Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவுக்கு தரைப்படைகளை அனுப்பக்கூடாது என்கிறார் ஒபாமா சிரியாவின் அதிபர் அஸாதை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில், மேற்குலக நாடுகள் தரைப்படைகளை அனுப்புவது தவறானாதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். பிபிசிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு பேட்டி பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். சிரியாவில் செயல்படும், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பயங்கரவாத இயக்கத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ள அவர், சுயாதீனமாக அங்கு இராணுவத் தலையீட்டைச் செய்வது உள்நாட்டு பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார். அங்கு உள்நாட்டு மோதல்களுக்கு பொறுப்பான, அதிப…

  2. பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன நூலக கட்டிடம் வீதியில் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் ச…

  3. இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் டெலாவர் மாகாணத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய கால் சென்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார். டிரம்ப் பேசியதாவது: "எனக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டேன். அந்த சேவை மையம் அமெரிக்காவில் இருந்து இயங்குகிறதா இல்லை வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். எதிர்முனையில் பேசியவர் நான் எதிர்பார்த்ததுபோலவே ஒரு இந்தியர். அவரிடம் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என…

  4. இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சர் நகரில் கணணி நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தலித் இளம் பெண்ணை இளைஞன் ஒருவர் வெளியே இழுத்து கட்டாயப்படுத்தி கடத்தி சென்று பாலியல் துஷ்பிரியோகம் செய்துள்ளான். அந்த பெண் தனக்கு உதவி செய்யுமாறு அங்கிருந்தவர்களை கேட்டும் யாரும் உதவி செய்ய முன்வராது நிலையில் பின்னர் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் மறுநாள் அந்த பெண்ணை விடுதலை செய்ததை தொடர்ந்து அந்த இளம் பெண் தனது தந்தையுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு கொடுத்தும் அந்த முறைப்பாட்டை வாங்கவில்லை. பின்னர் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு பொலிஸார் வழக…

    • 0 replies
    • 481 views
  5. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்து பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பேசும் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே | படம்: ஏ.பி. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஒப்பந்தம் கைய…

  6. வரலாற்றில் முதல் முறை: ஹிரோஷிமா செல்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். அணு குண்டு வீச்சில் நாசமான ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமா செல்வது இதுவே முதல் முறையாகும். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். அடுத்த 3 நாட்களுக்கு பின் நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டதில் 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதன் பிறகே அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்னர் மன்னிப்பு கேட்டாலும், இதுவரை அணுகுண்ட…

    • 2 replies
    • 521 views
  7. உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது (Full List) inShare அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, போப் பிரான்ஸிஸ், ஹிலரி கிளின்டன், ஆங் சான் சூ கி, பராக் ஒபாமா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதுடன், டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் பிரியங்கா ச…

  8. உத்தராகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டடு வரும் 27-ம் தேதிக்…

  9. இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த கோரிக்கையால் சர்ச்சை பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் 170 நாடுகள் கையெழுத்து; காலநிலைமாற்ற பாதிப்பால் வற்றிப்போன ஆப்ரிக்க சாட் ஏரியை நம்பியிருந்தவர்களின் இன்றைய நிலை எதிர்காலத்தின் முகம்; முதல்முறையாக அமெரிக்க டாலர் நோட்டுகளில் முன்னால் அடிமையாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணியின் படம் இடம்பெறுவது குறித்த செய்தி ஆகியவற்றைக் காணலாம்.

  10. 'பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும்' - ஒபாமா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்ற ஒபாமா பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாகுவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயற்திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே …

    • 1 reply
    • 433 views
  11. ஒமாபாவின் கருத்தால் பிரிட்டனில் சர்ச்சை ===================================== பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று வெளிப்படையாக கூறியதன் மூலம், அதிபர் ஒபாமா ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று கோரும் செய்ற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார். விண்ட்சர் அரண்மனையில் இன்று இராணியாரை சந்தித்த அவர், பிற்பகலில் பிரதமர் டேவிட் கமெரனையும் சந்தித்தார். ''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதில் திறமாக செயற்பட, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே சிறந்தது'' என்று ஒபாமா பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ளார். இவை குறித்த பிபிசியின் காணொளி.

