உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
3 தினங்கள் உலகின் 25 ஆவது பெரும் செல்வந்தரான நபர் : எவ்வாறு ? By VISHNU 09 SEP, 2022 | 01:13 PM அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வங்கிக் கணக்கில் 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டதால் அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்வந்தரானார். எனினும், அவரின் அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வங்கியின் தவறினாலேயே அவரின் கணக்கில் இவ்வளவு பெருந்தொகை வைப்புச் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, அக்கணக்கிலிருந்து பணம் அகற்றப்பட்டது. லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த டெரன் ஜேம்ஸ் என்பவருக்கே இந்த விநோத அனுபவம் ஏற்பட்டது. ெடரன் ஜேம்ஸை தொலைப…
-
- 3 replies
- 829 views
- 1 follower
-
-
சீன தம்பதியினரின் நடவடிக்கையால் குழம்பிப்போன அமெரிக்க அதிகாரிகள் By VISHNU 09 SEP, 2022 | 01:17 PM பசுபிக் சமுத்திரத்திலுள்ள மார்ஷல் தீவுகளில் சிறிய நாடொன்றை ஸ்தாபிக்க சீன தம்பதியொன்று முற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மார்ஷல் தீவு எம்.பிகளுக்கும் அதிகாரிகளுக்கு அவர்கள் லஞ்சம் வழங்கியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசுபிக் சமுத்திரத்திலுள்ள மார்ஷல் தீவுகள் சுயாதீன நாடாகும் ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகளைக் கொண்ட நாடு இது. அங்குள்ள தொலைதூர தீவு ஒன்றில், அரைச் சுயாதீன பிராந்தி…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
ரஷ்யாவின் புதிய ஆயுதம் - புட்டின் விளக்கம் நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையிலேயே அந்த நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால்தான் நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய முடியாமல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் இப்போது ஆமோதித்தால் கூட, நாா்ட் ஸ்ட்ரீம்-2 குழாய் வழித்தடம் மூலம் உடனடியாக எரிவாயு விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழ…
-
- 3 replies
- 875 views
-
-
எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் By Rajeeban 26 Aug, 2022 | 12:19 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசுவதோடு "நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்" என்று ஆவேசமாகப் பேசுகிறார். நடந்தது என்ன? டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியப் பெண்கள் நால்வர் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித…
-
- 44 replies
- 3k views
-
-
குவாட் கவனத்தை திருப்பிய சீனா By VISHNU 10 SEP, 2022 | 07:56 AM ஹரிகரன் “சீனா ‘யுவான் வாங் 5’ கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்திய அதேவேளை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சொலமன் தீவுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்தியது” அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுதிஸ்ரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில், மூன்று முக்கிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில் இ…
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
மத்திய கனடாவில்... 13 இடங்களில், கத்திக் குத்து: 10பேர் உயிரிழப்பு- 15பேர் படுகாயம்! மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் கிராமத்தில் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என பெயரிடப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் – வெல்டனின் வடகிழக்கில் சுமார் 200 பேர் வசிக்கும் சுமார் 2,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு ப…
-
- 7 replies
- 694 views
- 1 follower
-
-
இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANNIE LEIBOVITZ ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 21 ஏப்ரல் 1926 அன்று லண்டன் பெர்க்லி சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர். தமது தந்தை, அப்போதை…
-
- 2 replies
- 584 views
- 1 follower
-
-
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது அவர் நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர் ஆனார். இப்போது என்ன நடக்கிறது? ராணி இறந்ததும் உடனடியாக அவரது வாரிசான, இளவரசர் சார்ல்ஸுக்கு மணிமுடி சென்றது. லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்புக்கு முன்பாக சனிக்கிழமை பிரிட…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இரண்டாம் எலிசபெத் ராணி: பிரிட்டன் அரச குடும்ப வரைபடமும் அரியணைக்கான வாரிசு வரிசையும் 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,RANALD MACKECHNIE ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அரசரானார். அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான், 1685 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த முதல் சார்ல்ஸ். செப்டம்பர் 8 ஆம் தேதி மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தான், பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி. அரச குடும்பம் மற்றும் அரியணை வாரிசுகளின் வரிசை குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும். …
