Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது? 15 அக்டோபர் 2021, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK PARLIAMENT கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்…

  2. ஈரானின், அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த... இராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த இஸ்ரேல் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபி தெரிவித்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள யாயிர் லாபி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தேவைப்பட்டால் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேல் தயங்காது. தீய சக்திகளிடமிருந்து உலகைப் பாதுகாக்க நாட…

  3. சூடான்: நெருக்கடி தீவிரமடைவதால் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை கோரும் போராட்டக்காரர்கள் சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இராணுவ ஆட்சிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் அல் பஷீரின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் நெருக்கடி மேலும் மோசமாகிவிட்டது. 2019ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், …

  4. நோர்வேயில்... வில் மற்றும் அம்புகளை எய்து, மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு! நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

    • 23 replies
    • 1.4k views
  5. பெய்ரூட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ; ஆறு பேர் பலி, 32 பேர் காயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆண்டு நகரத்தின் துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பை விசாரித்த நீதிபதிக்கு எதிராக வியாழக்கிழமை திரண்டதால் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. லெபனான் படைகள் ( Lebanese Forces) பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். 219 பேரைக் கொன்ற பெய்ரூட் துறைமுக வெடிப்பு தொடர்பான விசாரணையை பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது. நீதிபதி பக்கச்சார்பானவர் என்…

  6. பிரித்தானியாவில்... 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில், எயார் டாக்ஸி: வெர்டிகல் எயிரோஸ்பேஸ் திட்டம்! பிரித்தானியாவில் 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எயார் டாக்ஸிகள் வானை அலங்கரிக்கும் என வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், ‘2025ஆம் ஆண்டு இந்த டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 193 கிமீ தூரம் வரை, சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸி திட்டத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும…

  7. குர்துப் படையினர்... தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க, அமெரிக்கா- ரஷ்யா தவறிவிட்டது: துருக்கி! சிரியாவில் குர்துப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறுகையில், ‘துருக்கி மீது சிரியாவின் குர்துப் படையினர் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குர்துப் படையினரைக் கட்டுப்படுத்தப் போவதாக அளித்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டனர். குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரியா எல…

  8. தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் தீ விபத்து: 46பேர் உயிரிழப்பு- பலர் காயம்! தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 79பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இதில் 14பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது. நான்கு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியாத…

  9. (சிஎன்என்) முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியா பல்கலைக்கழக இர்வின் மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட் அல்லாத தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். யுசி இர்வின் மருத்துவ மையத்தின் மருத்துவத் தலைவர் டாக்டர் அல்பேஷ் அமீனின் வியாழக்கிழமை மாலை ஒரு கூட்டு அறிக்கையின்படி, அவர் ஐசியூவில் நெருக்கமான கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டு, IV நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் திரவங்களை வழங்கினார். தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். கிளிண்டனின் தனிப்பட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் லிசா பார்டாக். "இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவரது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மேலும் அவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நன்ற…

  10. தைவான் தீவிபத்து - குறைந்தது 46 பேர் பலி தைவானில் உள்ள கௌஷியாங் நகரில் இருக்கும் 13 மாடி கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து நடந்த இந்த கட்டடம் அடுக்குமாடி குடியிருப்பாகவும் வர்த்தக வளாகமாகவும் இயங்கியது என்று உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் உண்டான தீயை அணைக்க 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 79 பேரில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. த…

  11. பிரித்தானியாவில்... வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை, சாதனை அளவை எட்டியுள்ளது! பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக, தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2001ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த நிலை ஆகும். காலியிடங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு சில்லறை வணிகம் மற்றும் மோட்டார் வாகன பழுது ஆகியவற்றில் உள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய 4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் 4.5 சதவீதம் என மதிப்பிடப்பட்டது. ஓ.என்.எஸ். சம்பளப் பட்டியலில் உள்…

  12. ஆயுதங்களைப் அதிகரிப்பது... தற்காப்புக்காக மட்டுமே, போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்! ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, ‘சுய பாதுகாப்பு 2021’ என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம்’ என கூறினார். பைடன் நிர்வாகம் பியோங்யாங்கிற்கு எந்தவிதமான விரோத நோக்கமும் இல்லை எ…

  13. ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில்... தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட்…

  14. வடகொரியாவின் கிம் ஜோங் உன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவ…

