உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஆப்கானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு! தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் ஹோப்மேன் கூறுகையில், “தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜூலை மாதத்தில் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க உள்ளோம். மேலும் ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளை மீளப்பெறுவது தான். ஆப்க…
-
- 0 replies
- 254 views
-
-
கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் - டிரம்ப் வருத்தம் உலகில் கொரோனாவால் 58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 896 பேர் பலியாகி உள்ளனர். 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்ம…
-
- 0 replies
- 354 views
-
-
அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா Bharati May 28, 2020 அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா2020-05-28T21:52:17+00:00Breaking news, அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று முனைகளில் ஆழமான அரசியல் சகதிக்குள் பிரவேசிக்கின்றார். அந்த முனைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அமெரிக்காவில் கொவிட் –19 தொற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இவ்வாரம் ஒரு இலட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், பாரதூரமான பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தில் நாடு இருக்கிறது; தொற்றுநோயின் விளைவான பொதுச்சுகாதார நெருக்கடியை தவறான முறையில் கையாண்டமைக்காக ட்ரம்ப் கடுமையான கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறார்; இந்த இரு பிரச்சினைகளுடனும் பிணைப்பைக் கொண்ட சீன…
-
- 0 replies
- 434 views
-
-
ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி! ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது. பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை …
-
- 21 replies
- 1.7k views
-
-
வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் தோண்டப்பட்டது. அங்கு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறுத்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்…
-
- 1 reply
- 989 views
-
-
கொடூரமான காட்டுத்தீயால் பற்றி எரியும் சைபீரிய காடுகள் உருகும் பனிப்பாறைகள் ஆர்க்டிக் துருவத்திற்கு வடக்கே அமைந்துள்ள சைபீரியாவின் கட்டங்காபகுதியில் அதிகபட்சமாக 78 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 46 டிகிரி அதிகம். அதேபோல கட்டங்காவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி ஆகும். மே மாதத்தில் சைபீரியாவில் வெப்பமான வானிலை நிலவுவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, ஏனெனில் இது குளிர்காலத்திற்கு பிறகு இங்கு வானிலை இப்படி ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது நிலவும் சராசரி வெப்பநிலை மாற்றமானது, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். சைபீரியாவில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்ப…
-
- 0 replies
- 379 views
-
-
கொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020 நியூசிலாந்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. அந்நாட்டில் உள்ள ஒக்லாந்து நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 98 வயதான மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில், நியூசிலாந்தில் கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர்தான் சமூக பரவல் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அதன்பின்னர் அம்மாதிரியான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் நியூசிலாந்தின் சுகாதாரத்துறையின் இயக்குநரான ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளார். அதேவேளை நாளை முதல் நியூசிலாந்தில் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களின் எ…
-
- 0 replies
- 678 views
-
-
தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி! தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொ…
-
- 0 replies
- 689 views
-
-
ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1இலட்சத்து…
-
- 0 replies
- 281 views
-
-
ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், 2ஆவது அலை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை உலக நாடுகள் அமுல்படுத்தி வந்தன. அத்தோடு, முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் க…
-
- 2 replies
- 653 views
-
-
உலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்படி தனது இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார். உலகம் முழுவதும் மூன்றரை இலட்சம் பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான சொற்போர் வலுத்துள்ளது. இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை. கொரோனா வைரசால் உலகமே ஆடிப்போயிருக்கும் நிலையிலும் படைகளை த…
-
- 6 replies
- 708 views
-
-
டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார். நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன…
-
- 0 replies
- 458 views
-
-
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இடைமறித்த ரஷிய ஜெட் விமானங்கள் கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷிய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. மே 26, 2020 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி -8 ஏ ஆளில்லா விமானம் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்வதேச கடல் வழியாக பறந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு ரஷிய சு -35 விமானம் 65 நிமிடங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து முறைகேடான முறையில் தடுத்து நிறுத்தியது. ரஷிய விமானிகள் பி -8 ஏவின் இரு பக்கத்திலும் ஒரே நேரத்தில் நெருக்கமான நிலையில் பறந்ததால், இந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மற்றும் தொழில்சார்ந்ததல்ல என்று தீர்மானிக்கப்பட்டது என்று அமெரிக்க…
-
- 0 replies
- 708 views
-
-
