உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ஆப்கானிஸ்தானில் 'ஆள் கடத்தலில் ஈடுபட்டார்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் 4 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டார்கள் தாலிபன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி பாரசீக சேவை தெரிவிக்கிறது. முதலில் தாலிபன்களுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிறகு அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் இவர்களுடைய உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் …
-
- 0 replies
- 389 views
-
-
மாறும் சீனா: ஷி ஜின்பிங் ஏன் மீண்டும் சோஷியலிசம் நோக்கித் திரும்புகிறார்? ஸ்டீஃபன் மெக்டொனல் பிபிசி செய்திகள், பெய்ஜிங் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பல பத்தாண்டுகளாக சீனா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிவேகமான முதலாளித்துவப் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. சட்ட விதிகளின்படி சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதன் மூலம், சிலர் மிகப் பெரிய பணக்காரர்களாக அனுமதிப்பதன் மூலம் பரந்த சமூகத்துக்கு அதன் பலன்கள் வழிந்து வந்து சேரும் என்ற கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டு இயங்கி வருகிறது சீன அரசாங்கம். 'சேர்மேன்' மாவோவ…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின், இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் டசன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியது. இந்தநிலையில் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவும் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 328 views
-
-
விகாஸ் பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது. குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை ஆசிய நாடுகளுக்கு வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது. …
-
- 0 replies
- 213 views
-
-
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால்... ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ்- அமெரிக்கா விருப்பம்! ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதுதொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் இப்போது கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஜோ பைடன் மற்றும் இம்மானுவேல் மக்ரோன் நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து அரை மணி நேரம் தொலைபேசியில் பேசினார்கள். அவர்கள் அடுத்த மாத இறுதியில் ஐரோப்பாவில் சந்திப்பார்கள். இதன்போது, இதுகுறித்து விரிவாக பேசி சுமூகமான தீர்வு எட்டப்படுமென நம்பப்படுகின்றது. முன்னதாக அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தர…
-
- 0 replies
- 425 views
-
-
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன், புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் உட்பட 17 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த திங்கள் கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி வென்றிருந்தாலும் தனிப் பெரும்பான்மை பெறத் தவறியது.இந்திய வம்சாவளி அமைச்சர்கள் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த் மற்றும் பார்டிஷ் சாகர் ஆகியோரைப் போல 42 வயது என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்கம் பர்னாபி தெற்கில் நின்று 40% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்ட அவர் முதல் வெள்ளையர் அல்லாத கட்சித் தலைவராக சாதனை படைத்தார். திங்கள் க…
-
- 0 replies
- 478 views
-
-
குடியேற்றும் அகதிகளின் எண்ணிக்கையை... இரட்டிப்பாக்குவதற்கு, அமெரிக்கா தீர்மானம் அமெரிக்காவின் அடுத்த நிதியாண்டில் மீள் குடியேற்றும் அகதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், உலகளவில் இடம்பெயர்வு, மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் குறித்த திட்டம் மீள செயற்படுத்தப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் அடுத்த நிதியாண்டில் ஏதிலிகளின் எண்ணிக்கையை…
-
- 1 reply
- 496 views
-
-
மெல்போர்ன் போராட்டம்: மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவதற்கு எதிராக விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கம் சண்டைபோடுவது மட்டுமே என மாநிலத்தின் முதல்வரான டானியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் இடம்பெறும் வன்முறை போராட்டங்களுக்குப் பின்னர் கட்டுமான தளங்களை அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் மூடியுள்ளது. https://athavannews.com/2021/1240625
-
- 0 replies
- 394 views
-
-
சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரத்து நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், பங்களாதேஷம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. தலிபான்களால் ஆளப்படும் போரால் பாதிக்கப்…
-
- 0 replies
- 247 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021 ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்க…
-
- 0 replies
- 235 views
-
-
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் September 22, 2021 அவுஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார். https://globaltamilnews.net…
-
- 0 replies
- 480 views
-
-
அலெக்சாண்டர் லிட்வினென்கோவின்... கொலைக்கு, ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்! அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த 2006ஆம் ஆண்டு லண்டனின் மில்லினியம் ஹோட்டலில் விஷம் கலந்த கிரீன் டீ குடித்து இறந்தார். பொலோனியம் -210 விஷத்தால், உயிரிழந்தார். இது அரிய கதிரியக்க பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், அப்போது நடத்தப்பட்ட பொது விசாரணையில், இந்த கொலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில…
-
- 0 replies
- 359 views
-
-
லா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்! ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இராணுவம் மற்றும் சிவில் காவலர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 208 views
-
-
கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரச…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம் குடாய் நூர் நாசர் பிபிசி இஸ்லாமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முல்லா அப்துல் கனீ பராதர் (நடுவில்) ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே கா…
-
- 10 replies
- 852 views
- 1 follower
-
-
ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டினின் கட்சி அமோக வெற்றி ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது. ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்த…
-
- 0 replies
- 347 views
-
-
சூடானில் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சி தோற்கடிப்பு சூடானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சதி முயற்சியை அடுத்து சூடானிய தலைநகர் கார்டூம் தெருக்களில் இராணு டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஓம்துர்மனில் உள்ள அரசு வானொலியை கட்டுப்படுத்தும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை காலை இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சதித்திட்டக்காரர்கள் அரசு ஊடக கட்டிடத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது" என்று அந் நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட ஆதாரங்கள் AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளன. சதித…
-
- 0 replies
- 364 views
-
-
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர…
-
- 0 replies
- 195 views
-
-
அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது. அவுகஸ் ஒப்பந்தம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய சமநிலையை சீர்குலைக்கும் என்றும் வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்ச…
-
- 0 replies
- 187 views
-
-
புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்து செய்துள்ளார். இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுதர…
-
- 0 replies
- 306 views
-
-
மேல்நிலை பாடசாலைகளில்... பெண்கள், கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக மாணவிகளின் கல்வி முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஆட்சிபுரிந்த தலிபான்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாரிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விவகார அமைச்சினை மூடியுள்ள தலிபான்கள், அதற்கு பதிலாக முஸ்லீம் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களமாக அதனை …
-
- 0 replies
- 269 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக... நடவடிக்கை, எடுக்கப்போவதில்லை – ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து அதிகமானோர் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது குறித்துக் கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் வட்டார அளவில் நெருக்கடியை ஏற்படுத்தலாம…
-
- 0 replies
- 355 views
-
-
அமெரிக்கவுக்குள் வந்து பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்? 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள். அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள்.…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது.தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிற…
-
- 2 replies
- 545 views
- 1 follower
-