Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தனது ஆட்சி முடிவதற்குள் ஐ.எஸ். தீவிரவாதிகளது ஆயுளை முடிப்பேன் என ஓபாமா சபதம் எடுத்துள்ளார் - சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது அமைப்பை உளவு பார்த்த 4 பேரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக்கொன்றனர்.பின்னர் அவரது உடல்களை சிலுவையில் அறைந்து பொதுமக்கள் பார்வைக்காக தலைநகர் ரக்காவில் தொங்கவிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1…

  2. இந்தியாவின் 'டாப் 10' மோசமான சாலைகளை தெரிந்துகொள்ளுங்கள்! இந்தியாவின் டாப் -10 மோசமான சாலைகளை உங்களுக்கு தெரியுமா.... 1. ஜோஜிலா பாஸ்: இமாலயத்தின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,538 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் குறுகிய சாலையான இந்த பாதையில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே நேராக செல்ல முடியும். பனிக்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். நாட்டின் கடினமான சாலைகளில் இதுவே மிகவும் மோசமான சாலையாக கருதப்படுகிறது. ஸ்ரீநகரில் இருந்து லே வழியாக பயணம் செய்யும் போது நீங்கள் இந்த பாதையை தாண்டி வரவேண்டும். ஜோஜிலா பாஸ், லடாக் மற்றும் காஷ்மீர் இடையே ஒரு முக்கியமான இணைப்புப் பாதையாக கருதப்படுகிறது. 2. நேரல்-…

  3. மக்கள் நலனை விட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவது மிகவும் முக்கியமானதா? என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மகாராஷ்டிரத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஹோலி பண்டிகையின்போது கூட தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்று மாநில முதல்வர் பட்னவீஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், ஐபிஎல் கி…

  4. ஐ.எஸ் குழுவினர் வெளியிட்டுள்ள புது வீடியோவில் லண்டன் உள்ளிட்ட 3 நகரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள புது வீடியோ பதிவில் லண்டன், பெர்லின் மற்றும் ரோம் நகரங்களில் அடுத்த தாக்குதல் இருக்கும் என எச்சரித்துள்ளனர். பாரிஸ் மற்றும் பிரசெல்ஸ் தாக்குதல் குறித்து பேசும் அந்த வீடியோவில், ஐ.எஸ் குழுவினருக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு இதுவே தீர்வு எனவும் எச்சரிக்கின்றனர். பாரிஸ், பிரசெல்ஸ் நாகரங்களை அடுத்து தாக்குதலை தொடுக்கும் நகரம் குறித்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ள 3 நகரங்களில் ஒன்றில் முதலில் தாக்குதல் தொடுக்கப்படும் எனவும் அந்த ஐ.எஸ்.ஆதரவாளர் தெரிவிக்கின்றார். …

  5. பனாமா சிட்டி. | படம்: ஏ.பி. பனாமா பேப்பர்ஸ் கசிவு விவகாரம் உலகம் முழுதும் பெரும் பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ள சூழ்நிலையில் தங்கள் நாட்டை பலிகடாவாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று பனாமா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பனாம அரசு தரப்பில் கூறப்படுவதாவது: மற்ற நாடுகளின் பலிகடாவாக பனாமா ஆவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாடும் பொறுப்புடையதே. இது குறித்து எங்கள் நாட்டின் பெயரையும் புகழையும் கெடுக்க விரும்புவர்களை நாங்கள் ஒதுக்கி வைக்க விரும்புகிறோம். இவர்கள் மற்ற நாடுகளிலும் இது போன்ற சட்ட விரோத கணக்குகள் இருப்பதை சவுகரியமாக மறந்து விடுகின்றனர். ஊடகங்கள் நிலைமைகளை ஆழமாக அறிய கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும், மீண்ட…

