Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவுடன் தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாலிபன் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட குழுவை வழிநடத்திய தாலிபன் அதிகாரியை பிபிசி நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் அவர், ஆயுத பலம் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றும் நோக்கம் தாலிபன்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஷெர் முகம்மது அப்பாஸ்தான் தாலிபன் குழுவை வழிநடத்தியவர். Image caption ஷெர் முகம்மது அப்பாஸ் …

  2. நெதர்லாந்தில் மர்மமான முறையில் 20,000 கடல் பறவைகள் உயிரிழப்பு! நெதர்லாந்து கடற்கரைப் பகுதிகளில் மர்மமான வகையில் சுமார் 20 ஆயிரம் வட துருவ கடற்பறவையில் உயிரிழந்துள்ளமை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். guillemot எனப்படும் கறுப்பு மற்றும் வெண்ணிற மேற்தோலைக் கொண்ட வடதுருவ பறவைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவைகள் அனைத்தும் உடல் மெலிந்த நிலையில் இருந்ததுடன், அவை ஏதேனும் நோய் காரணியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. அண்மையில் எம்.எஸ்.சி. ஸொயி கொள்கலன் கப்பலில் இருந்து கசிந்த இரசாயனப் பொருட்கள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலில் ஏற்பட்ட புயல் பாத…

  3. லண்டனில் காரல்மார்க்ஸின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது February 6, 2019 லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறி தங்கியிருந்த நிலையில் 1885-ம் ஆண்டு 64-வது வயதில் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து வடக்கு லண்டனில் உள்ள கல்லறை அங்கு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமான இந்த கல…

  4. ஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு அணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது. இதன் தொடர்ச்சியாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்தனர். குறித்த சந்திப்பில்,வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். இச் சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. …

  5. பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்: டொனால்ட் ரஸ்க் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு எவ்வாறு பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற எவ்விதமான திட்டங்களுமில்லாமல் பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமென ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ்க்கு விஜயம் செய்துள்ள ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே டொனால்ட் ரஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை பிரஸ்ஸல்ஸ் பயணிக்கவுள்ள பிரதமர் தெரேசா மே-யிடமிருந்து இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்கான யதார்த்தமான ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் பொதுவான தீர்வொன்று சாத்தியம் என்பதை தாம் உறுதியாக ந…

  6. கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் - பாப்பாண்டவர் தகவல் தற்போதைய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், உயர் குருவுமான பாபாண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் பல கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளக நடத்திவந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது கருத்துப்படி, தனக்கு முன்னால் ப்பாப்பாண்டவராகக் கடமை புரிந்த பெனெடிக்ட் அவர்கள் இந்தப் பாலியல்க் கொடுமைகள் நிமித்தம் ஒரு கன்னியாஸ்த்திர்கள் சபையையே கலைத்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையினுள் கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றி இதுவே முதன் முதலாக ஒரு பாப்பாணடவரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. …

  7. படத்தின் காப்புரிமை AFP வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் இந்த மாதத்தில் இரண்டாவது அணுஆயுத மாநாடு நடத்தவுள்ளதாக தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ''மகத்துவத்தை தேர்வு செய்தல்'' (Choosing Greatness) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையில் பேசிய டிரம்ப், எல்லை சுவர் கட்டுவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தி பேசினார். இதற்கிடையே இது குறித்த ஒரு மறுதலிப்பில் அமெரிக்காவின் மதிப்புகள் மற்றும் மாண்புகளை டிரம்ப் கைவிடுவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். …

  8. https://www.bbc.com/tamil/global-47106559 படத்தின் காப்புரிமை US GOVT அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்ப…

  9. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில் உலாவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சமாடைந்துள்ளனர். …

  10. பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம் February 5, 2019 பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஏ மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்ததுடன் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை …

  11. ஜூவான் கெய்டோவை வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பு February 5, 2019 தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துள்ள வெனிசுலாவின் எதிர்க்கட்சித்தலைவரும் பாராளுமன்ற சபாநாயகருமான ஜூவான் கெய்டோவை வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக சில ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியமைத்து இவ்வாறு அங்கீகரித்துள்ளன. புதிதாக தேர்தலை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நிராகரித்ததையடுத்து சில நாடுகள் இவ்வாறு கூட்டு முடிவு எடுத்துள்ளன. அமெரிக்கா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாட…

  12. நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு – அச்சத்தில் மக்கள்! தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சுத்துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றத…

  13. அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்? பிரக்ஸிற் தொடர்பான தீர்மானம் தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகளவானவர்கள் வாக்களித்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற திகதி நெருங்கி வருவதால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில அமைச்சர்களும் நாடாளுமன்ற…

