உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26844 topics in this forum
-
கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு; 200 பேர் உயிரிழப்பு 07 Feb, 2026 | 09:38 AM கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். 21 மண…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப் 07 February 2026 யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் "ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மா…
-
- 0 replies
- 93 views
-
-
அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் 'உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத' வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என்று இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், டெல் அவிவ் 6 பிப்ரவரி 2026 மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான உலகளாவிய ஊகங்களுக்கிடையே, இஸ்ரேல் தலைவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்து வருகின்றனர். இரானின் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய சில கருத்துகளைத் தவிர, தனது மிகப்பெரிய எதிரிக்கு எதிராக, தனது வல்லரசு நட்பு நாடு நடவடிக்கை எடுப்பது குறித்து இ…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில…
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி! 06 Feb, 2026 | 11:11 AM கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தபோது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ்…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
டிராகி: உலக அரங்கில் முக்கியத்துவம் பெற விரும்பினால் ஐரோப்பா வேகமாக ஒருங்கிணைக்க வேண்டும். வர்த்தகம், போட்டி மற்றும் பணவியல் கொள்கை போன்ற ஒருங்கிணைந்த திறன்களின் துறைகளில் மட்டுமே ஐரோப்பா உலகளாவிய சக்தியாக மதிக்கப்படுகிறது என்று முன்னாள் இத்தாலிய பிரதமர் கூறுகிறார். இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பா கூட்டமைப்பிலிருந்து கூட்டமைப்பிற்கு மாற வேண்டும் என்று அதிகாரம் கோருகிறது," என்று டிராகி கூறினார், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் திறன்களை ஒன்றிணைத்துள்ள களங்களில் மட்டுமே அந்த கூட்டமைப்பு உலக அரங்கில் செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதை வலியுறுத்தினார். | கெட்டி இமேஜஸ் வழியாக எலியாஸ் ரோம்/AFP பிப்ரவரி 2, 2026 பிற்பகல் 3:06 CET…
-
- 3 replies
- 197 views
-
-
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்! ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஆப்கானியர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தியுள்ளது. இது நடைமுறைச் சிக்கல்களையும், ஐநா அகதிகள் முகமையின் கவலையையும் தூண்டியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடமிருந்து வரும் அழுத்தத்தினால், பிரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம்) காபூலில் உள்ள தாலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைத் தொடங்கியுள்ளது. இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இதுவரை இரண்டு “தொழில்நுட்பப் பயணங்களை” (Technical m…
-
- 0 replies
- 146 views
-
-
அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை! பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன. இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்த…
-
- 0 replies
- 170 views
-
-
ஈரானிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கப் பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை அவசர எச்சரிக்கை Published By: Digital Desk 3 06 Feb, 2026 | 10:14 AM ஈரானில் நிலவி வரும் அதிகரித்த பாதுகாப்பு அபாயங்கள், போராட்டங்கள் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் ஈரானுக்கான மெய்நிகர் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க அரசு உதவியை நம்பாமல், தங்களுக்கென தனிப்பட்ட பாதுகாப்பான வெளியேறும் திட்டத்தை உடனடியாக தயார் செய்து, ஈரானை விட்டு வெளியேற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து துருக்கி மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஊடாக தரைவழியில்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப் 04 Feb, 2026 | 04:22 PM நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது…
-
-
- 2 replies
- 222 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை ; நீதிமன்றம் தீர்ப்பு! 05 Feb, 2026 | 08:56 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புளோரிடா நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 136 views
-
-
சீன - ரஷ்ய பொருளாதார பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் - இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் உறுதி 05 Feb, 2026 | 12:14 PM சீனா - ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் நேற்று புதன்கிழமை (4) வீடியோ அழைப்பில் பேசி, கலந்துரையாடியதில், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் நேற்று வீடியோ கொன்பிரன்ஸில் பேசிக்கொண்டபோது தமக்கிடையிலான வர்த்தக உறவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதென உறுதி செய்து…
-
- 0 replies
- 106 views
-
-
தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 09:52 AM தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான எள…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ; சுமார் 35 பேர் பலி ; 400 பேர் காயம் ; 126 பேர் ஆபத்தான நிலையில்! 04 Feb, 2026 | 05:14 PM ஜப்பானில் பல வாரங்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவினால் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பொழிவு நிலைமை இவ்வார இறுதியில் மேலும் மோசமாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பனிப்பொழிவினால் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும் 126 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்பொழிவினால் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்று புதன்கிழமை (4…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்! லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தனது தந்தையின் வாரிசாக பரவலாக அறியப்பட்ட 53 வயதானவரின் மரணம், அவரது அரசியல் குழுவின் தலைவரால் செவ்வாயன்று (03) உறுதிப்படுத்தப்பட்டதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜின்டான் நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் வீட்டில் “நான்கு பேர் கொண்ட கமாண்டோ” பிரிவு இந்த படுகொலையை நடத்தியதாக அவரது சட்டத்தரணிகள் AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். இருப்பினும் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1969 முதல் லிபி…
-
- 3 replies
- 363 views
- 1 follower
-
-
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது Published By: Vishnu 04 Feb, 2026 | 05:35 AM அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை (3) சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரானிய ஷாஹெட்-139 ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த தாக்குதல், இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் நடந்துள்ளது. இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.vi…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம். ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இப்பேச்சுவார்த்தை நாளை 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று யுக்ரைன் ஜனாதிபதி வொல்திமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக…
-
- 0 replies
- 119 views
-
-
"இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்": ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறுகிறார். Mariya Yemets, Anastasia Protz - 2 பிப்ரவரி, 20:08 நரேந்திர மோடி 69868 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியத் தலைவர் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தத் தயாராக இருப்பதாகவும், இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் கூறினார். மூலம்: ஐரோப்பிய பிராவ்தாவின் அறிக்கையின்படி, டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் விவரங்கள்: வர்த்தகம் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தானும் மோடியும் விவாதித்ததாக டிரம்ப் கூறி…
-
- 0 replies
- 118 views
-
-
சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? பட மூலாதாரம்,AFP via Getty Images கட்டுரை தகவல் பீட்டர் ஹோஸ்கின்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது. சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி மின…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு 24 Jan, 2026 | 01:42 PM அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரங்களில் தொடங்கிய இந்த பனிப்புயல், வடகிழக்கு மாகாணங்களுக்குச் செல்லும் போது அதிக பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று வானிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பனிப்புயல் அமெரிக்கா முழுவதும் 3,200 கிலோமீற்றர் தொலைவுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பனி மற்றும் உறைபனி நிலைமைகள் கடுமையாக இருக்கும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நீண்ட நேர மின்வெட்டு, மரங்களுக்கு சேதம், மற்றும் பயணிக்க முடியாத வீதிப்போக்குவரத்து ஏற்படும் அபா…
-
-
- 9 replies
- 622 views
- 1 follower
-
-
193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ். அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை. ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.1…
-
-
- 2 replies
- 224 views
-
-
இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,@USAmbIndia 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சமூக ஊடகம் மூலம் இதனை அறிவித்துள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் மோதியின் பதிவில் வர்த்தக ஒப்பந்தம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அதன் கீழ் இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதிவிகிதமாக குறைப்பத…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 02:05 PM திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், "சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. Meditations: The Reflections of His Holiness the Dalai Lama என்ற அல்பத்திற்காக தலாய் லாமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் தலாய் லாமாவின் அமைதியான குரலில் ஒலிக்கும் தியானக் …
-
-
- 2 replies
- 265 views
- 1 follower
-
-
வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 08:46 AM வெனிசுவேலாவில் 07 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237593
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல் பட மூலாதாரம்,ALEXEY NIKOLSKY/SPUTNIK/AFP படக்குறிப்பு,யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட நாளன்று, தொழில் தலைவர்களை கிரெம்ளினுக்கு புதின் வரவழைத்தார். கட்டுரை தகவல் விட்டலி ஷெவ்சென்கோ பிபிசி மானிட்டரிங் ரஷ்யா ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரின் நடுவே, ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. ஆனால், விளாடிமிர் புதின் அதிகாரத்தில் இருக்கும் 25 ஆண்டுகளில், ரஷ்யாவின் செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் - அதாவது 'ஒலிகார்ச்சுகள்' (oligarchs) தங்கள் அரசியல் செல்வாக்கை கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டனர். இவை அ…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-