Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறு காயங்களுடன்... உயிர் தப்பினார், உக்ரைன் ஜனாதிபதி! உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் ஒரு பகுதியான இஸியம் நகருக்கு அவர் சென்றார். போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த நகரின் எரிந்துபோன நகராட்சி தலைமையகம் எதிரே உக்ரைன் கொடி ஏற்றி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்க்களப் பயணத்திற்குப் பிறகு ஸெலென்ஸ்கியின் கார் வியாழக்கிழமை அதிகாலை மற்றொரு வாகனத்துடன் மோதியது, இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக…

  2. ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் பேசிக்கொள்ளப் போவது என்ன? ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதின் - மோதி - ஷி ஜின்பிங் செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புவாய்ந்த நகரமான சமர்கண்டில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இந்திய சீன எல்லை மோதல்களுக்குப் பிறகு, முதல்முறையாக சந்திக்க உள்ளனர். 2020இல் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேரிட்ட மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் மற்ற தலைவர்களுடன் ஒரே மேடையில் அமரப்போகி…

  3. வெளிநாட்டில் தலையிட... ரஷ்யா, இரகசியமாக... $300 மில்லியன் செலவிட்டது – அமெரிக்கா. 24 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த ரஷ்யா 2014 ஆம் ஆண்டு முதல் 30 மில்லியன் டொலருக்கு மேல் இரகசியமாக செலவிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வெளிநாட்டில் அமெரிக்கா தலையிடுவதாக மொஸ்கோ பலமுறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஷ்யா பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதேவேளை கண்டறியப்படாத வழக்குகளில் ரஷ்யா மேலதிக நிதிகளை இரகசியமாக மாற்றியிருக்கலாம் என்றும் அமெரிக்க…

  4. அசர்பைஜான்-ஆர்மீனியா நாடுகள் இடையே மீண்டும் மோதல் 49 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு தினத்தந்தி சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. பாகு, சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சர்ச்சைக்குரிய நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது. அந்த போரில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷியாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்க…

  5. தாய்வான், நடவடிக்கையைத் தடுக்க... சீனாவிற்கு, பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து... அமெரிக்கா பரிசீலனை. தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தாய்வான் கடற்பரப்பில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப கருவிகள் மீதான முன்னர் இருந்த தடைகளுக்கு மேலதிகமாக இந்த தடையை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விட சீனாவின் மீது தடைகள் விதிக்கப்படுவது மிகவும் சிக்கலான நடவடிக்கை என அமெரிக்க…

    • 3 replies
    • 242 views
  6. மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு... ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு... அழைப்பு விடுக்கப் படவில்லை. இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காக இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. https://athavannews.com/2022/1299023

  7. திருடுபோன ரூ.8 கோடி மதிப்பிலான நாணயத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீட்டது எப்படி? ரஃபி பெர்க் பிபிசி நியூஸ் 13 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,MIRI BAR, ISRAEL ANTIQUITIES AUTHORITY தொலைந்து போன 10 லட்சம் டாலர் மதிப்புள்ள பண்டைய கால நாணயத்தை கண்டுபிடிப்பதற்கான பணி பல நாடுகளைக் கடந்து இறுதி கட்டத்தை அடைய 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. "வரலாற்றின் அரிய வகைப் பொருள் கடைசியாக அதன் தாய்நாட்டுக்குச் செல்கிறது," என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கான விழாவில் முத்தாய்ப்பாக தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு யூத கிளர்ச்சியின்போது தயாரிக்கப்பட்ட உயர்ந்த…

  8. வயோதிபரை தாக்கிக் கொன்ற செல்லப்பிராணியான கங்காரு By T. SARANYA 13 SEP, 2022 | 09:37 PM அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு, முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் (வயது 77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டரின்…

  9. டுபாயில் புதிய ஹிந்து கோயில்: அலைமோதும் பக்தா்கள் கூட்டம் டுபாயில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயிலைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டுபாயில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது. இந்தக் கோயில், அதிகாரபூா்வமாக தசரா தினமான அக்டோபா் 5-…

  10. அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் அனல்மின் நிலையம் கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், உக்ரை…

  11. 1986-ல் எலிசபெத் ராணி எழுதிய கடிதம்: 2085-ல் திறக்கப்படுவதற்கான சுவாரஸ்யப் பின்னணி ராணி இரண்டாம் எலிசபெத் சிட்னி: ராணி எலிசபெத்தால் சிட்னி நகர மக்களுக்காக எழுத்தப்பட்ட கடிதம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அன்னைக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ். இந்த நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி எ…

  12. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

  13. இந்தக் காணொளியிற் பேசப்படும் விடயங்கள் யாவும் உக்ரேன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்புத் தொடங்கியதிலிருந்து யாழ் கள உறவுகளால் உரையாடப்பட்டவையே. அவை ஒரு நிரலாக உள்ளன.

