹொஸ்னி முபாரக் கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழங்கு விசாரணை ட்றயல் அட்பார் முறையில் கடந்த 10 மாதங்களாக நடந்து வந்த நிலையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை ஆதரரித்து மக்கள் குதூகலத்தில் குதித்தமையையும் காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹொஸ்னி முபாரக்குடன் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹபீப் அல்-அட்லிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது h…
-
- 0 replies
- 420 views
-
-
ஹொஸ்னி முபாரக்கிற்கு மரண தண்டனை வீரகேசரி இணையம் 4/17/2011 9:59:46 AM எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. முபாரக் சுமார் 40 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து வந்தார். எனினும் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார். எனினும் அவர் மீது தனது எதிர்ப்பாளர்களை படு கொலைசெய்தமை, ஊழலில் ஈடுபட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் தற்போதைய இராணுவ அரசு விசாரித்து வருகின்றது. இதன்போது விசாரணைக…
-
- 0 replies
- 718 views
-
-
சர்க்கில் இன்ஸ்பெக்டர் கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்த சப்.இன்ஸ்பெக்டர் மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளார் சாப்ட்வேர் எஞ்ஜீனியர் கணவர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3-வது டவுன் போலீஸ் நிலையத்தில் சர்க்கில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35).இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜீவிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீண்ட காலமாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3-வது டவுன் போலீஸ் நிலையத்தில் சர்க்கில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35).இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணி…
-
- 2 replies
- 936 views
-
-
இந்த களேபரத்துக்கிடையே, சில கைதிகள் அறை கூரை வழியாக வெளியேறி தப்பினர். பெரும்பாலான கைதிகள், தீயில் சிக்கியதாலும், புகை மூட்டத்தில் மூச்சு திணறியும் பலியானார்கள். ஜெயில் நிர்வாகம் மட்டுமின்றி, செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், உடல்களை தூக்க முயன்றபோது, அவை கரிக்கட்டைகளாக கிடந்ததால், உடைந்து நொறுங்கின. இது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களையும் அதிர வைத்தது. மரபணு சோதனை மற்றும் பல் மாதிரியை வைத்துத்தான் கைதிகளை அடையாளம் காண முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. மீட்புப்பணி நடந்து கொண்டிருந்தபோது, கைதிகளின் உறவினர்களும், நண்பர்களும் ஜெயிலுக்கு வெளியே திரண்டனர். அவர்கள் ஜெயிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்கள், ஜெயில் அதிகாரிக…
-
- 0 replies
- 479 views
-
-
ஹ்யூஸ்டன்: தொழிற்சாலை வெடித்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நகரான ஹ்யூஸ்டனில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக, குரோஸ்பையிலுள்ள அர்கெமா தொழிற்சாலையில் இருந்து வெட…
-
- 0 replies
- 409 views
-
-
தமிழ்நாடு சென்னையிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான "கைட்ச்" ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்றுவரும் ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குரித்த திரப்படம் ரத்து செய்யப்பட்டுள்லதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2852
-
- 0 replies
- 460 views
-
-
தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜனாதிபதி மாளிகை நோக்கி... இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தொடர்ந்து 2–வது நாளாக ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல ‘இந்தியா கேட்’ பகுதியில் காலை 9 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் அலை, அலையாக திரண்டனர். அங்கு முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் வந்து, போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவ…
-
- 0 replies
- 741 views
-
-
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்…
-
- 0 replies
- 148 views
-
-
🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமா…
-
- 0 replies
- 192 views
-
-
🚨 கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! 🇨🇦 written by admin December 26, 2025 கனடாவின் டொராண்டோ(Toronto) பல்கலைக்கழகத்தின் (University of Toronto) ஸ்கார்பரோ (Scarborough) வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 📝 முக்கிய விபரங்கள்: சம்பவம்: ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்: உயிரிழந்தவர் 20 வயதுடைய இந்திய மாணவர் என்பதை டொராண்டோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். (அவரது விபரங்கள் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முழுமையாக வெளியிடப்படும்). காவல்துறை நடவடிக்கை: துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைத் தேடும் பணியில்…
-
- 0 replies
- 208 views
-
-
🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! adminJanuary 1, 2026 சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த வேளையில், அங்குள்ள ஒரு பாரில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை உள்ளூர் நேரம்).சுமார் 01:30 மணியளவில் கிராஸ்-மொன்டானாவில் உள்ள ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற பிரபல பார் மற்றும் உணவகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட…
-
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! written by admin January 16, 2026 கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவுடனான கனடாவின் கூட்டாண்மை “புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) நம்மைச் சிறப்பாகத் தயார்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குச் செல்லும் முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்த 10 ஆண்டுகளில் …
-
-
- 6 replies
- 470 views
-
-
🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! 🚔 written by admin December 25, 2025 ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் விபரம்: சம்பவம்: குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது கழுத்தை அறுக்க முற்பட்ட நிலையில், அங்கிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறை நடவடிக்கை: சுமார் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கைது: கைகள் மற்றும் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர்…
-
- 0 replies
- 213 views
-