உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியை கைப்பற்றிய சிரிய அரசுப் படை! by : Anojkiyan சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பகுதியை, ரஷ்யப் படைகள் ஆதரவுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. அலெப்போ மற்றும் டமாஸ்கஸை இணைக்கும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மாரெட் அல் நுமன் பகுதியையே சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிரிய அரசுப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக சிரியாவில் பல கிராமங்களிலிருந்து தீவிரவாத படைகள் அகற்றப்பட்டுள்ளன. சிரிய மண்ணில் பயங்கரவாதம் …
-
- 0 replies
- 266 views
-
-
ட்ரம்பின்... இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சி பாலஸ்தீன அதிகாரிகளால் நிராகரிப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சியை பாலஸ்தீன அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் ஜெரூசலேம் விற்பனைக்கில்லை என தெரிவித்துள்ளார். எங்கள் அனைத்து உரிமைகளும் விற்பனைக்கு உரியவையில்லை, அந்த உரிமைகள் குறித்து பேரம்பேச முடியாது எனவும் பாலஸ்தீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை பாலஸ்தீன, அராபிய கிறிஸ்தவ முஸ்லீம் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேள…
-
- 0 replies
- 221 views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை Getty Images பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், பாலத்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை நடைபெற்ற முக்கிய தருணங்களைத் தொகுத்துள்ளோம். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித் திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். சரி... இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் என்ன பிரச்சனை? அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் உருவா…
-
- 0 replies
- 744 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளைத் தனிமைப்படுத்த அரசாங்கம் திட்டம் by : S.K.Guna சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளை, கிறிஸ்மஸ் தீவில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 1,200 மைல் தொலைவில் கிறிஸ்மஸ் தீவு உள்ளது. ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்த சீனாவின் தேசிய மகளிர் கால்பந்து அணி அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. பெப்ரவரி 5 ஆம் திகதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்பத்திரண்டு வீரர்கள் மற்றும…
-
- 0 replies
- 815 views
-
-
டுபாயிலும் கொரோனா வைரஸ் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தாய்வான் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்ச…
-
- 0 replies
- 292 views
-
-
பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=125114
-
- 0 replies
- 302 views
-
-
பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித்திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தின்படி ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக இருக்கும். பாலத்தீன சுதந்திர அரசு பாலத்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை தனது அருகில் வைத்துக் கொண்டு இந்த அமைதி திட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிவித…
-
- 0 replies
- 857 views
-
-
கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இது பரவினால் 18 மாதங்களில் உலகம் முழுவதுமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவ பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவ பரிவோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவம் எரிக் டொனர் கூறுகையில் முதற்தடவையாக சீனா புகான் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவியிருந்தமை தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுவதாகவும் இது உலகம் முழுவதும் …
-
- 20 replies
- 2.4k views
-
-
கொரோனா வைரஸினால், பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நாஞ்சாங்கில் உள்ள நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இணைப்பு வைத்தியசாலையிலிருந்து குறித்த நபர் வெளியேறியுள்ளார். 37 வயதான ஒருவரே இவ்வாறு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட நோயாளி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் குணமடைந்து வெளியேறியுள்ளார். சீனாவில் பரவியதன் மூலம் உலகத்தையே அச்சம் கொள்ள செய்திருக்கும் கொர…
-
- 0 replies
- 312 views
-
-
83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. அந்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.adaderana.lk/news.php?nid=125043
-
- 1 reply
- 721 views
-
-
பிரெக்ஸிற்றுக்கு பின்னர் விஞ்ஞானிகளுக்கு விரைவான வீசா வழங்கப்படும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கீழ் சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்குத் தேவையான வீசா நடைமுறை துரிதப்படுத்தப்படவுள்ளது. உலகளாவிய திறமை விசா என அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் மிக திறமையான மனிதர்களுக்கு பிரித்தானியாவின் கதவுகள் திறந்திருக்கும் என்பதை இந்த வீசாத் திட்டத்தின் ஊடாக வலியுறுத்த விரும்புவதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர்,…
-
- 0 replies
- 442 views
-
-
கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு! கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மருத்துவச் சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமலின் கீழ் வருகிறது குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை குடிவரவு மற்றும் குடியகழ்வுத்துறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டிருந்தார். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது, இனிமேல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சமலின்-கீழ்-வருகிறது-குட/
-
- 0 replies
- 390 views
-
-
கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு! கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக, கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரேக்க நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள இவரை அந்நாட்டு பிரதமர் க்ரியாகோஷ் மிட்சோடகிசின் ஜனாதபதி பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கதர்னியை கிரீஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உட்பட 261 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதர்னிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் கிரேக்க குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியாக, 63 வயதான கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்வரும் …
-
- 0 replies
- 490 views
-
-
