உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2009ஆம் ஆண்டில் மேலாடையின்றி குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் எடுத்து தமது கட்டுமஸ்தான உடல்வாகை வெளிப்படுத்தினார் விளாதிமிர் புதின். தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால் "பார்க்க சகிக்காது" என்று அவர் கூறியுள்ளார். தமது குதிரை சவாரியின்போது மேல் சட்டையின்றி படங்களுக்கு போஸ் கொடுத்த ரஷ்ய அதிபரின் போக்கை…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
2030ஆம் ஆண்டுக்குள்... மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும்: பிரதமர் பொரிஸ்! 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55 பவுண்டுகள் பில்லியனுக்கு சமம். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சுதந்திரத்திற்கான விலை. எப்போதும் செலுத்தத் தகுந்தது. உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், புடின் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு எதிராக மேலும் அல்லது குறைவான தண்டனையின்றி ஆக்கிரமிப்பு நட…
-
- 0 replies
- 254 views
-
-
உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு! உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை 2.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்துகின்றது. மேலும், பிரித்தானியா மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக 1.5 பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது. புதிய பிரித்தானிய உதவியானது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், எலக்ட்ரானிக் போர் உபகரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கிட்களுக…
-
- 16 replies
- 620 views
-
-
போலந்தில்... நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க, அமெரிக்கா முடிவு! போலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தளத்தை நிறுவுவது இதுவே முதல் முறை. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, உரையாற்றுகையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போ…
-
- 15 replies
- 709 views
-
-
நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது. நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது. உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன. இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது. மூன்று நாடுகளும…
-
- 19 replies
- 1.8k views
-
-
பெலரஸூக்கு... குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக, ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு. ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 500 கிலோமீற்றர் வரம்பை கொண்ட குறித்த அணுசக்தி அமைப்புகள் எதிர்வரும் மாதங்களில் அங்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து பெலரஸ் உத்தியோகப்பூர்வ போரில் ஈடுபடவில்லை. எனினும் ரஷ்யாவுக்கான உதவிகளை பெலரஸ் தொடர்ந்தும் வழங்கிவருகிற நிலையில் பெலரஸ் பகுதியிலிருந…
-
- 4 replies
- 548 views
-
-
ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது! வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆகையால், நீண்ட இழுபறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்று…
-
- 0 replies
- 219 views
-
-
2 கோடுகளால் மாறிப்போன இலங்கையின் தலையெழுத்து! 69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (29) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு விடயத்தையும் அலட்சியமாக பார்க்கவோ செயற்படவோ கூடாது. அப்படி செயற்பட்டதால் தான் இன்றைய நிலை…
-
- 3 replies
- 534 views
-
-
சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி. வளர்ந்த நாடுகளிலும்கூட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்படும் வேளையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. சாலைகள்தோறும் திறந்தவெளி உணவகங்கள்…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
எரிபொருள் கொள்வனவுக்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் – மஹிந்தானந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் காலங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் எரிபொருள் கொள்வனவுக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு தொலைபேசியில் உரையாடுவதற்கு வசதியாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஜூலை 10ஆ…
-
- 0 replies
- 169 views
-
-
அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது? 28 ஜூன் 2022, 03:59 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர். நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர் பிழைத்தவர்கள்…
-
- 5 replies
- 632 views
- 1 follower
-
-
கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக…
-
- 6 replies
- 682 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் ! தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ள…
-
- 2 replies
- 833 views
-
-
ஜி7 நாடுகளின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி மின்னம்பலம்2022-06-27 கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய ஜி7 அமைப்பு tநாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. இதில் ஏழு நாடு தலைவர்களும் இந்த போரில் உக்ரைனை ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர். இந்த மாநாட்டில் இந்த ஏழு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முடிவெடுத்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய இந்த மாநாட்டில் முடிவு …
-
- 1 reply
- 306 views
-
-
உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்! உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்று ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இருந்து ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா வெளியேறினார். நியூயோர்க்கில் நடந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், ‘ரஷ்ய கூட்டமைப்பின் தூதர், நேர்மையாக இருக்கட்டும். வளரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா உணவுப் பொருட்களை ஒரு திருட்டு ஏவுகணையாகப் பயன்படுத்துகிறது. ரஷ்யாவின் போரின் வியத்தகு விளைவுகள் …
-
- 55 replies
- 2.7k views
- 1 follower
-
-
எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும்... நட்பு நாடுகள், உக்ரைனை.... கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்! எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தற்போது அளித்து வரும் ஆதரவைக்…
-
- 6 replies
- 431 views
-
-
கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில் பிரவேசித்து கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேச…
-
- 4 replies
- 850 views
-
-
ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்; ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவா, ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள் குறித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்துப் பேசிய பேரவைத் துணைத் தலைவர் நடா அல்-நஷிப், "2020ம் ஆண்டு 260 பேரும், கடந்த ஆண்டு ௧௪ பெண்கள் உள்பட 310 பேரும், இதேபோன்ற…
-
- 0 replies
- 215 views
-
-
சௌதி அரேபியா: முர்தஜா குரைரிஸ் - போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட சிறுவன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செபாஷ்டியன் உஷேர் பிபிசி அரபு விவகாரங்களுக்கான ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESOHR படக்குறிப்பு, முர்தஜா குரைரிஸ் - கைது செய்யப்பட்டபோதும், இப்போதும். சௌதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாகச் சந்தேகத்தின் பேரில் 13 வயதில் கைது செய்யப்பட்டவர் 8 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மனி உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இளைஞராகிவிட்ட முர்தாஜா குரைரிஸ் ஒரு கட்டத்தில் மரண தண்டனையை எத…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி…
-
- 0 replies
- 349 views
-
-
சர்வதேச அளவில்... பொது சுகாதார அவசர நிலையாக, "குரங்கு அம்மை நோய்" பாதிப்பு அறிவிப்பு! குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிக…
-
- 0 replies
- 195 views
-
-
உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு.... ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து? ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது. இதன்போது, ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளராக விண்ணப்பித்திருக்கும் உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் வேட்பாளராக அங்கீகரிக்கப்படவுள்ளன. நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தநிலையில் உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்…
-
- 2 replies
- 243 views
-
-
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் …
-
- 4 replies
- 461 views
- 1 follower
-
-
உக்ரேனில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய தளங்கள் அழிப்பு - யுனேஸ்கோ ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போரில் உக்ரேனில் உள்ள 150-க்கும் அதிகமான பாரம்பரிய தளங்கள் ரஷ்யாவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லுகாஷிவ்காவில் உள்ள அசென்ஷன் தேவாலயம் ; NURPHOTO VIA GETTY IMAGES ஐநாவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். அதில், 150-க்கும் அதிகமான பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் சார்ந்த தளங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சமூகக் கலை மையம் ; AFP VIA GETTY IMAGES அழிக்கப்பட்டுள்ள தளங்களில் அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள் மற்றும் மதம் சார்ந்த கட்டடங்கள், நூலகங்கள் ரஷ…
-
- 1 reply
- 296 views
-
-
பொருளாதார தடைகள்... "பூமராங்" போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்! உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவில் காணொளி முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, அவர் உரையாற்றுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத்…
-
- 0 replies
- 230 views
-