உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27029 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார். …
-
- 0 replies
- 845 views
-
-
ஆகாய டாக்ஸிகள் கனவை 2025 இற்குள் நனவாக்கும் Bell Helicopter! வீதிகளில் போக்குவரத்து நெரிசலா? ஆகாய டாக்ஸியில் பயணம் செய்வது இதற்கு ஒரு தீர்வாக அமையும் என பலரும் கருதுகின்றனர். இது தற்போது நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஆண்டியின் பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில், Bell Nexus என்ற ஆகாய டாக்ஸிக்கான மாதிரியை அறிமுகம் செய்துள்ளது Bell Helicopter. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் (Las Vegas) நகரில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியின் அதிகாரபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக ஆகாய டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது நிறுவனம். ஆகாய டாக்ஸியின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றை குறித்த நிறுவனம் கையாளவ…
-
- 0 replies
- 647 views
-
-
டசின்கணக்கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். ஜித்தாவிலுள்ள ஷுமைசி தடுப்பு முகாமிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட ஆண்கள் வரிசையில் நிற்கும் காணொலியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரோஹிங்ய ஆண்களுக்கு கைவிலங்கிடப்பட்டதாக அந்த இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய தடுப்பு முகாம்களில் சுமார் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு…
-
- 2 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமை AFP பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. இஸ்லாம…
-
- 1 reply
- 1.2k views
-
-
Image caption ஃபைசல் காஷ்மீரில் கேட்பாரின்றி தொடரும் கொலைகளையும், மத்திய அரசின் பாராமுகத்தையும் கண்டித்து பதவி விலகுவதாகக் கூறியுள்ளார், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஷா ஃபைசல் என்னும் அதிகாரி. இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் இந்துத்துவ சக்திகளால் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதையும், காணாமல் ஆக்கப்படுவதையும், இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அடையாளத்தின் மீதான தாக்குதலையும், இந்தியப் பெருநிலப் பகுதியில் அதி தேசியவாதத்தின் பெய…
-
- 0 replies
- 456 views
-
-
ட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாளேடான Munhwa Ilbo இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறித்த உயர்மட்ட சந்திப்பு தொடர்பில் அமெரிக்க, வடகொரிய வெளியுறவு அமைச்சுகளின் அதிகாரிகள், ஹனோயில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சும், வெள்ளை மாளிகையும் மறுப்பு தெரிவித்துள்ளன. இதேவேளை, நான்கு நாள் அரச சுற்றுப்பயணம் மேற்கொண்டு வடக…
-
- 0 replies
- 325 views
-
-
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை : டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் துருக்கி அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் ‘சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை தோற்கடிக்கும் வரை அமெரிக்க படை…
-
- 1 reply
- 495 views
-
-
ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம் January 8, 2019 ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந…
-
- 0 replies
- 559 views
-
-
உலக வங்கியின் தலைவர் பதவிவிலகுவதாக அறிவிப்பு January 8, 2019 அமெரிக்காவின் வோஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். பன்முக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிற உலகின் மிகப்பெரிய வங்கியான உலக வங்கியின் தலைவராக எப்போதுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபரை மட்டுமே அமெரிக்கா பரிந்துரைத்து வருகிறது. அந்தவகையில் 58 வயதான ஜிம் யாங் கிம். இ அமெரிக்கக் குடியுரிமை பெற்ற தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவராவார். கடந்த ஆறு வருடங்களாக உலக வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வரும் இவரின் பதவி காலம் 2022ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகத…
-
- 0 replies
- 679 views
-
-
கிம் ஜாங் உன், ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ளார்.. January 8, 2019 வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது நேற்று திங்கட்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டதாகவும் சீனாவில் ஜனவரி 10 ம்திகதி வரை தங்கியருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது. பாதுகாப்பு வசதிகளுடனும் வேறு சில சிரேஸ்ட வட கொரிய அதிகாரிகளுடனும் அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர…
-
- 0 replies
- 651 views
-
-
சீனாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்! சீனாவில் வசித்துவரும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையிலான புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்திலுள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அண்மைக்காலமாக சில முக்கிய உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்திருந்தது. எனினும் இதை சீன அரசாங்கம் இதனை மறுத்திருந்தது. இ…
-
- 0 replies
- 490 views
-
-