தவறான தரவுகள்: கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை குறைத்தது ஸ்பெயின்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் சரிசெய்துள்ளது. பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் தரவைச் சரிபார்த்த போது, சில உயிரிழப்புகள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மற்றவர்கள் கொரோனா வைரஸின் விளைவாக உயிரிழக்க வில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 2,000 பேர் கீழ்நோக்கி திருத்தியுள்ளது. முன்னதாக 28 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு…
-
- 0 replies
- 336 views
-
-
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,604,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில், 348,237 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் உலகளவில் சற்றுக் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்ட…
-
- 0 replies
- 280 views
-
-
வெளியே வரும் மூடி வைக்கப்பட்ட துபாய் அரச தலைவரின் முறைகேடுகள். பெண்ணுரிமை பேசிக்கொண்டே, பெண்களை வதைக்கும் கொடுமை 😟 வெளியே தெரியும் சுபீட்ச்சத்துக்கு பின்னால் உள்ள அவலம் 🥺
-
- 0 replies
- 580 views
-
-
அமெரிக்கா கருத்து கூறுவது முட்டாள்தனமானது : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சீனா ஆவேசம் சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது, இந்தியா அத்துமீறி தங்கள் பகுதியில் நுழைவதாக சீனா கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்தது. இந்திய எல்லைக்குள் சீனா நுழைவதாக இதற்கு முன்பாக இந்தியத் தரப்பினர் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தியதில் பதற்றம் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது, “எல்லையில் உள்ள சுமுகமாக நிலையை சீனா பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார். பதிவு: மே 26, 2020 16:39 PM சமோவா உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால் சமோவா என்ற குட்டி நாடு கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு அழகி தான் என கூறப்படுகிறது. அந்த அழகியின் பெயர் ஃபோனோ (ஃபோனோய்பாஃபோ மெக்ஃபார்லேண்ட்-சீமானு) மிஸ். சமோவா அழகி போட்டியில் பட்டம் வென்று உள்ளார். ஃபோனோ அழகிப்பட்டம் பெற்ற நேரத்தில், அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 200,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என…
-
- 0 replies
- 420 views
-
-
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரித்து உள்ளது. பதிவு: மே 26, 2020 17:00 PM டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது. முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள…
-
- 0 replies
- 322 views
-
-
அமெரிக்காவில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். பதிவு: மே 26, 2020 09:13 AM சிகாகோ, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனுட…
-
- 0 replies
- 658 views
-
-
குளாேரோகுயின் மருந்து சோதனையை இடை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம் மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் இடைநிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை குளோரோகுயின் மருந்தை வைத்து அதிக சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சோதனை செய்யப்படுகிறது. ‘இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அந்த முடிவுகள் வந்த பின் குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக க…
-
- 0 replies
- 380 views
-
-
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது Bharati May 22, 2020 பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது2020-05-22T16:31:27+00:00உலகம், உள்ளூர் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்த கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் விமான சேவைக்குச் சொந்தமான பாகிஸ்தான் எயர் லைன்ஸ் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவிக்கின்றன. கராச்சி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொருங்கி விபத்தில் சிக்கிய இந்த விமானத்தில் 107 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். விமானம் விபத்து…
-
- 3 replies
- 883 views
-
-
மாகாண ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப் மக்கள் வழிபாட்டிற்காக, தேவாலயங்களை திறக்க மறுக்கும் மாகாண ஆளுநர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு, மாகாண அரசுகளை ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “பல மாகாணங்கள், மதுபான விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறந்து…
-
- 1 reply
- 428 views
-
-
அதிநவீன லேசர் ஆயுதம்.. நடுக்கடலில் நடந்த சீக்ரெட் சோதனை வெற்றி.. ஆட்டத்திற்கு தயாராகும் அமெரிக்கா.! நியூயார்க்: அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. அதிகரித்து வரும் போர் அச்சத்துக்கு இடையே இந்த சோதனையை அமெரிக்கா செய்துள்ளது.அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக டிரேட் வார் நடத்திக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனாவின் தோற்றம் குறித்தும் அமெரிக்கா, சீனாவுடன் மோதி வருகிறது.அதேபோல் தென் சீன கடல் எல்லையில் இரண்டு நாடுகளும் மிக மோசமாக சண்டை போட தயார் ஆகி வருகிறது. இதனால் இது எப்போது வேண்டுமானாலும் முழு போராக வெடிக்கும் அபாய…
-
- 1 reply
- 635 views
-
-
"செகண்ட் வேவ்" வந்தாலும் சரி.. நாட்டை இனியும் லாக்டவுனில் போட்டு மூட மாட்டேன்.. டிரம்ப் பிடிவாதம்.! நியூயார்க்: மூடி போட்டு மூடுவதற்காக ஒரு நாடு இல்லை.. இப்படி நிரந்தரமாக பூட்டி போடுவதும் ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது கிடையாது.. அதனால் வைரஸ் பாதிப்பில் 2வது அலை வந்தாலும் சரி, 3வது அலை வந்தாலும் சரி முடக்கம் என்பதே கிடையாது என்று அதிபர் டிரம்ப் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக கூறியுள்ளார்.. இந்த பரபரப்பு பேச்சு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க வைரஸின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது.. இந்த கொரோனா பாதிப்பில் லீடிங்கில் உள்ளது அமெரிக்காதான்.. உயிரிழப்பிலும் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.வைரஸ் பரவலை தடுக்க லாக்டவுன் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்…
-
- 0 replies
- 589 views
-