Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் திங்கள் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவ…

  2. இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி மற்றும் பிற செய்திகள் படத்தின் காப்புரிமை Getty Images இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த புதன்கிழமை அன்று இராக்கில் உள்ள ராணுவத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு இங…

    • 0 replies
    • 350 views
  3. நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன கொரோனா வைரஸ் காரணமாக நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன. அங்கு பாலர் பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் பதினைந்து நாட்கள் மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஏர்னா சூல்பேர் (Erna Solberg) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உலகநாடுகள் ஒரு கடினமான சூழலில் உள்ளநிலையில் நாம் இப்போது எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் வைரஸைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிகையலங்காரம், தோல் பராமர…

  4. கொரோனா அச்சம் – இன்று முதல் டென்மார்க்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். டென்மார்க்கில் இதுவரையில் 514 பேர் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். தனியார் துறையைப் பொறுத்தவரை எத்தனை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க முடியுமோ அத்தனை ஊழியர்களுக்கும் அந்த வாய்ப்பை …

  5. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் – பிரித்தானிய பிரதமர்! பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அரசாங்க முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருந்தார். இந்தநிலையிலேயே இதன் காரணமாக பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் இதுவரையில் 596 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேர…

  6. அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை! அமெரிக்காவில் 70 இருந்து 150 மில்லியன் பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் (டீசயைn இதுகுறித்த தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார். கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்ட எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46 சதவீதமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மோசமான சூழலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சில வழிமுறைகளையும் அவர் நா…

  7. ஈரானில் பாரிய மனித புதைகுழி – கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்! ஈரானில் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோம் நகரில் பாரிய மனித புதைகுழிகளை காண்பிக்கும் செய்மதி படங்கள் வெளயாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நியுயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினால் குறித்த செய்திமதிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரானின் புனித நகரத்தில் உள்ள மயானமொன்றில் தோண்டப்பட்ட நீளமான புதைகுழிகளின் செய்மதி படங்களே வெளியாகியுள்ளன. மக்சார் என்ற தொழில்நுட்ப நிறுவனம் மார்ச் முதலாம் திகதி இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளது. செய்மதிப் புகைப்படங்கள் ஈரானில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகயிருக்கலாம் என்ற சந்தேகங்கள…

  8. சீனாவுக்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian )வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுக்கூடத்தில் 60 வயதான பெண்ணுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அந்தப் பெண் வூகானில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார…

    • 1 reply
    • 488 views
  9. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார் பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த  முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும்  பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார…

    • 3 replies
    • 1.2k views
  10. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்…

    • 2 replies
    • 991 views
  11. ந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதயுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் படமும் எடுத்துக்கொண்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டஅந்த  அதிகாரி  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காணப்படும் படத்தை ரொய்ட்டர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட படத்தில் அந்த நபர் டிரம்பிற்கு அருகில் தொப்பியுடன் காணப்படுகின்றார். https://www.virakesari.lk/article/77687

    • 2 replies
    • 673 views
  12. கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. அந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பேருந்து நிலையம் , ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக சிறியரக வாஷ் பேசின்களை வைத்திருக்கிறது. SEEN IN KIGALI: To prevent the risk of #Coronavirus outbreak, passengers at the Kigali Bus Park have to wash their hands before getting onto buses.#Rwanda has recorded NO case of the epidemic but the country has stepped up vigil…

    • 0 replies
    • 484 views
  13. வெளிநாட்டுப் படைகளைக் கொண்டிருக்கும் ஈராக்கிய இராணுவத் தளமொன்றின் மீதான றொக்கெட் தாக்குதலில், ஐக்கிய அமெரிக்கப் படைவீரர்கள் இருவரும், பிரித்தானியப் படைவீரரொருவரும் நேற்றுக் கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈராக்கின் அயல்நாடான சிரியாவில் ஈரானுடன் இணைந்த ஹஷெட் அல்-ஷாபி ஈராக்கியப் போராளிகளை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி விமானத் தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்கள் இலக்கு வைத்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 18 போராளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போராடும் உள்ளூர்ப் படைகளுக்கு உதவும் ஐக்கிய அமெரிக்கா …

    • 0 replies
    • 296 views
  14. 70 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை! by : Benitlas ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ் பரவுவம் வேகத்தை குறைப்பது குறித்தே கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், காலத்துடன் போட்டிபோட்டு வெல்வதை பற்றியது இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் மூன்றாவது நபர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக …

    • 0 replies
    • 363 views
  15. பிரபல ஹொலிவூட் நடிகர் டொம் ஹெங்க்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளானார் பிரபல ஹொலிவூட் நடிகர் டொம் ஹெங்க்ஸ் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் 63 வயதுடைய டொம் ஹெங்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில், ``வணக்கம் நண்பர்களே... ரீட்டாவும் நானும் அவுஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். தடிமன் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருகிறது. இதனால் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் 2020 -இல், தன் வாழ்நாள் முழுக்க சினிமாவுக்காக …

