உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போதைய நிலையில் மெஜாரிட்டி புள்ளிகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.அதற்கான அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஒபாமாவும், ஹிலாரியும் போட்டியிட்டனர். இறுதியில் ஒபாமா வேட்பாளராக தேர்வு பெற்றார். அதை தொடர்ந்து ஒபாமாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த ஹிலாரிய…
-
- 0 replies
- 350 views
-
-
துருக்கி நாட்டின் வடகிழக்கு கிரெசன் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. சிகோர்ஸ்கி என்ற அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரமாண மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள். கருங்கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரமலான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக இராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ தலைமை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது உற…
-
- 0 replies
- 275 views
-
-
தென் ஆப்ரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சி, தனது தேர்தல் விளம்பரத்தில் மண்டேலாவின் குரலை பயன்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயக கூட்டணியின் விளம்பரத்தில், நீதி, அமைதி, வேலை, உணவு என்று மண்டேலாவின் குரல் ஒலிக்கிறது, பிறகு ஒரு இளம் பெண் வாக்குச்சாவடியின் உள்ளே நுழைகிறார்.அந்த பெண் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கிறார். இவ்வாறு அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெள்ளையின மக்களின் உரிமையைக் காப்பாற்ற, இறந்த தனது தாத்தாவின் பெயரை களங்கப்படுத்தியதாக மண்டேலா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் உள்ளூர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. …
-
- 0 replies
- 299 views
-
-
நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று புதிய அமைச்சர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை 2வது முறையாக நேற்று பெரியளவில் மாற்றியமைத்துள்ளார். இதில் எஸ்.எஸ்.அலுவாலியா, எம்.ஜே.அக்பர் உட்பட19 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அத்துடன் சிறப்பாக செயல்படாத ஐந்து அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையைக் கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.அதன்பிறகு, புதிய அமைச்சர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் ''புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நீங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவும் கடின உழைப்புடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாக பணியாற்…
-
- 0 replies
- 337 views
-
-
பாக்தாத் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ள நிலையில், மீண்டும் நேற்றிரவு அந்நாட்டின் விமான நிலையத்தின் மீது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு வளையப் பகுதிகள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்றதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், உறுதி செய்துள்ளனர். 20 குண்டுகளுக்கு மேல் வெடித்த சத்தம் கேட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் கூறியுள்ளார். விமான நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 509 views
-
-
பஞ்சாப் மாநிலம் வழியாக நுழைந்து தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அம்மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகள் வெவ்வேறு வாகனங்களில் வெடிப்பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தின் வழியாக டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தையும் தீவிர…
-
- 0 replies
- 286 views
-
-
பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு: ஆன்மிகத் தலைவர் வேதனை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனில் விஷத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் போக்கு பலமடங்கு அதிகரித்திருப்பதாக சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் ஆன்மிகத் தலைவர் ஜஸ்டின் வெல்பி தெரிவித்துள்ளார். சமூகத்தில் நிலவி வந்த அமைதி மற்றும் சகிப்புதன்மை தொடர்பான மெல்லிய ஓட்டின் மீது விரிசல் விழுந்திருப்பதாக ஆர்ச்பிஷப் வெல்பி தெரிவித்தார். இனவெறி மற்றும் பிற நாட்டவர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். உட்பூசல்களுக்கு பலியாகிவிடாமல் நல்லிணக்கத்தையும் அன்பையும் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண…
-
- 0 replies
- 332 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: 'ஹிலரி கிளிண்டன் மீது வழக்குப் பதியப்போவதில்லை' -எப்.பி.ஐ ஹிலரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்த போது, ரகசிய அரசு தகவல்களைப் பெற ஒரு அந்தரங்க மின்னஞ்சல் செர்வரைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிய பரிந்துரைக்கபோவதில்லை என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் கூறுயிருக்கிறது. அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் ரகசியத் தகவல்களை கையாள்வது குறித்த சட்டங்களை மீறியிருக்கலாம், ஆனால் அவர் வேண்டுமென்றே தவறாக நடந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று எப்.பி.ஐயின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறினார். இந்தப் பிரச்சனை அமெரிக்க நீதித்துறைக்கு விடப்பட்டு…
-
- 0 replies
- 278 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மாபெரும் வியாழக் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நாசாவின் ஜுனோ விண்கலம் நுழைந்தது. * மதீனாவில் முஹமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே நடந்த தற்கொலை தாக்குதலை உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். * கோடைகாலத்தில் ரம்ஷான் வருவதால், நோன்பு இருப்பவர்கள் இங்கு பிரிட்டனில் பதினெட்டு மணிநேரம் உண்ணாமல் இருந்தாக வேண்டும். அதனை இங்குள்ள முஸ்லிம் மாணவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு குறிப்பு.
