உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
மசூதியில் தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை நோர்வேயில் தனது சகோதரியை சுட்டுக் கொன்று விட்டு, மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிலிப் மான்ஷாஸுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நோர்வே தலைநகா் ஒஸ்லோவின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் பிலிப் மான்ஷாஸ் (21) என்பவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதில் யாருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. அப்போது அந்த மசூதியில் தொழுகை முடிந்து 3 போ் மட்டுமே இருந்தனா். அவா்களில் 65 வயதான பாகிஸ்தான் முன்னாள் விமானப் படை வீரா், பிலிப் மான்ஷாஸை மடக்கிப் பிடித்தாா். மசூதி தாக்குதலுக்கு முன்னதாக, சீனா…
-
- 1 reply
- 567 views
-
-
வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்! ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூயாா்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜானி முகமது-பண்டே கூறியதாவது: வரும் செப்டம்பா் மாதத்தில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவா்கள் நியூயாா்க் வரும் சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.…
-
- 0 replies
- 457 views
-
-
ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா 22,000பேரை ஆட்குறைப்பு செய்கிறது! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் விமான பயணத்தின் சரிவை சமாளிக்க போராடுவதால் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக, ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) தெரிவித்துள்ளது. இதற்மைய நிறுவனத்தில் பணிபுரியும் 22,000பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு லுஃப்தான்சா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதமானோர் ஜேர்மனியில் உள்ளவர்கள் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நெருக்கடிக்குப் பிறகு சுமார் 100இற்கும் குறைவான விமானங்களே சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லுஃப்தான்சா குழுமத்தில் முடிந்தவரை பல வேலைகளைப் பாதுகாக்க வழி வகுப்பதே இதன் நோக்கம் என நிறு…
-
- 1 reply
- 464 views
-
-
ஸ்பெயினில் முடக்க நிலை விதியை மீறிய பெல்ஜிய இளவரசருக்கு 10,400 யூரோக்கள் அபராதம்! ஸ்பெயினில் முடக்க நிலையின்போது விருந்தில் கலந்து கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெல்ஜிய இளவரசருக்கு 10,400 யூரோக்கள் (11,800 அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வந்த பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை கடைபிடிக்க தவறியதற்காக இளவரசர் ஜோச்சிமிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அபராதம் செலுத்த இளவரசர் ஜோச்சிமிற்கு 15 நாட்கள் உள்ளன. இந்த வழக்கில் அபராதத் தொகை பாதியாகக் குறைக்கப்படும். கடந்த மே மாதம் 26ஆம் திகதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற 28 வயதான இளவரசர் ஜோச்சிம், இரண்டு நாட்களுக்குப் பிறக…
-
- 0 replies
- 388 views
-
-
பிரிஸ்டலில் நிறுவப்பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது! தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர். அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள், கயிற்றால் கட்டி, அதைச் சுற்றியுள்ள கூட்டத்தினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கவிழ்த்தனர். 1636இல் பிறந்த கோல்ஸ்டன், பிரிஸ்டலில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். ஜான் காசிடி வடிவமைத்த கோல்ஸ்டனின் சிலை, 1895ஆம் ஆண்டில் பிரிஸ்டலின் மையத்தில் அமைக்கப்பட்டது. சமீப…
-
- 1 reply
- 447 views
-
-
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தோற்றம் பெற்றது. தற்போது இந்த வைரஸ் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று குறித்து தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தது. எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்…
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு! அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையால், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சிலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. வர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கவிழ்க்கப்பட்டது. இதேபோன்று மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்தோபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது. மினசோட்டாவில் உள்ள இத்தாலிய-அமெரிக்கர்கள் இந்த வெண்கலச் சிலையை பரிசாக அளித்தனர். இந்த சிலையை வடிவமைத்தவர் கார்லோ பிரியோஷி என்ற சிற…
-
- 0 replies
- 240 views
-
-
முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதிக்கு அபராதம்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் திகதி முடக்கநிலை விதிகளை மீறி, மத்திய நகரமான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றதற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம், ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காபி அருந்திய புகைப்படத்தை வெளியிட்டது. இதில், ஜனாதிபதியும் முகக்கவசம் இன்றி இருந்தார். இதில் ஜனாதிபதித் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக், ஜனாதிபதி அலுவலகத்தின் முதல் துணைத் தலைவர…
