Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 குழந்தைகள் அடங்குவதாக கொரியாவின் சுரங்க அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா நகரில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெய்த கனமழைக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. ஜனவரி மாத இறுதியில் இதே சுரங்கத்தில் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது. ரூபாயா சுரங்கம் உலகின் தாதுக்கில…

  2. ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்! Mar 2, 2026 - 01:18 PM மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளன. நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிப்பதற்கான தற்காப்புத் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி…

  3. அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமருக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடன் அவ்வாறான எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையையும் தாம் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் எத…

  4. ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி Published By: Vishnu 05 Mar, 2026 | 05:23 AM அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில், ஹோர்மஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான், சீனாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. போர்நிலையில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்ததற்கும், பொருளாதாரத் தடைகளை ஏற்க மறுத்ததற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகளவில் கடத்தப்படும் மசகு எண்ணெயின் சுமார் 20% இந்த நீரிணை வழியாகச் செல்கின்ற நிலையில், இந்த மார்க்கத் தடைகள் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத…

  5. அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் உறுதி Published By: Vishnu 05 Mar, 2026 | 05:35 AM ஈரான் அரசு அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாது என, மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல நாடுகள் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய அழைப்புகளுக்கு பதிலளித்த முகமது மொக்பெர், அமெரிக்கர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அடிப்படையும் இல்லை. எங்கள…

  6. "ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய் வணிக செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்காவுக்கு தடை செய்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், டிரம்பின் அச்சுறுத்தல் "சர்வதேச சட்டத்தை முறிப்பதாகும்" என்று தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் இது குறித்து தெரி…

  7. "ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு" - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Published By: Vishnu 04 Mar, 2026 | 06:30 PM ஈரானால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் எந்த சந்தேகமும் இல்லாமல் அழிக்கப்பட வேண்டிய எமது இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு

  8. 4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து! இந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவம் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு நிறுத்தும் என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆப்கானியர்களுக்கு திறமையான வேலை விசாக்களையும் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசா துஷ்பிரயோகம் பரவலாக இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலில் இங்கிலாந்துக்கு கல்வி பயில்வதற்காக வந்த பின்னர் புகலிடம் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ள…

  9. போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை Mar 4, 2026 - 02:45 PM பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும் தீவிரமடைவதையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதையும் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சீனா கோரியுள்ளது. இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சர்வதேச உறவுகளில் உலக நாடுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது …

  10. '4 கப்பல்கள் மீது தாக்குதல்': இந்திய மாலுமிகளின் நிலை என்ன? வளைகுடா நிலவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 'நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனால் சற்று பயம் ஏற்பட்டது. ஆனால், 'தைரியமாக இருங்கள்' என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து செல்போனில் தகவல் அனுப்பிவந்தனர்' என்கிறார் துபையில் வசிக்கும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடேயுஸ் அந்திரியாஸ். வணிக கப்பல் கேப்டனாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ள இவர், தற்போது துபையில் ஒருவருடன் இணைந்து சுற்றுலா படகு நிற…

  11. லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேலிய படைக்கு அனுமதி – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 05:03 PM இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையில், தாமும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்து, இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க லெபனானில் உள்ள கூடுதல் மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு (IDF)க்கு அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், “லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஹ் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அந்த அம…

  12. தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம் 28 Feb, 2026 | 06:33 PM தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 40 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 24 மாணவிகள் உயிரிழந்ததாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மினாப் நகர ஆளுநர், ஈரானிய செய்தி நிறுவனம் Mehr-க்கு வழங்கிய தகவலில், மினாப் நகரில் இன்று இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு ஆரம்பப் பாடசாலை இலக்கு வைக்கப்பட்டது என்று தெரிவ…

  13. அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி! Published By: Vishnu 04 Mar, 2026 | 03:24 AM அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆவார். ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இந்திய-அமெரிக்க மாணவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் "அல்லாஹ்வின் சொத்து" என்ற வாசகங்களும் இருந்த…

  14. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு Mar 3, 2026 - 07:06 PM ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். "ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையில், இந்தப் போரை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதானமான மற்றும் ஒரே காரணமும் அதுவேயாகும்," என லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டார். ஈரான் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் தற்போது பிராந்தியம் முழுவதும் உணரப்படுவதாகவும், குறிப்பாக அரபு நாடுகள் இதற்கான பொருளாதார ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதா…

