உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26619 topics in this forum
-
தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி ஆரிஃப் ஷமீம் பிபிசி உருது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தது என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும், ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக கத்தாருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட 4471 சதுர மைல்கள் கொண்ட இந்த சிறிய நாட்டின் 'ராஜதந்திர' வெற்றிகளைப் பார்ப்போம். …
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
ஸ்பெயினில் காட்டுத் தீ ; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில் புதன்கிழமை ஆரம்பித்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் ராணுவப் பிரிவும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் ஆறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த கோடை காலத்தில் ஐரோப்பா நாடுகள் சில பல காட்டுத்தீக்கு உள்ளாகிவருகிறது. காலநிலை மாற்றம்…
-
- 0 replies
- 273 views
-
-
ஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை தலிபானின் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தலிபான்களின் எழுச்சி, 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நிலவிய கொடூரமான ஆட்சி நிலைக்கு நாடு மீண்டும் திரும்புமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மறுப்பு, பொது வாழ்வில் இருந்து விலக்குதல் ஆகியவையும் அடங்கும். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தலிபானின் கல்வி அமைச்சர், பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு உட்பட பல்கலைக்கழகங்களில…
-
- 0 replies
- 280 views
-
-
நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை சோதித்தது வடகொரியா வடகொரியா வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் பணிக்கக் கூடிய ஒரு புதிய வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்தை (KCNA) மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் நிறுத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாடு தனது இராணுவத் திறனை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'குரூஸ்' என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பு சுமார் 1,500 கிலோமீட்டர் (930 மைல்) தூரம் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. குரூஸ் ஏவுகணையின் சோதனை "நமது அரசின் பாதுகாப்பை மிகவும் நம்பகத்தன்மையுடன் உறுதிப்படு…
-
- 0 replies
- 254 views
-
-
'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் ஆண்ட்ரூ கர்ரி பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்…
-
- 0 replies
- 712 views
- 1 follower
-
-
ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடு 12 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது. …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
ஆப்கானின், 100 பயணிகள் கொண்ட முதல் பயணிகள் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக கத்தாரில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானில் நடைபெற்ற உள்நாட்டு போர், தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானில் இருந்து வெளிநாட்டு மக்களும், ஆப்கான் மக்களும் வெளியேறி வந்தனர். தாலிபான்கள், காபூலை கைப்பற்றினாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகள் வசமே இருந்தது. ஆனால் கடந்த 31 ஆம் தேதி, தோஹா ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், காபூல் விமான நிலையம் தாலிபான்களின் வசம் வந்தது. இந்நிலையில், நேற்று காபூல் வி…
-
- 0 replies
- 444 views
-
-
9/11 விசாரணையின் முதல் ஆவணத்தை வெளியிட்டது எஃப்.பி.ஐ 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை முன்னிட்டு சவுதி அரேபியாவினால் கடத்தல்காரர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட தளவாட ஆதரவு தொடர்பான புதிதாக வகைப்படுத்தப்பட்ட 16 பக்க ஆவணத்தை எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், கடத்தல்காரர்களுக்கு அமெரிக்காவில் உள்ள சவுதி கூட்டாளிகளுடன் இருந்த தொடர்புகளை விவரிக்கிறது. ஆனால் சவுதி அரசு, சதிக்கு உடந்தையாக இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில ஆவணங்களை ஆறு மாதங்களுக்குள் வகைப்படுத்த ஒரு இடைக்கால மதிப்பாய்வைத் தொடங்குமாறு பைடன் முன்பு ஒரு நிர்வாக உ…
-
- 0 replies
- 298 views
-
-
உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்? உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார். அல்கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி 2020 இல் இராணுத்தினர் நடத்திய ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என ஊகங்கள் பரவின. இந் நிலையில் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளார் என இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய…
