Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனா பரவல் சமயத்தில் பாலியல் உறவின் போது முககவசம் அணிவது பாதுகாப்பானது - வழிகாட்டுதல்கள் நியூயார்க் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள உதவும் வகையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நோயின் மாறிவரும் புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில் அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. பாலியல் மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்றும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. கொரோனாவில் இருந்து ஆண்கள் மீண்ட பிறகும், மலம் மற்றும் ஆண்கள் விந்தணுக்களில் கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் பாலியல் ரீதியாக பர…

  2. ஆகஸ்ட் 2019-லேயே சீனாவின் வூஹானில் கரோனா பரவியுள்ளது: செயற்கைக் கோள் ஆதாரத்துடன் அமெரிக்க ஆய்வில் தகவல் சீனாவின் வூஹான் நகரின் மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடம் பற்றிய செயற்கைக் கோள் படங்கள், இணையதளத்தில் தேடல் எந்திரத்தில் தேடப்பட்ட ட்ரெண்டுகளைப் பார்க்கும் போது கரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் ஆகஸ்ட் மாதமே பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய புதிய ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது. வூஹானில் உள்ள 5 மருத்துவமனைகளின் வாகன நிறுத்திமிடங்களில் அதற்கு முந்தைய ஆண்டு ஆகஸ்டை ஒப்பிடும்போது 2019 ஆகஸ்ட்டில் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத…

  3. இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: லடாக் எல்லையில் வாழும் மக்களின் நிலை என்ன? கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக ராணுவப் பதற்றம் நிலவி வந்தப் பகுதியில் உள்ள பல நிலைகளில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை இந்தவாரம் தொடங்கவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்தப் பதற்றத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ, பிரதேசக் கட்டுப்பாடு, எல்லை சார்ந்த பிரச்சனைகள் ஒருபுறம் முன்னெழுந்தாலும், மறுபுறம் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழும் மக்கள் வாழ…

  4. 1986 ல் சுவீடன் முன்னாள் பிரதமர் கொலை – குற்றவாளி கண்டறியப்பட்டார் by : Jeyachandran Vithushan 1986 ஆம் ஆண்டில் சுவீடன் முன்னாள் பிரதமர் ஓலோஃப் பா(ல்)மேக் கொன்றது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று ஆனால் சந்தேக நபர் இறந்துவிட்டார் என்றும் ஸ்வீடிஷ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். அவர்கள் சந்தேக நபரை ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் என அடையாளம் கண்டுகொண்டபோதும் “ஸ்காண்டியா மேன்” என்றும் அழைக்கப்படும் குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் சுவீடன் முன்னாள் பிரதமர்ஓலோஃப் பா(ல்)மே மரணம் தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதாக தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டர் பீட்டர்சன் கூறினார். …

    • 0 replies
    • 542 views
  5. 50 ஆண்டுகள் இல்லாத உணவு நெருக்கடியில் உலகம் – ஐ.நா எச்சரிக்கை கொரோனா தொற்றால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான உணவு நெருக்கடியின் விளிம்பில் உலகம் நிற்பதாகவும், பேரழிவை தவிர்க்க அரசுகள் விரைவாக செயல்பட வேண்டுமென ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் விழும் அபாயம் உள்ளது. ஆனால் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். ஏனெனில் குழந்தை பருவத்தில் மோசமான ஊட்டச்சத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, உலகெங்கிலும் உள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தை ஐந்து …

  6. சுலைமானி கொலை : தகவல்களை வழங்கியவருக்கு மரண தண்டனை - ஈரான் அறவிப்பு சுலைமானி கொலைச் சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது. ஈரான் நாட்டின் குர்து படை கொமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை…

  7. வடகொரியா எடுத்துள்ள மற்றுமொரு முடிவு தென் கொரியாவுடனான உள்ள அனைத்து தகவல் தொலைத்தொடர்புகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் தென் கொரிய எல்லையில் இருந்து வடகொரியாவை தாக்கியும், அவமதித்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. இதனால் வடகொரியா அனைத்து தொலைத்தொடர்புகளையும் துண்டிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான அனைத்து ஹாட்லைன் சேவைகளையும் துண்டிக்கவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமாக கே.சி.என்.ஏ. செய்திவெளியிட்டுள்ளது. தென் கொரி…

  8. ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி இந்தியாவுடனான எல்லை பிரசசினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எத…

  9. பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்கள்: பிரதமர் ஜஸ்டின் யோசனை இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார். நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் மட்டுமல்ல கனடா, ந…

  10. கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த மாதம், மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார். இதனிடையே, ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நேருக்கு நேர் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குவோம் என கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் ம…

  11. உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம் - சீன தகவல்! உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், பாதுகாப்பு, செயல்திறன், கிடைக்கும் நிலை ஆகியவற்றை கரு…

    • 0 replies
    • 393 views
  12. கொரோனா தொற்று இல்லாத நாடானது நியூஸிலாந்து! நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால், அந்த தொற்றை ஒழித்துவிட்ட நாடாக நியூஸிலாந்து உருவாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 50 இலட்சம் பேர் வசிக்கும் நியூஸிலாந்தில், கடந்த பெப்ரவரி இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில், சுமார் 1500 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 17 நாள்களில் 40,000 பேருக்கு கொரோனா பரிசோதன…

