Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறார். தில்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இந்தியா கடந்த வாரம் முடிவெடுத்தது. இதையடுத்து முறையே ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய சார்க் உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் சார்க் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்…

    • 0 replies
    • 377 views
  2. இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் பல்லாண்டு போருக்கு முடிவு காண்பதற்கான போர்நிறுத்ததை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரித்தது. அமைதிக்காக போராட ஃபார்க் அமைப்பும், கொலம்பிய அதிபரும் உறுதி. * எத்தியோப்பியாவில் ஐம்பது பேர் கொல்லப்பட்டது குறித்து முரண்பாடு. பாதுகாப்பு படையினர் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்ட, பிரதமரோ ஆர்ப்பாட்டக்காரர்களை குறை கூறுகிறார். * சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி. கருக்கலைப்புக்கு அனுமதி அவசியம் என்கிறார் பெண் அதிபர்.

  3. ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்க…

  4. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது' என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்.30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ந…

  5. குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு' அகதிகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் ஹங்கேரி அரசு ஆபத்தானதொரு விளையாட்டை மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் எச்சரித்திருக்கிறார். ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள "கோட்டா முறையை" ஏற்று கொள்வதா, மறுப்பதா என்பது தொடர்பாக ஹங்கேரி மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். இந்த கோட்டா முறைக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஒர்பான், ஐரோப்பிய சட்டங்களின் சட்டபூர்வ தன்மைக்கு சவால் விடுத்து…

  6. மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் - தெரீசா மே பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்வது அதனை மீண்டும் இறையாண்மையும், சுதந்திரமும் கொண்ட நாடாக உருவாக்கும். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கட்சி மாநாட்டில் அவருடைய முதலாவது உரையை வழங்குவதற்கு முன்னதாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்கின்ற தி…

  7. சிரியாவில் யுத்தம் ; உலக மக்களை கண்கலங்க வைத்த 30 நாள் குழந்தை (வீடியோ இணைப்பு) சிரியாவில் பிறந்து 30 நாட்களேயான குழந்தையை இடிபாடுகளுக்கிடையே சிக்கியநிலையில் அக்குழந்தையினை மீட்ட மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி ஜார்ஜனஸ் நகருக்கு அருகே உள்ள இத்லிப் கிராமம். இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்குண்டு இ…

  8. 900 மில்லியன் டாலர் நஷ்ட கணக்கு: 18 ஆண்டுகள் வரிகட்டாமல் தப்பினாரா டிரம்ப்? டொனால்ட் டிரம்ப், தான் 900 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நஷ்டம் அடைந்ததாக தாக்கல் செய்திருக்கும் 1995 ஆம் ஆண்டின் வருமான வரி தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நஷ்டம் மிகப்பெரியது என்றும்; இதனால் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான அவர், சட்டப்பூர்வமாகவே 18 வருடங்கள் வரிச் செலுத்தாமல் இருக்க உதவியிருக்கும் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டிரம்பின் வருமான வரி குறித்த தகவல்களை வெளியிட மறுத்த டிரம்பின் பிரச்சார குழுவினர், இழப்பீட்டின் அளவு குறித்து உறுதி செய்யவும் இல்லை அதே சமயம் அதனை மறுக்கவும் …

  9. பிரிட்டனை மீண்டும் சுதந்திர நாடாக மாற்ற அடுத்த வருடம் புதிய சட்டம்: தெரீசா மே பிரிட்டனை மீண்டும் "இறையாண்மை மற்றும் சுதந்திரம்" கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தெரீசா மே சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக அனுமதித்த சட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாட்டின் தேர்ந்தெடுப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த வல்லமையும் அதிகாரமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் ஆனால் பிரிட்டன் சட்டபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வரை அந்த சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரீசா மே தெரிவித்துள்ளார்…

  10. பில் கிளிண்டனை கை தட்டி அழைத்த ஒபாமா அமெரிக்க அதிபர் பாரம் ஒபாமா,முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி.| படம்:ஏபி அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டனை "பில் வாங்க போகலாம், நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று இரு முறை கைத்தட்டி அழைத்தார் ஒபாமா. இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பில் கிளிண்டனும் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கா செல்வதற்கான விமானத்தின் வாசலில் ஒபாமா நின்று கொண்டிருக்க, பில் கிளிண்டன் தரை தளத்தில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் பொறுமையிழந…

  11. சார்க் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைப்பு இலங்கை உட்பட 5 நாடுகள் புறக்கணிப்பால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19ஆவது மாநாடு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள தையடுத்து, மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அர…

  12. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் சென்னை: மதுரை, கீழடி அருகில் களஅருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கோவை வன்முறை சம்பவத்தை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கிர…

  13. சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் அலெப்போ நகரிலுள்ள மருத்துவமனைகளும் வான்தாக்குதல்களில் இருந்து தப்பவில்லை. அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை அங்குள்ள மிகச்சில மருத்துவர்களின் கைகளிலேயே உள்ளது. தரையில்வைத்து மூளை அறுவை சிகிச்சை, சிறார்களின் முதுகுத்தண்டில் கொத்து குண்டுகளின் தாக்குதல், மருத்துவமனையின் கூரை இடிந்துவிழுந்ததால் உயிரிழப்புகள் ஆகியவை அலெப்போவில் இடம்பெற்றுள்ளன. இது குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி.

