உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் சகோதரரின் உடலில் வி எக்ஸ் என்னும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சு வேதிப்பொருளை மலேசிய போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். விமாநிலையத்திலும் வி எக்ஸ்-இற்கான தடயங்கள் தேடப்பட்டன. * தனது முன்னைய நடவடிக்கைகளுக்காக தான் குற்ற உணர்வில் வாடுவதாக கெமர் ரூஜ் அமைப்பின் முன்னாள் விசாரணையாளர் கூறுகிறார். தான் தண்டிக்கப்படவும் வேண்டுமாம். * பரபரப்பான நகரத்துக்கு கீழே சுரங்கத்தில் ஒரு பெரும் விவசாயப் பண்ணை. அங்கு என்னென்ன செடிகள் மற்றும் மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன என்று பார்க்கலாமா?
-
- 0 replies
- 323 views
-
-
துருக்கி ராஜிய பாஸ்போர்ட்டுடன் 136 பேர் ஜெர்மனியிடம் தஞ்சம் கோருவதாக தகவல் துருக்கி அதிபருக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, ராஜிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் 136 பேர், ஜெர்மனியிடம் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர் என்று ஜெர்மனி கூறுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016 ஆகஸ்டு முதல் 2017 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்த கோரிக்கைகள் வந்திருப்பதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துருக்கி அதிபருக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, இராஜாங்க கடவுச்சீட்டு வைத்திருக்கும் 136 பேர், ஜெர்மனியிடம் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர். 2016 ஆகஸ்டு முதல் 2017 ஜனவரி வரையிலான …
-
- 0 replies
- 342 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் கிழக்கு மொசூலில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐஎஸ் சந்தேக நபர்களை கைது செய்ததாக இராக்கிய இராணுவம் அறிவிப்பு குறித்த பிபிசியின் சிறப்புச் செய்தி. * இன்னுமொரு சூரியக் குடும்பத்தின் ஏழு புதிய உலகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்; அவற்றில் மூன்றில் உயிர்கள் வாழக்கூடுமென்றாலும் அவற்றை சென்றடைய ஏழு லட்சம் ஆண்டுகள் பயணிக்கவேண்டும். * மனிதரின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிப்பு; தென்கொரிய பெண்கள் உலக அளவில் எல்லோரையும்விட அதிகமாக , தொண்ணூறு வயதை தாண்டியும் வாழ்கிறார்கள்.
-
- 0 replies
- 374 views
-
-
ஐ.எஸ்.ஸிடமிருந்து விடுதலை பெற்ற பெண்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய மகிழ்ச்சி! (காணொளி) ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கிராமப் பெண்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்தக் காணொளி எந்தப் பகுதியில் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறியத்தரப்படவில்லை. இந்தக் காணொளியில் முஸ்லிம் பெண்ணொருவர் தனது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, தனது முகத்திரையைக் கழற்றி நிலத்தில் எறிந்து காலால் மிதிப்பதையும், மற்றொரு பெண் அதற்குத் தீவைப்பதும் பதிவாகியுள்ளது. மற்றொரு பெண் சந்தோஷ மிகுதியில் சிகரெட்டும் புகைக்க…
-
- 0 replies
- 399 views
-
-
மும்பையில், பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை! மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில் 56% வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மும்பை மாநகராட்சியில், 94 வார்டுகளில் சிவசேனா முன்னிலைவகிக்கிறது. அதேபோல தானேவிலும் சிவசேனா முன்னிலைவகிக்கிறதது. புனே, நாக்பூர், சோலாபூர் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க. முன்னிலைவகிக்கிறது. புனேவில் 60 வார்டுகளில் பா.ஜ.க. முன்னிலைவகிக்கிறது தற்போது வரை, அங்கு மொத்தமாக பா.ஜ.க முதல் இடத்திலும், சிவசேனா இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. http://www.vikatan.com/news/india/81771-shivasena-leading-mumbai-corpor…
-
- 0 replies
- 500 views
-
-
அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் தமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவதில்லை என ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் புதிய காணொளிக் காட்சியொன்றில் தோன்றி சூளுரைத்துள்ளான். சலாதீன் என்ற அந்த சிறுவன், நபரொருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் தான் எவ்வாறு மேற்படி தீவிரவாதக் குழுவில் இணைந்து கொண்டான் என்பதை விபரிக்கிறான். நன்றாகப் படிக்கும் பட்சத்தில் தன்னை விடுமுறையின் போது (ஐ.எஸ். தீவிரவாதிகளின்) இராணுவ முகாமொன்றுக்கு அழைத்துச் செல்வதாக தனது தந்தை தன…
-
- 0 replies
- 484 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், ஆட்கடத்தல்காரர்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்தை விபரிக்கும் ஒரு பெண். கடந்த வருடம் பெரும்பாலும் அல்பீனியாவில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்ட மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர். மொசூலில் தற்கொலை தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ்காரர். குவாண்டநாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டதற்காக நஸ்ட ஈடும் பெற்றவர் இவர். இங்கிலாந்து நகர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க அரும்பொருட் பிரதிகள். ஆயிரக்கணக்கான டாலர்கள் பெறுமதியானவை.