    • 0 replies
    • 373 views
  13. சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்க ஐரோப்பிய எம்பிக்கள்.! என்ன சொல்கிறது சீனா.? கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே, சீனா அதிக அளவில் லைம் லைட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. சீனாவால் தான், உலகமே, லாக் டவுன் போன்ற பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது என ட்ரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும் சீனாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சீனா இதற்கு எல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. எல்லா குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களையும், இடது கையால் ஒதுக்கிவிட்டு, அடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அமைப்பு ஆனால் சர்வதேச நாடுகளோ, சீனாவை தன் போக்கில் விடுவதற்கும் தயாராக இல்லை. சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சீனாவில் நடக்கும…

  14. அறிகுறியற்ற மக்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது "மிகவும் அரிதானது" - உலக சுகாதார அமைப்பு ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் டாக்டர் மைக் ரியான் கூறியதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடும் .இரண்டாவது அலையை தடுக்க இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும்." குவாதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தொற்றுநோய்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அவை சிக்கலான தொற்றுநோய்களாக உள்ளன. பிரேசில் இப்போது தொற்றுநோய்களின் மையபகுதிகளில் ஒன்றாகும், உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ளன அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. கடந்த வார…

  15. ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர் லிசா பெண்டர் அறிவித்துள்ளார். தங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ம் திகதி, 46 வயத…

  16. அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்! அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரி, நாடு திரும்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மஜித் தாஹேரி, தரையிறங்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பிய ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரியை, துணை வெளியுறவு அமைச்சர் ஹொசைன் ஜாபேரி அன்சாரி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்த இரண்டு நாட்களுக…

  17. கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது ஜார்ஜ் பிளாயிட் கொலை. அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கருப்பின மக்கள் இனவெறி தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். ஆனால், ஜார்ஜ் பிளாயிடின் இறப்பும் அது நிகழ்ந்த விதமும் உலக மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளனர். 'கலவரக்காரர்களை போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராணுவத்தை களமிறக்குவேன் ' என்று அமெரிக்க ஜனாதிபது டிரம்ப் எச்சரித்த பிறகும் , கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை. கருப்பினத்தவர் மரணம் குறித்து டிரம்பின் கவலையில்லாத பதில் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்கா மட்டுமின்றி ஜார்ஜ் …

  18. சீனாவை தனிமைப்படுத்த 8 நாடுகள் கூட்டணி அமெரிக்க திட்டத்தை கேலி செய்யும் சீனா வாஷிங்டன் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.வைரஸ் குறித்த தகவலை சொல்லாமல் மறைத்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது. பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது போன்ற பல்வேறு காரணங்களால் சீனா மீது பல நாடுகளில் கோபத்தில் உள்ளன. குறிப்பாக இதில், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிய…

  19. சுத்தமான நாடானது நியூஸிலாந்து: கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்தார் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்: கோப்புப்படம் வெலிங்டன் தென்மேற்கு பசிபிக் கடற் பகுதியில் இருக்கும் தீவான நியூஸிலாந்து நாட்டில் கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்ததார். இதனால் கரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது, எதிர்காலத்தில் கரோனா வராது என நம்புவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஓஸ்னியாவில் இருக்கும் குட்டி நாடான நியூஸிலாந்தையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அங்கு 1,500 பேர் பாதிக்கப்பட்டனர், 22 பேர் உயிரிழந்தனர். ஆனால், தீவு நாடாக இருப்பதால் அங்கு வரும் தங்கள் நாட்டு மக்களைத் தவிர சுற்றுலா…

  20. அமெரிக்கப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ராஜசங்கீதன் தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக் காலத்தில் போராட்டங்கள் எப்படி சித்தாந்தமற்றவையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும், சிவில் சமூக அமைப்புகள் அவற்றைக் கைக்கொண்டு எப்படி ஒரு முக்கியமான அரசியல் கேவலை நீர்த்துப்போக வைக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள அவசியப்படும் தருணங்கள் இவை. ஜார்ஜ் ஃப்ளாய்டு மீது அரச நிறுவனமான காவல் துறையின் ஒரு பிரதிநிதி காட்டிய மேலாதிக்க ஒடுக்க…

  21. ஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். முழங்காலிட்டு ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர் ட்ரூடோ ஒட்டாவா: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. போ…

    • 3 replies
    • 1k views
  22. இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்தால் அமெரிக்காவில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் லண்டன், மான்செஸ்டர், கார்டிஃப், லீசெஸ்டர் மற்றும் ஷெஃபீல்ட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. லண்டனில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “நீதி இல்லை, அமைதி இல்லை” மற்றும் “கறுப்பின மக்களின் விடுதலை” என கோஷமிட்டு நேற்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்தினர். குறித்த ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை அமைதியானதாக இருந்தாலும் டவுனிங் தெரு பகுதியில் இடம்பெற்ற போராட்டம் சிறுது வன்முறையா…

    • 1 reply
    • 474 views
  23. இலங்கை தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை! போலி ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பில் இலங்கையர்கள் இருவருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கையர்களான புஸ்பராஜ் கபில் (21) மற்றும் ராமசந்திரன் கிஷோ பிரசாத் (32) ஆகிய இருவருக்கே தலா 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி சிங்கப்பூர் கடவுச் சீட்டு மற்றும் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டை என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சிங்கப்பூர், டுவாஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடந்த பெப்ரவரி 29ம் தகிதி சந்தேக நபரொவருர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மற்றைய சந்கைநபர் கைது செய்யப்பட்…

  24. ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை! அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன. பரிஸில் இரு அமைப்புக்கள் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பரிஸ் பொலிஸ் தலைமைச் செயலகம் இதற்கு தடை விதித்துள்ளது. பத்து பேருக்கு மேல் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நில…

  25. சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது. எவ்வாறா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.