  12. அமெரிக்க டாலரில் புதிய முகம் அமெரிக்காவின் 20 டாலர் நாணயத் தாளில் முதல் முறையாக ஆப்ரிக்க-அமெரிக்க கறுப்பினெப் பெண்மணி ஒருவரின் படம் இடம்பெறவுள்ளது. புதிய 20 டாலர் நோட்டில் ஹாரியட் அம்மையாரின் படம் அந்தப் பெருமையை பெற்றுள்ளவர் ஹாரியட் டப்மேன். அவ்வகையில் ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக ஒரு பெண்மணியின் படத்தை டாலர் நோட்டில் அமெரிக்கப் பிரஜைகள் காண்பார்கள். அவரது படத்துடன் கூடிய புதிய நாணயத் தாள்கள் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. ஹாரியட் டம்பேன் அம்மையார் ஒரு முன்னாள் அடிமை. அவரை அடிமையாக வைத்திருந்தவரும் பின்னர் நாட்டின் அதிபராகவும் இருந்த ஆண்ட்ரூ ஜான்கஸனின் படத்துக்கு பதிலாக இவரது படம் இப்போது 20 டாலர் நோட்டில் இடம்பெறும். ஹாரியட…

  13. ஜெர்மன் பீருக்கு ஏங்கலா மெர்க்கல் புகழாரம் பீரின் சரித்திரத்துக்கு ஜெர்மனியின் பங்களிப்பை நாட்டின் தலைவர் ஏங்கலா மெர்க்கல் அம்மையார் புகழ்ந்துள்ளார். அதுமட்டுமன்றி உலகிலேயே மிகவும் பழமையானது எனக் கருதப்படும் நுகர்வோர் சட்டமும் தமது நாட்டில் உள்ளதையும் அவர் சிலாகித்துள்ளார். பீரின் தூய்மை குறித்த சட்டம் கொண்டுவரப்பட்டு 500 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் பவேரியா மாகாணத்தில் நடைபெற்றது. அதில் பங்குபெற்று உரையாற்றும்போதே மெர்க்கல் அம்மையார் ஜெர்மனிய பீரின் புகழைப்பாடியுள்ளார். "பீரைக் குடிக்காதவர்களுக்கு வேறு ஏதும் குடிக்கக் கிடைக்காது" என மார்டின் லூதர் கிங் கூறியதை மேற்கோள் காட்டிய அவர், 500 ஆண்டுகளுக்கு முன்…

  14. ஈக்வேடாரில் மீண்டும் நிலநடுக்கம்.! தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து 100 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினமும் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஈக்வேடார் நாட்டை தாக்கியமை குறிப்பிடத்தக்கது. …

  15. வாஷிங்டன்: உலக புகழ்பெற்ற பாப் பாடகர் பிரின்ஸ்,57 காலமானார். அமெரிக்காவின் மீநியா பொலின்சை சேர்ந்தவர் பாப் பாடகர் பிரின்ஸ், இசைத்துறையின் கிரமி மற்றும் அகடாமி விருதுகள் பெற்றார். 1984-ம் ஆண்டு பியூர்பல் ரெயின் என்ற படத்தில் இவரது பாப் பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார். பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்திறமையுடன் விளங்கினார். கடந்த வாரம் கடும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து இலினியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் மின்னிசொட்டா எஸ்டேட் பகுதியில் உள்ள வீட்டில் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.dinamalar.com/

  16. இன்றைய நிகழ்ச்சியில், *கார்களின் மைலேஜில் ஏமாற்றியதாக ஒப்புக்கொண்ட மிட்சுபிஸி நிறுவன அலுவலகங்களில் ஜப்பானிய அதிகாரிகள் சோதனை! *கருக்கலைப்பை தடை செய்ய போலந்து முயல்கிறது!றோமன் கத்தோலிக்க திருச்சபையால் ஆதரிக்கப்படும் இந்த திட்டத்துக்கு அங்கு நல்ல எதிர்ப்பும் உள்ளது. *சவுதி அரேபியாவின் அரச பள்ளிக்கூடங்களில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளலாமா என்று அரசாங்கம் விவாதிக்கிறது!

  17. பாகிஸ்தான் இராணுவத்தின் ஆறு உயரதிகாரிகள் பதவி நீக்கம் பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தினர் அவரிகளில் ஒரு லெப்டினண்ட் ஜெனரல், ஒரு மேஜர் ஜெனரல் ஆகியோரும் அடங்குவர். எனினும் குறிப்பாக என்னென்ன குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் பதவி நீக்கப்பட்டனர் என்பது வெளியிடப்படவில்லை. பதவி நீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் பலோச்சிஸ்தானில், துணைஇராணுவப்படையின் முன்னரங்கு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர். பாகிஸ்தானில் ஊழலை முற்றாக ஒழிக்கும்வரை தீவிரவாதத்துக்கு எதிரானப் போரை வெல்ல முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தெரிவித்து இர…

