உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27021 topics in this forum
-
வெள்ளப் பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்? வட கொரியாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நாட்டின் முக்கிய அணுசக்தி நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுதியை சேதப்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவைக் கண்காணிக்கும் வலைத்தளமான 38 நொர்த், ஒகஸ்ட் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலான வெள்ளப்பெருக்கின் போது, யோங்பியோன் அணு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அணு உலை குளிரூட்டும் முறைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதனை காட்டியுள்ளது. கொரிய தீபகற்பம் சமீபத்திய வரலாற்றில் மிக நீண்ட மழைக்காலத்தை பெறும் இடமாகும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வட மற்றும் தென் கொரியா இரண்டிலும் சேதத்தையும் இறப்புகளையும் ஏற்பட…
-
- 1 reply
- 449 views
-
-
இஸ்ரேலில் ஆளும் கூட்டணி உடைய வாய்ப்பு: நான்காவது முறையாக தேர்தல் நடைபெறுமா? இஸ்ரேலில் ஆளும் கூட்டணியில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளதால், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் இஸ்ரேஸ் நான்காவது முறையாக இன்னொரு தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேலில், கடந்த ஓராண்டில், மூன்று முறை பொதுத் தேர்தல் நடைபெற்று எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், இறுதியாக நடந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியும், பென்னி கன்ட்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சியும் இணைந்து, கடந்த மே மாதம் ஆட்சி அமைத்தன. இதன்படி பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். இரண்டு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்…
-
- 1 reply
- 511 views
-
-
இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு லண்டன், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய அவசியம் காரணமாக, பல்வேறு கட்டுப்படுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் வணிக வளாகங்கள், கேசினோக்…
-
- 0 replies
- 659 views
-
-
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி …
-
- 16 replies
- 2.4k views
-
-
அமெரிக்கர்கள் – கனேடியா்களிடையே எல்லைகளில் தொடரும் முரண்பாடுகளால் பதட்டம்.! தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா- கனடா எல்லைகளில் இரு நாட்டவா்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்தாலும் வணிக நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கனடாவுக்குள் வரும் அமெரிக்க வாகன சாரதிகள் எல்லையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மார்ச் 21 முதல் மூடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 21 வரை இந்த எல்லை மூடல் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். எனினும் அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்தும் தீவிரமாக இருப்பதால் அதன் பின்னரும் எ…
-
- 0 replies
- 813 views
-
-
ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா வேலை நிமித்தம் காரணமாக அமெரிக்கா செல்வோருக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பல இலட்சம் பேர் வேலையிழந்த நிலையில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் விதமாக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் வேலை தொடர்பான விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய சென்ற பல இலட்சம் பேர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து இந்திய அரசும் அமெரிக்கா…
-
- 0 replies
- 554 views
-
-
மியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை! மியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தடை பாரபட்சமானது என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான இனப் படுகொலையின் ஒரு தொடர்ச்சி எனவும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. 2017ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து, சுமார் 75 ஆயிரம் ரோஹிங்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர். இந்த விரட்டியடிப்பு நடவடிக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் இனப் படுகொலை விசாரணைக்கு வழிவக…
-
- 0 replies
- 468 views
-
-
ஜோ பைடனின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பரிந்துரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள முதலாவது கறுப்பினத்தவரும் ஆசிய வம்சாவளி அமெரிக்கரும் இவராவார். இந்தியா ஜமேக்கா வம்சாவளியைச் சேர்ந்த இவர் கலிபோர்னிய செனட்டர் என்பதுடன், கலிபோர்னியாவின் முன்னாள் சட்ட மா அதிபருமாவார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்காகப் போட்டியிட்ட கமலா ஹரிஸ், துணை ஜனாதிபதி பதவிக்கான முதன்னிலை வேட்பாளராக இருப்பாரென கருதப்பட்டது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க பொலிஸில் சீர்திருத்த…
-
- 0 replies
- 573 views
-
-
ரஷ்யா ‘முதல்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி புடின் உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மேலும் மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தனது மகளுக்கும் குறித்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இணைந்து உருவாக்கியுள்ளது. இன்று காலை, உலகில் முதல் முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உள்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார த…
-
- 0 replies
- 538 views
-
-
வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப் வெளியேற்றம் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார். வெள்ளை மாளிகை அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியிள் அதிகாரபூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த நிலையில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் நடமாடியள்ளார். இதனையடுத்து, இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்…
-
- 0 replies
- 343 views
-
-
COVID-19 இன் உடனடி விளைவுகள் அனைவருக்கும் தெரியும், நீண்டகால தாக்கங்களை நீங்கள் அறிவீர்களா அல்லது கற்பனை செய்தீர்களா? நாம் அனைவரும் ஒரு அசாதாரண அவசரநிலைக்கு நடுவே இருக்கிறோம், கோவிட் -19 பேரழிவு உலகெங்கும் பொங்கி வருவதால் எதிர்காலத்தைப் பார்ப்பது கடினம். இது அடர்த்தியான மூடுபனி சூழலில் ஒரு பெரிபாட்டெடிக் ட்ரட்ஜிங் ( peripatetic trudging ) இயக்கத்திற்கு ஒத்ததாகும். இந்த தொற்றுநோய் நாம் வாழும், விளையாடும், ரசிக்கும் மற்றும் படிக்கும் முறையை மாற்றிவிடும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு மாற்றத்தக்க மாற்றம் மனிதகுலத்தை வெறித்துப் பார்க்கிறது. அவர்கள் சொல்வது சரிதான், ஆனால் மாற்றம் எந்த வகையில் நம்மை சதுப்பு நிலமாக்கும்? இந்த நேரத்தை நம் வாழ்நாள் முழுவதும…
-
- 0 replies