    • 2 replies
    • 389 views
  16. கொரோனா வைரஸ் ஹூபேயில் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது – சீன அதிபர் கொரோனா வைரஸ் (கொவைட்-19) தோன்றிய சீனாவின் ஹூபே மாகாணத்தில், அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதன் முறையாக சென்ற அவர், கொரோனா விசேட வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். வுஹானிலும் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரப் போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளோம்’ என்றார். சீன அதிபரின் வருகைக்கு…

  17. ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான விமானப்பயணங்கள் இரத்து! ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான அனைத்து விமானப் பயணங்களும் ஒரு மாதத்திற்கு இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா செல்வோருக்கு குறித்த விதி பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 ஆயிரத்து 462 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரை அங்கு 827 …

  18. கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். ஒரு தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும். வைரஸ் குறித்த எச்சரிக்கையற்ற செயற்பாட்டினால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அவசர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவுவதன் போக்கை மாற்றுமாற…

  19. பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் கடந்த மாதம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டார். 67 வயதான ஹார்வி புதன்கிழமையன்று நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பில் கனிவான போக்கை கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ''ஆயுள் தண்டனை போலதான்'' என்று குறிப்பிட்டனர். ஆனால், இதற்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'நீண்ட காலமாக பெண்களிடம் தவ…

    • 1 reply
    • 377 views
  20. கொரோனா வைரஸ் அச்சம் காரணமான அரச குடும்ப ஆண்டு விழாவான காமன்வெல்த் நிகழ்வில் கைகுலுக்குவது தவிர்க்கப்பட்டதுடன் இளவரசர் சார்லஸ் கை கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார். திங்களன்று காமன்வெல்த் நிகழ்வில் அரச குடும்ப உறுப்பினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கூடினர். ஆனால் அவர்கள் பிரமுகர்களை வாழ்த்தும்போது வழக்கமான ஹேண்ட்ஷேக்குகளுக்கு பதிலாக, இளவரசர் சார்லஸ் தனது கைகளை கூப்பி"வணக்கம்" தெரிவித்தார். இதனிடையே குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த மேகன் மார்க்ல், இளவரசர் ஹாரி, கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் உட்பட ஏனைய அரச குடும்ப உறுப்பினர்கள், சக பங்கேற்பாளர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்த்துள்ளனர். இந்நிலையில், 93 வயதான பிரித்தானி மகாராணி, இரண்டாம் எலிசபெத், எதிர்வரும்…

    • 0 replies
    • 305 views
  21. ரஷ்ய ஜனாதிபதியாக 2036ஆம் ஆண்டு வரையில் தான் பதயிலிருப்பதை அனுமதிக்கும் அரசமைப்பு மாற்றங்களுக்கான கதவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று திறந்துள்ளார். எனினும், அரசியல் ரீதியாக ரஷ்யா முதிர்ச்சியடைந்த பின்னர் ஜனாதிபதி பதவிக்கால எல்லைகளைத் தான் விரும்புவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார். தனது இரண்டாவது தொடர்ச்சியானதும், நான்காவதுமான பதவிக் காலம் முடிவடையும்போது அரசமைப்பின்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், தனது பதவிக்காலத்தை உத்தியோகபூர்வமாக பூச்சியமாக்கும் முன்மொழியப்பட்ட அரசமைப்பின் மாற்றத்துக்கு நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் உரையாற்றும்போது தனது ஆதரவ…

  22. 1,500 தலிபான் கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி உத்தரவு! ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால நடைபெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் 1,500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் அனைத்து தலிபான் கைதிகளும் "போர்க்களத்திற்கு திரும்பக்கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை" வழங்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி தெரிவித்துள்ளார். கைதிகள் எவ்வாறு சட்ட ரீதியான முறையில் விடுவிக்கப்படுவார்கள் என்பது …

  23. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ள ஜோ பிடன், ட்ரம்பை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்ணி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து களம் காணும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு பலமுனை போட்டி நிலவியது. இதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவே அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் பெருவாரியான இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இறுதியாக மிச்சிகன் மாநில தேர்தல் முடிவிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். இதையடுத்து பிலதெல்பியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்…

    • 1 reply
    • 257 views
  24. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300ஐ நெருங்குகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இணையதளத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிகளைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்ப…

    • 0 replies
    • 330 views
  25. கோரத்தாண்டமாடும் கொரோனா – உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தென்கொரியாவில் 54 பேரும், பிரான்சில் 33 பேரும், ஜப்பானில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவல் குறித்த அச்சம் மக்களிடையே உச்ச நிலையை அடைந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 ஆயிரத்து 513 பேர் வைரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.