உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
Published By: RAJEEBAN 27 FEB, 2025 | 12:31 PM குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி, இரண்டு கிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார். எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது. திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராக ஷாம் அல் சான்பாரி மாறினாள். சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்கா? ரஷ்யா – உக்ரேன் இடையே போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரோனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதோடு, ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் குறித்த சந்திப்பின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றது. ட்ரம்ப்பின் முந்தைய பதவிக்காலத்தில், இருவரும் சந்தித்தபோது, சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆனால், தற்போது வெறும் 13 வினாடிகளுடன் கைகுலுக்கியதுடன், இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்படுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிக…
-
- 1 reply
- 361 views
-
-
ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை மேற்கொள்ளும் இங்கிலாந்து பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புடன், இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (27) சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். இரு தலைவர்களும் முன்னதாக சந்தித்திருந்த போதிலும், 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், டொனால்ட் ட்ரம்ப்பை இங்கிலாந்துப் பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் ஆறாவது தலைவர் ஸ்டார்மர் ஆவார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரேனின் வெள்ளை மாளிகை விஜயத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பயணம் அமையவுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…
-
- 0 replies
- 251 views
-
-
ட்ரம்ப் நிர்வாக வெளிநாட்டு உதவி; கூட்டாட்சி நீதிவானின் உத்தரவை இடைநிறுத்தும் உயர் நீதிமன்றின் தீர்ப்பு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வெளிநாட்டு உதவி நிதியை ஒப்பந்ததாரர்களுக்கும் மானியம் பெறுபவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற கூட்டாட்சி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தும் அறிவிப்பை அமெரிக்க உயர் நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் புதன்கிழமை (26) வெளியிட்டார். புதன்கிழமை இரவு 11:59 வரை காலக்கெடு விதித்த வொஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி அமீர் அலியின் உத்தரவை நிறுத்தி வைத்து ராபர்ட்ஸ் இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். நிர்வாகத் தடை என அழைக்கப்படும் இந்த உத்தரவுக்கு ராபர்ட்ஸ் எந்த காரணத்தையும் வழங்கவில்லை. இது அமீர் அலியின் தீர்ப்பைத் தடுக்க நிர்வ…
-
- 0 replies
- 211 views
-
-
ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது February 27, 2025 9:46 am ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளின் உடல்கள் தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் உடல்கள் கெரம் ஷாலோமிடம் ஒப்படைக்கப்பட்டன. மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஒப்படைத்தது. இஸ்ரேல் கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த வழியில் இஸ்…
-
- 0 replies
- 231 views
-
-
27 FEB, 2025 | 11:16 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு எதிராக விரைவில் 25 வீதவரியை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து அளவுக்கதிகமான இலாபத்தை பெறும் நோக்கத்துடனேயே ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தினை நடத்தியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர் இல்லாத எலொன்மஸ்க் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை விதிப்பது தீர்மானித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம் நாங்கள் விரைவில் இது குறித்துஅறிவிப்போம் 25 வீத வரியாக காணப்படும் கார்கள் மற்றும் ஏனைய பொருட்கள் …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா? Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக இருந்து வருகின்றது. உளவுத்தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமான பீற்றர் நவாரோ (Peter Navarro) என்பவர், தற்போது கனடாவை Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகிறார் எனத…
-
- 0 replies
- 348 views
-
-
Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 11:38 AM பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது. பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது. 162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மரு…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 FEB, 2025 | 10:21 AM இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
பெரும் விபத்தை தவிர்த்த சவுத்வெஸ்ட் விமானம். தரையிறங்கும் சவத்வெஸ்ட் விமானம் குறுக்கே வந்த விமானத்தைக் கண்டு மீண்டும் மேலெழுந்து பாரிய விபத்தையும் உயிர்ச் சேதத்தையும் தவிர்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் குறுக்கே போன விமானம் தனியாருக்கு சொந்தமான ஜெற் விமானம். அனுமதியேதும் இன்றி குறுக்கே போகிறது. சவுத்வெஸ்ட் விமானியை பாராட்ட வேண்டும். அதேநேரம் ஜெற் விமான விமானியின் லைசன்ஸ்சை ரத்துப் பண்ண வேண்டும்.