- 430 views
-
-
https://www.theguardian.com/commentisfree/2020/aug/06/sanctions-china-politics-us-showdown Think 'sanctions' will trouble China? Then you're stuck in the politics of the past Ai Weiwei The complex history of how China and the US once embraced each other should inform how the current showdown is tackled ‘Covid-19 has become a political issue for its two major political parties to tussle over, but the real crisis is that the western system itself has been challenged.’ Photograph: Andy Wong/AP …
-
- 0 replies
- 689 views
-
-
கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல இளவரசர் திட்டமா? கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்’ என சாத் அல் ஜாப்ரி குற்றம்சாட்டியுள்ளார். ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேக…
-
- 0 replies
- 463 views
-
-
நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்? ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ் திங்களன்று அபுதாபிக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாக ஏபிசி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜுவான் கார்லோஸ் திங்களன்று ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதற்கான தனது முடிவை திடீரென அறிவித்ததிலிருந்து, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த விமானம் பரிஸிலிருந்து அபுதாபிக்கு செல்லும் …
-
- 0 replies
- 430 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல் அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. 2016 தேர்தலுக்கு முன்னர் இரு…
-
- 28 replies
- 3k views
-
-
சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா? ஐ.நா சந்தேகம்! வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போர்க்கப்பல்களுக்கு பொருந்தும் வகையில் சிறிதாக்கப்பட்ட (miniaturised) அணு சாதனங்களை உருவாக்கியிருக்கலாம் எனவும் ஐ.நா சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.நா. பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கின்றது. வட கொரியாவின் கடைசி ஆறு அணுசக்தி சோதனைகள், சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்க உதவியிருக்கலாம் எனவும் சில நாடுகள் நம்புகின்றன. இந்த அறிக்கையினை, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்புக் குழு, வட கொரியா பொருளாதாரத்…
-
- 0 replies
- 595 views
-
-
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்! சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய சிரியாவின் அரசு ஊடகம், எந்தவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை. இந்த தாக்குதல், குண்டு வைக்கும் முயற்சிக்கான பதிலடி இது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. முன்னதாக, கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் குண்டு வைக்க முயன்ற நால்வரை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல…
-
- 0 replies
- 707 views
-
-
அரசுப் பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய டிரம்ப் உத்தரவு.. இந்தியர்களுக்கு சிக்கல்.. வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே எடுக்க வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளோரை எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்து அதில் கையெழுத்திட்டுள்ளேன். மிக எளிய விதியின் கீழ் செயல்படும் வகையில் போடப்பட்ட இந்த உத்தரவின்படி, ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே …
-
- 1 reply
- 781 views
-
-
ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு! கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 21 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த. 43பேர் காயமடைந்தனர் என்று ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா குகியானி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிறைச்சாலை நுழைவாயிலில் கார் குண்டு வெடித்ததன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய தாக்குதல், திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. ஒரே இரவி…
-
- 0 replies
- 433 views
-
-
பிரித்தானிய உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி! அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு உணவகங்களில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 72,000க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பானங்களுக்கு இந்த அரைவிலை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இதில் ஒருவருக்கு தள்ளுபடியாக 10 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆல்கஹால் பொருந்தாது. ஆனால், விமர்சகர்கள் ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமனைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில் இதனை விமர்சித்துள்ளனர். முடக்கநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பப்களுக்கான வருகைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 547 views
-
-
உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திடீர் திருமணம்! உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது. 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்ப…
-
- 0 replies
- 625 views
-
-
மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்து வருகிறது என பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் மின் அஞ்சல் ஒன்றினை வெளியிட்டுள்ள திறைசேரி, “காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயத்தை ஆர்.எம்.ஏ.ச…
-
- 0 replies
- 403 views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? – ட்ரம்ப் கேள்வி ஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டொலர்கள் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது ஜேர்மனி. ஆனால் நாம் ஜேர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில்கூட ஜேர்மனி ஒரு குற்றவாளியாக நடந்துகொள்கிறது. எனவேதான் ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப் பெறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். …
-
- 1 reply
- 710 views
-
-
அமெரிக்காவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டவை என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் மிருகத்தனமான பொருளாதாரத் தடைகள் நமது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றின் நோக்கம் பிராந்தியத்தில் நமது செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் நமது ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை நிறுத்துவதும் ஆகும் எனினும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் மூலம் தனது இலக்குகளை அடைய வேண்டும் என்ற அமெரிக்க கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையோ அல்லது அணுசக்தி திட்டங்…
-
- 0 replies
- 471 views
-