  15. மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் (Joshua D Angrist), கியூடோ இம்பென்ஸ் (Guido W Imbens) ஆகிய மூன்று அமெரிக்க பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பொருளாதாரத்துக்காக டேவிட் கார்டு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு விருது வழங்கப்படுகிறது. Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் கியூடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/115120

  16. தலிபான்களின் பிடியிலிருந்து... தப்பிய, ஆப்கான் பெண்கள் கால்பந்து அணிக்கு பிரித்தானியா அடைக்கலம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை மற்றும் அவர்களது குடும்பம் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நாங்கள் ஆப்கானிஸ்தான் மகளிர் மேம்பாட்டுக் குழுவுடன் பேசி விசாக்களை இறுதி செய்து, விரைவில் பிரித்தானியாவுக்கு அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்’ என கூறினார். 13 முதல் 19 வயதுடைய 35 பெண்களைக் கொண்ட குழு கடந்த மாதம் காபூலை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தனர். அவர்களது தற்காலிக விசா இன்று…

  17. சீனாவில் கடும் வெள்ளம்: 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு- 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் 70க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து மூன்று மாதங்களுக்குள் வெள்ளம் வந்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கனமழை மற்றும் நீடித்த மழை மற்றும் புயல்கள், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதாக சீனாவின் வானிலை நிர்வாகம் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளது. 120,000க்கும் அ…

  18. ஐ.எஸ். அமைப்பின் மறைந்த தலைவர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரி கைது - ஈராக் பிரதமர் தெரிவிப்பு 2021-10-11 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரியை கைதுசெய்துள்ளதாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி திங்களன்று தெரிவித்துள்ளார். அபு பக்கர் அல்-பாக்தாதி 2019 இல் சிரியாவில் நடந்த சிறப்பு அமெரிக்க நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இறுதியில் அல் பாக்தாதியின் மரணத்தை இஸ்லாமிய அரசான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுதிபடுத்தியது. இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள சாமி ஜாசிம் முஹம்மது அல்-ஜபுரி என்று நம்பப்படும் நபர், முன்பு இஸ்லாமிய அரசின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தமை தெரியவந்துள்ளது. …

  19. லெபனான் மின் தடை பல நாட்கள் நீடிக்கும் – அரச அதிகாரிகள் லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு முழுமையாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இரண்டு மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுதல் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு மின்சாரத்தை மீள வழங்குவதற்குப் பல நாட்கள் செல்லும் என அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 18 மாதங்களாக லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றது. இதன்காரணமாக லெபனானின் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்…

  20. ஆப்கனில் இருந்து வெளியேறியபின் தாலிபன்களுடன் அமெரிக்கா நடத்திய முதல் சந்திப்பு பட மூலாதாரம், TWITTER / MUJAHID படக்குறிப்பு, தோஹாவில் தாலிபன் பிரதிநிதிகள் கத்தார் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களையும் சந்தித்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்…

  21. பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு... 17 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்! கடந்த தசாப்தத்தில் பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு 17 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த குறைப்பு ஒரு முக்கிய தேசிய இலக்கை அடைய போதுமானதாக இல்லை. நமது உணவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதே இதன் நோக்கம். தேசிய உணவு மூலோபாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த குறிக்கோள், முழு பிரித்தானியாவின் உணவு முறையின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது . விவசாயம் மற்றும் உற்பத்தி முதல் பசி மற்றும் நிலைத்தன்மை வரை. இது, அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவில் இறைச்சி நுகர்வு 30 சதவீதம் குறைய பரிந்துரைக்கிறது. லான்செட் பிளானட்டரி ஹெல்…

    • 3 replies
    • 369 views
  22. ''சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்'' - பதற்றத்தைக் கூட்டும் ஷி ஜின்பிங் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷி ஜின்பிங் சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு ம…

  23. சவுதி அரேபியாவின்... ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்! ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை. முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது. இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…

  24. ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் – தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே, ஆப்கானில் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால் அனைவருக்கும் பிரச்சினைதான் என தலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி தெரிவித்தார். மேலும் கொரொனா நோய்க்கு எதிராக ஆப்கான் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, இரண்டாவது நாளாக இன்றும் தோஹாவில் அம…

  25. ஆப்கானிஸ்தான் மசூதி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி ஆப்கானிஸ்தான் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சிறுபான்மை குழு பயன்படுத்தும் மசூதியில் நிகழ்த்திய சக்திவாய்ந்த வெடிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக சாட்சிகள் உள்ளது என்று தலிபானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்…

    • 2 replies
    • 498 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.