-
- 0 replies
- 607 views
-
-
கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு பொருளாதாரச் சவால்கள் தெளிவாகியுள்ளன - இங்கிலாந்து வங்கி பொருளாதாரச் சவால்கள் என்று அது இனம் கண்டிருப்பவை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வாக்கெடுப்பின் விளைவாக தெள்ளத் தெளிவாகி இருப்பதாக பிரிட்டனின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தெரிவித்திருக்கிறது. மககள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு, பொருளாதாரப் பிரச்சினைகள் தெளிவாகியுள்ளன -இங்கிலாந்து வங்கி ஐரோப்பிய ஒன்றியத்தோடும், உலகோடும் புதிய வர்த்தகத் தொடர்புகளை பிரிட்டன் நிறுவுவதற்கு நேரம் எடுக்கும். வெளிநாட்டு முதலீட்டை பராமரிப்பது கடினமாக இருக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது. கடன்களை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகச…
-
- 0 replies
- 170 views
-
-
முழுக்க முழுக்க பெண்களை கொண்ட ராணுவ படைப்பிரிவு அமைக்க ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் யோசனை தெரிவித்துள்ளார். போர்க்கப்பல்களிலும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.டெல்லியில், வர்த்தக-தொழில் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு நேற்று ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- ஜான்சி ராணி, துர்கா ஆகியோர் பிறந்த நாடு, இந்தியா. ஆயினும், பல்வேறு காரணங்களால் பெண்கள் ஒதுங்கியே உள்ளனர். எனவே, நான் ராணுவ மந்திரி ஆனவுடன், பெண்களை போர் முனையில் ஈடுபடுத்த விரும்பினேன். அதன்படி, போர் விமானங்களில் பெண்கள் விமானிகளாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.ராணுவத்தில் ஆண்களின் ஆதிக்கம் இருப்பத…
-
- 0 replies
- 349 views
-
-
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த தாக்குதல் பற்றி கருத்தெதும் தெரிவிக்காமல் உள்ள இந்திய முஸ்லீம்களின் மௌனம் குறித்து பாலிவூட் நடிகர் இர்பான் கான் நேற்று தனது முகநூலில் கேள்வி எழுப்பியிருந்தார்.அவரின் இந்தப் பதிவு, உடனடியாக பலரது கவனத்தையும் பெற்று சமுக வலைதளமான முகநூலில் வேகமாகப் பரவியது.இர்பான் கானின் பதிவுக்கு 1500-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிலாக கிடைத்துள்ளன. இர்பான் கான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பல முஸ்லீம்கள் பதிலளித்துள்ளனர்.டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளரான வாசிம் அக்ரான் தியாகி இது குறித்து குறிப்பிடுகையில், ''ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரும் முஸ்லீம்கள் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிர…
-
- 0 replies
- 232 views
-
-
டாக்கா உணவக தாக்குதலுக்காக தீவிரவாதிகளாக மாறிய பணக்கார இளைஞர்கள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான உணவகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் என்றும் அதில் ஒருவர் ஆளும்கட்சி தலைவரின் மகன் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. டாக்காவில் உள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற உண வகம் மிகவும் பிரபலமானது. சுற்றுலா வுக்கு வரும் வெளிநாட்டு பயணி களுக்கு இந்த உணவகம் பிடித்த மான இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் இந்த உணவகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏழு பேர் அங்கி ருந்த 19 வயது இந்தி…
-
- 1 reply
- 356 views
-
-
சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் திங்களன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மதீனா நகரில் அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளி வாசலின் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அருகில் கார் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் தற்கொலை குண்டுதாரியுடன் படையினர் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புனித மதீனா நகரிலுள்ள அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளிவாசல் இதேவேளை கத்தீவ் நகரிலும் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் தற்கொலை குண்டுத்தாக்குல் ஒன்று இடம்பெற்றதாக செய்தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
