உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
உலகமயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதி புட்டின் உலகமயமாக்கலின் விளைவே கிரைமிய கல்லூரி தாக்குதலென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களால் ஏற்படும் சமூக மாற்றங்கள் தொடர்பாக அன்றாடம் தெரியவருகின்றதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புட்டின், குறிப்பாக அமெரிக்காவில் பாடசாலைகளிலேயே இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஆரம்பித்து விடுகின்றன என சுட்டிக்காட்டினார். கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியான கல்லூரி மாணவன் உள்ளடங்களாக 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளட…
-
- 0 replies
- 310 views
-
-
15 பெண்களை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் 20 பேருக்குத் தண்டனை 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் Huddersfield இல் 15 இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருபது பேருக்கு இன்று லீட்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இக்குழுவின் தலைவரான 35 வயதான அமீர் சிங் தலிவாலுக்கு 18 ஆண்டுகளும் ஏனையவர்களுக்கு 5 முதல் 18 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இவர்களின் செயல் வெட்கத்துக்குரியது மனிதாபிமானமற்றது எனவும் தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார். http://athavannews.com/15-பெண்களை-பாலியல்-பலாத்கா/
-
- 3 replies
- 779 views
-
-
பாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு : October 19, 2018 1 Min Read அமெரிக்காவுடனான பலஸ்தீன விவகாரங்களை நிர்வாகம் செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பயோ தெரிவித்துள்ளார். இந்த முடிவு நிர்வாகக் காரணங்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்டது எனவும் ஜெருசலேம், மேற்குக் கரை அல்லது காஸா மீதான தங்கள் கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் இது குறிக்காது என்றும் பாம்பயோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு பலஸ்;தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரு நாட்டு கொள்கை …
-
- 0 replies
- 314 views
-
-
குயின்ஸ்லேன்டில், கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது! அவுஸ்ரேலியாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் ஐந்தாவது மாநிலமாக குயின்ஸ்லேன்ட் அமைந்துள்ளது. அவுஸ்ரேலியாவின் பிரபல மாநிலமாக குயின்ஸ்லேன்டில் நேற்று (புதன்கிழமை) கருக்கலைப்பானது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து உறுதியான கருக்கலைப்புத் தடைச்சட்டத்தைக் கொண்டிருந்த குயின்ஸ்லேன்ட் மாநிலம், பெண்களின் உரிமைகள் தலைதூக்கியமையை அடுத்து நேற்று குறித்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார, சமூக கட்டமைப்புப் பிரச்சினைகளுக்காக கடந்த 1960 கள், 1970 களில் பொதுச்சட்டத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சியை முன்னெடுத்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மருத்து காரணிகளின் உதவியுடன் கருக்கலைப்பு சட்…
-
- 0 replies
- 368 views
-
-
மயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி ஆப்கானிஸ்தானிலஇடம்பெற்ற தாக்குதலொன்றின் போது ஆப்கானிஸ்தானிற்கான அமெரிக்க படையினரின் தளபதி ஜெனரல் ஸ்கொட் மில்லர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். கந்தகாரில் இடம்பெற்ற தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் முக்கிய படையதிகாரிகள் பலர் கொல்லபட்டுள்ளனர். கந்தகாரில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தவர்கள் மீது அப்பகுதி ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் போது ஆப்கானிஸ்தானின் புலனாய்வு பிரிவின் தலைவரும் தலைமை பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க படைகளின் தளபதி ஸ்கொட் மில்லர் காயங்கள் எதுவுமின்றி உயி…
-
- 0 replies
- 376 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images கேரளாவில் சபரிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி இருப்பதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவிக்கிறார். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகளின் கடை அடைப்பு அழைப்புக…
-
- 0 replies
- 749 views
-
-
பெண்களிடம் மன்னிப்புக் கோரினார் நோர்வே பிரதமர்… October 18, 2018 இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனின் படையெடுப்புக்கு நோர்வே உள்ளானபோது, ஜெர்மன் ராணுவத்தினருடன் உறவில் இருந்த தங்கள் நாட்டுப் பெண்களை (நோர்வே பெண்களை), பழிவாங்கும் முகமாக மோசமாக நடத்தியதற்காக நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஏப்ரல் 1940இல் நாஜி ஜெர்மன், நோர்வே மீது படையெடுத்த போது ஜெர்மன் ராணுவத்தினருடன் சுமார் 50,000 நோர்வே பெண்கள் நெருக்கமான உறவில் இருந்ததாக அப்போது கருதப்பட்ட நிலையில் அவர்களில் பல பெண்கள், அவர்களது குழந்தைகளுடன் நோர்வேயை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஜெர்மன் ராணுவத்தினருடன் நெருக்கமாக இருந்த பெண்களுக்கு ஏறத்தாள 10…
-
- 0 replies
- 350 views
-
-
கிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி உக்ரைனிடமிருந்து ரஸ்யா கைப்பற்றிய கிரிமியாவில் கல்லூரியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இனந்தெரியாத பொருள் வெடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்ய பாதுகாப்பு படையதிகாரியொருவர் இது பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார். வெடிபொருளொன்றே வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன இதேவேளை உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், கல்லூரியில் பல உடல்க…
-
- 1 reply
- 379 views
-
-
அமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி! பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
வனவிலங்குகளைப் படம்பிடித்து விருதுபெற்ற ஒளிப்படக் கலைஞர் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு ஒளிப்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு லண்டனில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இடம்பெற்றது. நெதர்லாந்தைச் சேர்ந்த Marsel van Oosten என்பவரால் எடுக்கப்பட்ட ஒளிப்படம் சிறந்த வனவிலங்கு ஒளிப்படத்துக்கான விருது பெற்றது. இந்தப் ஒளிப்படம் சீனாவில் கின்லிங் மலைப்பகுதிகளில் வாழ்கின்ற இரண்டு அரியவகைக் குரங்குகளுடையதாகும். இந்த ஆண்டின் சிறந்த இளம் ஒளிப்படக் கலைஞருக்கான விருது 16 வயதான Skye Meaker என்பவருக்கு அவருடைய உறக்கத்திலிருந்து எழும்புகின்ற சிறுத்தை ஒன்றின் ஒளிப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில அற்புதமான வனவிலங்கு ஒளிப்படங்களை கீழே …