-
- 0 replies
- 267 views
-
-
நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்ற…
-
- 2 replies
- 586 views
-
-
திருவிழாவில் பயங்கரம்! 60 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து: அதிர்ச்சி காணொளி இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது, திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்…
-
- 0 replies
- 404 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தெற்கு சூடான் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ நா அறிவிப்பு. நாட்டில் அரைவாசி மக்களுக்கான உணவு உதவி தேவைப்படுகிறது. அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெஃப்டனெண்ட் ஜெனரல் மெக்மாஸ்டரை டிரம்ப் அறிவித்துள்ளார். பதவி நீக்கப்பட்ட மைக்கில் ஃபிலினுக்கு பதிலாக இவர் பொறுப்பேற்பார். கெச்சப்பை அதன் பாட்டிலில் இருந்து முழுமையாக காலி செய்வது எப்படி? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை மையமாக வைத்து எடுத்த ஆவணப்படத்திற்கு, முறையான அனுமதி பெறப்படாத குற்றத்திற்காக பெண் பட இயக்குனர் ஒருவரை மலேசிய நீதி மன்றம் குற்றவாளியாக இனம் கண்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான லீனா ஹென்றி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற 26 வருட கால யுத்தத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பட தணிக்கை குழுவின் அனுமதி ஏதும் பெறாமல் படத்தை திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த ஆவணப்படத்தில், தணிக்கை கட்டுப்பாடுகளை மீறி, யுத்த நிறுத்த வலயங்கள் மற்றும் யுத்தகள கொலைகளை காண்பி…
-
- 0 replies
- 525 views
-
-
ஐ.நா அலுவலகத்தில் உயிரிழந்த ரஷ்ய தூதுவர்.. ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் வதிவிட தூதுவர் விடாலி ஜுர்க்கின், அவரது அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (20ஆம் திகதி) தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, விடாலி ஜுர்க்கின் இறந்துள்ளதாக, ரஷ்யாவின் நிரந்தர ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜுர்க்கின் சுமார் 40 வருடங்களை ரஷ்யாவின் தேசிய பணிக்காக அர்பணித்துள்ள நிலையில், 20 வருடங்கள் பெல்ஜியம் மற்றும் கனடாவிற்கான உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஐ.நாவிற்கான வதிவிட தூதராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் விடாலி ஜுர்க்கின் உய…
-
- 0 replies
- 331 views
-
-
ஆஸ்திரேலியா: வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம். அதிர்ச்சி தகவல் செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (07:42 IST) ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய மெல்போர்னில் சற்று முன்னர் வணிக வளாகம் ஒன்றின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. plane crash" width="600" /> இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. காயம் அடைந்தவர…
-
- 0 replies
- 423 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள மோசூல் நகரின் மேற்கு பகுதியை நோக்கி இராக்கிய படைகள் முன்னேற்றம். அங்கு படைகளுடன் களத்தில் பிபிசி செய்தியாளர். வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரரின் கொலையை அடுத்து மலேசிய - வடகொரிய உறவில் உரசல். வடகொரியாவுக்கான தனது தூதரை மலேசியா திரும்ப அழைத்துள்ளது. நீங்கள் இறக்கும்போது உங்கள் மூளையை மருத்துவ பரிசோதனைக்கு தானமாக வழங்வீர்களா? எதிர்கால சிகிச்சைகளுக்காக அதிகமான மூளைகள் மருத்துவர்களுக்கு தேவைப்படுகின்றது.