    • 0 replies
    • 624 views
  6. பிரிட்டனில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான நகைகள் லண்டனின் பான்ஹம்ஸ் ஏல மையத்தில் ஏலத்துக்கு வருகின்றன.இதுகுறித்து, அந்த ஏல மையத்தின் இந்திய மற்றும் இஸ்லாமியக் கலைப் பொருள் நிபுணர் ருக்மிணி குமாரி ரத்தோர் கூறியதாவது: தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத, பிரிட்டனில் வசிக்கும் இந்திய அரச குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த ஆபரணங்களை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொக்கிஷங்களான அவை, இந்த மாதம் 19-ஆம் தேதி ஏலத்தில் விடப்படும் என்றார் அவர்.தமிழகத்தின் புகழ் பெற்ற திருமண நகையான "மாங்காய்' மாலை, ஏலத்துக்கு வரவிருக்கும் நகைகளில் மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது.வை…

  7. இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரித்திருந்தது. தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமா…

  8. பனாமா ஆவணங்கள்: ஐஸ்லாந்துப் பிரதமர் ராஜினாமா பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தார். பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்ஸெகவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த ஆவணங்களின்படி, வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் இருப்பது தெரியவந்தது. பல கோடி டாலர் பணத்தை அவர் பதுக்கியிருந்ததாக அவர் மீது குற…

  9. இன்றைய நிகழ்ச்சியில் * ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பிரதமர் விடுத்த கோரிக்கையை அந்நாட்டின் அதிபர் நிராகரித்தார். * 'வரிவிலக்கு புகலிடங்கள்' என்று அறியப்படும் இடங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சீன ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு தொடர்பு- சீனாவின் இணையதளங்களில் பனாமா ஆவணங்கள் முடக்கம். * இந்தோனேஷியாவில் அகதிக் குழந்தைகளின் பெரிய கனவுகளுக்காக அகதிகளே நடத்தும் பள்ளிக்கூடம் * உணவுகளின் எதிர்காலம்- 1000 கோடி மக்களுக்கும் உணவுக்கு எங்கே போவது?- அடுக்குமாடி விவசாயம் தீர்வாகுமா?

  10. ஈரானிலிருந்து ஆயுதங்கள் ஏற்றி வந்த படகை நடுக்கடலில் அமெரிக்க கடற்படை மடக்கிப் பிடித்தது.அந்தப் படகில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்க கடற்படை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது:அரபிக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். ஸிரோக்கோ ஈடுபட்டிருந்தது.கடந்த மார்ச் 28-ஆம் தேதி அரபிக் கடலில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தப் படகில் 1,500 ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை ராக்கெட் மூலம் ஏவும் கருவிகள் 200, கன ரக இயந்திரத் துப்பாக்கிகள்…

  11. தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மகனுக்கு புதிய தளபதி பதவி ஆஃப்கன் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மூத்த மகன் மொஹ்மத் யாகூப்புக்கு அந்த அமைப்பில் புதிய உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முல்லா ஒமாரின் மரணம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒமார் குடும்பத்தாருக்கும், புதிய தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூருக்கும் இடையில்அதிகாரத்துக்கான சண்டை நிலவி வந்தது ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட பாதி பிராந்தியங்களின் இராணுவ நடவடிக்கைகளின் புதிய தளபதியாக யாகூப் நியமிக்கப்பட்டுள்ளார். தாலிபானின் உயர்மட்ட அரசியல் குழுவான் ரெஹ்பாரி ஷுராவும், முல்லா ஒமரின் சகோதரரும்தான் இவரை இந்த பதவிக்கு நியம…

  12. பிரபல நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, டிஎல்எஃப் உரிமையாளர் கே.பி.சிங் உள்பட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து பனாமா நாட்டில் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உறவினர்கள், உதவியாளர்கள், சவுதி அரேபிய மன்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்களும் தங்களது கணக்கில் வராத சொத்துகளை பதுக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஜெர்மனை சேர்ந்த நாளிதழ் ஒன்று இந்த தகவல்களை பெற்று புலனாய்வு இதழியலாளர்கள் சர்வ தேச கூட்டியக்கம் மூலம் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் உலகம் முழுவதும் கசியவ…