-
- 0 replies
- 485 views
-
-
பாகிஸ்தானில், இந்த ஆண்டு ஜனவரியில், ஆறு வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜைனப் அன்சாரி எனும் அந்த சிறுமியின் உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டறியப்பட்டபின் கைது செய்யப்பட்ட இம்ரான் அலி எனும் நபர், லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறைச்சாலையில் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது ஜைனபின் தந்தை மற்றும் பிற உறவினர்கள் அங்கு இருந்தனர். இம்ரான் அலி தூக்கிலிடப்படும் காட்சியை நேரில் பார்த்ததாகக் கூறிய ஜைனபின் தந்தை அமீன் அன்சாரி, அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை…
-
- 0 replies
- 333 views
-
-
அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப். துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட கடுமையான பதில் நடவடிக்கை எடுப்போமென எச்சரித்துள்ளது. ஒருவேளை அமெரிக்கா - அரேபியா இடையேயான முரண் அதிகமானால் விளைவுகள் என்ன மாதிரியாக இருக்கும்? எது மாதிரியான தாக்கங்களை செலுத்தும்? எண்ணெய் விலை பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு கணக்குப்படி, செளதியிடம்தான் உலகின் 18 சதவீத எண்ணெய் வளம் உள்ளது. அந்நா…
-
- 0 replies
- 435 views
-
-
சோமாலியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி October 17, 2018 1 Min Read சோமாலியாவின் தலைநகர் மொகடீ அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் அமைப்புக்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது. உள்நாட்டில் தாக்குதல்களை நடத்திவரும் இந்த தீவிரவாத அமைப்பு மத்திய ஆபிரிக்காவில் …
-
- 0 replies
- 322 views
-
-
தினத்தந்தி - "பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்" படத்தின் காப்புரிமை AdrianHillman 'மீ டூ'வை ( #MeToo) தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக 'வீ டூ' என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 'வீ டூ மென்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர். "பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்…
-
- 1 reply
- 911 views
-
-
மைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்! மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை காலமானதாக அவருடைய சகோதரி ஜொடி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்த நிணநீர்த் தொகுதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுவந்ததாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அவருக்கு பல ஆண்டுகளாக நம்பிக்கையூட்டும் விதத்திலேயே மருத்துவத்தை மேற்கொண்ட போதிலும் நேற்று புற்றுநோயினால்…
-
- 0 replies
- 360 views
-
-
யெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 13 மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டுப்போரில் சவுதி அரேபியாவின் வான்தாக்குதல்களின் பங்களிப்பின் விளைவாக நிலைமை மோசமடைந்துள்ளது. உலகில் பஞ்சம் நிலவாது எனும் நம்பிக்கையில் 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்துவைத்தோம், ஆனால் எத்தியோப்பியாவிலும் வங்காளத்திலும் சோவியத் ஒன்றியத்திலும் நாம் கண்ட பஞ்சம் உலகை உலுக்கியது. தற்போது மீண்டும் யெமனி…
-
- 1 reply
- 736 views
-
-
காணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை. துருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி. ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து செளதி முடியாட்சிக்கு எதிராக எழுதி வந்தார்…
-
- 1 reply
- 540 views
-
-
பாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்! ஐக்கிய நாடுகளின் நிவாரணம் வழங்கும் முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கனடா 50 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாரி-க்ளவுட் பிபீயூ நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் வேலைத்திட்ட முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீனிய அகதிகளின் சிறார் கல்வி, பெண்களுக்கான நலன் அபிவிருத்தி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக கனடாவின் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது…
-
- 0 replies
- 355 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை DHA/Youtube வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பாலம்தான் மேய்ச்சல் நிலத்துடன் மேட்டு பகுதிகளை இணைத்தது என டெமிரோரென் செய்தி முகமை தெரிவிக்கிறது. பலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்த பாலத்தை கடந்தவாரம் கூட பார்த்ததாக மக்கள் கூ…
-
- 0 replies
- 546 views
-
-
செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்," என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார். "ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி ம…
-
- 1 reply
- 368 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது. மிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக…
-
- 4 replies
- 734 views
-
-
அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு ஐநா வேண்டுகோள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்…
-
- 0 replies
- 390 views
-
-
தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்…
-
- 1 reply
- 791 views
-
-
உகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி!!! உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உகாண்டாவிற்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இக் கோர சம்பவத்தால் 34 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடைந்த…
-
- 0 replies
- 445 views
-
-
மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன் படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன். மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையானது. இந்த செய்தி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-45832447
-
- 0 replies
- 494 views
-