-
- 0 replies
- 261 views
-
-
மனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் – பில்கேட்ஸ் மனிதர்களின் வேலைகளை திருடும் எந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட் கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார். ரோபோக்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களால் திருடப்படுகின்றன எனவும் எனவே, பணியில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையினை தவிர்ப்பதற்காகவே நிறுவன உரிமையாளர்கள் ரோபோக்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளில் மன…
-
- 0 replies
- 307 views
-
-
ஈரான் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளது ஈரான் மூன்றுநாள் ராணுவ போர் ஒத்திகை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. ஈரானின் மத்திய பகுதியில் உள்ள பாலைவனத்தில் இடம்பெற்ற இந்த ஒத்திகையின்போது, சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை ஏவி பரிசோதித்ததாகவும் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்ததனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்த அமெரிக்கா, ஈரானை கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/18419
-
- 0 replies
- 395 views
-
-
நேத்து ராத்திரி - சுவீடனில... ஹம்மா.. இது டொனால்ட் டிரம்ப் ஸ்டைல். நேத்து ராத்திரி சுவீடனில நடந்த விசயத்தினை பாருங்கள்... நான் ஏன் பாதுகாப்பு தொடர்பில் அலெர்ட் ஆக இருக்கிறேன் என தெரிய வரும் என்று சொன்னாலும் சொன்னார் டிரம்ப். அவர் குறிப்பிடட நேத்து இரவு... அதாவது வெள்ளிக்கிழமை சுவீடனில் எந்த ஒரு தீவிரவாத நிகழ்வும் நடக்கவில்லை. இது குறித்து, அமெரிக்க அதிகாரிகளிடம், சுவீடன் அரசு விளக்கம் கேட்க.... முழித்த வெள்ளை மாளிகை... டிரம்ப் இடம் கேட்க... அதுதான் FOX நியூஸ்ல அப்படி சொன்னாங்களேப்பா, அதைத்தான் சொன்னேன்.. என்று நம்ம கப்டன் ஸ்டைல சொல்லி இருக்கிறார். அந்த நியூஸ்ல... சுவீடனில் அதிகமாக வரும் அகதிகளினால் உண்டாகும் பிரச்சனைகள். என்றே சொல்லப் பட்டது. தீவிரவாத…
-
- 0 replies
- 564 views
-
-
2.5 லட்சம் டாலருக்கு சற்றே குறைவாக ஏலம் போன ஹிட்லரின் தொலைபேசி அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 ஆம் ஆண்டு பெர்லினின் பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 372 views
-
-
Indian boy born with 4 legs, 2 penises recovering after surgery Manveena Suri, for CNN Updated 1:44 AM ET, Fri February 10, 2017 …
-
- 1 reply
- 755 views
-
-
பிரித்தானிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் பிாித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் வரவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் முப்பதில் ஒன்று போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய நாணயங்களை வெளியிட உள்ள தாக பிரித்தானிய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ள புதிய நாணயம் இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும் தெ…
-
- 0 replies
- 404 views
-
-
உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏ…
-
- 8 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்…
-
- 3 replies
- 377 views
-
-
இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி! கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ‘இஸ்ரோ’ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாறு படைத்தது. பி.எஸ்.எல்.வி. சி - 37 ரக ராக்கெட் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தபோது, இந்தியாவின் பாய்ச்சலைப் பார்த்து உலகமே வியந்தது. உலகிலேயே ஒரே ராக்கெட்டின் மூலம் அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதன்முறை. இந்த 104 செயற்கைக்கோள்களில் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும். நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி - 37 சுமந்து சென்றது. நன்றி: ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‛ இந்தி…
-
- 0 replies
- 608 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக டிர்ம்பால் தெரிவானவர், அதனை நிராகரித்துவிட்டார். அதேவேளை பொய் சொல்வதாக ஊடகங்கள் மீது டிரம்ப் குற்றச்சாட்டு. * சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக ஐநா எச்சரிக்கை. மக்களும், கால்நடைகளும் உயிரிழக்க பயிர்களும் அழிகின்றன. * கால்பந்து ஆடுவதற்கும் ஞாபக மறதி நோய்க்கும் ஆன தொடர்பு குறித்த ஆய்வுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆதரவு.
-
- 0 replies
- 370 views
-
-
54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு! 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதால் சிறைப்பிடிப்பு' என்பது நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட சர்வ சாதாரணமான செய்தியாகிவிட்டது. சில நேரங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்ற விஷயத்தையும் சின்னப் பெட்டிச் செய்தியாக கடந்துசெல்கிறோம். ஆனால், எல்லை தாண்டிய குற்றத்துக்கு விடுதலை, அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ என்பவர், கிட்டத்தட்ட 54 ஆண்டுகளை இங்கேயே கழித்துள்ளார். அதுபற்றிய சுவையான சம்பவம் இதோ... சீனாவைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர், 1963-ம் ஆண்டு இந்தோ - சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில்... வழிதவறி நம் எல்ல…
-
- 0 replies
- 425 views
-