உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
நவல்னி, துன்பெர்க் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை அலெக்ஸி நவல்னி, காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுடன் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் நோர்வே சட்டமியற்றுபவர்கள் பரிந்துரைத்துள்ளனர். உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் முன்னாள் வெற்றியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வேட்பாளர்களை முன்மொழிய தகுதியுடையவர்கள். நோர்வே சட்டமியற்றுபவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இறுதி பரிசு பெற்றவர்களை பரிந்துரைத்துள்ளனர். நோர்வே சட…
-
- 1 reply
- 528 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் அலெக்ஸிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 457 views
-
-
ஒஸ்ரேலிய சீன பல் முனைப் போட்டி -வேல் தர்மா 15 Views அமெரிக்கவிற்கும் சீனாவிற்குக் இடையிலான போட்டிக் களமாக பசுபிக் மாக்கடல் இருக்கின்றது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஒஸ்ரேலியா இருக்கின்றது. அமெரிக்காவின் படைத்தளம் இருக்கும் பிலிப்பைன்ஸ் அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. அதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் வாழைப்பழங்களை சீனா நிறுத்தப் போவதாக 2016இல் அறிவித்தது. பின்னர் பிலிப்பைன்ஸ் அதிபர் சீனாவிற்கு பயணம் செய்து அமெரிக்காவுடனான தமது நட்பை “விவாகரத்து” செய்வதாக அறிவித்தார். பின்னர் சீனா பிலிப்பைன்ஸ்லி இருந்து அதிக வாழைப்பழங்களை இறக்குமதி செய்வதுடன் பிலிப்பைன்ஸில் 24பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும் அ…
-
- 0 replies
- 557 views
-
-
டிரான்ஸ் பசிபிக் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் இணையப் போவதாக பிரித்தானியா அறிவிப்பு! 11 நாடுகளின் டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக முகாமான விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரித்தானியா விண்ணப்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஒரு வருடம் கழித்து பிரித்தானிய மக்களுக்கு மகத்தான பொருளாதார நன்மைகளைத் தரும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் தடையற்ற வர்த்தகப் பகுதியில் சேருவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, ஆழ்ந்த அரசியல் ஒருங்கிணைப்பு இல்லாமல் குறைந்த கட்டணங்களிலிருந்து…
-
- 0 replies
- 410 views
-
-
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்! உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது. இது பட்டியலில் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், கனடா 2018 முதல் தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு கனடா 9ஆவது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா முதல் 25 இடங்களில் உள்ளது. இந்த ஆண்டு, நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 88 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தன. பின்லாந்து, சுவிஸ்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சுவீடன் நெருக்கமாக உள்ளன. ந…
-
- 0 replies
- 626 views
-
-
ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்றுமுதல் பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பிக்கலாம்! பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவுக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பம், கடந்த ஆண்டு சீனாவால் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து வழங்கப்படுகிறது. இதனிடையே, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டை (British National Overseas (BNO) செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என சீனாவும் ஹொங்கொங்கும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தன. இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கான விசா விண்ணப்பங்கள் இன்றுமுதல்…
-
- 0 replies
- 564 views
-
-
வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு குடியுரிமை வழங்க அமீரகம் முடிவு 16 Views பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்து அமீரக துணை அதிபர் உத்தரவிட்டுள்ளார். அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிறப்பு தகுதி கொண்டவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் அமீரக குடியுரிமை பெறும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்…
-
- 2 replies
- 593 views
-
-
வளர்ப்பு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 2 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குணசுந்தரி நேற்று தமது தீர்ப்பை அளித்தார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். நேற்றைய வழக்கு விசாணை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. இந்த இறுதிநாள் விசாரணையில் குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகளைத் தனித்தனியே வாசிக்குமாறு நீதிபதி தெரிவித்தார். இத்தகைய குற்றம…
-
- 0 replies
- 877 views
-
-
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்…
-
- 0 replies
- 431 views
-
-
`குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால், கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சிறார்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/singapoor-corona.jpg கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம்…
-
- 0 replies
- 387 views
-
-
ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பைடனுக்கு புத…
-
- 0 replies
- 422 views
-
-
பீஜிங் சீனாவின் உகான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். சீனா அதிகாரப்பூர்வமாக கொரோனாவை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே யான்லிங்க்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது யான்லிங் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கூறப்படுவதை மறுத்துள்ள உகான் வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர் அந்நிறுவனத்தில் படித்து முடித்ததுமே வேறிடத்தில் வாழவும் வேலை செய்யவும் சென்றுவிட்டதாகவும் தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து வீசாட் தளத்தில் தோன்றிய யான்லிங் , தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பின் யான்லி…