  14. 'கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை..!' காவிரி வழக்கில் கொதித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக,…

  15. வீடுகளை காலி செய்யும் இந்தியா - பாக்., எல்லைகளில் வசிக்கும் கிராமவாசிகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வசிக்கும் கிராமவாசிகள், இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகும் என்பதால் தங்கள் வீடுகளைவிட்டு உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர். இவர்களை போன்று பாகிஸ்தானிலும் எல்லையோரம் வசிக்கும் கிராமவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாழன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ,பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்தியா அறிவித்ததை அடுத்து, இந்த இடம்பெயர்தல் நடைபெறுகிறது. தனது படைவீரர் ஒருவர் சர்ச்சைக்குரி…

    • 4 replies
    • 573 views
  16. ஈராக்கில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படை தாக்குதல் ஈராக் மொசூல் நகரத்தில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படையினர் அதிகாலை முதல் தொடர் தாக்குதல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ள்ஸ் டி கோல் விமானந் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ராவூல் தாக்குதல் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136502/language/ta-IN/article.aspx

  17. இன்றைய நிகழ்ச்சியில், * அதிபர் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தை நிராகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்; செப்டம்பர் பதினோறு தாக்குதலுக்காக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க அமெரிக்க பிரஜைகளுக்கு அனுமதி. * சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையமுயன்று ஆழ்கடலில் மரணித்தவர்களின் குடும்பங்களை சந்தித்தது பிபிசி. * இனஅடையாளத்தை மறைக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்லக்கூடும்? அறுவை சிகிச்சை மூலம் அடையாளத்தை மாற்ற முயன்றவரின் பிரத்யேக பேட்டி.

  18. அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: பலர் படுகாயம் என தகவல் ] நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவ்விபத்தில் பலர் கா…

  19. 1996 ஆம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியுடன் உடற்பருமன் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மோதல் 2016-09-29 14:57:56 1996 ஆம் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ரா­ணி­யாக (பிர­பஞ்ச அழ­கு­ராணி) தெரி­வா­கி­யி­ருந்த யுவ­தியை அவரின் உடற்­ப­ருமன் கார­ண­மாக திட்­டிய டொனால்ட் ட்ரம்ப், 20 வரு­டங்­களின் பின்னர் இப்­போது பதி­ல­டியை எதிர்­கொண்­டுள்ளார். அமெ­ரிக்கக் குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்ப்­புக்கும் ஒரு முன்னாள் அழ­கு­ரா­ணிக்கும் ஏன் மோதல் ஏற்­பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். மிஸ் யூனிவர்ஸ் மற்றும் மிஸ் யூ.எஸ்.ஏ. அழ­கு­ராணி போட்­டி­களை நடத்­திய மிஸ் யூனிவர்ஸ் இன்­கோர்…

  20. காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது). காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது . இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்…

  21. சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா சீன பெருஞ் சுவர். உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே 30,000 மக்கள் வந்து செல்கின்றன. இந்த புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட உள்ளது. …

  22. இன்றைய நிகழ்ச்சியில், * முந்நூறு பேரை பலிகொண்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையே காரணம் என் சர்வதேச வழக்கு தொடுநர்கள் குற்றச்சாட்டு. * இஸ்ரேல் நிறுவனர்களில் ஒருவரான ஷீமோன் பெரெஸ் காலமானார்; இஸ்ரேலின் முன்னாள் அதிபரின் வரலாற்றுப்பாத்திரம் குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு. * வரலாற்றில் முதல் முறையாக மூன்று பேரின் குழந்தையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்; மரபணு நோய்ப்பரவலை தடுக்கும் முயற்சியில் மற்றொரு மைல்கல்.

  23. சீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம் (படங்கள் இணைப்பு) சீனாவின் புயூஜியான் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் கயாமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கிய ’மெகி’ சூறாவளி சீனாவின் வடமாகாணமான பியூஜியானை தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பாக அனுப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதியின் விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த மழையுடன் இன்று அதிகாலை கரையை கடந்த சூறாவளியி…

  24. ஐக்கிய அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை! - விண்ணப்பித்த முதல் பெண் [Sunday 2016-09-25 19:00] ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்தவர் ஒரு பெண் ஆவார்உ ள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார். …

    • 0 replies
    • 461 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.