Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 5,000 மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் – கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான் சுமார் 5,000 பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகளில் ஈரான் இறங்கி உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகள் பயிலும் பாடசாலைகளில் மர்ம பொருள் வீசப்பட்டதாகவும், அதிலிருந்து வெளியான ந…

    • 0 replies
    • 332 views
  2. சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு Published By: Sethu 10 Mar, 2023 | 09:42 AM சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார். 69 வயதான ஸீ ஜின்பிங்,…

  3. ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்! ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார்…

  4. மலேசிய அரசியல்: முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது - முழு விவரம் படக்குறிப்பு, மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராக முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் அந்த வளாகத்தில் திரண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில்…

  5. அணுசக்திநீர்மூழ்கி திட்டம் - அடுத்தவாரம் அறிவிக்கின்றது அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 02:15 PM இந்தோபசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும்ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளிற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா இறங்கியுள்ளது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அணுசக்திநீர்மூழ்கி திட்டத்தை முன்னெடுப்பதாக அவுஸ்திரேலிய இந்த நாடுகளிற்கு தெரிவிக்கவுள்ள…

  6. ரஸ்யாவின் யுத்தகுற்ற ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்க பகிர்ந்துகொள்வதை பென்டகன் தடுக்கின்றது - நியுயோர்க் டைம்ஸ் Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 11:48 AM உக்ரைனில் ரஸ்யாவின் பாரியமனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதி;மன்றம் ரஸ்யாவிற்கு எதிரான விசாரணைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா உதவினால் அது ஒரு முன்னுதாரணமாக அமைந்து எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ப…

  7. ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாகவும். அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி …

  8. கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்பு Published By: SETHU 08 MAR, 2023 | 06:00 PM கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார் இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின் அப்துல்அஸீஸ் அல் தானியின் ராஜினாமாவை கத்தார் ஆட்சியாளரான அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல் தானி ஏற்றுக்கொண்டுள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் செவ்வாய்க்கிழiமை (07) பதவியேற்றுள்ளார் எனவும் கத்தார் அ…

  9. நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தாக்குதலில் நாம் சம்பந்தப்படவில்லை: உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் Published By: SETHU 08 MAR, 2023 | 03:40 PM ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்கான நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கடந்த வரும் வெடித்தமைக்கு உக்ரேனிய ஆதரவு குழுவொன்றே காரணம் என புதிய புலனாய்வுத் தகவல்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது. எனினும் உக்ரேன் இதை நிராகரித்துள்ளது. பால்டிக் கடலில் பொருத்தப்பட்டுள்ள 'நோர்ட் ஸ்ட்ரீம்- 2' எனும் எரிவாயு வினியோகக் குழாய் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி குண்டுவெடிப்பினால் சேதமடைந்தது. இத்தாக்குதலை ந…

  10. ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்! உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாகச் சேதப்படுத்தப்பட்டன. ஆனாலும், இன்னும் உக்ரைன் – ரஷ்யா இடையே எந்தச் சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வெளியிட்டிருக்கிற அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது …

  11. சர்வதேச மகளிர் தினம் 2023: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகிறார்கள் 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா …

  12. குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பை மீளக் கட்டியெழுப்ப ஒரு தசாப்தமாவது ஆகலாம்: காமன்ஸ் பாதுகாப்புக் குழு! பிரித்தானியாவின் குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பை மீளக் கட்டியெழுப்ப குறைந்தது ஒரு தசாப்த காலமாவது ஆகலாம் என காமன்ஸ் பாதுகாப்புக் குழு எச்சரித்துள்ளது. அத்துடன், வெடிமருந்து கையிருப்பை நிரப்ப முடியாதது தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரித்தானியா அதன் வெடிமருந்து கையிருப்புகளை மறுஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் வெளிப்படுத்திய பின்னர், அதன் சொந்த தற்காப்புகளை பாதுகாக்க போதுமான வெடிமருந்துகள் இல்லை என்ற அச்சத்தின் மத்தியில் இது வந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு…

  13. சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் Published By: SETHU 07 MAR, 2023 | 06:20 PM சிரியாவின் அலேப்போ நகரில் இஸ்ரேலிய யுத்த விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. சிரியாவின் 2 ஆவது பெரிய நகரான அலேப்போ கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினாலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்தியதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. லட்டேக்கியா பிராந்தியத்தின் மேற்கு பகுதியில், அலேப்போ சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, அதிகாலை 2.07 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவ்…

  14. சீனா: ராணுவத்துடன் பட்ஜெட் செலவினத்தை விவாதிக்கும் அரசு - அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரிக்கை ஜார்ஜ் ரைட் பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES இந்த ஆண்டு ராணுவ செலவினம் ஏழு சதவீதமாக அதிகரிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் "அதிகரிக்கும்" அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீனாவில் அதன் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்பிசி) என அழைக்கப்படுகிறது. அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்…

