Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனா அச்சுறுத்தல் – எல்லைகளை மூடியது ஐரோப்பிய ஒன்றியம்! ஐரோப்பிய ஒன்றியமானது அதன் எல்லைகளை 30 நாட்களுக்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைப்பிலுள்ள நாடுகளின் பிரஜைகளைத் தவிர வௌிநபர்கள் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வருவதைத் தடைசெய்யும் எதிர்பாராத நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், ஐஸ்லாந்து, லெற்றென்ஸ்ரைன், நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பிரஜைகளைப் பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகியவற்றில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையிலும், பிரான்ஸ் இறுக்கமான கட்டுப்பாடுகளை வித…

  2. கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல் Getty Images கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்த போதுமான படுக்…

    • 1 reply
    • 976 views
  3. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்: இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வை…

    • 0 replies
    • 493 views
  4. 2036ஆம் ஆண்டு வரையில் புடின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை! by : Anojkiyan ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை, மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற சட்டமூலத்துக்கு, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரையில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், இந்த சட்டம் தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடு…

  5. இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றா? பிரதமர் அலுவலகம் விளக்கம்! by : Anojkiyan இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாக…

    • 0 replies
    • 288 views
  6. நெருப்புடன் விளையாட வேண்டாம்! கொரோனா தொடர்பாக அலட்சியமாக இருக்கும் நாடுகளுக்கு WHO எச்சரிக்கை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் (கொவிட் 19) தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த…

  7. கொரோனா வைரஸ் எதிரொலி : ஐரோப்பிய நாடுகளுடனான எல்லையை மூடுகிறது ஜேர்மனி! கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகின்ற நிலையில், பிரான்ஸ், சுவிற்ஸெர்லாந்து, ஒஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட ஜேர்மனி, திட்டமிட்டுள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) காலை எட்டு மணிக்கு எல்லை மூடப்படுமென, ஜேர்மன் உட்துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடுகளுக்கு இடையில் பொருட்கள் பரிமாறப்படும் எனவும், பயணிகள் இன்னும் எல்லைகளைக் கடக்கக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இது எல்லைப் பகுதிகளில் சில விநியோகச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், வெளிநாட்டினரின் வருகையைத் தடுப்பதற்காகவும் இந்த எல்லை மூடப்படுவதாகக் கூறப்படுகின…

  8. ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் 21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஸ்பானிஷ் பத்திரிகை மாலகா ஹோய் (Malaga Hoy) செய்தியின்படி கார்சியா சுவாசிக்கச் சிரமப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியா இரண்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது. அத்துடன் அவருக்கு லூகேமியா இருப்பதாகவு…

  9. உலகை மிரள வைக்கும் கொரோனா – 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரைக் காவுகொண்டது உலகை மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக 182,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 79,881 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 349 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் 27 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் ஈரானில் 14,991 பேர் கொரோனாவினால் பாதிக்கப்ப…

  10. 20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அறிகுறி, பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் தெரியும் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறாயிரம் உயிர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 ந…

  11. கொரோனா வைரஸ் எதிரொலி: இரண்டு வாரங்களுக்கு மலேசியா முடக்கம்! கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து, நாடு தழுவிய இயக்க கட்டுப்பாட்டு உத்தரவை மலேசியா பிறப்பித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில், இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வகையில், பிரதமர் முஹைதீன் யாசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்தடை குறித்து முஹைதீன் கூறுகையில், ‘இந்த இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கிற்கு எப்போதும் இணங்குமாறு அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எங்கள் குடும்பம், நமது சமூகம் மற்றும் நம் நாடு குறித்து அக்கறை கொண்ட குடிமக்களாக நாம் செயல்படுத்த வேண்டியது நமது பொதுவான பொறுப்பு ‘என கூறினார். இந்த உத்தரவில் அனைத்து மத, விளையாட்டு, சமூக மற்றும…

  12. கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் புதிய உச்சத்தை தொட்ட மரணங்கள், மூடப்படும் எல்லைகள் Corona Global Latest Updates Getty Images ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை,. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. …

    • 1 reply
    • 569 views
  13. ஐரோப்பா தற்போது கொரோனா தொற்று நோயின் மையமாக உள்ளது -உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் என்னும் இந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸினால் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் தெரிவித்துள்ளார்.மேலும் ஐரோப்பாவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் 17,660 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,266 ஆக அதிகரித்துள்ளது.பிரான்சில் 2,876 பேரும் ஜேர்மனியில் 3,481 பேரும் பிரித்தானியாவில் 798 பேரும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார். உயி…

    • 2 replies
    • 397 views
  14. பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல இடங்களைச் சமீபத்தில் பறிகொடுத்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், அந்த இயக்கத்தினர் இன்னும் வேரூன்றி உள்ளனர். இந்நிலையில், ஒரு செய்தி நிறுவனம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் சமீபத்திய செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது: 169 people are talking about this எந்த ஒரு நோயும் தானாக மண்ணில் வந்துவிடாது. கடவுள் யாரை தண்டிக்க விரும்புகிறாரோ அவர்களையே நோய் தாக்கும். நம்பிக்கை வைக்கு…

