Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனாவில் இருந்து மீண்டாலும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல் புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் என்பதும், அவர்களுக்கு பயங்கரமான நோய்கள் ஏற்படுவதும் ஆய்வில் தெரியவந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் கொடூரத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும், லட்சக்கணக்கானவர்கள் மீண்டும் வருகின்றனர். இந்த பயங்கர தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்தவகையில் 87 ஆயிரம் கொரோனா நோயாளிக…

  2. புதிய கட்டுப்பாடுகளை... இந்திய பயணிகளுக்கு விதித்தது ஜேர்மன் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜேர்மன் நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளதாவது, “இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் எங்களது தடுப்பூசி பிரசாரம் போலியாக அமையாமல் இருப்பதற்கே இத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். இதற்கமைய இந்தியாவில் இருந்து வருகைதரும் ஜெர்மனிவாசிகளுக்கு மாத்திரமே நாட்டுக்கு நுழைவதற்கு அனுமதி வழ…

  3. 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது! கொரோனா தொற்று இருப்பதை மறைந்தது 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான அவர் இருமல் மற்றும் 40 செல்ஸியசிற்கும் அதிகமான உடல் வெப்பநிலை இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பணிபுரியும் இடத்தில் ஐந்து பேருக்கும் மூன்று வயது குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த நபர் பல நாட்களாக அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள முன்ன…

  4. உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு- 384 ராணுவ வீரர்கள் மீட்பு சங்மோலி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பகுதியில் பனிப்பாறை உடைந்து அங்குள்ள தவுலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் அங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வந்த மின் நிலையத்துக்குள்ளும் சுரங்க பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடந்ததில் பலர் பிணமாக மீட்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில் இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 126 பேர் பேரை காண…

    • 1 reply
    • 484 views
  5. 24 நாள் உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நவல்னி ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முக்கிய எதிர்ப்பாளரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி மருத்துவ சிகிச்சை பெற்றபின் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் நவல்னி, தனது தனிப்பட்ட மருத்துவரிடம் மருத்துவ உதவி கோரி மார்ச் 31 அன்று தொடங்கிய உண்ணா விரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறியுள்ளார். "நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நல்ல மனிதர்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி, நாங்கள் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்" என்று நவல்னி தனது உண்ணாவிரதத்தின் 24 ஆவது நாளான இன்றைய தினம் இன்ஸ்டாகிராமில் பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம் உண்ணாவிரதத்தை…

  6. மியன்மாரில் இதுவரை 745 போராட்டக்காரர்கள் இராணுவத்தால் படுகொலை கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதுதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதிய நிலவரப்படி, இந்த இராணுவ ஆட்சிக்குழுவினால் 745 பேர் கொல்லப்பட்டதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட 3,371 பேர் கைது செய்யப்பட்டடுள்ளார்கள். இதற்கிடையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சனிக்கிழமை நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டி…

  7. மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? 97 Views வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தால் ஆங் சான் சூகி தலைமை யிலான அரசு சர்வதேச ரீதியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த சூழலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப் பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது மியான்மர…

  8. சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை இரத்து செய்தது அவுஸ்ரேலியா: வலுக்கும் மோதல்! தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான ‘பெல்ட் மற்றும் வீதி’ திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண அரசாங்கத்துடன் கடந்த 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999ஆம் ஆண்டு சிரியாவும் 2004ஆம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவில் உள்நாட்டு அரசியல…

    • 1 reply
    • 859 views
  9. இஸ்ரேலிய அணுசக்தி தளத்திற்கு அருகே... வெடித்து சிதறிய சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை! சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை நாட்டின் தெற்கில் உள்ள டிமோனா நகரில் ஒரு அணுசக்தி நிலையத்திற்கு அருகே வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரகசியமான டிமோனா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த ஏவுகணை தரையிறங்கிய போதும், இந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதங்களும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதேவேளை, குண்டுவெடிப்பில் அணுசக்தி தளம் பாதிக்கப்படவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிரிய ஏவுகணை இஸ்ரேலிய விமானத்தின் மீது வீசப்பட்டதாகவும் அதன் இலக்கை மீறி டிமோனா பகுதியை அடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்த…

  10. 53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா! இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார். அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்ப…

  11. கொரோனா தடுப்பூசி – முக்கிய விடயத்தினை வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள்! கொரோனா தடுப்பூசிகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதையும், உயிரிழப்பதனையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட 600 இற்கும் குறைவான அமெரிக்கர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முழுமையாக கொரோனா தடுப்பூசியினைப் போட்டுக்கொண்ட 84 மில்லியன் பேரில் 0.01 சதவீதமானவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1211392