பதவி விலகினார் நைஜல் ஃபராஜ் ஐக்கிய இராச்சியத்தின் தேசியவாதக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் பராஜ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு, முக்கியமான இருவரில் ஒருவரான பராஜ், அவ்வாறு விலகி இரு வாரங்களுக்குள், தனது கட்சித் தலைமையிலிருந்து விலகியுள்ளார். எப்போதுமே, முழுநேர அரசியல்வாதியாக இருப்பதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்த பராஜ், ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகியுள்ள நிலையில், அரசியல்வாதியாகத் தன்னால் அடையக்கூடியவற்றை, தான் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். "விலக வேண்டுமென்ற தரப்பு, சர…
-
- 2 replies
- 622 views
- 1 follower
-
-
பிரிந்தாலும் பிரச்சினை! கடந்த இரு வாரங்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. ஆர்பிஐ கவர்னராக இரண்டாம் முறை நீடிக்கப் போவதில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டார் (ரெக்ஸிட்). அடுத்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறலாம் என பொது வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்துவிட்டன (பிரெக்ஸிட்). மூன்றாவது சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துவிட்டார் லயோனல் மெஸ்ஸி (மெக்ஸிட்). இந்த மூன்றில் இரண்டு விஷயங்கள் இந்திய பொருளாதாரத்துடன் இணைந்தவை. ரெக்ஸிட் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் சரியும் போக்கு காணப்பட்டது. பிரெக்ஸிட்டால் பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. ரெக்ஸிட்டால் ஏற்பட்ட பாதிப்பை சி…
-
- 0 replies
- 414 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * டாக்காவில் வெள்ளியன்று நடந்த இஸ்லாமியவாதிகளின் தாக்குதல் தொடர்பில் வங்கதேசத்தில் இருவர் கைது. * பாக்தாதில் ஞாயிறன்று நடந்த குண்டுத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நூற்று அறுபத்தைந்தாக அதிகரிப்பு. கவலையீனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் இராக்கிய பிரதமர். * கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை வறட்சி பிடித்து ஆட்டும் நிலையில் ஒட்டக பாலுக்கான வணிக வாய்ப்பு அதிகரிப்பு.
-
- 0 replies
- 430 views
-
-
கிளி சாட்சியம்? கிளி ஜோசியம் கேட்டிருப்போம். கிளி சாட்சியம் சொல்லி கேட்டிருக்கிறோமா? அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் கணவர் மனைவி இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கணவர் கொலையில் முடிந்திருக்கிறது. துப்பாக்கியை எடுத்து வந்து கணவனை குறிவைத்த போது, 'ஹனி டோன்ற் சூட் மீ' என்று கணவர் பல தடவை அவலக்குரல் எழுப்பியுள்ளார். இந்த அவலக்குரலை அப்படி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கூண்டுக்கிளி. கொலை, வீடு பூந்த கொள்ளையடிக்க வந்தவர்களால் நடந்தது என்று மனைவி சொல்வதற்கு ஆப்பு வைத்த கிளியால் மனைவி கைதாகி நீதிமன்றில் நிற்கிறார். கிளியும் கோட்டுக்கு சாட்சியமளிக்கப் போகிறது. மனைவியின், சட்டத்தரணிகள் ஏற்கப்…
-
- 1 reply
- 548 views
-
-
டாக்காவில் தாக்குதல் நடத்தியவர்களில் புகைப்படங்கள் வெளியீடு பங்காளதேஷின் தலைநகர் டாக்காவில் குல்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைகதிகளாக பிடித்த 20 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 பேரின் புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது. அவர்களது பெயர் ஆகாஷ், பிகாஷ், டான், பட்கான் மற்றும் ரிபான் என வெளியிட்டுள்ளது. இவர்கள் டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர்களாகும். இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்களாகும்.கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியில் இருந்து மாயமாகி இருந்தனர். …
-
- 0 replies
- 432 views
-
-
