உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
பனியில் மிதக்கும் சகாரா பாலைவனம்! சகாரா பாலைவனத்தில் சுமார் 37 வருடங்களுக்கு பிறகு பனிமழை பெய்துள்ளது. குறித்த பனியினால் சகாரா பாலைவனத்தின் தோற்றம் வெள்ளைநிற போர்வையாக காட்சி தருகிறது. வட ஆபிரிக்க நாடான மேற்கு அல்ஜிரியாவிலுள்ள எய்ன் சேபிரா நகரப்பகுதியில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் அந்நகரம் மற்றும் சகாரா பாலைவனத்தின் மேற்கு பகுதிகளில் பனி படர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மதம் பனிபொழிவிற்கான சிறு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. குறித்த நிகழ்வால் எய்ன் சேபிரா நகர மக்கள் பனியுடன் விளையாடி மகிழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் ப…
-
- 3 replies
- 881 views
-
-
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார். தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார். தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வ…
-
- 10 replies
- 926 views
-
-
பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம் பீஹாரில், முழுமையான மது விலக்கை வலியுறுத்தி சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் முழுமையடையும் பட்சத்தில், இதுவே உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பீஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடிப் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது. உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி என்ற சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படும் இந்தப் போராட்டம், பீஹாரில் பூரண மத…
-
- 0 replies
- 386 views
-
-
பொலித்தீன் உறையால் ஜோர்ச் புஷ் பட்ட அவஸ்தை! அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் டபிள்யு புஷ் பொலித்தின் உறையை அணிந்து, மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் அவஸ்தையுறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அவரின் பதவியேற்பு விழாவில் மழை குறிக்கிட்டதால் பார்வையாளர்கள் முதல் விருந்தாளிகள் வரை மழையில் நனைய வேண்டியேற்பட்டது. இந்நிலையில் பார்வையாளர்களுக்கு மழையிலிருந்து காக்கும் விசேட பொலித்தின் உறை வழங்கப்பட்டிருந்தது. குறித்த உறையை ஜோர்ச் டபிள்யு புஷ், தலையில் அணிவதற்கு தடுமாறியுள்ளார். மேலும் முகத்தை மூடிய உறையால் அசௌகரியம் அடைந்தநிலையில், குறித்த உறையை புன்னகையுட…
-
- 0 replies
- 569 views
-
-
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் க…
-
- 5 replies
- 681 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்ற முதலாவது கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் Jacques Bonsergent மெட்ரோ ரயில் நிலையத்தில் மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயணிகள் தப்பித்துக்கொண்ட நிலையில், அங்கி…
-
- 0 replies
- 358 views
-
-
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு அவரின் பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி போல அதற்கும் இருப்பதால் அதே பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன. ஒட்டாவாவைச் சேர்ந்த பரிணாம உயிரியில் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி இந்த செதில்களைப் பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை உணர்ந்து குறித்த பூச்சி இனத்துக்கு நியோபால்பா டொனால்ட்ரம்பி என பெயரை வைத்துள்ளார். "புதிய பெயரால் பூச்சிக்கு கிடைக்கும் வெளிச்சம், மேற்கொண்டு இந்த பூச்சி இருக்கும் இடங்க…
-
- 1 reply
- 383 views
-
-
பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன்: பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்…
-
- 0 replies
- 387 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தொலைக்காட்சி நட்சத்திரமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராக பதவியேற்கிறார். * அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், அவரது ஆட்சியில் ரஷ்யாவுடனான உறவு எப்படியிருக்கும்?
-
- 0 replies
- 344 views
-
-
அணுவாயுதம் இல்லாத உலகம் : சீனாவின் கோரிக்கை உலக நாடுகள் அணுவாயுத உற்பத்திகளை இல்லாது செய்வதற்காக அணிசேர வேண்டும். என சீன ஜனாதிபதி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுவிற்சர்லாந்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உரையாற்றியுள்ள போதே அணுவாயுத இல்லாத உலகை உருவாக்க சகல நாடுகளும் அணிதிரள வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அடுத்து வரும் சந்ததியினருக்கு அணு ஆயுதங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை நிராகரிப்பதோடு, உலகத்திலிருந்து அணு ஆயுதங்களை முழுமையாக இல்ல…
-
- 0 replies
- 319 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * போரினால் சீரழிந்த கிழக்கு அலெப்போவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரும்புவதாக ஐ நா கூறும் நிலையில், அங்குள்ள சூழலை ஆராய்கிறது பிபிசி. * தாய்லாந்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் குறைந்தது அறுபதுபேர் பலியாகும் நிலையில், அங்கு சாலை பாதுகாப்பு எப்படியுள்ளது? * அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி விலகிச் செல்லவுள்ள நிலையில், அவரது வெளியுறவு கொள்கைகள் எப்படியிருந்தன என்பது பற்றிய ஒரு பார்வை.