  15. ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் - UNESCO கவலை! Mar 3, 2026 - 03:15 PM யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரண்மனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்து, யுனெஸ்கோ அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த அரண்மனை, ஈரானிய கலாச்சார அடையாளத்தின் முக்கியக் குறியீடாகும். மேலும், சர்வதேச சட்டத்தின்படி இவ்வாறான இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தி…

  16. ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு Mar 2, 2026 - 07:47 PM மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இராஜதந்திர ரீதியில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும…

  17. மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% கொண்டு செல்லும் இந்த ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஜலசந்தியின் நுழைவாயிலில் சர்வதேச கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டது. நீடித்த மோதல் எரிசக்தி விலைகளை இன்னும் உயர்த்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். திங்கட்கிழமை ஆசியாவில் ஆரம்ப வர்த்தகத்தில், உலகளாவிய எண்ணெய…

  18. பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே! பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், பிரித்தானிய புகலிடக் கொள்கையில் கடந்த பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. புதிய விதிகளின்படி, அகதி அந்தஸ்து பெற்றவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை (இரண்டரை ஆண்டுகள்) மறுபரிசீலனை செய்யப்படும். அந்த காலக்கட்டத்தில் அவர்களின் தாய்நாடு பாதுகாப்பானதாகக் …

  19. ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க் Published By: Vishnu 02 Mar, 2026 | 07:49 AM ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது. எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' என எலான் மஸ்க் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறுகையில், சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி சீனா வேகமாக நகர்கிறது மற்றும் மின்சாரம், இது புதைபடிவ எரிபொருட்களின் (எண்ணெய் மற்றும் எரிவாயு) தேவையை வெகுவாகக் குறைக்கும். அவர் தனது x கணக்கில் ஒரு பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.…

  20. ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு 02 Mar, 2026 | 10:17 AM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய பாரிய இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கப் பொதுமக்களிடையே மிகக் குறைந்த அளவிலான ஆதரவே கிடைத்துள்ளதாக அண்மைக்காலக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய ரீதியான பதிலடித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (01) வெளியாகின. கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள் அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் (25%) மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 43 சத…

  21. ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்! 01 Mar, 2026 | 05:44 PM ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷியா கொள்கைவாதியான அலிரேசா அராபி, ஈரானின் மத மற்றும் அரசியல் விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். கமேனியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் அதிகாரக் கட்டமைப்பை வழிநடத்தும் உயரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைவரைத் தீர்மானிக்கும் மற்றும் வழிகாட்டும் இந்தக் கவுன்சிலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்…

  22. கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது 23 Feb, 2026 | 09:47 AM அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தாக்கியுள்ள மிக மோசமான பனிப்புயல் காரணமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9:00 மணி முதல் அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரதப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர சேவைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் அனர்த்த நிவாரணப் பிரிவினரின் வாகனங்களைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்கள் வீதிக…

  23. இரான் உண்மையில் அணு ஆயுதத்தை தயாரிக்கிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் உள்ள ஒரு சுவரொட்டி, யுரேனியம் செறிவூட்டும் உபகரணங்களையும், ஜூன் 2025-ல் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானிய விஞ்ஞானிகளையும் சித்தரிக்கிறது. கட்டுரை தகவல் லூயிஸ் பார்ருச்சோ பிபிசி உலக சேவை 26 பிப்ரவரி 2026, 05:29 GMT வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இரான் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா அப்பகுதியில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் குவித்துள்ளது. பிப்ரவரி 19 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு "அர்த்தமுள்ள ஒப்பந்தம்" எட்டப்படாவிட்டால் "மோசமான விஷயங்கள்" நடக்கும் என்று எச்சரி…

  24. ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து February 28, 2026 ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். “நாங்கள் பெற வேண்டியதை அவர்கள் எங்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே எனக்கு இதில் ஆர்வமும் இல்லை,” என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஒப்பந்தம் ஏதுமின்றி முறிந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் குறித்த தனது கருத்தை டிரம்ப் கூறினார். ஈரானுக்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த தான் விர…

  25. ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம் Published By: Vishnu 28 Feb, 2026 | 05:27 AM ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் குடிமக்களை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளன. ஈரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசரகாலம் அல்லாத பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நாட்டை விட்டு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.