உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றிய கொரோனா வைரஸ் தொடர்பான வெகுஜன பிரார்த்தனை நிகழ்வானது நேற்றைய தினம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷின் ராய்பூரில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வின்போது சுமார் 10,000 முஸ்லிம்கள் வரை கலந்து கொண்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் டோட்டா மியா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இந்த பிரார்த்தனை நிகழ்வில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என பி.பி.சி. செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் வெகுஜன கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதேபோன்று பங்களாதேஷில் பாடசாலைகள் என்பவை ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையி…
-
- 0 replies
- 468 views
-
-
கொரோனா வைரஸ் இந்த ரத்தவகை கொண்டவர்களை எளிதில் தாக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கோப்பு படம் வுகான்: சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்கா புதிய வியூகம்! அமெரிக்காவில் கொரோனா வரைஸ் பரவிவரும் நிலையில் மக்களின் மருத்துவப் பரிசோதனைகளை இராணுவக் கப்பல்களில் நடத்தவுள்ளது. அந்தவகையில், இரு பெரும் இராணுவக் கப்பல்களை அமெரிக்கா மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது. USNS comfort மற்றும் USNS mercy ஆகிய இரண்டு கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் இந்த இரண்டு கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். நியூயோர்க், வோஷிங்ரன் ஆகிய இருபெரும் நகரங்களுக்கும் இந்த கப்பல்களின் மருத்துவ சேவை தேவைப்படலாம் என்பதோடு ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் மருத்துவமனை…
-
- 0 replies
- 341 views
-
-
கொரோனா தொற்றுக்கு 60 நாட்களில் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது மிகப் பெரும் சாதனை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், கொரோனாவை முன்னறிவிப்பில்லாத எதிரி என்றும் உலகத்தினர் அனைவருக்கும் பொதுவான எதிரி என்றும் வர்ணித்தார். கொரோனா பாதிப்புத் தொடங்கி 60 நாட்களுக்குள் அதற்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது நம்பமுடியாத மிகப் பெரும் சாதனை என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட ஆராய்ச்சியாளர்களைத் தாங்கள் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கான எதிர் போட்டியில் உலகம் இறுதியில் வெற்றி பெறும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.polimer…
-
- 1 reply
- 516 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2978 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலை தவிர்க்க முகமூடி அணிந்துள்ள ஊழியர்கள் ரோம்: சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகி விட்டனர். இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அத…
-
- 3 replies
- 552 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளராக, அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தொடர்ந்து முன்னேறி வருகிறார். அதனால், இவ்விருவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.1,330 பேர் ஆதரவுஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதற்கான கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும், 'காகஸ் மற்றும் பிரைமரி' தேர்தல்கள் நடந்து வருகின்றன. இதன்படி, ஒவ்வொரு மாகாணத்திலும், கட்சி பிரமுகர்கள் ஓட்டளித்து, வேட்பாளரை தேர்வு செய்வர். குடியரசு கட்சியில், மொத்தமுள்ள, 2,550 பிரமுகர்களில், 1,276 பேரின் ஆதரவு பெறுபவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில், தன் சொந…
-
- 0 replies
- 315 views
-
-
இது கொரோனா வைரஸ் அல்ல ‘சீன வைரஸ்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு! உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸை (கோவிட்-19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘சீன வைரஸ்’ என விபரத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டி வரும் நிலையில், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விமர்சகர்கள் இது இனவெறித் தாக்குதல் என்றும் ஆசிய- அமெரிக்க சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளை அச்…
-
- 2 replies
- 567 views
-
-
உலக மக்களை தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பிரித்தானியாவில் மட்டும் ஒரே நாளில் 33 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 104 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 676 பேர் இலக்காகியுள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,626 என அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதே முடிவை பிரித்தானியாவும் மெற்கொள்ளுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே வே…
-
- 0 replies
- 555 views
-
-
ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா நீடிக்கும் - அதிர்ச்சி தகவல்! சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்காவில் கொரோனாவ…
-
- 0 replies
- 391 views
-
-
கொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு? | Italy not to treat elderly persons affected by Corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online Web Team Published : 16,Mar 2020 10:42 AM கொரோனா பாதித்த 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இத்தாலி அரசு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இடப…
-
- 0 replies
- 499 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேத்தில் பரவிவருகின்ற நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஹாலந்தில் உள்ள 10 ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக குறித்த தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்தனர். அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். சர்வதேச அளவில் அது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்தால் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆய்வு குழுவினர் கொரோனா வைரஸின் முதல் 6 பிரிவுக்…
-
- 0 replies
- 528 views
-
-
ஈரானில் 85 ஆயிரம் கைதிகள் விடுதலை – காரணம் வெளியானது! கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ரானில் 85 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளவர்களில் 50 சத வீதமானோர் கண்காணிக்கப்பட வேண்டிய கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையினை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே குறித்த தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, ஈரானில் இதுவரை 14,991 பேர் கொரோனாவினால்பாதிக்கப்பட்டுள்ளதுடன் 853 பேர் உயிரிழந்துள்ளனர். http://athavannews.com/ஈரானில்-85-ஆயிரம்-கைதிகள்-வ/