    • 0 replies
    • 628 views
  15. கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இத்தாலி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு தேசிய கீதத்தையும் ஏனைய பாடல்களையும் பாடி தங்கள் மனோநிலையை உறுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமை தங்கள் பல்கனிகளில் நின்றவாறு இத்தாலிய மக்கள் பாடல்களை பாடியுள்ளனர். வீடுகளிற்குள் முடங்கியுள்ள மக்கள் தங்கள்மனோநிலைக்கு மறுபடி உயிரூட்டுவதற்காக தங்கள் வீடுகளில் உள்ள இசைக்கருவிகளை எடுத்து மாடிகளில் நின்று இசைத்துள்ளனர். கிட்டார் போன்ற இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு மக்கள் தங்கள் பல்கனிகளில் நின்று பாடல்களை பாடியுள்ளனர். இத்தாலியில் தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் மனோநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நேப்பிளெசில் விய…

    • 2 replies
    • 367 views
  16. கொரோனா வைரஸ் - 3 நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் பலி ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியான…

    • 0 replies
    • 355 views
  17. ஈரானில் இருந்து மேலும் 53 இந்தியர்கள் மீட்பு! by : Krushnamoorthy Dushanthini ஈரானில் இருந்து 4ஆவது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து 3-வது கட்டமாக கடந்த சனிக்கிழமை 230 இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) மேலும் 53 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள இந்திய இராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

    • 0 replies
    • 331 views
  18. கடுமையான அவசரகால நடவடிக்கைகளை அறிவித்தது பிரான்ஸ்! ஐரோப்பாவில் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, கொரோனா வைரஸிற்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அவசரகால நடவடிக்கைகளை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பின்பற்றியுள்ளன. அதன் பிரகாரம் ஸ்பெயினில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது மற்றும் அவசர வேலைகளை தவிர, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இதுவரை 193 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்றும் 6,250 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 91 பேர் இறந்துள்ள நிலையில், கஃபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பெரும்பாலான…

  19. ஆறாயிரம் உயிர்களை காவுகொண்ட கொரோனா: உலகநாடுகள் அதிர்ச்சி! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,400ஆக அதிகரித்துள்ளது. ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டாலும், உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கையினை கண்காணித்து வருகிறது. அத்துடன், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 153,000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 65இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில்…

  20. பிரிட்டனில் கொரோனவைரஸ் அடுத்த வசந்தகாலம் வரை நீடிக்கும் எனவும் 7.9 மில்லியன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அமைப்பொன்று எச்சரித்துள்ளது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிவுறுத்தல்கள் அடங்கிய ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட ஆவணத்தில் அடுத்த ஒருவருட காலத்திற்கு வைரசிற்கு எதிராக போராடவேண்டியிருக்கும் என அதிகாரிகள் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பிரிட்டனில் 80 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே சுகாதார சேவை அதிகாரிகள் செயற்படுவதும் குறிப்பிட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்த…

  21. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள, தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். அதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின. இந்நிலையில், 'வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும்' என, வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகனில் உள்ள போப் நிர்வா…

    • 0 replies
    • 291 views
  22. சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவிலும் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அமைதியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டங்கள் அல்-அஸாத் அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்டன.இதையடுத்து, அந்தப் போராட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தன. அதில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக சில நாடுகளும், போராளிகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் களத்தில் இறங்கியதால் இடைநிற்றலின்றி போர் தொடர்ந்தது. இதற்கு நடுவே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தன் பங்கிற்கு போர் தொடுக்க நாசமாகிப் போனது அந்த நாகரிகத் தொட்டில். இந்நிலையில்தான் சிரியாவில் நடந்து வரும் போரினால் 3 லட்சத்து 84…

    • 0 replies
    • 207 views
  23. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி: 65,541பேர் குணமடைந்துள்ளதாக தகவல்! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அங்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவருகின்றது. இந்தநிலையில், சீனாவில் புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு வீதமும் கணிசமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்…

    • 1 reply
    • 505 views
  24. நாட்டில் உள்ள எல்லா மக்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று செக் குடியரசின் பிரதமர் ஆன்ட்ரெஜ் பாபிஸ் தெரிவித்ததாக அந்நாட்டின் சிடிகே செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், நேற்றில் இருந்து புதிதாக 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் முன்னதாக செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள இருப்பதாக பிரிட்டன் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். பிரான்ஸ் மக்களில் பாதிப்பேருக்கு இந்த வைரஸ் தொற்றும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் ழீன்-மைக்கேல் பிளான்கர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல்…

    • 0 replies
    • 329 views
  25. பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொவிட்19 வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு திட்டமிடலின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் நான்கு மாதங்கள் கடுமையான தனிமையில் இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தொற்றுநோய் மோசமடைந்துவிட்டதால், பிரித்தானியா மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 93 வயதான ராணி தனது பாதுகா…

    • 0 replies
    • 765 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.