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது அங்கு பல நகரங்களிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த வைரஸ் பரவும் வேகம் அசாதாரணமான வகையில் அதிகரித்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸினால் 200 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பீஜிங், ஷங்காய் மக்களும் அதில் அடங்குகின்றனர். வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, மற்றும் தென் கொரியா நாடுகளிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோருக்கு நியூமோனியா காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்படும் எ…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிரியாவில் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற முனைந்த ரஷ்யா- தடுத்து நிறுத்தியது அமெரிக்கா சிரியாவில் உள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற நினைத்த ரஷ்யப் படைகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரிய – துருக்கி எல்லையில் உள்ள மிலன் நகரில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களை அணுக முயன்றபோதே அவர்களை அமெரிக்கப் படை தடுத்து நிறுத்தியதாக பெயர் குறிப்பிடாத உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் தமது முயற்சியைக் கைவிட்டு இராணுவ நிலைகளுக்குச் சென்றதாகவும் இரு படைகளுக்கும் இடையே எந்தச் சண்டையும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவிலிருந்து பெரும்பாலான படைகள் வெளியேறி இருந்தாலும் ஐ.எஸ்…
-
- 0 replies
- 487 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் ஆரம்பம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் இடம்பெற்று வருகின்றது. தலைமை நீதிபதி ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ஜோ பிடெனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி மு…
-
- 0 replies
- 370 views
-
-
அமேசான் நிறுவனரின் போன் ஒட்டுக் கேட்பு.... சவுதி இளவரசர் மறுப்பு ! .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} உலகில் மிகப் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் செல்போனை ஹேக் செய்து ஒட்டுக் கேட்கப்பட்டதாக இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக பரவலாக செய்தி வெளியானது. இந்நிலையில் இதை சவூதி அரசு மறுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சவூதி இளவசர் முகமது பின் சல்மான் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் ஆகியோர் நட்பின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். …
-
- 0 replies
- 944 views
-
-
பொருளாதார வளர்ச்சியைப் போலவே நல்வாழ்வும் முக்கியமானது: ஸ்ரேர்ஜன் by : shiyani ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் போலவே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும் முக்கியமாக இருக்க வேண்டும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போலவே மக்களின் நல்வாழ்வையும் மூலாதாரமாகக் கேச பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக வெற்றிகரமான தேசமாக இருப்பதன் அர்த்தத்தை ஸ்கொட்லாந்து மறுவரையறை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஸ்ரேர்ஜன் மற்ற …
-
- 0 replies
- 382 views
-
-
பாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம் கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்படம் எடுப்பவர்களால் துன்புறுத்தப்படுவது குறித்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். வன்கூவர் தீவில் உள்ள ஒரு பொது பூங்கா வழியாக மேகன் உலா வருவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மகன் ஆர்ச்சியுடனும் மற்றும் தனது இரண்டு நாய்களுடன் மேகன் நடந்து செல்லும்போது அந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தம்பதியினரின் சட்டவல்லுனர்கள் இந்த விடயம் குறித்துக் கூறுகையில்; இப்படங்கள் அவர்களது அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கூறி…
-
- 1 reply
- 524 views
-
-
அணு ஆயுத பரிசோதனை முயற்சிகளை எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை – வட கொரியா! அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சிகளை, எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) வட கொரியா இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அணு ஆயுதம் தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவிருந்ததாக கூறப்படும் பேச்சுவார்த்தை நடைபெறாமை தொடர்பாகவும் வடகொரியா அமெரிக்கா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மிருகத் தனமானதும் மனிதாபிமானம் அற்றது எனவும் வட கொரியா தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணு-ஆயுத-பரிசோதனை-முயற்ச/
-
- 0 replies
- 334 views
-
-
இன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை இன்டர்போலின் முன்னாள் தலைவர் Meng Hongwei இற்கு 13 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நீதிமன்றத்தினால் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 2,90,000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். Meng Hongwei 2016ஆம் ஆண்டு இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸில் இருந்து சீனாவிற்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து ப…
-
- 0 replies
- 326 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்! ஈராக் தலைநகர் பக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில், மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை என்ற போதிலும், தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மூன்று கத்யுஷா ஏவுகணைகள் விழுந்ததை ஈராக் பொலிஸார் உறுதிப் படுத்தியுள்ளனர…
-
- 0 replies
- 403 views
-
-
லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த ஜேர்மனி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய படியாகும் – எர்டோகன்! லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த, ஜேர்மனியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ஒரு “முக்கியமான படியாக” இருக்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “பேர்லின் உச்சிமாநாட்டை ஒரு முக்கியமான படியாகவும், அரசியல் தீர்வாகவும் நாங்கள் பார்க்கிறோம்” என கூறினார். ஆனால் ஜனவரி 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் சமாதானத்திற்கான முயற்சிகளில் உள்ள முன்னேற்றத்தை குழப்பவாதிகளின் இலட்சியங்களுக்கு தியாகம் செய்யக்கூடாது” என்றும் தெரிவ…
-
- 0 replies
- 455 views
-
-
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஏமனில் 60 பேர் உயிரிழப்பு ! ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமனின் தெற் பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை தகர்ப்பதற்காக கிளரச்சியாளகர்கள் ட்ரோன்கள் (drones) மற்றும் பிளாஸ்டிக் ஏவுகணைகள் (ballistic missiles) பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாகர்களின் தாக்குதலில் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதோடு , சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் ஏமனில் இராணு முகாம் மீது நட…
-
- 1 reply
- 432 views
-