இந்திய மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை எந்தெந்த தேவைகளுக்காக செலவிடுகிறார்கள்? என்பது குறித்து மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மாதிரி சேவை நிறுவனம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆய்வு நடத்தியது.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு உட்பட்ட 7,969 கிராமங்களை சேர்ந்த 47 ஆயிரத்து 535 குடும்பங்களிலும், 6,048 நகரங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 65 குடும்பங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சலூன் மற்றும் அழகு நிலைய சேவைகள், தொலைக்காட்சி, ரேடியோ சேவை, சலவை, பழுதுபார்த்தல், பராமரித்தல், தகவல் தொடர்பு, மதவழிபாடு, பொழுதுபோக்கு, கலாசார சேவைகள், வியாபாரம், பயணங்கள், தையல் என 14 சேவைகளுக்கான செலவினங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. …
-
- 0 replies
- 252 views
-
-
நியூயார்க் நகரில் குண்டு வெடிப்பு?: ஒருவர் காயம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மத்திய பூங்காவில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் படுகாயமடைந்தார். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த இச்சம்பவம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில் இது ஒரு வெடி விபத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். http://www.dinamani.com/latest_news/2016/07/03/நியூயார்க்-நகரில்-குண்டு-வெ/article3512144.ece
-
- 1 reply
- 436 views
-
-
ஹிலாரியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராக இருந்த போது, அலுவலகத் தேவைகளுக்காக தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கியைப் பயன்படுத்தினார் என்பது தொடர்பான விவகாரத்தில், ஹிலாரி கிளின்டனிடம் மூன்றரை மணிநேரங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விசாரணைகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அதிக கவனத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் உத்தேச வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமானவரா என்பதில், இந்த மின்னஞ்சல் விவகாரமும் அடிக்கடி உரையாடப்படும் நிலையில், இந்த விசாரணைகள் இடம்…
-
- 0 replies
- 283 views
-
-
சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல் சவுதி அரேபியா,ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை நடத்திய தற்கொலை தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே இன்று அதிகாலை தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று அதிகாலை ஜெட்டாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 566 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுமுன் நாடாளுமன்ற ஒப்புதல் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு நோட்டிஸ் பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வழிமுறையை, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொடங்கமாட்டோம் என்ற உறுதிமொழிகளை பிரிட்டிஷ் அரசிடம் கோரி கடிதம் எழுதியுள்ளதாக, லண்டனிலிருந்து செயல்படும் சட்ட நிறுவனம் ஒன்று கூறுகிறது. அத்தகைய ஒரு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று நோட்டிஸ் கொடுப்பது சட்டபூர்வமற்றதாக இருக்கும் என்றும் அத்தகைய முடிவு சட்டச்சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் என்றும், மிஷ்கான் தெ ரேயா என்ற இந்த நிறுவனம் கூறுகிறது. அது பெயர் குறிப்பிடப்படாத வர்த்தகர்கள் மற்றும் கல்வியாளர்கள…
-
- 0 replies
- 142 views
-
-
சிரிய எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கில்லிஸ் பகுதியில் துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்டோகன் பேசுகையில், சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போருக்கும், அதனால் ஏற்பட்ட 6 லட்சம் உயிரிழப்புகளுக்கும் மூலக்காரணமாக இருந்தவர் அதிபர் ஆசாத்துதான். ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிகப் பெரிய தீவிரவாதி ஆசாத் என கடுமையாக விமர்சித்துள்ளார். தற்கொலைப்படை தாக்குதல் நடந்த துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு ரகசியமாக வருகை தந்த அதிபர் எர்டோகன் அங்கு வைக்கப்பட்டிருந்த தாக்குதலில் உயிரிழந்த விமான நிலைய பணியாளர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், துருக்கியில் உள்ள சிரிய அகதிகளுக்கு துருக்கி குடியுரிமை வழங்கப்படும் எனவும் உறுத…
-
- 0 replies
- 654 views
-