உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27005 topics in this forum
-
ஈராக்கில் திருமண மண்டபத்தில் தீ -100 பேர் பலி! ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட…
-
- 7 replies
- 720 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ALAMY/CANADIAN PRESS படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் மற்றும் மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (ஹவுஸ் ஆ…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
சட்டவிரோத பெற்றோல் விற்பனையின்போது நிகழ்ந்த அசம்பாவிதம் ஒன்று பெரும் தீ விபத்தாக மாறியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகி உள்ளனர். ஆபிரிக்க நாடான பெனினில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. மேற்கு ஆபிரிக்க தேசங்களின் ஒன்று பெனின். நைஜீரியாவின் அண்டை தேசமான பெனினில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் 35 பேர் பலியாகி இருக்கின்றனர். தீயில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பெனின் நாட்டில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அங்கே விலையும் அதிகம். எனவே பெற்றோல்ல் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கும் எல்லை தேசமான நைஜீரியாவிலிருந்து சட்ட விரோதமாக ப…
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ கிளர்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு தனது பெயரை கதாஃபி அறிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 22 செப்டெம்பர் 2023 இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் தொடக்கத்தில், கர்னல் முயம்மர் கதாஃபியின் காலம் கடந்துவிட்டது. அவர் 2011 வாக்கில், யாரும் மீண்டும் பார்க்க விரும்பாத பழைய திரைப்படத்தின் கதாபாத்திரம் போல் ஆகிவிட்டார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனிதன் ஏற்கெனவே நிலவில் கால் பதித்துவிட்ட சமயத்தில், ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார்.…
-
- 4 replies
- 687 views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்காக்கள் அணிய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் நிக்காப்புகளை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் புர்காக்களை அணிய தடை விதிக்கலாம் எனவும் வாக்களித்தனர். இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தெற்கு டிசினோ மற்றும்…
-
- 4 replies
- 547 views
- 1 follower
-
-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் - அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம் Published By: Rajeeban 25 Sep, 2023 | 11:12 AM செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி அந்த நகரமக்களிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்வைத்து இந்த படங்கள் உருவாக்கப்பட…
-
- 1 reply
- 297 views
-
-
Published By: RAJEEBAN 17 SEP, 2023 | 02:25 PM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று இடம்பெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மெல்பேர்னில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ள சுதேசிய அவுஸ்திரேலியர்களிற்கான அமைச்சர் லின்டா பேர்னே வரலாறு உண்மையாகவே அழைக்கின்றது என தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் உண்மையாகவே கண்ணீர் விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன் நீங்கள் எங்கிருக்கின்றீ…
-
- 4 replies
- 358 views
- 1 follower
-
-
ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டமூலத்தின் விதிகளின்படி, பொது இடங்களில் “தகாத முறையில்” உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டமூலம் சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இந்த ஹிஜாப் சட்டமூலம் 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூல…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,LARRY BARHAM படக்குறிப்பு, இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது பகுப்பாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி செய்திகள் 23 செப்டெம்பர் 2023, 03:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜாம்பியாவில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல்லியல் ஆய்வாளர்களின் புரிதலையே புரட்டிப்போடும் விதத்தில் உள்ளன. சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தை…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எ…
-
- 3 replies
- 667 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 SEP, 2023 | 10:53 AM இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான அவுகஸ் aukus உடன்படிக்கையை இராணுவகூட்டணி என வர்ணித்துள்ளதுடன் அது தேவையற்றது இதனால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். இது மூலோபாய தவறு அவர்கள் தவறிழைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த கூட்டணி ஒரேயொரு நாட்டை மாத்திரம் இலக்காக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கின் சர்வதேச அமைதிக்கான கார்னகி என்டோவ்மன்டின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2021 இல் உருவாக்கப்பட்ட அவுக்…
-
- 6 replies
- 965 views
- 1 follower
-
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். ரஷ்யாவில் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு 9 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 6…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
22 SEP, 2023 | 12:59 PM உலகின்மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பொக்ஸ் நியுஸ் நியுஸ்கோர்ப் போன்றவற்றின் தலைவர் ருபேர்ட்மேர்டோக் (92) தனது குழுமங்களின் தலைமை பதவியிலிருந்து விலகியுள்ளார். ஏழு தசாப்தகாலமாக அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட்மேர்டோக் தலைமை பதவியிலிருந்து விலகும் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். பதவிவிலகுவதற்கான வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார். நியுஸ்கோர்ப் நிறுவனத்தின் தலைமை பதவியை அவரது மகன் லச்லான் ஏற்கவுள்ளார்-அவர் தொடர்ந்தும் பொக்ஸ் நியுசின்பிரதமர் நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார்- லச்லான் த…
