Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது! உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் தனியாள் பாதுகாப்பு ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலகில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டோக்கியோவும், இரண்டாவது இடத்தினை சிங்கப்பூரும், மூன்றாவது இடத்தினை ஒசாகாவும், நான்காவது இடத்தினை ஆம்ஸ்ரடா…

  2. பிலிப்பைன்ஸ்சில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு! பிலிப்பைன்ஸ்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று உல்லாச விடுதியொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, அதனைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது குறித்த விமானம் அங்குள்ள உல்லாச விடுதியொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்ட…

  3. Published by rajeeban on 2019-09-02 20:08:29 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர். இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் உள்…

    • 0 replies
    • 449 views
  4. ஒரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி. வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அட…

    • 3 replies
    • 936 views
  5. ஏமனில் சிறைச்சாலை மீது தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி September 2, 2019 ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்துள்ளது. ஏமனின் தாமர் நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரவு நேரத்தின் போது, ஆறு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சத்தம் கேட்டதாக உள்ளூர்மக்கள் தெரிவித்துள்ளனர் அதேவேளை ஏமன் அரசபடைக்கு ஆதரவாக செயல்படும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாங்கள் நடத்திய தாக்க…

  6. கொலம்பியா | பார்க்(FARC) விடுதலை அமைப்பு மீண்டும் போராட்டத்துக்குத் திரும்பலாம்? 2016 இலிருந்து கொலம்பியா மக்கள் அனுபவித்துவந்த அமைதி மீண்டும் கலையப்போகிறது. துப்பாக்கிச் சத்தங்களும், கூக்குரல்களும், பிணங்கள் சிதறிய வீதிகளும் இனி தினச் சம்பவங்களாகப் போகின்றன. கொலம்பியாவின் ஆட்சியினருக்கும் பார்க் விடுதலை அமைப்பிற்கும் 2016 இல் எழுதப்பட்ட போர் தவிர்ப்பு ஒப்பந்தம் விரைவில் முறிக்கப்படவிருக்கிறது. இரு தரப்புகளுக்குமிடையில் பேச்சுவார்த்தையை நடத்திவைத்த ஐவான் மார்க்கேஸ் உள்ளடங்கிய பல பார்க் (Revolutionary Armed Forces of Columbia – FARC) தலைவர்கள் தாம் திரும்பவும் ஆயுதங்களைத் தூக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தற்போதய அதிபர் ஐவன் டுகே 2016 செய்யப்பட்ட போர்நிறு…

  7. அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

  8. இத்தாலியில் எரிமலை வெடிப்பு – பரவும் புகை மண்டலம்! இத்தாலியில் எரிமலை வெடித்ததால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் நெருப்பையும் புகையையும் கக்கி வருகிறது. புவி இயற்பியல் மற்றும் எரிமலையியலுக்கான தேசிய மையம் அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதற்கமைய இந்த எரிமலை வெடிப்பால் இதுவரையில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என அந்த மையம் தெரிவித்துள்ளது. எனினும் மலையின் மீதுள்ள மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகி வருவதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. …

  9. பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் பிர­த­மரின் தீர்­மா­னத்­திற்கு கடும் எதிர்ப்பு பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு எடுத்த தீர்­மானம் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வ­தற்கு எதிர்ப்பைக் கொண்­ட­வர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அத்­துடன் பிர­த­மரின் இந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நாட­ளா­விய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் பிர­த­மரின் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்­கான திட்­டத்­திற்கு எதி­ராக சட்ட ரீ­தி­யான…

  10. ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கமைத்து வழிநடத்திய ஜனநாயக சார்பு செயற்பாட்டாளரான ஜோஷூவா வொங் கைது செய்யப்பட்டுள்ள…

  11. வாஷிங்டன்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில், வெளிநாடு, பாதுகாப்பு கொள்கைகளில் ராணுவம் ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிஆர்எஸ் எனப்படுவது நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை அமைப்பாகும். இது பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும். இந்நிலையில், பாகிஸ்தான் நிலவரம் குறித்த தனது ஆய்வறிக்கையை சிஆர்எஸ் வெளியிட்டுள்ளது. இதில், கூறப்பட்டுள்ளதாவது; பாகிஸ்தான் ராணுவமானது, நாட்டின் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. தேர்தலின்போது இம்ரானின் கட்சிக்கு ஆதரவாக ராணுவமும், நீதித்துறையும் செயல்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயகம் கடும…

    • 0 replies
    • 312 views
  12. ஆபிரிக்காவில் யானைகள் விற்பதற்கு தடை விதிப்பு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வன உயிரியல் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அழிந்துவரும் உயிரினங்களின் விற்பனையை தடுக்க ‘சி.ஐ.டி.இ.எஸ்’ என்ற சர்வதேச அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் ‘சி.ஐ.டி.இ.எஸ்’ உறுப்பு நாடுகளின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளில் 87 நாடுகள் ஆதரவாகவும், 29 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொண்டது. எனினும் பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் ஆப்பிரிக்க…