    • 2 replies
    • 514 views
  13. இன்றைய நிகழ்ச்சியில் பணக்கார ஊழல்வாதிகளின் ரகசியங்கள்-- கசிந்துள்ள பதினொரு மில்லியன் ஆவணங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் உலகத் தலைவர்களின் ரகசிய வெளிநாட்டு நிதிக்கணக்குகளை தொடர்புபடுத்துவது குறித்த விவரங்கள்; மூடப்படும் ஐரோப்பாவின் கதவுகள்- கடும் விமர்சனங்களுக்கு நடுவே சர்ச்சைக்குரிய ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் அதிகமான குடியேறிகள் கிரேக்கத்திலிருநது துருக்கிக்கு அனுப்பப்பட்டிருப்பது குறித்த செய்திகள்; இந்தோனேஷியாவின் சுமாத்ரான் புலிகளை பராமரிக்கும் வித்தியாசமான பெண் விலங்கு மருத்துவரின் கதை ஆகியவற்றைக் காணலாம்.

  14. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் சினிமா பாணியில் காலால் அவரது மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் காயமடைந்த அவர், இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார…

    • 2 replies
    • 701 views
  15. உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் . மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும் ரகசியமாக தமது வாடிக…

    • 11 replies
    • 2k views
  16. சவுதி அரேபியாவில் இந்திய பணியாட்களுடன் அமர்ந்து சாப்பிட்ட மோடி ! சுற்றுப் பயணத்திற்கு வேறு ஒரு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்கிற நிலை வந்தால் அதற்கு "மோடி" என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். மோடியின் அயல் நாட்டு சுற்றுப் பயணத்தை எதிர்கட்சிகள் பலவாறு விமர்சனம் செய்கின்றனர் " நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளின் உறவு மேம்படவும் அயராது பயணம் செய்து கொண்டே இருக்கிறார்" என்றும், "அட. அவரு சும்மா ஊரு ஊரா ஜாலியா சுத்துறாருப்பா" என்றும் மோடியின் வெளிநாடு பயணம் குறித்து இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஆனால், நம் பிரதமர் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்பவராக இல்லை. வீடு விட்டால் ஏர்போர்ட் ....ஏர்போர்ட் விட்டால் வீடு என்று சுழன்று கொண்டே இருக்கிறார். …

  17. முஸ்லிம் பெண்ணை புகைப்­ப­ட­மெ­டுத்த செயற்­பாட்­டாளர் பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­ல­மொன்றின் போது அந்­நாட்டு வல­து­சாரி செயற்­பாட்­டா­ளர் ஒருவர், முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை சனிக்­கி­ழமை காரால் மோதிச் சென்ற சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி சம்­பவம் தொடர்­பான அதிர்ச்­சி­யூட்டும் காணொளிக் காட்­சிகள் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள விமான நிலையம் மற்றும் புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்றின் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எண்ணப் போக்­குகள்…

  18. பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவின் கெண்டில் அமைந்துள்ள கடற்கரை நகரமான டோவரில் அகதிகளுக்கு எதிராகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நியோ நாசிக் ஆதரவு வலதுசாரிகள் பேரணி மேற்கொண்டனர். அதேவேளையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகதிகளுக்கு ஆதரவாகவும் கெண்ட் இனவெறி எதிர்ப்பு அமைப்பினர் பேரணி நடத்தி…

  19. மொரீஷியஸ் கடற்பகுதியில் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம்? இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மொரீஷியஸ் தீவின் கடற்பகுதியில் கண்கெடுக்கப்பட்ட உலோகப் பகுதி ஒன்றை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பரிசோதிக்கவுள்ளனர். எம் எச் 370 விமானத்தை தேடும் பணி தொடருகிறது அந்த உலகோகப் பகுதி இரண்டு ஆடுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370ன் ஒரு பகுதியா என்பதை அதிகாரிகள் ஆராய்வார்கள். இதேவேளை கிழக்கு ஆப்ரிக்க கடற்பகுதியில் கிடைக்கப்பெற்ற இரண்டு விமானத் துண்டுகள் காணாமல் போன அந்த விமானத்துடையதே என்பதை தாங்கள் கிட்டத்தட்ட உறுதியாக நம்புவதாக கடந்த மாதம் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர். காணமால் போன அந்த விமானத்தை இந்தியப் பெருங்கடலின…