  12. ஜப்பானுக்கு எதிரான பாலியல் அடிமைத்தன இழப்பீட்டு கோரிக்கையை தென்கொரியா நிராகரிப்பு தென்கொரிய பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் போர்க்கால துன்பங்கள் தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியதை தென் கொரிய நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இந் நிலையில் பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வலர்கள் இந்த முடிவைக் கண்டித்து, சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றமானது பெண்களின் மரியாதை மற்றும் கெளரவத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் போராட்டங்களை புறக்கணித்து வருவதாகக் கூறினார். அது மாத்திரமன்றி அவர்கள் ஒரு அறிக்கையில் வாதிகள் மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர். தென்…

  13. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு பட மூலாதாரம், GETTY IMAGES ஆப்ரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சென்ற ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்ட போது, தற்போது 45 வயதாகும் முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேல் முழங்காலை வைத்து அழுத்தியது படம்பிடிக்கப்பட்டது. மி…

  14. பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு! புதிய கொவிட் மாறுபாட்டின் அச்சத்தினால், பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.டி 04:00 முதல் இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் மக்களின் வருகை மறுக்கப்படும். பிரித்தானிய அல்லது அயர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியிருப்பு உரிமை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். பி .1.617 என அழைக்கப்படும் இந்தியாவின் புதிய கொவிட் மாறுப்பாட்டினால், இதுவரை 103பேர் பாதிக்க…

  15. எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம், சில மாதங்களில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து சாதனங்களும் தற்போது உலக நாடுகளிடம் இருப்பதாகத் தெரிவித்தார். அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். செல்வம் பொருந்திய, வளர்ச்சியடைந்த நாடுகள் இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதெநேரம்,…

  16. சாட் நாட்டின் அதிபர் மோதலில் சிக்கி உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு 58 Views மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டின் இராணுவம் அறிவித்திருக்கிறது. பிரான்ஸின் பாதுகாப்பு கூட்டணி நாடான சாட், சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பிரெஞ்சுப் படைகளது தலைமையகமாக உள்ளது. 68 வயதான டெபி சாதாரண படைச் சிப்பாயாக இருந்து 1990 இல் ஆயுதக் கிளர்ச்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர். ஆபிரிக்காவில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்கும் அதிபர்களில் ஒருவரான இட்ரிஸ் டெபி, லிபியா எல்லையோரம் கிளர்ச்சி…

  17. கொரோனா தொற்று அதிகரிப்பு : கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுவிஸ் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது. உணவகங்கள் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை சில பல்கலைக்கழகள் மீண்டும் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கும் வரை உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காணப்பட்டாலும் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தீர்மானம் நியாயமானது என அரசாங்கம் கூறுகிறது. https://athavannews.com/2021…

  18. சிம்பாப்வேயில் கொவிட்-19 தொற்று தீவிரம்: சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை! சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிய சிம்பாப்வே 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 320 கைதிகளை அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சிறைச்சாலைகள் நிரம்பிவழிவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால், 37,751பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,…

  19. இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா - தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கை காவல்துறைக்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளமைக்கு ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ட்ரோன்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்காணிக்கவுமே உதவும்,” என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையிலிருந்து ஆஸ்திர…

  20. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும் குடியிருப்பு வாசிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக ப…

  21. பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம் ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31 இலட்சத்து 37 ஆயிரத்து 907 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 526 ஆகவும் அதிகரித்…

  22. அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என சமீபத்திய இரத்த பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுமையான முதுகுவலி மற்றும் கால் உணர்வின்மைக்கு முறையான சிகிச்சை கோரி கடந்த 18 நாட்களாக 44 வயதான நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண…

  23. இளவரசர் ஃபிலிப்பின்.. இறுதிச் சடங்கு இன்று. 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை! மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும். இந்த நிகழ்வில் 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்கேற்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…

  24. ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா? ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்! ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (ஈ.எம்.ஏ) அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசி குறித்த பரிந்துரையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதுகாப்புக் குழு விரைவான பரிந்துரையை வழங்கும் வரை ஏற்கனவே பெறப்பட்ட அளவுகளை சேமிக்க பரிந்துரைத்ததாகவும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாமதம் ஐரோப்பாவின் தடுமாறும் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது. அமெரிக்க மத்திய சுகாதார முகவரகம் 50 வயதிற்கு உட்பட்ட ஆறு பெண்கள் தடுப்பூசியை பெற்ற பிறகு அரிய இரத்த உறைவினால் பா…

  25. பெருநகர ரொறென்ரோவில்... கொவிட் தடுப்பூசி செலுத்தும், மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்! பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து செய்கின்றன அல்லது நியமனங்களை ஒத்திவைக்கின்றன. ஸ்கார்பாரோவில் சுமார் 10,000 நியமனங்கள் இரத்து செய்யப்படும். ஏப்ரல் 14ஆம் திகதி இரண்டு மருத்துவமனை மருந்தகங்கள் வழங்கல் சிக்கல்களால் மூடப்படுகின்றன. அவை எப்போது திறக்கப்படும் என்பதற்கான காலக்கெடு தெரியவில்லை.. இதே காரணத்திற்காக நோர்த் யோர்க் பொது மருத்துவமனை ஏப்ரல் 1…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.