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
இரண்டாம் எலிசபெத்: குதிரைகள் மீது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் கொண்டிருந்த ராணி ஃபிராங்க் கியோக் பிபிசி விளையாட்டு 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,UK PRESS VIA GETTY படக்குறிப்பு, பந்தயத்தின்போது ராயல் பாக்ஸில் தன் பந்தய மேலாளர் ஜான் வாரன் உடன் அமர்ந்திருந்த ராணி, மகிழ்ச்சியில் புன்னகைத்தபோது படம்பிடிக்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் விடுமுறை மாளிகைக்கு செல்லும்போது நீங்கள் கவனிக்கக் கூடிய முதல் விஷயம், அவருடைய 'எஸ்டிமேட்' என்ற பந்தய குதிரையின் முழு உருவச் சிலை. சாண்ட்ரிங்காமில் அமைந்துள்ள இச்சிலை, கிரீடம் தரித்த ஒருவரால் அரிதாக ஈடுபடக்கூடிய விளை…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
உக்ரைன்... மற்றும் நட்பு நாடுகளுக்கு, 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு... அமெரிக்கா ஒப்புதல்! உக்ரைன் மற்றும் நட்பு நாடுகளுக்கு கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தற்போது ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 675 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளது ஜேர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் பலநாட்டு சக அமைச்சர்களுடனான சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த உதவியில் ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், ஹம்வீ வாகனங்கள், கவச ஆம்புலன்ஸ்கள் மற்றும் யுத்த தாங்கி எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும். அமெரிக்கா ஏற்…
-
- 0 replies
- 119 views
-
-
சூடான்: இனக் குழுக்கள் மோதலில் 380 போ் பலி வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் டாா்பா் பகுதியில் அரபு பழங்குடியினருக்கும் அரபு அல்லாத பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை 224 மோதல் சம்பவங்கள் நடைபெற்ாகவும், இதில் 430-க்கு மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூடானில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப…
-
- 0 replies
- 245 views
-
-
இரங்கல்: ராணி இரண்டாம் எலிசபெத் - கடமை உணர்வால் குறிக்கப்பட்ட நீண்ட ஆயுளைப் பெற்றவர் 8 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES தமது மக்களுக்கும் அரியணைக்கும் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் உறுதியும் கடமை உணர்ச்சியும்தான், ராணி இரண்டாம் எலிசபெத்தின் நீண்ட நெடிய ஆளுகையின் அடையாளங்கள் ஆகும். பிரிட்டிஷ் செல்வாக்கு சரியும் நிலையில், அடையாளம் தெரியாத அளவுக்கு சமூகம் மாறிய சூழலில், முடியாட்சியின் தேவையே கேள்விக்குள்ளாகிப் போன நிலையில், தீவிரமாக மாறிவந்த உலகில் பலவற்றுக்கும் ஒரு மாறாத புள்ளியாக அவர் விளங்கினார். இவர் பிறந்த நேரத்தில், மணிமுடியை ஏற்பது இவருக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் என வேறு எவரும…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
தன்னை... அணு ஆயுத நாடாக, பிரகடனப்படுத்தியது... வட கொரியா! வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்று அழைத்தார். மேலும் அணுவாயுதமயமாக்கல் தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். இது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்பான தாக்குதலைப் பயன்படுத்துவதற்கு நாட்டின் உரிமையையும் சட்டம் உறுதி செய்கிறது. பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், வடகொரியா 2006ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆறு அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின…
-
- 0 replies
- 249 views
-
-
சீன ஜனாதிபதியும், புடினும்... அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தகவல்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளின் தணிக்கை மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த தயாராகிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர் என்று சீனாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பெருகிவரும் பொருளாதார சவால்கள் மற்றும் வெ…
-
- 0 replies
- 205 views
-
-
உக்ரைனில்... இலக்குகள் அனைத்தும், எட்டப்படும் வரை... போர் தொடரும்: புடின் திட்டவட்டம்! உக்ரைனில் எந்த இலக்குகளை அடைவதற்காக ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ நடத்தப்படுகிறதோ, அந்த இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தொலைதூர கிழக்கே உள்ள துறைமுக நகரான விளாதிவோஸ்டோகில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வருடாந்திர பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உண்மையில், உக்ரைனில் நாம் போரைத் தொடங்கவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் ‘சிறப்பு ராணுவ நடவடிக…
-
- 6 replies
- 559 views
-
-