  18. இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்திற்கு இன்று 90 ஆவது அகவை இங்கிலாந்து நாட்டின் மகா இராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், இன்று தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இங்கிலாந்தின் புருடன் வீதியில் உள்ள எலகண்ட் இல்லத்தில் 1926 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி எலிசபெத் மகாரணி பிறந்தார். 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இங்கிலாந்தின் இராணி எலிசபெத் 117 நாடுகளுக்கு கடவுச்சீட்டு இல்லாமல் பயணித்துள்ளதுடன் அதிக காலம் ஆட்சியிலிருந்தும் சாதனை படைத்துள்ளார். இராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரை இங்கிலாந…

  19. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை உயர்வு பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதுடன் ஒரு வகையான பருவ நெருக்கடி நிலை உருவாகியிருப்பதாகவும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டு சராசரியுடன் ஒப்புநோக்குகையில், உலகம் முழுதும் மார்ச் மாதம் 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.04 டிகிரி செல்சியஸ். ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அளவுகள் 1891 ஆம் ஆண்டு முதல் ஆராயப்பட்டு…

  20. எரிபொருள் செயற்திறனில் மோசடி செய்த பிரபல கார் நிறுவனம் inSh ஜப்பானியா கார் நிறுவனமான மிட்சுபிஸி, தனது 6,00,000 வாகனங்களில் பொய்யான எரிபொருள் செயற்திறன் தகவல்களை காண்பித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விடயம் வெளியானதை அடுத்து அதன் பங்கு விலைகள் 15 வீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியை கண்டன. தமது வாகனங்கள் குறைந்த எரிபொருளில் கூடிய அளவு மைல்களை ஓடுவதாக காண்பிப்பதற்காக எரிபொருள் திறன் சோதனைகளை முறையற்ற விதத்தில் செய்ததாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மிட்சுபிஸி ஒப்புக்கொண்டது. அவற்றில் பெரும்பாலான கார்கள் தமது ஜப்பான…

  21. அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவுதி அரேபியா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவூதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் இரானுடனான அணு ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் நிலவும் குழப்பங்களுக்கு நடுவே, ஒபாமாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக, சவுதி மன்னர் சல்மானை ஒபாமா சந்திக்கிறார். இரான் விவகாரம் உட்பட தமது கவலைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று சவுதி அரேபியா நம்புவதாக ஒபாமாவுடன் சென்றுள்ள பிபிசியின் வட-அமெரிக்க செய்தியாளர் கூறுகிறார். ஒபாமா தனது ஒருவார கால வெளிநாட்டுப் பயணத்தில் பி…

  22. இன்றைய நிகழ்ச்சியில் * அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலில் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு மேலும் வெற்றிகள்! நியூயார்க் மாநிலத்தில் இருவருக்கும் கணிசமான வெற்றி! * செவ்வாய்கிரகத்தில் குடியேற ஆசையா? செவ்வாய்க் கிரகத்துக்கு ஆய்வுக்கலனை அனுப்பவிருக்கும் சீன அரசு, வானியல் மீதான ஆர்வத்தை சிறார்களிடம் ஊக்குவிக்க முயல்கிறது. * போர் மேகம் சூழ்ந்த இராக்கில் வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்கு வைக்கும் சட்டவிரோத உடலுறுப்பு வணிக குற்றக்கும்பல்கள்! பாதிக்கப்பட்ட சில குடும்பங்களை நேரில் சந்தித்து பிபிசி செய்தியாளர் அளிக்கும் நேரடித்தகவல்கள் ஆகியவற்றைக் காணலாம்.

  23. ஆஸ்திரேலிய சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மேரி ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனை காலம் முடியும் வரை அவர் சுமார் 2 000 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதை …

  24. 'இதுவே என் கடைசி உரையாக இருக்கலாம்'- ஃபிடல் காஸ்ட்ரோ உணர்ச்சிகர பேச்சு ஃபிடெல் காஸ்ட்ரோ | படம்: ஏ.பி. "இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்" என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது. "கியூப…

    • 1 reply
    • 702 views
  25. கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு 'அன்பளிப்பாகவே கொடுக்கப்பட்டது' பிரிட்டிஷ் மகாராணியின் தயார் இறந்தபோது அவரது பிரேதப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் பொதித்த கிரீடம் பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோஹினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட இந்த வைரம், டவர் ஆஃப் லண்டனில் அரச குடும்பத்து ஆபரணங்களின் ஒருபகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோஹினூர் வைரத்தை இந்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.