  14. விரைவில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் தொன்மையான துருக்கி நகரம்! துருக்கியில் உள்ள மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஹசன்கெய்ஃப் என்ற நகரம் பூமியிலிருந்து விரைவில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. சுமார் 600 ஆண்டுகள் பழமையான அல் ரிஸ்க் மசூதியின் மினார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாசார பாரம்பரியமும், 12,000 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்ட புதிய கற்காலக் குகைகளும் காணாமல் போய்விடும் என்று அஞ்சம் வௌியிடப்பட்டுள்ளது. புதிய நீர்மின்சார அணையொன்றை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை ஏரியொன்றின் காரணமாக ஏறத்தாழ 90 சதவீத ஹசன்கெய்ஃப் நகரம் மூழ்கிவிடும் நிலை தோன்றியுள்ளது. தென்கிழக்கு துருக்கிக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், நிர்பாசனத்…

  15. படத்தின் காப்புரிமை Getty Images நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள மீள்குடியேற்றம் ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்கின்றனர் இந்த சிறிய நாட்டில் பாஸ்ப…

  16. எகிப்தில் 50 இற்கும் மேற்பட்ட மம்மிகள் கண்டுபிடிப்பு! எகிப்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மம்மிகள் (பதப்படுத்தப்பட்ட உடல்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 மம்மிகளே அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்களும் காணப்படுகின்றமைக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சில துணிகளால் மூடப்பட்டிருந்ததுடன், ஏனையவை கல் சவப்பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தாக ஆய்வாளர்கள் தெரி…

  17. 1350 கிலோ மீட்டர் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான் 1350 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. டெஹ்ரான்: அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நே…

    • 0 replies
    • 354 views
  18. வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடையும், வங்கிக் கணக்கு முடக்கம்… January 30, 2019 தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ ((Juan Guaidó) விற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளதுடன் அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ தம்மைத் தாமே அறிவித்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை நிலையினையடுத்து, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற சபாநாயகருமான ஜூவான் குவைடோவை அங்க…

  19. வடகொரியாவுடனான சந்திப்பிற்கு நேரம்-இடம் நிர்ணயிக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான சந்திப்பிற்கான நேரம்- இடம் என்பன நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உற்பத்தி துறைக்கான செயலாக்க ஆணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். வடகொரிய தலைவருடனான இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான இடம், நேரம் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் வடகொரியாவுடன் பாரிய முன்னேற்றகர…

  20. உடன்படிக்கையில் இருந்து விலகவுள்ளதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு! 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கையில் இருந்து சனிக்கிழமையுடன் தற்காலிகமாக விலகவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது உடன்படிக்கை மீறப்படுவதை மொஸ்கோ நிறுத்தவில்லை என்றால், உத்தியோகபூர்வமாக ஆறு மாதங்களுக்குள் முறையாக விலகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார். இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார். ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை மீறுவதை மறுக்கிற ரஷ்யா, ஒப்பந்தத்தில் இணங்கிக் கொண்டால், அது ஐரோப்பாவில் குறுகிய மற்றும் நடுத…

  21. படத்தின் காப்புரிமை Getty Images துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர். கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும். 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக…

  22. மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அகமது ஷா மலேசியாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா புதிய மன்னராக பதவி ஏற்றார். மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளதுடன் அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் ஆட்சியை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில், மலேசியா மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் 5 ஆம் சுல்தான் முகமது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6 ஆம் திகதி பதவி விலகினார். இவர் முன்னாள் ரஷ்ய அழகியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் தனது பதவியை இராஜினாமா செய்தார்…

  23. அமெரிக்காவில் படித்தவர்களுக்கு எச்-1 பி விசாவில் முன்னுரிமை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து பணிபுரிவதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக குறித்த விசா வழங்கப்படும். ‘எச்-1 பி’ விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது ‘எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படு…

  24. அமெரிக்காவிலுள்ள இந்துக் கோவில்கள் விஷமிகளால் சேதம் அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள சுவாமி நாராயணனர் கோவில் விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. கெண்டக்கி மாகாணத்தின்லோஸ்வில்லே நகரத்தில் சுவாமிநாராயண் என்ற இந்துக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்குள்ள சாமி படங்கள் மீது கருப்பு வர்ணப்பூச்சி வீசியும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கோவிலில் இருந்த இருக்கை ஒன்றில் கத்தி ஒன்றை குத்தியபடி விட்டுச்சென்றுள்ளனர். லோஸ்வில்லே நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். …

  25. பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு பயணம்! இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு பயணமாகவுள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி பயணமாகவுள்ள அவர் ,எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பயணத்துடன் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு செல்லும் முதல் பாப்பரசர் என்ற பெருமையும் அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார். இஸ்லாத்துடன் நல்லுறவைப் பேணும் முகமாக பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இந்த விஜயம் அமையவுள்ளது. மேலும் இது சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடலைத் தமது முக்கியக் கொள்கையாக அவர் கடைப்பிடிப்பதை அது உறுதிசெய்கிறது. முஸ்லிம்களின் புனித நூலான குரானை பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சனம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.