Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்” ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் உயிரிழக்கக் கூடும் என்று திங்களன்று (மார்ச் 31) ஒரு புதிய மதிப்பீட்டில் ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 14 பேர் காயமடைந்தனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பா…

  2. ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத…

  3. 31 MAR, 2025 | 05:00 PM எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 14 வயதுக்குட்பட்ட சிறுமி உட்பட பல பெண் நோயாளர்களை கையடக்கத் தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ எடுத்தும் உள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யபட்டுள்ளார். வட மேற்கு ஜேர்மனியில் வசித்துவரும் 43 வயதுடைய ஹனோ என்னும் அறுவை சிகிச்சை நிபுணர் 190 சந்தர்ப்பங்களில் இப்படி பெண்களை படம் பிடித்துள்ளதுடன், பலரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜேர்மன் செய்தித்தாளான பைல்ட் (BILD) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை நபுணரிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் அளவிலான பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர் பல ஆண்டுகாலமாக பெண்களை படம் பிடித்ததாகவும், பலரை துஷ்பிரயோகம் செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

  4. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு! தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்த…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ஷைமா கலீல் பதவி, டோக்யோ செய்தியாளர், ஹமாமட்சுவில் இருந்து கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை. "அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார்" என்று அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ ஹகமாடா, ஜப்பானின் ஹமாமட்சுவில் உள்ள அவரது…

  6. புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோருக்கு உதவும் பிரான்ஸ் பொலிசார் வடபிரான்சிலுள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று புறப்பட்டுள்ளது. படகு பிரித்தானிய கடல் எல்லையைத் தொட்ட நேரத்தில், பிரெஞ்சு பொலிசார் அந்தப் படகிலிருந்த 24 பேரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு பிரெஞ்சுக் கரைக்குத் திரும்பினார்களாம். புறப்படும்போது, அந்த படகிலிருந்தவர்களிடம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காத்திருங்கள், பிரித்தானிய அதிகாரிகள் உங்களை மீட்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்களாம் பிரெஞ்சு அதிகாரிகள். திருப்பி அழைத்துக்கொள்ளப்ப…

    • 1 reply
    • 353 views
  7. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 12:00 PM அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி…

  8. 28 MAR, 2025 | 11:20 AM அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் கார் வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் …

  9. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட…

  10. புற்றுநோய் பக்கவிளைவினால் மூன்றாம் சார்லஸ் மன்னர் வைத்தியசாலையில்! திட்டமிடப்பட்ட புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகளை அனுபவித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் வியாழக்கிழமை (27) சிறிது நேரம் கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், வியாழக்கிழமை மதியம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவரது திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு தொடக்கத்தில், தனக்கு வெளிப்படுத்தப்படாத ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்ததிலிருந்து, மன்னரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், 76 வயதான சார்லஸ், சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இர…

  11. காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரிக்கின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு Published By: RAJEEBAN 27 MAR, 2025 | 01:44 PM கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது,மார்ச் 17ம் திகதி யுத்தநிறுத்தத்தை கைவிட்டது முதல் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன பகுதி மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன…

  12. AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டறியும் திறன் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட உளவு ட்ரோன்களை கிம் ஆய்வு செய்ததாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது. “ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் ஆளில்லா உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்” என்று மேற்பார்வையின் போது வடகொரியத் தலைவர் கூறியுள்ளார். அணு ஆயுதம் ஏந்திய வடக்கு கொரியா, முதன்முறையாக வான்வழி முன்கூட…

  13. தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு! தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தானது நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீக்கான சாதனைப் புத்தகங்களை மீண்டும் எழுதுகின்றன என்று தென்கொரியாவின் தற்காலிகத் தலைவர் ஹான் டக்-சூ கூறினார். காட்டுத் தீயினை அடுத்து 23,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பல பாரம்பரிய கலாச்சார தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் அழிக்கப்பட்டது. புதன்க…

  14. கருங்கடல் கடற்படை போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா – உக்ரேன் உடன்பாடு! சவுதி அரேபியாவில் நடந்த மூன்று நாட்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கருங்கடலில் கடற்படை போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரேனும் ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு முக்கியமான வர்த்தக பாதையை மீண்டும் திறக்கும் ஒப்பந்தங்களை அறிவிக்கும் அறிக்கைகளில் அனைத்து தரப்பினரும் “நீடித்த அமைதியை” நோக்கி தொடர்ந்து பாடுபடும் என்று வொஷிங்டன் கூறியது. ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவதற்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட தடையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உருவாக்க அவர்கள் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யா தனது உணவு மற்றும் உர வர்த்தகத்திற்கு …

  15. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 02:28 PM ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச் சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். ஹம்டான் பலாலின் வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதை தொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீ…

  16. திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்! கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது வாக்காளர்களின் மனதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்னி, கனடாவின் பிரதமராகப் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இந்த தேர்தல் அழைப்பு வந்துள்ளது. கார்னி இப்போது கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும், அ…

  17. 25 MAR, 2025 | 10:38 AM நியூசிலாந்தின் தென்தீவு பகுதியில் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ளது. சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்து வருகின்றது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/210121

  18. பட மூலாதாரம்,MEHA KUMAR/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, கென்யாவில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனாரோ டோமா பதவி, 24 மார்ச் 2025, 07:19 GMT யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது. கென்யாவில் பல …

  19. ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார். 1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர். பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுக…

  20. உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ர…

  21. நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு! ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (Netumbo Nandi-Ndaitwah) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாச…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ் பதவி, 24 மார்ச் 2025, 03:58 GMT கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் . யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். "நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார். அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்…

  23. பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்! ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு …

  24. Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 03:50 PM 30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியது. 4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது. சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள…

  25. மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்! அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக விமான நிலையம் “குறிப்பிடத்தக்க மின் தடையை” சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. “எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 இரவு 11:59 வரை மூடப்படும்” என்றும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது. அத்துடன், பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.