  14. சீன தம்பதியினரின் நடவடிக்கையால் குழம்பிப்போன அமெரிக்க அதிகாரிகள் By VISHNU 09 SEP, 2022 | 01:17 PM பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள மார்ஷல் தீவு­களில் சிறிய நாடொன்றை ஸ்தாபிக்க சீன தம்­ப­தி­யொன்று முற்­பட்­ட­தாக அமெ­ரிக்க அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இதற்­காக மார்ஷல் தீவு எம்.பிக­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கு அவர்கள் லஞ்சம் வழங்­கி­ய­தா­கவும் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் ‍‍தெரிவித்­துள்­ளனர். பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள மார்ஷல் தீவுகள் சுயா­தீன நாடாகும் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான சிறிய தீவு­களைக் கொண்ட நாடு இது. அங்­குள்ள தொலை­தூர தீவு ஒன்றில், அரைச் சுயா­தீன பிராந்­தி­…

  15. ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன் ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) பிபிசி நியூஸ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர். யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்…

  16. குவாட் கவனத்தை திருப்பிய சீனா By VISHNU 10 SEP, 2022 | 07:56 AM ஹரிகரன் “சீனா ‘யுவான் வாங் 5’ கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்திய அதேவேளை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சொலமன் தீவுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்தியது” அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுதிஸ்ரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில், மூன்று முக்கிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில் இ…

  17. ரஷ்யாவின் புதிய ஆயுதம் - புட்டின் விளக்கம் நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையிலேயே அந்த நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால்தான் நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய முடியாமல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் இப்போது ஆமோதித்தால் கூட, நாா்ட் ஸ்ட்ரீம்-2 குழாய் வழித்தடம் மூலம் உடனடியாக எரிவாயு விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழ…

  18. ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் அவர்கள் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், இனி அதில் என்ன மாற்றம் இருக்கும்? நாணயங்கள் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 29 பில்லியன் நாணயங்களில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போதையை நாணயங்களில் அவருக்கு 88 வயதாக இருக்கும்போது எடுத்த பட…

  19. பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது அவர் நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர் ஆனார். இப்போது என்ன நடக்கிறது? ராணி இறந்ததும் உடனடியாக அவரது வாரிசான, இளவரசர் சார்ல்ஸுக்கு மணிமுடி சென்றது. லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்புக்கு முன்பாக சனிக்கிழமை பிரிட…

  20. 3 தினங்கள் உலகின் 25 ஆவது பெரும் செல்வந்தரான நபர் : எவ்வாறு ? By VISHNU 09 SEP, 2022 | 01:13 PM அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ருக்கு வங்கிக் கணக்கில் 50 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வைப்புச் செய்­யப்­பட்­டதால் அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்­வந்­த­ரானார். எனினும், அவரின் அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்­க­வில்லை. வங்­கியின் தவ­றி­னா­லேயே அவரின் கணக்கில் இவ்­வ­ளவு பெருந்­தொகை வைப்புச் செய்­யப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, அக்­க­ணக்­கி­லி­ருந்து பணம் அகற்­றப்­பட்­டது. லூசி­யானா மாநி­லத்தைச் சேர்ந்த டெரன் ஜேம்ஸ் என்­ப­வ­ருக்கே இந்த விநோத அனு­பவம் ஏற்­பட்­டது. ‍ெடரன் ஜேம்ஸை தொலை­ப…

  21. இரண்டாம் எலிசபெத் ராணி: பிரிட்டன் அரச குடும்ப வரைபடமும் அரியணைக்கான வாரிசு வரிசையும் 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,RANALD MACKECHNIE ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அரசரானார். அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான், 1685 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த முதல் சார்ல்ஸ். செப்டம்பர் 8 ஆம் தேதி மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தான், பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி. அரச குடும்பம் மற்றும் அரியணை வாரிசுகளின் வரிசை குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும். …

  22. இரண்டாம் எலிசபெத்: குதிரைகள் மீது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் கொண்டிருந்த ராணி ஃபிராங்க் கியோக் பிபிசி விளையாட்டு 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,UK PRESS VIA GETTY படக்குறிப்பு, பந்தயத்தின்போது ராயல் பாக்ஸில் தன் பந்தய மேலாளர் ஜான் வாரன் உடன் அமர்ந்திருந்த ராணி, மகிழ்ச்சியில் புன்னகைத்தபோது படம்பிடிக்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் விடுமுறை மாளிகைக்கு செல்லும்போது நீங்கள் கவனிக்கக் கூடிய முதல் விஷயம், அவருடைய 'எஸ்டிமேட்' என்ற பந்தய குதிரையின் முழு உருவச் சிலை. சாண்ட்ரிங்காமில் அமைந்துள்ள இச்சிலை, கிரீடம் தரித்த ஒருவரால் அரிதாக ஈடுபடக்கூடிய விளை…

  23. உக்ரைன்... மற்றும் நட்பு நாடுகளுக்கு, 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு... அமெரிக்கா ஒப்புதல்! உக்ரைன் மற்றும் நட்பு நாடுகளுக்கு கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தற்போது ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 675 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளது ஜேர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் பலநாட்டு சக அமைச்சர்களுடனான சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த உதவியில் ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், ஹம்வீ வாகனங்கள், கவச ஆம்புலன்ஸ்கள் மற்றும் யுத்த தாங்கி எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும். அமெரிக்கா ஏற்…

  24. சூடான்: இனக் குழுக்கள் மோதலில் 380 போ் பலி வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் டாா்பா் பகுதியில் அரபு பழங்குடியினருக்கும் அரபு அல்லாத பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை 224 மோதல் சம்பவங்கள் நடைபெற்ாகவும், இதில் 430-க்கு மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூடானில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப…

  25. இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANNIE LEIBOVITZ ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 21 ஏப்ரல் 1926 அன்று லண்டன் பெர்க்லி சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர். தமது தந்தை, அப்போதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.