-
- 0 replies
- 256 views
-
-
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது! by : Anojkiyan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து இரண்டு ஆயிரத்து 436பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் 8,779பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 174பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,532ஆக உள்ளது. …
-
- 0 replies
- 516 views
-
-
அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்பு அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,12,924 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நியூயார்க் தொடர்ந்து கரோனாவின் மையமாக இருந்து வருகிறது. நியூயார்க்கில் இதுவரை 3,80,156 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,542 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று ஜூன் …
-
- 0 replies
- 312 views
-
-
கொலம்பஸ் சிலையை சாய்த்து வீழ்த்திய பூர்வக்குடி அமெரிக்க போராட்டக்காரர்கள்: இவரால்தான் தங்கள் மூதாதையர்கள் அழிந்தனர் என ஆத்திரம் வெள்ளை குடியேற்றவாதிகளினால் அழித்தொழிக்கப்பட்ட பூர்வக்குடி அமெரிக்கர்கள் எப்போதுமே பெரிய கண்டுபிடிப்பாளரான கொலம்பஸை மரியாதைக்குரியவராக ஏற்றுக் கொண்டதில்லை. இவரது பயணக் கண்டுப்பிடிப்புகளினால்தான் அமெரிக்க நாடுகள் காலனியாதிக்கக் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தங்கள் மூதாதையர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இத்தாலியரான கொலம்பஸின் கடல்பயணங்களை ஆதரித்து நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்தது ஸ்பானிய முடியாட்சி. கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் கால்பதித்த முதல் ஐரோப்பிய…
-
- 0 replies
- 417 views
-
-
கொரோனா பரவல் சமயத்தில் பாலியல் உறவின் போது முககவசம் அணிவது பாதுகாப்பானது - வழிகாட்டுதல்கள் நியூயார்க் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள உதவும் வகையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நோயின் மாறிவரும் புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில் அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. பாலியல் மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்றும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. கொரோனாவில் இருந்து ஆண்கள் மீண்ட பிறகும், மலம் மற்றும் ஆண்கள் விந்தணுக்களில் கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் பாலியல் ரீதியாக பர…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஆகஸ்ட் 2019-லேயே சீனாவின் வூஹானில் கரோனா பரவியுள்ளது: செயற்கைக் கோள் ஆதாரத்துடன் அமெரிக்க ஆய்வில் தகவல் சீனாவின் வூஹான் நகரின் மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடம் பற்றிய செயற்கைக் கோள் படங்கள், இணையதளத்தில் தேடல் எந்திரத்தில் தேடப்பட்ட ட்ரெண்டுகளைப் பார்க்கும் போது கரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் ஆகஸ்ட் மாதமே பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய புதிய ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது. வூஹானில் உள்ள 5 மருத்துவமனைகளின் வாகன நிறுத்திமிடங்களில் அதற்கு முந்தைய ஆண்டு ஆகஸ்டை ஒப்பிடும்போது 2019 ஆகஸ்ட்டில் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத…
-
- 0 replies
- 390 views
-
-
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: லடாக் எல்லையில் வாழும் மக்களின் நிலை என்ன? கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக ராணுவப் பதற்றம் நிலவி வந்தப் பகுதியில் உள்ள பல நிலைகளில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை இந்தவாரம் தொடங்கவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்தப் பதற்றத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ, பிரதேசக் கட்டுப்பாடு, எல்லை சார்ந்த பிரச்சனைகள் ஒருபுறம் முன்னெழுந்தாலும், மறுபுறம் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழும் மக்கள் வாழ…
-
- 0 replies
- 581 views
-
-
1986 ல் சுவீடன் முன்னாள் பிரதமர் கொலை – குற்றவாளி கண்டறியப்பட்டார் by : Jeyachandran Vithushan 1986 ஆம் ஆண்டில் சுவீடன் முன்னாள் பிரதமர் ஓலோஃப் பா(ல்)மேக் கொன்றது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று ஆனால் சந்தேக நபர் இறந்துவிட்டார் என்றும் ஸ்வீடிஷ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். அவர்கள் சந்தேக நபரை ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் என அடையாளம் கண்டுகொண்டபோதும் “ஸ்காண்டியா மேன்” என்றும் அழைக்கப்படும் குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் சுவீடன் முன்னாள் பிரதமர்ஓலோஃப் பா(ல்)மே மரணம் தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதாக தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டர் பீட்டர்சன் கூறினார். …
-
- 0 replies
- 547 views
-
-