-
- 1 reply
- 750 views
-
-
துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஏதென்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தில், கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் பனகியோடோபஒவுலோஸ் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் ‘பல திசைகளில் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது’ என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இயற்கை எரிவாயு வளங்கள் மற்றும் அந்தந்த கடற்கரைகளுக்கு வெளி…
-
- 1 reply
- 613 views
-
-
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து! அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பண…
-
- 0 replies
- 306 views
-
-
கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம்விட, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இர…
-
- 0 replies
- 332 views
-
-
லடாக்கின் சிக்கீம் பகுதியில் இந்திய சீன துருப்பக்களிடையே மீண்டும் மோதல் கடந்த 20 ஆம் திகதி, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையிலான இந்தியாவின் சிக்கீம் பகுதியில் சீனாவுடனான எல்லையில் மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. வடக்கு சிக்கீமின் நாகு லா எனும் இந்திய எல்லைப்பகுதியூடாக ஊடுருவ முயன்ற சீனத் துருப்புக்களுக்கும் இந்தியத் துருப்புக்களுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 20 சீன மக்கள ராணுவத்தின் வீரர்களை தாம் காயப்படுத்தியுள்ளதாகவும், தமது தரப்பில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது. கடுமையான காலநிலையிலும்கூட சீன ஆக்கிரமிப்பினை தமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து அவர்களை விரட்டியடித்துவிட்டதாகக் கூ…
-
- 7 replies
- 1.3k views
-
-
10 கோடியைக் கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..! உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை என்பதுடன் வைரஸ் உருமாற்றம் அடையத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 84 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியே 22 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இத…
-
- 0 replies
- 321 views
-
-
ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சனிக்கிழமை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த தகவலை ரஷ்யாவின் அரசியல் தடுப்புக் காவல்களைக் கணக்கிடும் ஒரு குழு உறுதிப்படுத்தியுள்ளது. மொஸ்கோவின் நகர மையத்தில் உள்ள புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், அங்கு பொலிசாருடன் மோதல்கள் வெடித்தன. இதன் விளைவாக தடியடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டனர். …
-
- 0 replies
- 445 views
-
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? பட மூலாதாரம், EPA புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும். புதிய அதிபராக பதவியேற்கும் நபர், ஓவல் அலுவலகத்தில் தனக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வார். அந்த வகையில், புதிதாக அதிபர் பதவி ஏற்று இருக…
-
- 3 replies
- 1.2k views
-
-
பைடனின் உத்தரவை அடுத்து அமெரிக்கா-மெக்சிகோ இடையே எல்லைச்சுவர் கட்டும் பணி நிறுத்தம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இரு நாட்டுக்கும் இடையே எல்லைப்பகுதியான நியூ மெக்சிகோவின் Sunland Park இல் சுமார் 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பைடன் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பலவேறு உத்தரவுகளை பிறப்பித்தார்…
-
- 0 replies
- 526 views
-
-
இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதை தமிழ்நாட்டில் உள்ள அவரது பூர்வீக கிராமம் கொண்டாடியுள்ளது. நெல்வயல்களிற்கு மத்தியில் காணப்படும் சிறிய கிராமத்தை சேர்ந்த மக்கள் கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் புதன்கிழமை இந்து ஆலயங்களிற்கு சென்றார்கள்,பட்டாசுகளை கொழுத்தினார்கள் பிரார்ததனைகளில் ஈடுபட்டார்கள். வண்ணமயமான சேலைகள் அணிந்த பெண்களும் வேட்டியுடன் காணப்பட்ட ஆண்களும் கோவிலிற்கு சென்று கமலா ஹாரிசின் வெற்றிக்காக வழிபாடுகள…
-
- 57 replies
- 3.9k views
-
-
கொரோனா வைரஸ் புதிய திரிபு: "நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்" - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை ஜேம்ஸ் கல்லேகர் சுகாதார & அறிவியல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வை…
-
- 1 reply
- 627 views
-
-
ஆட்சியில் இருந்து வெளியேறிய இறுதிநாளில் 73பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப்! ஆட்சியில் இருந்து வெளியேறும் இறுதிநாளிலும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு நெருக்கமான 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அரசாங்க மரியாதையுடன் வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்றார். இதற்கு முன்னதாக, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதில், பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். …
-
- 0 replies
- 560 views
-
-
பைடன் நிர்வாகத்தில் 23 இற்கும் மேற்பட்ட தென்னாசிய அமெரிக்கர்கள்! அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக, நேற்று (புதன்) பதவியேற்ற ஜோ பைடன் நிர்வாகத்தில் உதவி ஜனாதிபதி கமலா ஹரிஸ் தவிர்ந்த 23 இற்கும் மேற்பட்ட இந்திய, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேச அமெரிக்கர்கள் பல்வேறு பதவிகளிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 20 பேர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஜமைக்கா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கமலா ஹரிஸ், உப-ஜனாதிபதியாகத் தெரியப்பட்டதன் மூலம், அப்பதவியிலமரும் முதலாவது பெண், முதலாவது கறுப்பினப் பெண், முதலாவது தெற்காசியப் பெண் என்ற வகையில் அமெரிக்க வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர…
-
- 1 reply
- 776 views
-