Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக…

  2. வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா! வெனிசுலாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களையும், சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும் எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டொனால்ட் ரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவில் கடுமையான குற்றச் செயல்…

  3. அமெரிக்க புயலில் பலர் பலி. அமெரிக்காவின் தெற்குக்கரையால் மிசுசிப்பி அலபாமா ஊடாக உள்வரும் கனமான புயல் பல அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.cnn.com/2025/03/15/us/tornado-outbreak-missouri/index.html

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போ…

  5. 17 MAR, 2025 | 03:27 PM கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை. கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் ச…

  6. 14 FEB, 2025 | 04:24 PM உடல் நலப் பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த 88 வயது பாப்பரசர் தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். இன்று காலை ஆராதனைக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206696

  7. மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்! வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இசை நிக…

    • 1 reply
    • 203 views
  8. அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி! அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது. பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது. செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேவின் பட்லர் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஒரு பவர் பேங்க்-ஆல் தீ விபத்து ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28, 2025 அன்று ஏர் பூசன் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. இதில் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மார்ச் 14 அன்று, விசாரணையில் பவர் பேங்க் செயலிழந்திருப்பது தெரியவந்ததாகக் கூறியது. அதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் பவர்…

  10. Published By: RAJEEBAN 16 MAR, 2025 | 10:47 AM காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் புகைப்படப்பிடிப்பாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளுர் பத்திரிகையாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நிவாரணங்கள் வழங்கப்படும் செய்தியை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிலையம்தெரிவித்துள்ளது. காசா யுத்தநிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்று…

  11. நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி! சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இரு…

  12. ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்! செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரி…

  13. திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந…

  14. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2025 | 10:38 AM பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார். போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது. இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட…

  15. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 02:33 PM பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளார் என இரண்டு அதிகாரிகள் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள உலகின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்றான பனாமாகால்வாயை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறைதெரிவித்துள்ளார். எனினும் அதனை இராணுவழிமுறை ஊடாக செய்யப்போகின்றாரா அல்லது வேறு வழிமுறையிலா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. டொனால்ட் டிரம்பின் …

  16. அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான…

  17. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 01:56 PM காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்…

  18. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இஸ்ரேலினால் முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவின் சில பகுதிகளில் உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும…

  19. கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் …

  20. 14 MAR, 2025 | 10:20 AM அமெரிக்காவின் டென்வர் விமானநிலையத்தில் தரையிறங்கியவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ பரவியதை தொடர்ந்து 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்வர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென தீ மூண்டது அனைவரும் ஸ்லைட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிறிய காயங்களுடன் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமானநிலையத்திலிருந்து டலஸ் போர்ட் வேர்த்திற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வுகள் காணப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து விமானம் டென்வர் விமானநிலையத்திற்கு பயணத்தை மாற்றியது என தகவல்கள் வெளியாகி…

  21. இராணுவ உடையில் புட்டின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இராணுவ சீருடை அணிந்த நிலையில், மேற்கு ரஷ்யாவில் உக்ரேனியப் படைகளை விரைவாக தோற்கடிக்க உத்தரவிட்டார். இது வியாழக்கிழமை (13) போர்நிறுத்தம் குறித்து விவாதிக்கத் தயாராகும் நிலையில், மொஸ்கோ இராணுவ முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும். அண்மைய மாதங்களில் ரஷ்யாவின் போர் முனை முன்னேற்றங்களும், உக்ரேனில் மூன்று வருடங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் கெய்வ் போரில் தோல்வியடையக் கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. ட்ரம்பின் மத்திய கிழக்கு சிறப்பு தூ…

  22. ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்! சவுதி அரேபியாவில் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், “நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக …

  23. ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்? கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இது டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாகும். இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் அங்கு போர் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா போர் தொடுத்தால் அது மாபெரும் போராக மாறலாம். ஏனெனில் கிரீன்லாந்தை உள்ளடக்கிய டென்மார்க் நாடு என்பது நேட…

  24. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு! பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தையே பிரான்ஸ் அரசு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது எதிர்காலத்திற்கான சுத்தமான எரிசக்தியாக கருதப்படும் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. பூமியின் அடியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் பூமியின் இயற்கையான செயல்முறைகளால் உருவாகும் ஹைட்ரஜன் வகை எனவும், இதன…

      • Thanks
      • Like
      • Haha
    • 12 replies
    • 730 views
  25. ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி! மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய 25% வரிகள் செவ்வாய்க்கிழமை (04) முதல் அமலுக்கு வந்தன. அத்தோடு சீனப் பொருட்களுக்கான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கி, அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக பங்காளிகளுடன் புதிய வர்த்தக மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்க வருடாந்திர இருவழி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட $2.2 டிரில்லியன் உயர்த்தக்கூடிய இந்த வரி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு EST (0501 GMT) மணிக்கு நடைமுறைக்கு வந்தது. இந்த வரி விதிப்புக்கு பின்னர், அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன. மார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.