உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
உக்ரைனுக்கு... ஒரு "பில்லியன்" அமெரிக்க டொலர்கள் மதிப்பில், ஆயுத பாதுகாப்பு உதவி! உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந…
-
- 3 replies
- 364 views
-
-
வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. 9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்தி…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்க…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அச்சம்! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது. 11ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரும் தத்துவஞானியுமான உமர் கயாமின் பெயரிடப்பட்ட ரிமோட் கயாம் உணர்திறன் செயற்கைக்கோள், கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ரொக்கெட் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏவப்பட்டு வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நுழைந்ததாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்…
-
- 10 replies
- 893 views
-
-
சீனா - தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தைவான் முன்னெச்சரிக்கையுடன் படைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளது. அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றது, சுயாதீன ஆட்சி நாடாக இருக்கும் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தைவானை சுற்றி சீனா போர் ஒத…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் - சீனாவின் அபிலாசைகள் தாய்வானுடன் முடியப்போவதில்லை தாய்வான் வெளிவிவகார அமைச்சர் By Rajeeban 09 Aug, 2022 | 12:28 PM சீனா தற்போது முன்னெடுத்துள்ள போர் ஒத்திகைகளின் நோக்கம் தாய்வானின் தற்போதையை நிலையையும் பிராந்தியத்தின் தற்போதையும் மாற்றுவதே என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் பாரிய போர் ஒத்திகை ஒரு தூண்டும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார். நான்சி பெலோசியின் விஜயத்தின் பின்னர் தாய்வானிற்கு கிடைத்த சர்வதேச ஆதரவிற்காக அந்த நாடு நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள ஜோசப் வூ சீனாவின் இலட்சியம் 23 மில்லியன் மக்களை கொண்ட சுயாட்…
-
- 0 replies
- 354 views
-
-
காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி By T. Saranya 06 Aug, 2022 | 09:52 AM காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜாரியா கோர்வெட் பிபிசி ஃபியூச்சர் 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா இதுவரை குறைந்தது மூன்று அணு குண்டுகளையாவது தொலைத்துள்ளது. அவை எங்குள்ளன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது? அமெரிக்கா தொலைத்த அணுகுண்டுகள் எங்கே போயின? அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? அது பனிப்போர் உச்சத்தில் இருந்த ஒரு மெல்லிய குளிர்கால நாளின் காலைப்பொழுது. ஜனவரி 17, 1966 அன்று, ஸ்பெயினில் இருந்த மீன்பிடி கிராமமான பலோமரேஸில், உள்ளூர்வாசிகள் வானத்தில் இரண்டு ராட்சத நெருப்புப் ப…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
உக்ரைனிலிருந்து... தானியங்களுடன் புறப்பட்ட கப்பல், துருக்கியை வந்தடைவு! ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை வந்தடைந்தது. உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் திகதி 12,000 டன் சோளத்துடன் புறப்பட்ட கப்பல் நேற்று (திங்கட்கிழமை) துருக்கியை வந்தடைந்தது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் உங்களைக் கைவிடாது என மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தத் தகவல் நம்பிக்கை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். ஒப்பந்தப்படி உக்ரைனிலிருந்து 12 கப்பல்கள்…
-
- 0 replies
- 182 views
-
-
சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன்: ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட் பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பிபிசி நியூஸ் 7 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2005ஆம் ஆண்டு என்பிசியில் கேரி ஷ்ரோன் 9/11 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு முதல் உளவுப்படை அணியை வழிநடத்திய சிஐஏ ஏஜென்ட் கேரி ஷ்ரோன் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 80ஆவது வயதில் காலமானார். பொதுவாக உளவு அமைப்புகளில் வாழ்ந்து, கடமைக்காகவே அர்ப்பணித்து மறைந்தவர்கள் பற்றி உலகம் அதிகம் அறிவதில்லை. ஆனால், அந்த உளவு அமைப்புகளின் வரலாற்றில் இதுபோன்ற ஜேம்ஸ் பாண்டுகள் என்றென்றும் நினைவுகூரப்படுவர்…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
தாக்குதலுக்கான ஒத்திகை.. சீனாவின், பொறுப்பற்ற நடவடிக்கை – அமெரிக்கா குற்றச்சாட்டு! தாய்வான் விடயத்தில் சீனா ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. தாய்வான் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தமது நீண்டகால இலக்குடன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. நான்காவது நாளாக இன்றும் தம்மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனா ஒத்திகை வான் மற்றும் கடல்வழியாக ஒத்திகை பார்த்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்ச…
-
- 1 reply
- 295 views
-
-
தைவானில் மோதும் அமெரிக்கா, சீனா: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் பிராந்தியத்தில் பதற்றம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. "நெருப்புடன் விளையாடுகிறார்" என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது. தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்…
-
- 40 replies
- 2.4k views
- 1 follower
-
-
தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வாங் யீ விளக்கம் பினோம்பெனில் கிழக்காசிய ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்ற பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார். அவர் கூறுகையில், தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க தரப்பு பல பொய் தகவல்களையும் உண்மையற்ற அம்சங்களையும் பரப்பி வருகின்றது. இந்நிலையில், உண்மைகளை தெளிவாகக் காட்ட வேண்டியது அவசியமானது. தைவான் எப்போதும் ஒரு நாடு அல்ல. ஒரே சீனா என்பது மட்டுமே உண்டு. தைவான் நீரிணையின் இரு கரைகள் ஒரே நாட்டைச் சேர்ந்தவை. வரலாற்றிலும் இன்றைய காலத்திலும் காணப…
-
- 0 replies
- 560 views
-
-
ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு - புகைப்படத் தொகுப்பு 6 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. பட மூலாதாரம்,GETTY IMAGES குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த அமெரிக்க …
-
- 1 reply
- 595 views
- 1 follower
-
-
தைவான் பதற்றம்: அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா - காலநிலை மாற்றம், போதைமருந்து ஒத்துழைப்பில் சிக்கல் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவுடனான முக்கிய ஒத்துழைப்புகளை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்திருக்கிறது. இது அமெரிக்கா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் கசப்பை அதிகரித்திருக்கிறது. பருவநிலை மாற்றம், ராணுவப் பேச்சுக்கள், சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துகிறது. …
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
நான்சி பெலோசியின்... தாய்வான் பயண எதிரொலி: அமெரிக்காவுடனான... பேச்சுவார்தைகளை இரத்து செய்தது சீனா! மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலியாக, அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகளை சீனா இரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா – சீனா இடையே நடைபெறவிருந்த சந்திப்பை ரத்து செய்கிறோம். மேலும், பாதுகாப்பு தொடர்பாக நடைபெறவிருந்த ராணுவத் தலைவர்களின் சந்திப்பையும் ரத்து செய்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சீனாவும், அமெரிக்காவும்தான் கார்பனை அதிகளவில் வெளியிடுகின்றன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு கி…
-
- 0 replies
- 253 views
-
-
தைவான் எல்லையைக் கடந்த சீனாவின் கப்பல்கள், விமானங்கள்; ஏவுகணைகளைத் திரட்டும் தைவான் 5 ஆகஸ்ட் 2022, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் விமானங்களும், கப்பல்களும் தைவானின் கடல் எல்லையைக் கடந்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது தைவான். ஏவுகணை அமைப்புகளை தைவான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வரு…
-
- 1 reply
- 447 views
- 1 follower
-
-
குரங்கு அம்மை நோய் ; அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் அதிகரித்து வருவதன் காரணமாக பொது சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது. இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. குரங்கு அம்மை ந…
-
- 0 replies
- 185 views
-
-
சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ''நீதியின் வாள்" மானிட்டரிங் பிரிவு பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது. எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்க…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
தாய்வானுக்கு... விமானம் தாங்கி போர்க்கப்பலை, அனுப்பியது அமெரிக்கா: அதிகரிக்கும் போர் பதற்றம்! தாய்வானைச் சுற்றி வளைத்து சீனா நடத்தும் போர் பயிற்சிகள் உலகின் பரபரப்பான பேசுப்பொருளாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை தாய்வான் கடற்பரப்புக்கு அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாய்வானின் தென்கிழக்கே நீரையும் உள்ளடக்கிய பெருங்கடல் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் மற்றும் தாக்குதல் போர் கப்பல்கள் பிலிப்பைன்ஸ் கடலில் வழக்கமான, திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்கிறது. இது சுதந்திரமா…
-
- 1 reply
- 480 views
-
-
தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில்... சீனா, இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்! அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது. சீனா ஐந்து நாட்களுக்கு ‘தேவையான மற்றும் நியாயமான’ ராணுவ பயிற்சிகளை நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல்நாள் பயிற்சியை சீனா தொடங்குகின்றது. தாய்வானைச் சுற்றி வளைத்து தாங்கள் நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது. ‘நீண்ட தூர உண்மையான குண்டுவீச்சும்’ அடங்கும் என்றும் சீனா கூறியுள்ளது. பயிற்சிகள…
-
- 1 reply
- 482 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில்... உலகில், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம்! எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகளின் அழுத்தங்கள் அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்ல…
-
- 6 replies
- 592 views
-
-
நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல் உக்ரைன் நாட்டில் ரஷியா திடீரென ஊடுருவி போரை துவங்கியதைத் தொடர்ந்து, தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று கருதிய பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன. ஆனால், அவை நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள், அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அந்நாடுகளுக்குக் கிடைக்கும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், ‘ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்’ என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்…
-
- 0 replies
- 261 views
-
-
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் தாய்வான் ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னை இன்று புதன்கிழமை தாய்பேயில் சந்தித்தார். சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றடைந்தார். அவருக்கு தாய்வான் இராணுவம் பாதுகாப்பு அளித்துள்ளது. கடந்த 1949 இல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தாய்வானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தாய்வான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது…
-
- 1 reply
- 291 views
-
-
ரஷ்யாவின் எரிவாயு தடையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எந்த போராக இருந்தாலும் சரி அல்லது மோதலாக இருந்தாலும் சரி அது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும் அதே நிலையைதான் ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தடை செய்துவிடுமோ என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. இதன் பின்னணியை சற்று சுருக்கமாக பார்க்கலாம். ஐரோப்பாவிற்கு இப்போது ரஷ்யா வழங்கி வரும் எரிவாயுவுக்கான பணத்தை நட்பற்ற நாடுகள் ரஷ்ய ரூபாயான ருபிளில் தர வேண்டும் என்று அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். அதாவது …
-
- 5 replies
- 639 views
- 1 follower
-