50 ஆண்டுகள் இல்லாத உணவு நெருக்கடியில் உலகம் – ஐ.நா எச்சரிக்கை கொரோனா தொற்றால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான உணவு நெருக்கடியின் விளிம்பில் உலகம் நிற்பதாகவும், பேரழிவை தவிர்க்க அரசுகள் விரைவாக செயல்பட வேண்டுமென ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் விழும் அபாயம் உள்ளது. ஆனால் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். ஏனெனில் குழந்தை பருவத்தில் மோசமான ஊட்டச்சத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, உலகெங்கிலும் உள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தை ஐந்து …
-
- 0 replies
- 476 views
-
-
சுலைமானி கொலை : தகவல்களை வழங்கியவருக்கு மரண தண்டனை - ஈரான் அறவிப்பு சுலைமானி கொலைச் சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது. ஈரான் நாட்டின் குர்து படை கொமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை…
-
- 0 replies
- 391 views
-
-
வடகொரியா எடுத்துள்ள மற்றுமொரு முடிவு தென் கொரியாவுடனான உள்ள அனைத்து தகவல் தொலைத்தொடர்புகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் தென் கொரிய எல்லையில் இருந்து வடகொரியாவை தாக்கியும், அவமதித்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. இதனால் வடகொரியா அனைத்து தொலைத்தொடர்புகளையும் துண்டிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான அனைத்து ஹாட்லைன் சேவைகளையும் துண்டிக்கவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமாக கே.சி.என்.ஏ. செய்திவெளியிட்டுள்ளது. தென் கொரி…
-
- 0 replies
- 412 views
-
-
ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி இந்தியாவுடனான எல்லை பிரசசினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எத…
-
- 7 replies
- 1.2k views
-
-
பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்கள்: பிரதமர் ஜஸ்டின் யோசனை இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார். நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் மட்டுமல்ல கனடா, ந…
-
- 0 replies
- 282 views
-
-
கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த மாதம், மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார். இதனிடையே, ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நேருக்கு நேர் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குவோம் என கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் ம…
-
- 0 replies
- 220 views
-
-
உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம் - சீன தகவல்! உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், பாதுகாப்பு, செயல்திறன், கிடைக்கும் நிலை ஆகியவற்றை கரு…
-
- 0 replies
- 396 views
-
-
கொரோனா தொற்று இல்லாத நாடானது நியூஸிலாந்து! நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால், அந்த தொற்றை ஒழித்துவிட்ட நாடாக நியூஸிலாந்து உருவாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 50 இலட்சம் பேர் வசிக்கும் நியூஸிலாந்தில், கடந்த பெப்ரவரி இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில், சுமார் 1500 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 17 நாள்களில் 40,000 பேருக்கு கொரோனா பரிசோதன…
-
- 0 replies
- 375 views
-
-
சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்க ஐரோப்பிய எம்பிக்கள்.! என்ன சொல்கிறது சீனா.? கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே, சீனா அதிக அளவில் லைம் லைட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. சீனாவால் தான், உலகமே, லாக் டவுன் போன்ற பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது என ட்ரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும் சீனாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சீனா இதற்கு எல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. எல்லா குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களையும், இடது கையால் ஒதுக்கிவிட்டு, அடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அமைப்பு ஆனால் சர்வதேச நாடுகளோ, சீனாவை தன் போக்கில் விடுவதற்கும் தயாராக இல்லை. சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சீனாவில் நடக்கும…
-
- 0 replies
- 359 views
-
-
அறிகுறியற்ற மக்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது "மிகவும் அரிதானது" - உலக சுகாதார அமைப்பு ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் டாக்டர் மைக் ரியான் கூறியதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடும் .இரண்டாவது அலையை தடுக்க இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும்." குவாதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தொற்றுநோய்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அவை சிக்கலான தொற்றுநோய்களாக உள்ளன. பிரேசில் இப்போது தொற்றுநோய்களின் மையபகுதிகளில் ஒன்றாகும், உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ளன அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. கடந்த வார…
-
- 0 replies
- 326 views
-