-
- 3 replies
- 413 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 06:37 AM ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான ஏஎவ்டி 20 வீத வாக்குகளை பெறும் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/207482
-
- 2 replies
- 342 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் 2008ஆம் ஆண்டில் இரு நாடுகள் தீர்வை முன்வைத்தார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் இப்போது உங்களுக்கு முன்மொழிவதைப் போல, அடுத்த 50 ஆண்டுகளில் எந்தவொரு இஸ்ரேலிய தலைவரும் உங்களுக்கு முன்மொழிவதை நீங்கள் காண முடியாது." "கையெழுத்திடுங்கள்! கையெழுத்திடுவதன் மூலம் வரலாற்றை மாற்றுவோம்!" அது 2008ஆம் ஆண்டு. அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரக்கூடும் என்று தான் நம்பிய ஓர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு பாலத்தீன தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று சாத்தியமற்றதாகத் தோன்றும், இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாக அந்த ஒப்பந்த…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ் பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பண்டைய எகிப்தில் மம்மி ஆக்கப்பட்ட உடல்கள், 5,000 ஆண்டுகளாக சர்கோபாகஸ் எனப்படும் கல்லால் ஆன சவப்பெட்டியில் இன்னும் நல்ல வாசனையுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற 9 மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்து வந்த வாசனையின் விதத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் வாசனையை கண்டறிந்தனர். இந்த வாசனையை, வேதியியல் ரீதியாக மீண்டும் உருவாக்கினால், மற்றவர்களும் இந்த மம்மிகளின் வாசனையை அனுபவிக்கலாம் என்றும் உள்ளே இருக்கும் உடல்கள் எப்போது அழுக ஆரம்பிக்கும் என்பதை அறிய இது உதவும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "மம்மி ஆக்கப்பட்ட உடல்…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப…
-
-
- 65 replies
- 3.3k views
- 3 followers
-
-
உக்ரேன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்! ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையில் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 267 ஏவுகணை தாக்குதலை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் 13ற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் இந்த பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க முன்னெடுத்துவரும் நிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேற்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு ரஸ்யா எத…
-
- 0 replies
- 268 views
-
-
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 25 Feb, 2025 | 10:16 AM உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்ப…
-
- 1 reply
- 230 views
-
-
இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்! இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றது. இதற்கு பதிலீடாக இஸ்ரேல் தமது நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகின்றது இந்த நிலையில் பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்தது. கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நால்வரின் உடல்கள் காசாவின் முக்கிய நகரில் வைத்து செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேல…
-
- 1 reply
- 396 views
-
-
சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி Published By: Rajeeban 25 Feb, 2025 | 11:41 AM சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என…
-
- 0 replies
- 292 views
-
-
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர் பணத்தினை நிதியுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்ற அமைதி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து 5 பில்லியன் டொலரினை உதவியாக உக்ரைனுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். நிதியுதவி உக்ரைனில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது உரையாற்றிய ட்ரூடோ, மேலும் 25 லேசான கவச வாகனங்கள், 2 போர்ப்பாதுகாப்பு வாகனங்கள், F-16 விமானம் பயிற்சி கருவிகள் மற்றும் ஆற்றல் பாதுகாப…
-
- 0 replies
- 256 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 23 பிப்ரவரி 2025, 18:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 பிப்ரவரி 2025, 18:31 GMT யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, "யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்," என்று கூறினார். யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
உக்ரேன் போர் 3 ஆண்டு நிறைவு; தலைநகரில் ஒன்று குவிந்த ஐரோப்பிய, கனேடிய தலைவர்கள்! ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்ள தலைநகர் கீவ்வில் ஒன்று கூடினர். இந்த விஜயத்தின் போது உக்ரேனை ஆதரிப்பது குறித்தும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவர்கள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரேன் அல்லது ஐரோப்பா சம்பந்தப்படாமல் அமெரிக்கா எந்த சமாத…
-
- 0 replies
- 274 views
-
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம் BatticaloaJanuary 30, 2025 அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது. இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று அ…
-
-
- 41 replies
- 2.2k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC கட்டுரை தகவல் எழுதியவர், கேட்டி ரஸ்ஸல் பதவி, கல்ச்சர் & மீடியா ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேர்காணலின் இறுதியில்தான் பில்கேட்ஸ் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்று கூறினார். அவரின் தொண்டு நிறுவனம் மூலம், நோய்களைத் தடுக்க, வறுமையை ஒழிக்க அவர் நன்கொடை அளித்துள்ளார். ''நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை நான் கொடுத்திருப்பேன். என்னிடம் கொடுக்க இன்னும் நிறைய உள்ளது'' என்று கூறுகிறார் பில் கேட்ஸ். பல்கேரியா நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு இது. இதை வைத்துக் கொண்டு லண்டனையும் பர்மிங்காமையும் இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையான எச்.எஸ்.2 என்ற ரயில்வே லைனையே முழுமையாகக் கட்டிவிடலாம். …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 02:09 PM காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின்அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன. காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது. காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம். காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் …
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
23 FEB, 2025 | 09:39 AM பிரான்சின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார், தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பயங்கரவாத கண்காணிப்பிலிருந்தவர் இதன் காரணமாக அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-