  20. தாக்கியவரை மன்னித்தார் பார்வையற்ற 103 வயது மூதாட்டி தள்ளாத வயதில் இருந்த தன்னைத் தாக்கி பொருட்களைப் பறித்துக் கொண்டவர்களை அமெரிக்காவில் வாழும் 103 வயது மூதாட்டி ஒருவர் மன்னித்துள்ளார். நியூ யார்க் நகரில் முதியோர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் நியூ யார்க் நகரில் வாழ்ந்து வரும் கண்பார்வை இல்லாத லூயிஸ் சிக்னோர் அம்மையார் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்தபோது அவரது வீட்டுவாசலில் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அவரைக் காயப்படுத்தியதுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் களவாடிச் சென்றனர். எனினும் இச்சம்பவத்துக்கு பிறகும் தனது வாழ்க்கை முன்னரைப் போலவே இயல்பாகக் கொண்டுச் செல்லவுள்ளதாக லூயிஸ் சிக்னோர் அம்மையார் கூற…

  21. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார்.தற்போது, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீது சீறிப்பாய்ந்துள்ள டிரம்ப், இந்த அமைப்பே ’வீண்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் …

  22. துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் தென் கிழக்கு மாகாணத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஐந்து துருக்கிப் படையினரும் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் கிளர்ச்சிக் குழுவான பீ.கே.கே. என்ற அமைப்பு இந்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் ஏழு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130713/language/ta-IN/article.aspx

    • 0 replies
    • 346 views
  23. பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு சிரியாவின் பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர். சிரியப் படையினர் பல்மைரா நகரை மீள கைப்பற்றியுள்ளனர் பல்மைரா நகரம் இஸ்லாமிய அரசு என்றுத் தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து இந்த வாரத்தின் முற்பகுதியில் அரசப் படைகளால் மீட்கப்பட்டது. இந்தப் புதைகுழியில் இருந்த சில சடலங்களின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உடல் எச்சங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்மைரா நகரின் பண்டைய நினைவுச் சின்னங்களை ஐ.எஸ் அழித்துள்ளது கிட்டத்தட்ட ஒராண்ட…

  24. அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றி அறியாத டிரம்ப் அதிபர் ஆகலாமா? - ஒபாமா கேள்வி அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்டு டிரம்பின் அயல்நாட்டுக் கொள்கைகள் குறித்த நம்பகங்களை அதிபர் ஒபாமா கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த அணுப்பாதுகாப்பு மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, “அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அமெரிக்க தேர்தல்களை உலக நாடுகள் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வருகின்றன, நாம் என்ன செ…

  25. பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி செய்திகள் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு செய்கிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட பல்மைரா நகரில் மிஞ்சியிருப்பது என்ன? இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல்மைரா நகருக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் குழு தரும் பிரத்யேக நேரடித் தகவல்கள்; ஒரு பக்கம் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அணு ஆயுத பாதுகாப்பு குறித்து விவாதித்துக்கொண்டிருக்க, இன்னொரு ஏவுகணையை கடலுக்குள் ஏவியது வடகொரியா; அடுத்து என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி; சூரியக் குளியலுக்கும் சொகுசான கடற்கரைக்கும் பேர் போன மொரீஷியஸ் தீவு பயணிகளை வரவேற்க புதியதொரு வசதியை உருவாக்கி வருகிறது. மருத்துவ சுற்றுலாவை வளர்க்கிறது மொரீஷியஸ் அரசு. எதிர்பார்த்த பலன் கிடைக்குமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.