-
- 0 replies
- 415 views
-
-
பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது. காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட …
-
- 0 replies
- 599 views
-
-
இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நேற்று புதன்கிழமை ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 3 தடவைகள் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தாலியில் பனிச்சரிவு ஒரு ஹோட்டலை தாக்கியுள்ளதாகவும் இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. நேற்று மாலை கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் மத்திய அப்ரசோவைப் பகுதியில் உள்ள கிரான் மலையில் பரின்டோலா (Farindola )நகரில் உள்ள Rigopiano என்ற மூன்று மாடி ஹோட்டலே இவ்வாறு பனிச்சரிவால் தாக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் நடந்த மீட்புக்களை மேற்கொண்ட போது பலரது உடல்கள்,…
-
- 0 replies
- 309 views
-
-
பதவி இல்லையென்றாலும் அமெரிக்காவுக்காக குரல் கொடுப்பேன் ; ஒபாமா ( காணொளி இணைப்பு ) பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில், தனது பதவிக்காலத்தின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பை தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று நடத்தினார். இதன் போது உரையாற்றுகையிலேயே ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவ…
-
- 1 reply
- 537 views
-
-
அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவியுள்ளதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளன.தனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தினதும் கடந்த கால பதிவுகளை அழித்துள்ள அவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்ஆனை படித்து வந்த இவர் இதன் மூலமாக தன்னில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்…
-
- 7 replies
- 1k views
-
-
டொனால்ட் ட்ரம்ப்பின் சிலையை அவமானப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெண் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான தமது எதிர்ப்பை பெண்கள் அமைப்பு ஒன்று வித்தியாசமாகக் காட்டியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள நூதனசாலை ஒன்றில் நேற்று ட்ரம்ப்பின் முழு உருவ மெழுகுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ‘ஃபிமென்’ (FEMEN) என்ற பெண் உரிமைகளுக்கான அமைப்பைச் சார்ந்த பெண்ணொருவர், திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை மீறிக்கொண்டு சிலைக்கருகில் சென்றார். சிலைக்கருகே சென்றதும் அவர் தனது மேலாடையைக் கழற்றியெறிந்ததுடன் ட்ரம்ப்பின் சிலையின் மறைவுப் பகுதியைக் கைகளால் பிடித்துக்கொண்டு கீழ்த்தரமான கோ…
-
- 1 reply
- 391 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டிரம்ப் பதவியேற்றால் மெக்ஸிகோவில் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது குறித்த ஒரு பார்வை. * பிரிட்டனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதக் கருவை பரிசோதனைக்காக வைத்திருக்கும் காலத்தை இருமடங்காக்க கோரிக்கை. * பிரிட்டனில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் ஏன் சிறப்பு கமெராக்களை பொருத்துகிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 460 views
-
-
கைதிகளுக்கு ஒபாமாவின் இறுதிப் பரிசு! தனது அதிகாரத்தை பயன்படுத்தி 209 பேருக்கு தண்டனையை குறைத்தும், 64 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இறுதி பரிசை வழங்கியுள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதனால் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறவுள்ள நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை கால…
-
- 0 replies
- 274 views
-
-
லேடனைக் காட்டிக்கொடுத்த மருத்துவரை விடுவிக்க மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி அல்-கைதா தலைவர் ஒஸாமா பின் லேடன் குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கொடுத்ததாக நம்பப்படும் பாகிஸ்தானிய மருத்துவரை விடுவிக்கவோ அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கவோ போவதில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறித்த மருத்துவரின் விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி ஊடகங்களில் பேசிவருவது குறித்து பாகிஸ்தான் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பின் லேடனின் மரணத்தையடுத்து, பாகிஸ்தானின் மருத்துவரான ஷகீல் அஃப்ரிடி என்பவரை அமெரிக்க இராணுவம் பாராட்டியிருந்தது. அவரது உதவியுடனேயே பின் லேடனைக் கொல்ல முடிந்தது என்று…