-
- 0 replies
- 334 views
-
-
ஈராக்கிலிருந்து வெளியேறும் அமெரிக்கப்படையினர்! ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Al-Qaim இராணுவத்தளம் உள்ளிட்ட 3 தளங்களிலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவர்கள் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் 8 தளங்களின் 3 தளங்களிலிருந்து வௌியேறும் இந்த நடவடிக்கையானது, அந்தநாட்டிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கும் சமிக்ஞையாக பார்க்கப்படுகின்றது. ஈரான் மற்றும் ஈராக்கிய அரசாங்கத்துடனான பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து வெளியேறும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவ…
-
- 0 replies
- 242 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் – எல்லைகளை மூடியது ஐரோப்பிய ஒன்றியம்! ஐரோப்பிய ஒன்றியமானது அதன் எல்லைகளை 30 நாட்களுக்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைப்பிலுள்ள நாடுகளின் பிரஜைகளைத் தவிர வௌிநபர்கள் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வருவதைத் தடைசெய்யும் எதிர்பாராத நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், ஐஸ்லாந்து, லெற்றென்ஸ்ரைன், நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பிரஜைகளைப் பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகியவற்றில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையிலும், பிரான்ஸ் இறுக்கமான கட்டுப்பாடுகளை வித…
-
- 0 replies
- 231 views
-
-
கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல் Getty Images கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்த போதுமான படுக்…
-
- 1 reply
- 985 views
-
-
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்: இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வை…
-
- 0 replies
- 497 views
-
-
2036ஆம் ஆண்டு வரையில் புடின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை! by : Anojkiyan ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை, மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற சட்டமூலத்துக்கு, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரையில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், இந்த சட்டம் தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடு…
-
- 1 reply
- 540 views
-
-
இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றா? பிரதமர் அலுவலகம் விளக்கம்! by : Anojkiyan இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாக…
-
- 0 replies
- 290 views
-
-
நெருப்புடன் விளையாட வேண்டாம்! கொரோனா தொடர்பாக அலட்சியமாக இருக்கும் நாடுகளுக்கு WHO எச்சரிக்கை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் (கொவிட் 19) தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த…
-
- 0 replies
- 277 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலி : ஐரோப்பிய நாடுகளுடனான எல்லையை மூடுகிறது ஜேர்மனி! கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகின்ற நிலையில், பிரான்ஸ், சுவிற்ஸெர்லாந்து, ஒஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட ஜேர்மனி, திட்டமிட்டுள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) காலை எட்டு மணிக்கு எல்லை மூடப்படுமென, ஜேர்மன் உட்துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடுகளுக்கு இடையில் பொருட்கள் பரிமாறப்படும் எனவும், பயணிகள் இன்னும் எல்லைகளைக் கடக்கக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இது எல்லைப் பகுதிகளில் சில விநியோகச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், வெளிநாட்டினரின் வருகையைத் தடுப்பதற்காகவும் இந்த எல்லை மூடப்படுவதாகக் கூறப்படுகின…
-
- 0 replies
- 361 views
-
-
ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் 21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஸ்பானிஷ் பத்திரிகை மாலகா ஹோய் (Malaga Hoy) செய்தியின்படி கார்சியா சுவாசிக்கச் சிரமப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியா இரண்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது. அத்துடன் அவருக்கு லூகேமியா இருப்பதாகவு…
-
- 0 replies
- 334 views
-
-
உலகை மிரள வைக்கும் கொரோனா – 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரைக் காவுகொண்டது உலகை மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக 182,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 79,881 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 349 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் 27 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் ஈரானில் 14,991 பேர் கொரோனாவினால் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 175 views
-
-
20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அறிகுறி, பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் தெரியும் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறாயிரம் உயிர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 ந…
-
- 0 replies
- 216 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலி: இரண்டு வாரங்களுக்கு மலேசியா முடக்கம்! கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து, நாடு தழுவிய இயக்க கட்டுப்பாட்டு உத்தரவை மலேசியா பிறப்பித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில், இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வகையில், பிரதமர் முஹைதீன் யாசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்தடை குறித்து முஹைதீன் கூறுகையில், ‘இந்த இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கிற்கு எப்போதும் இணங்குமாறு அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எங்கள் குடும்பம், நமது சமூகம் மற்றும் நம் நாடு குறித்து அக்கறை கொண்ட குடிமக்களாக நாம் செயல்படுத்த வேண்டியது நமது பொதுவான பொறுப்பு ‘என கூறினார். இந்த உத்தரவில் அனைத்து மத, விளையாட்டு, சமூக மற்றும…
-
- 0 replies
- 237 views
-
-
கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் புதிய உச்சத்தை தொட்ட மரணங்கள், மூடப்படும் எல்லைகள் Corona Global Latest Updates Getty Images ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை,. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. …
-
- 1 reply
- 577 views
-