  13. ஹாங் கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த காணொளி இரண்டு பிரதேசங்களுக்கும் உள்ள வேற்றுகையின் அடிப்படை காரணங்கள் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்கின்றது

  14. அமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜு7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு!அமேசான் காட்டின் தீயை அணைக்க ரூ 160 கோடி உதவ ஜி7 நாடுகள் தயாராக இருந்த நிலையில் அவை தேவையில்லை என பிரேசில் அரசு உதறி தள்ளிவிட்டது. அமேசான் காடானது பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.இந்த காட்டில் கடந்த சில நாட்களாக தீ பிடித்து எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்க பிரேசில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அது முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் 80000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரேசில் அரசு அந்நாட்டு ராணுவத்தையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. விமானம்…

  15. பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521849 Brexit and suspending Parliament: What just happened? Parliament is to be suspended for five weeks ahead of 31 October, the day the UK is due to leave the EU. That's just nine weeks away. Politicians on both sides of the Brexit debate are calling it a coup. https://www.bbc.com/news/uk-49495757

    • 1 reply
    • 560 views
  16. முரளிதரன் காசிவிஸ்வநாதன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை? திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு ‘விம்பம்‘ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிரா…

    • 0 replies
    • 539 views
  17. மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தையைக் குறிப்பிட்டதற்காக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது. 'பறையா' என்பதே மகாதீர் பயன்படுத்திய வார்த்தை. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அவர் இழிவுபடுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது அவர் பறையர் என்று குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் மகாதீர் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு மலேசியாவி…

    • 0 replies
    • 745 views
  18. பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் – ஆனால் விரும்பம்தான் இல்லை : ட்ரம்ப் புகழாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்குத்தான் விருப்பம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் இடம்பெற்றுவரும் G7 மாநாட்டின் இரண்டு அரச தலைவர்களும் சந்தித்துக் கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திரய மோடியை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘மோடி நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்குதான் அவருக்கு விருப்பம் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார். G7 மாநாட்டின் பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜ…

  19. ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை! இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களினால் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அந்த நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைவடைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், அதிகரித்து வரும் கடல் மட்டம், மாறி வரும் பருவநிலை ஆகிய காரணங்களால் ஏற்கனவே குறித்த நகரின் பல பகுதிகள் கடலுக்குள் முழ்கியுள்ளன. இந்தநிலையி…

  20. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் ஒன்றானது, இராணுவப் பதிலளிப்பு ஒன்றை நியாயப்படுத்துகின்ற போர்ப் பிரகடனம் ஒன்று என லெபனான் ஜனாதிபதி மிஷெல் அன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், லெபனானுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜன் குபிஸிடமே நடைபெற்றது போர்ப் பிரகடனமொன்று என ஜனாதிபதி மிஷெல் அன் கூறியுள்ளார். இதேவேளை, இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் விரிவடைவதைத் தவிர்க்க தமது அரசாங்கம் விரும்புவதாக லெபனானியப் பிரதமர் சாட் ஹரீரி நேற்று தெரிவித்தபோதும், லெபனானிய இறையாண்மையின் இஸ்ரேலின் மோசமான மீறலை சர்வதேச சமூகம் கட்டாயம் நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். பெய்ரூட்டின் தென…

    • 0 replies
    • 420 views
  21. பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் தான் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தமிழர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலைய…

  22. சூடானில் பழங்குடியினரிடையே மோதல்- 37 பேர் படுகொலை… August 27, 2019 சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர் சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்த மோதல் கடந்த புதன்கிழமையில் இருந்து மேலும் அதிகரித்தது. இதன்போது போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகா…

  23. ஜி–7 மாநாட்டில் எவ்வித முன்னறிவிப்பின்றி கலந்துகொண்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி–7 நாடு­களின் உச்­சி­மா­நாடு இரண்­டாவது நாளாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிரான்ஸில் இடம்­பெற்­றது. இதன்போது எவ்வித முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார். நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பிரான்ஸின் கடற்­கரை நக­ரான பியர்­றிட்ஸில் ஆரம்­ப­மான இந்த உச்­சி­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன், பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக் ரோன், கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ரூடோ, இத்­தா­லிய பிர­தமர் கியு­ஸெப்பே கொன்ட், ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கல், ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்ஸோ அபே மற்றும் ஐரோப்­ப…

  24. ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...? ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி காய­ம­டைந்­துள்­ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்­துல்லா குர்தாஸ் என்­ப­வ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தாக சர்­வ­தேச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர் முன்னாள் ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹூசைனின் இரா­ணு­வத்தை சேர்ந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மறை­மு­க­மாக இருந்து ஐ.எஸ் அமைப்­பினை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள பக்­தாதி அவ் அமைப்பை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை அப்­துல்லா குர்­தா­ஸிடம் ஒப்­ப­டைத்­துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் ஊட­க­மான அமாக் தெரி­வித்­துள…

  25. பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் சந்தித்து பேசியிருந்தனர். இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென பொர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.