-
- 0 replies
- 568 views
-
-
ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி – ஐ.நா ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகி உள்…
-
- 0 replies
- 376 views
-
-
எங்கள் நாட்டிற்கு வர வேண்டாம்: அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசு பெற்ற அர்ஜெண்டினர் கடிதம் 1980 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல். இவர் தங்கள் நாட்டிற்கு வர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அர்ஜெண்டினா நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற 1976-களின் தொடக்கத்தில் இருந்து ராணுவ ஆட்சியில் ஏராளமான படுகொலைகள் நடைபெற்றன. சோசலிஷ்டுகள் என்று கருதப்படுபவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 1983 வரை ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற மார்ச் 24-ம் நாள் ஆண்டுதோறும் விடுமுறை தினமாக அர்ஜெண்டினாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்…
-
- 0 replies
- 303 views
-
-
விடை காணமுடியா புதிராகவே அதிகாரபூர்வமாக முடிவுற்றது எம்.எச்.370 விமானத் தேடல் பணி கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் வேலைப்பாடு. | கோப்புப் படம். மலேசிய விமானம் எம்.எச்.370 நடுவானில் மாயமாகி 3 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பல்வேறு கணிப்புகளுடனேயே பெரிய புதிராக முடிந்து போயுள்ளது விமானத் தேடல் பணி. மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய இந்தத் தினத்தில்தான் 239 பயணிகளுடன் மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானது. தேடுதல் குழுவினருக்கு விமானத்தின் சிறு சுவடு கூட கிடைக்கவில்லை, இதனால் வெறுப்பும் வியர்த்தமுமே எஞ்சிய நிலையில் தேடுதல் பணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோம…
-
- 0 replies
- 294 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒற்றை சந்தையாக பிரிட்டன் அணுகாது - தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுகின்றபோது ஒற்றை ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்திருக்கிறார். லண்டனில் லன்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய உரையில், ஒற்றை சந்தையில் தொடர்ந்து நீடிப்பது, ஐரோப்பிய ஒன்றிய விதிகளை வகுப்பதில் இடம்பெறாமல், அவற்றை ஏற்றுகொள்வதற்கு சமமானதாகும் என்று அவர் தெரிவித்தார், சுங்க வரி விதிப்பு ஒன்றாக இருக்கும் ஒரு நிலை குறித்து பேசிய அவர், இதில் முழு உறுப்பினர் என்ற நிலை, பிரிட்டன் அதனுடைய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளில் உருவாக்கி கொள்வதை தடுக…
-
- 0 replies
- 524 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * புதுவருட தினத்தன்று இரவு விடுதியில் தாக்குதல் நடத்தியவரை துருக்கிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். * டொனால்ட் டிரம்புக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அதிகரிப்பு! தாய்வான் குறித்து தொடர்ந்து எரிச்சலூட்டினால், பதிலடி தருவோம் என்கிறது சீன அரச ஊடகம். * எத்தியோப்பிய மக்களுக்கு சீனாவில் செய்த கார்கள் மீது விருப்பமில்லை. பெருநிறுவனங்களின் பெறுமதியான கார்கள்தான் வேண்டுமாம்! அதற்கான வழிதான் இது.
-
- 0 replies
- 518 views
-
-
சந்திரனில் இறுதியாக காலடி எடுத்த வைத்தவர் மரணமானார் சந்திரனில் இறுதியாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான், அமெரிக்காவில் காலமானார். அமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான் கடந்த 1972ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார். இதுவரை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் இறுதியாக அங்கு ஆய்வுகளை செய்தவர் என்னும் பெருமைக்குரியவரான எயூஜின் கெர்னான், உடல் நலக்குறைவால் தனது 82ஆவது வயதில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹொஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று மரணமடைந்தார். யூஜினின் மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.…
-
- 2 replies
- 640 views
-