  15. எகிப்து பிரமிடுக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய தாழ்வாரம்: உள்ளிருந்து கிடைத்த அதிசயம் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் கிரிட்டன் பதவி,பிபிசி நியூஸ் 4 மார்ச் 2023 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, எண்டோஸ்கோபி கேமரா படமெடுத்த தாழ்வாரத்தின் உட்பகுதி பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள மாபெரும் கிசா கிரேட் பிரமிடு கட்டமைப்புக்குள் அதன் முதன்மை நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய தாழ்வாரம் போன்ற பகுதி இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்குள்ளே உள்ள காட்சி இப்போது முதல் முறையாக படம்…

  16. ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து: 2,000 தங்குமிடங்கள் தீக்கிரை! பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர். காக்ஸ் பஜார் என்று அழைக்கப்படும் முகாமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரவிய தீ, முகாமில் சுமார் 2,000 தங்குமிடங்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 14:45 மணிக்கு தீ பரவத் தொடங்கியது. எனினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அண்டை நாடான மியான்மரில் வன்முறையில் இருந்து தப்பிய 12,000பேர் இப்போது வீடற்றவர்களாக உள்ளதாக, பங்களாதேஷின் அக…

  17. ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை செய்யப்பட்டது ஏன்? ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். தனது வீட்டில் பெல்டால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. வாய்த் தகராறில் இந்தக் கொலையை செய்ததாக 29 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனா். ஸ்புட்னிக் …

  18. புதிய சீனப் பிரதமர்: அதிகாரத்தில் தனது பிடியை வலுவாக்கும் ஷி ஜின்பிங் கட்டுரை தகவல் எழுதியவர்,ஸ்டீபன் மெக்டோனல் பதவி,பிபிசி செய்தியாளர் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் இந்த வார இறுதியில் தொடங்கும் தேசிய மக்கள் மாநாடு, அந்நாட்டின் அதிகாரத்தில், அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி இறுகுவதன் உச்சபட்சக் குறியீடாக இருக்கும். தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை. கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ரப்பர் ஸ்டாம்ப் அமர்வான வர…

  19. பலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 15 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) பின்னேரம் அஸ்ஸும் நகருக்குள் இஸ்ரேலிய இராணுவ வாகனம் ஒன்று நுழைந்தபோது இளைஞர்கள் அதன்மீது கல் எறிந்ததற்கு பதிலடியாக இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அந்த மேற்குக் கரை நகர மேயர் அஹமது எனாயா தெரிவித்துள்ளார். …

  20. இந்தோனேசியாவின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பாரிய தீ விபத்து ; 17 பேர் பலி; 50க்கும் அதிகமானோர் படுகாயம் இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவீதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேமிப்புக் கிடங்கில் நேற்று பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர தீ விபத்தில் சேமிப்புக் கிடங்கில் இருந்த எரிபொருள் தீப…

    • 0 replies
    • 501 views
  21. உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி! ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க அனுமதிக்கும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உதவி…

  22. காலநிலை மாற்றம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் அவசியம் - அவுஸ்திரேலியாவில் போராட்டம் Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 02:41 PM கடும் புயல் மழையையும் பொருட்படுத்தாமல் சிட்னியில் நூற்றுக்கணக்கான மக்கள் காலநிலை மாற்றம் தொடர்பானஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சிட்னி சிபிடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் பெற்றோர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பான ஐந்தாவது வருடாந்த ஆர்ப்பாட்டத்திலேயே இவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல அவுஸ்திரேலிய நகரங்களில் காலநிலை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.ஆசிரிய…

  23. ஈரானிய ஆயுதங்களுடன் படகை கைப்பற்றியதாக பிரிட்டன் தெரிவிப்பு Published By: SETHU 02 MAR, 2023 | 05:19 PM ஈரானிய ஆயுதங்களைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றை பிரித்தானிய யுத்த கப்பலொன்று இடைமறித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையொன்றின் போது இப்படகு இடைமறிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இவற்றில் அடங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிறிய படகு இருள்சூழ்ந்த நேரத்தில் சர்வதேச கடற்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருப்ப…

  24. தாய்லாந்தில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் 6,000 அமெரிக்கப் படையினர் Published By: SETHU 03 MAR, 2023 | 03:40 PM தாய்லாந்தில் இன்று ஆரம்பமான கூட்டு இராணுவப் பயிற்சியில் 6000 இற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் பங்குபற்றுகின்றனர். கோப்ரா கோல்ட் எனும் இப்பயிற்சியில் தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் படையின் பங்குபற்றுகின்றனர். 42 ஆவது வருடமாக இப்பயிற்சி நடவடிக்கை நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. கடற்படையினர், தரைப்படையினர், விமானப்படையினர் இப்பயிற்சிகளில் பங்குபற்றுகின்றனர் …

  25. ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடுக்கலாம்: அமெரிக்க நீதித் திணைக்களம் Published By: SETHU 03 MAR, 2023 | 05:44 PM அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என அந்நாட்டு நீதித்திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியுற்றதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2021 ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தின் செனட் சபையில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் நடவடிக்கையின்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.