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
Published By: SETHU 21 SEP, 2023 | 10:21 AM கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறுவதற்காக தனது சொந்த ஆய்வாளர்களுக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)'இலஞ்சம்' வழங்கியதாக சி.ஐ.ஏ.யின் சிரேஷ்ட ஒருவர் அமெரிக்கப் பாராளுமன்றக் குழுவிடம் அண்மையில் சாட்சியம் அளித்துள்ளார். சி.ஐ.ஏ பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸுக்கு, அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு தெரிவுக்குழுக்களின் தலைவர்கள் எழுதிய கடிதத்தில் இச்சாட்சியம் குறித்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான உப தெரிவுக்க…
-
- 1 reply
- 312 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒளிரும் விண்வெளி மையமான வாஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்தனர். ஒரு பெரிய விருந்தில், இருவரும் ரஷ்ய மதுவை அருந்திக்கொண்டே, ஒருவருக்கொருவர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை வளப்படுத்துவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து புறப்படும் முன், இரு தலைவர்களும் மாதிரி துப்பாக்கிகளை அவர்களுக்குள் பரி…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,DR ROBBIE MALLET படக்குறிப்பு, பனிக்கட்டிகள் அதிவேகமாக உருகி வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட், பெக்கி டேல் மற்றும் எர்வான் ரிவால்ட் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் பனி, இதற்கு முந்தைய குளிர் காலத்தில் இருந்ததை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. ஒரு காலத்தில் புவி வெப்பமடைதலைத் தடுக்கும் விதத்தில் இருந்த ஒரு பகுதி குறித்த கவலையளிக்கும் தகவலாக இது பார்க்கப்படுகிறது. "இது இதுவரை நாம் பார்த்த எந்த ஒரு தர…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1% பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரிய வந்துள்ளது. உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மே…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது. இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருநது விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது. மேலும், தென்கொரியாவில் இருந்து கட்டாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க…
-
- 2 replies
- 574 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 20 SEP, 2023 | 12:40 PM சூடானில் வாக்னர் ஆதரவு படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் விசேட படையணியினர் உள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. சூடான் தலைநகருக்கு அருகில் வாக்னர் ஆதரவு படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதல் மற்றும் தரைநடவடிக்கைகளின் பின்னணியில் சூடானின் விசேட படையினர் உள்ளனர் என்பது சிஎன்என்னின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதலின் விளைவுகள் போர்முனையிலிருந்து பல மைல்களிற்கு அப்பால்வரை காணப்படுவதும் தெரியவந்துள்ளது. சூடானில் இடம்பெறும் தாக்குதல்களை சூடா…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான். கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் …
-
- 0 replies
- 313 views
-
-
12 SEP, 2023 | 10:53 AM லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத கிழக்கு லிபிய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகள் பல ஆயிரமாக மாறாலாம் என லிபியா குறித்த நிபுணர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். டானியல் புயலை தொடர்ந்து அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்துள்ளனர். லிபியாவின் கிழக்கில் ஊரடங்கினை அதிகரித்துள்ள அதிகாரிகள் கட…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கத்யா அட்லர் பதவி, ஐரோப்பிய ஆசிரியர், பிபிசி 18 செப்டெம்பர் 2023, 15:10 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா - யுக்ரேன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதை உலகறியும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், எஃப்16 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத உதவியில் அடங்கும். ஆனால், யுக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மற்றொரு உதவியான “சௌனாஸ்” பற்றி உலகம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால், எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த த…
-
- 2 replies
- 577 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PA MEDIA 18 செப்டெம்பர் 2023, 11:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். அதைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. எஃப்-35 வகையைச் சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார். அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் நலமாக உள…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 SEP, 2023 | 09:25 AM மொராக்கோவை நேற்றிரவு தாக்கிய பாரிய பூகம்பத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் மொராக்கோவை தாக்கிய மிகப்பாரிய பூகம்பத்தினால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நள்ளிரவில் மொராக்கோவின் உயரமான அட்லஸ் மலைப்பகுதியை பூகம்பம் தாக்கியுள்ளது( 6.8) மராகெச் என்ற நகரமே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது 296 பேர் உயிரிழந்துள்ளனர் 156 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படலாம் என மொராக்கோவின் விமானப்படை எச்சரித்துள்ளது. …
-
- 7 replies
- 945 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GOFUNDME படக்குறிப்பு, அமெரிக்காவில் விபத்தில் இறந்த இந்திய பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. பாடிகேம் எனப்படும் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானவி கந்துலா என்ற அந்த 23 வயது பெண் சியாட்டிலில் உள்ள தனது பல்கலைக்கழகத்துக்கு அருகே போலீஸ் வாகனம் ஒன்று மோதி உயிரிழந்தார். அந்த இடத்துக்கு காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் என்பவர் சென்றிருக்கிறார். …
-
- 0 replies
- 539 views
- 1 follower
-