-
- 0 replies
- 500 views
-
-
மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் உயிரிழப்பு மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது. இதனை தொடர்ந்து இராணுவ …
-
- 0 replies
- 213 views
-
-
‘இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி... சண்டையாக மாறிவிடக் கூடாது’: பைடன்- ஷி ஜின்பிங் பேச்சு! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமாகியுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது. தொலைபேசியில் உரையாடிய இரு தலைவர்களும், விரிவான, கேந்திர ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும், ஒத்த கருத்துடைய விஷயங்கள், மாறுபடும் விஷயங்கள் என இரண்டையும் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கு…
-
- 0 replies
- 375 views
-
-
தலிபான்களின் வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும்: எம்.ஐ.5. எச்சரிக்கை! ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஐ.5.இன் இயக்குநர் கென் மெக்கல்லம் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டு அரசாங்கத்தை தலிபான்கள் மிக எளிதாக கவிழ்த்தனர். இது, உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். மேற்கத்திய நாடுகளில் அல்-கொய்தா பாணியில் மீண்டும் மி…
-
- 0 replies
- 347 views
-
-
நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்- நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரி…
-
- 71 replies
- 5k views
- 1 follower
-
-
சிரியா அகதியாக, துயரங்கள், தடைகளைக் கடந்து விமானி பயிற்சி பெற்ற பெண் மாயா கசல் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNHCR/ ANDREW MCCONNELL படக்குறிப்பு, மாயா கசல் மாயா கசல் சிரியாவின் உள்நாட்டு போரிலிருந்து தப்பி வந்த லட்சக்கணக்கானவர்களில் ஒருவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது கல்வியை பெற போராட வேண்டியிருந்தது. அவர் தற்போது விமானியாக தகுதி பெற்றுள்ளார். ஐ.நா அகதிகள் முகமையின் நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார். "ஓவ்வொரு முறை நான் விமானத்திற்குள் நுழையும்போத…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் அஷ்ரஃப் கனி அரசு வீழ்ந்த பரபரப்பான கடைசி சில மணி நேரங்கள்: தாலிபன்கள் பிடிக்கு காபூல் வந்தது எப்படி? மொகமது மடி, அகமது காலித், சையது அப்துல்லா நிசாமி பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AP IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 15 அன்று, காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தாலிபன்கள். தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனியின் புத்தகம் அவரது மேசையிலேயே இருக்கிறது. ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளனர். கல்வி, சர்வதேச முதலீடு, ஜனநா…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
செப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி? 7 செப்டெம்பர் 2021, 06:57 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் இரண்டாவது கட்டுரை இது.) அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யு…
-
- 4 replies
- 663 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் சவுக்கால் அடித்துக் காயப்படுத்தப்பட்ட செய்தியாளர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARCUS YAM/LOS ANGELES TIMES/SHUTTERSTOCK படக்குறிப்பு, தாலிபன்களால் சித்திரவதை செய்யப்பட்ட செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எடிலாட்ரோஸ் என்ற செய்தித்தாள் நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
சம உரிமை கோரி... போராட்டம் நடத்திய, பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்! சம உரிமை வேண்டும் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்தில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், பெண்களை தலிபான்கள் சவுக்கால் அடித்ததாக கூறப்படுகின்றது. நேற்று (புதன்கிழமை) காபூல் நகரில் ஒரு வீதியில் அணிவகுத்துச் சென்ற பெண்களை தடுத்து நிறுத்திய தலிபான்கள், சவுக்கால் அடித்தும் மின்சாரத்தை உமிழும் தடிகளால் தாக்கியதாகவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் கூறுகின்றனர். தலிபான்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்த ஒருநாளுக்கு பிறகு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள்ளாக நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இதுவாகும். பெண்களின் உரிமைகளுக்கு உறுதியளிப்பதாக தலிபான்…
-
- 0 replies
- 358 views
-
-