ரஷ்ய ராணுவத்திடமிருந்து சில பகுதிகளை மீட்டுள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேட்டி கீவ்: ‘கார்கிவ் நகரின் அருகே ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை, உக்ரைன் ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகர் கீவ்வுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நகரமான கார்கிவ், நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கீவ் நகரில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள கார்கிவ் நகரில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த பிப்.24ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதும், கார்கிவ் நகரை அதிகமாக குறிவைத்து ரஷ்ய ராணுவம் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கார்கிவ் நகரை கை…
-
- 0 replies
- 572 views
-
-
"ராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்": பக்கிங்காம் அரண்மனை சீன் கோக்லன் அரண்மனை செய்தியாளர் 8 செப்டெம்பர் 2022, 12:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ராணி எலிசபெத் செவ்வாய்க்கிழமை பால்மோரலில் லிஸ் ட்ரஸை பிரதமராக நியமித்தபோது காணப்பட்டார். ராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. "இன்று காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த ராணியின் உடல்நிலை …
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
பிரித்தானிய புதிய பிரதமரின் அமைச்சரவையில்.. பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொரிசியஸ் தமிழ் பின்னணியில் இருந்து வந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் சீருடைக்கும் அமைவான.. வரியுடையில் தோன்றும் படம் பிபிசியில். https://www.bbc.co.uk/news/uk-62807062 https://www.ebay.co.uk/itm/254502418854?_trkparms=amclksrc%3DITM%26aid%3D1110006%26algo%3DHOMESPLICE.SIM%26ao%3D1%26asc%3D20200818143230%26meid%3D195cda5e718a40809852c78981430749%26pid%3D101224%26rk%3D1%26rkt%3D5%26sd%3D254666371985%26itm%3D254502418854%26pmt%3D1%26noa%3D1%26pg%3D2047675%26algv%3DDefaultOrganicWeb%26brand%3DCamo&_trksid=p2047675.c101224.m-1 விட…
-
- 15 replies
- 670 views
-
-
ஜேர்மனியில்... விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க, 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு! உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோக தடையால் நேரடியாக மற்றும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி, மக்கள் மற்றும் வணிகங்கள் உயரும் விலையைச் சமாளிக்க உதவும் வகையில் 65 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் எரிசக்தி செலவுகள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்…
-
- 19 replies
- 765 views
-
-
உக்ரைன் அணுமின் நிலையம்... பாதுகாப்பு வலையமாக, அறிவிப்பு. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பி ஆய்வு செய்த குறித்த அமைப்பு, தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் ஆக்கிரமிப்பு அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் சபோரிஜியா அணுமின் நிலையம் பாதுகாப்பு வலயம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதனை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றுள்ளார். போரின் …
-
- 0 replies
- 239 views
-
-
சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பைடன் நிர்வாகம் ஆராய்கின்றது By RAJEEBAN 07 SEP, 2022 | 05:52 PM சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜோ பைடன் நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும்இடையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பைடன் நிர்வாகம் இதுகுறித்து சிந்தித்து வருகின்றது என விடயங்கள்குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதியிடமிருந்து முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவொன்று வெளியாகலாம் என தகவல்கள் வெளிய…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் பலி By T. SARANYA 07 SEP, 2022 | 12:28 PM தென் கொரியாவில் 'ஹின்னம்னார்' என்ற சக்தி வாய்ந்த சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். போஹாங் நகரத்திலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இருந்த ஒன்பது பேரின் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து அகற்றுமாறு குடியிருப்பு நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய தங்கள் வாகனங்களை அகற்ற சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள். இந்நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை? ஜுபைர் அஹமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார் லிஸ். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் தோற்றது எப்படி? போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் பிரிட்…
-
- 13 replies
- 817 views
- 1 follower
-
-
17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு 17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார். அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டில் சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார். சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அபிவிருத்திக்கான புதிய சகாப்தத்திற்கான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீனா-ஆபிரிக்க ஒத்துழ…
-
- 23 replies
- 1.2k views
-