2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்! சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் யெமன், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. போர்கள், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகள் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மற்றுமொரு கடினமான ஆண்டாக 2019 அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள மற்றைய ஏழு நாடுகளாக ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சிரியா, நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் சர்வதேச மீட்புக் குழுவால் பெயரிடப்பட்டுள்…
-
- 0 replies
- 507 views
-
-
-
சீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு… January 7, 2019 சீனாவில் வாழும் முஸ்லிம் மக்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நிலையில் அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த போதும் இதனை சீனா மறுத்திருந்தது மேலும் சீனாவில் சில பகுதிகளில் நோன்பிருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து ஹிஜாப அணிவது…
-
- 0 replies
- 481 views
-
-
-
18 வருடங்களிற்கு முன்னர் கடற்படை கப்பல் மீது தாக்குதல் - பழி தீர்த்தது அமெரிக்கா அமெரிக்க கடற்படைகப்பல் மீது 18 வருடங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யேமனில் இடம்பெற்ற விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ்கோல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடா அமைப்பை சேர்ந்த ஜமல் அல் படாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி யேமனை சேர்ந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கடற்படையின் கப்பல் மீது சிறிய படகை பயன்படுத்தி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர் யேமனின் ஏ…
-
- 0 replies
- 752 views
-
-
இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்! இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி …
-
- 0 replies
- 630 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சௌதி அரேபியா புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இன்று (ஞாயிறு) முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும். இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், `ரகசிய விவாகரத்துகளை` தடுக்கும் என்று உள்ளூர் பெண் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர் …
-
- 0 replies
- 571 views
-
-
Image caption விபத்து நடந்த ஆற்றுப்படுகை ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்துள்ளதில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் அடக்கம். ஆஃப்கனின் வடகிழக்கில் உள்ள பாதக்ஷான் மாகாணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி மொகமது ரஸ்தம் ராஹி கூறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. தகவல் தெரிந்த உடனேயே அருகில் இருந்த கிராமவாசிகள், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொ…
-
- 0 replies
- 582 views
-
-
பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு! பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் அங்குள்ள 300 இற்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்…
-
- 0 replies
- 481 views
-
-
பென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா! அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகி ரியர் அட்மிரல் கெவின் ஸ்வீனே இராஜிநாமா செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் இராஜிநாமா செய்து ஒருமாத காலத்தில் கெவின் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தமது இராஜிநாமா தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கெவின், அரச துறையிலிருந்து விலகி தனியார் துறைக்குச் செல்வதற்கான சரியான தருணம் வந்துவிட்டதென கூறியுள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், பென்டகனிலிருந்து விலகிச் செல்லும் மூன்றாவது சிரேஷ்ட அதிகாரி இவரென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு பென்…
-
- 0 replies
- 433 views
-
-
உலகின் மிக்பெரிய பனித்திருவிழா வாணவேடிக்கையுடன் ஆரம்பம்! உலகின் மிகப்பெரிய பனித் திருவிழா சீனாவின் ஹர்பின் நகரில் வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. ஹர்பின் நகரில் நேற்று(சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ள உலகின் மிகப்பெரிய பனித் திருவிழாவினை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். பனி உறைந்து போயிருக்கும் Soungha ஆற்றில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பனி சிற்பங்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் பனித்திருவிழா சுமார் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். பல்வேறு பனிச் சிற்பங்கள் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரை உருக வைக்கு…
-
- 0 replies
- 498 views
-
-
படத்தின் காப்புரிமை SAUL LOEB Image caption டொனால்டு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சு…
-
- 1 reply
- 592 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. …
-
- 3 replies
- 1.2k views
-
-
சித்தரிக்கப்பட்ட படம் Published : 04 Jan 2019 15:15 IST Updated : 04 Jan 2019 15:16 IST அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சீனா உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தவறவிடாதீர் சீனா உருவாகி இருக்க…
-
- 0 replies
- 784 views
-