ஐடா சூறாவளி: இந்திய வம்சாவளியினர் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பு - கள நிலவரம் சலீம் ரிஸ்வி பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALIM RIZVI/BBC அமெரிக்காவில் கடந்த வாரம் வீசிய ஐடா சூறாவளி மற்றும் கனமழை நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த இரு மாகாணங்களில் குறைந்தபட்சம் 40 பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில் 13 பேரும் நியூ ஜெர்சியில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். நான்கு பேரைக் காணவில்லை. நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சிய…
-
- 1 reply
- 394 views
- 1 follower
-
-
சீனாவின் மாவோ ஆட்சியில் மாம்பழங்கள் வணங்கப்பட்டது ஏன்? எம், மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மாதத்தில் ஒருநாள் பாகிஸ்தான் அரசு பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்களைக் கொண்ட பெட்டிகளை அனுப்பியது. ஆனால் அமெரிக்காவும் சீனாவும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன. கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் வெளிநாட்டுப் பழங்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இந்தச் செய்தியை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டது. பழங்கள் வேண்டாம் என்று கூறிய நாடுகளில் கனடா, நேபாளம், இலங்கை உள்ளிட்டவையும் அடக்கம். மொத்தம் 32 நாடுகளுக்கு பழங்களை அனுப்பியதாகவும் அவற்றில் பெரும்பாலான நாடுகள் அவற்றை ஏற்பதற்குத்…
-
- 2 replies
- 712 views
- 2 followers
-
-
ரஷ்ய அமைச்சர் யெவ்கேனீ பலி - தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபம் BBCCopyright: BBC யெவ்கேனீ ஸீனிட்செஃப்Image caption: யெவ்கேனீ ஸீனிட்செஃப் ரஷ்யாவின் அவசரகாலத்துறை அமைச்சர் யெவ்கேனீ ஸீனிட்செஃப், நோரீல்ஸ் என்ற இடத்தில் உள்ள செங்குத்தான பாறையில் கால் தவறி கீழே விழுந்த நபரை காக்கும் முயற்சியின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 55. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதி, ஏழு பிராந்தியங்கள் முழுமையாக நீளுகிறது. அந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பது யெவ்கேனீயின் பொறுப்பு. இந்த நிலையில அந்த பிராந்தியத்தில் ஆபத்து காலங்களில் மக்கள் எதிர்கொள்வது எப்படி என்ற ஒத்திகையில் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து சுமா…
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
வைத்தியசாலைக்குள் வெள்ள நீர்: 17 நோயாளிகள் உயிரிழப்பு. மெக்ஸிக்கோவின் மத்திய ஹிடெல்கோ மாநிலத்தில் வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையின் சிகிச்சை அறையில் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டிருந்த கொரோனா தொற்று உறுதியான நோயாளர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக நதி நீர் பெருக்கெடுத்து நகரில் உள்ள வைத்தியசாலையில் புகுந்தமை காரணமாக அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. அதேநேரம் வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் 40 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுக்களுக்கு உ…
-
- 0 replies
- 332 views
-
-
இந்தோனேசிய சிறையில்... தீ விபத்து :குறைந்தது 41 பேர் உயிரிழப்பு இந்தோனேசியாவில் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தங்கெராங் சிறையில் இன்று புதன்கிழமை அதிகாலை, பெரும்பாலான கைதிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த 122 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு மின்செயலிழப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டாலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தோனேசிய சிறைகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையானது அங்கு தொடர்ச்சியான பிரச்சனையாக காணப்படுகின்ற…
-
- 0 replies
- 327 views
-
-
இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்கள் - துருப்பிடித்த ஸ்பூனால் கழிப்பிடத்தில் சுரங்கம் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வெளியே வந்த வழி. அருகே வயல் வெளி. இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர். கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள்…
-
- 11 replies
- 651 views
- 1 follower
-
-
தலிபான்களின் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உதயம் - புதிய தலைவர், அமைச்சர்கள் நியமனம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான 20 ஆண்டுகால போரில் ஆதிக்கம் செலுத்திய நபர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் தலைவராக ஐ.நா.-ஒப்புதல் பெற்ற முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர். அத்தோடு தலிபான்களின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான் நிறுவனர் மற்றும் தலைவரான முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவி சிராஜுதீன் ஹக்கானிக்கு வழங்கப்பட்டது, ஆப்…
-
- 1 reply
- 360 views
-