உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26895 topics in this forum
-
பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட சீக்கிய அமைச்சர்கள் கனடாவில் அதிகம்: பிரதமர் ஜஸ்டின் பெருமிதம் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட எனது அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், உங்கள் அரசில் சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் நர…
-
- 0 replies
- 435 views
-
-
வடகொரியாவின் நீர்மூழ்கியொன்று காணமற் போயுள்ளதை அமெரிக்கா, உறுதி செய்துள்ளது வடகொரியாவின் நீர்மூழ்கியொன்று காணமற் போயுள்ளதை அமெரிக்கா, உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வடகொரிய கடற்பரப்பில் காணப்பட்ட நீர்மூழ்கியே இவ்வாறு காணமற் போயுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென்கொரியா விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்தநாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் குறிப்பிட்ட நீர்மூழ்கியை அமெரிக்க படையினர் கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் தற்போது வடகொரியா காணமற்போன தனது நீர்மூழ்கியை தேடுவத…
-
- 0 replies
- 389 views
-
-
கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி Published by Rasmila on 2016-03-14 12:06:56 இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான…
-
- 0 replies
- 470 views
-
-
மலேசிய பிரதமரிடம் கேள்வி கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின் விடுதலை மலேசிய பிரதமர் நஜீப்ரசாக்கிடம் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஊடக உலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள குச்சிங் பகுதிக்கு மலேசிய பிரதமர் சென்றிருந்தவேளை பெசெர் .எரக்லம் என்ற இரு அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் அவரை அணுகி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப முனைந்துள்ளனர். அவ்வேளையே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு ஊடகவியலாளர்களும…
-
- 0 replies
- 262 views
-
-
ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் காணப்படுவது, பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. ஜம்மு காஷ்மீரின் லாடக் பகுதியில் அவ்வபோது ஊடுருவி அத்துமீறல்களில் ஈடுபட்ட வந்த சீன ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படுவது பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. வடக்கு காஷ்மீரின் நவ்காம் செக்டார் பகுதிக்குல் எதிர்முனையில் சீன ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்டுபிடித்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு…
-
- 1 reply
- 432 views
-
-
துருக்கிய தலைநகரில் குண்டுவெடிப்பு; 27 பேர் பலி 2016-03-14 00:15:29 துருக்கியின் தலைநகர் அங்காராவில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 75 பேர் காயமடைந்துள்ளனர். கார் குண்டு ஒன்றே வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புகளால் பல வாகனங்கள் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=15492#sthash.Dp1VpdJ3.dpuf
-
- 1 reply
- 308 views
-
-
`ஜெர்மன்விங்ஸ் விமானி மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்' `விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ்ஸில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர்' ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை துணை விமானி ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிறது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், குறித்த துணைவிமானி மருத்துவரால் மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக விமான விபத்து குறித்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. விமானம் 9525 விபத்துக்கு உள்ளாகி ஒரு ஆண்டு ஆகிறது பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் 9525 விமானம் விபத்துக்கு உள்ளாக…
-
- 0 replies
- 360 views
-
-
ஐஎஸ்-இன் பாலியல் அடிமைகளுக்கு கருத்தடை மருந்து கொடுக்கப்படுகிறது' அடிமை ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கமுடியும், ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்ற இஸ்லாமிய பொருள் விளக்கம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே கருத்தடை மருந்துகளை ஐஎஸ் பயன்படுத்துவதாக நம்பப்படுகின்றது இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்காக, அவர்களுக்கு கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படுவதாக நியுயோர்க் டைம்ஸ் இதழ் நடத்தியுள்ள புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்களை ஆயுததாரிகள் கைமாற்றிக்கொள்வதற்கு வசதியாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இராக்கில், ஐஎஸ் ஆயுதக்குழுவின் …
-
- 0 replies
- 500 views
-
-
புதுடெல்லி, தினமும் 5 முறை தொழுகை செய்வது என்பதை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் என்றும் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறிஉள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர் என்று தஸ்லிமா குறிப்பிட்டு இருந்தார். …
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஏல நிறுவனத்தில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 சாமி சிலைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளும், மன்ஹாட்டன் மாவட்ட அதிகாரிகளும் மீட்டனர். மிருதுவான கல்லில் செய்யப்பட்ட அந்த சிலைகள் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவை ஆகும். அந்த சிலைகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த இரு சிலைகளின் மதிப்பும் சுமார் 3½ கோடி ரூபாய் ஆகும். அந்த ஏல நிறுவனம் அடுத்த வாரம் அந்த சிலைகளை ஏலத்தில் விற்பனை செய்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்திய அரசு …
-
- 0 replies
- 366 views
-
-
ஒரு டிவி நிகழ்ச்சி... ஒரே இரவில் 'ஜோக்கர்' ஆன 'டொனால்ட் ட்ரம்ப்’! அரசியல் - உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான். ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையானத் தொண்டனுக்கு ஆட்சியிலோ, பதவி நாற்காலியிலோ பொதுவாக ஆசை இருப்பதில்லை; அந்தத் தொண்டன் மனதை ஆக்ரமித்திருக்கின்ற பொதுநலம், கொள்கைப் பிடிப்பு என்பதையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்ப…
-
- 1 reply
- 921 views
-
-
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு; 6 பேர் பலி இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3000 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது (கோப்புப் படம்). மேலும் பலர் காணாமல் போயிருக்கும் நிலையில், அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. ஆஸ்த்ரிய எல்லையை ஒட்டியுள்ள சவுத் டைரோலில் இருக்கும் மோண்ட் நெவோசோவில் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டது. தேடுதல் பணியில் மோப்ப நாய்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/03/160312_alps
-
- 0 replies
- 409 views
-
-
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: "சிறுவன் பலி" I `இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் பலி' காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுவனது சகோதரர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் மீது ஹாமாஸ் மேற்கொண்ட ராக்கட் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே, தாம் ஹமாஸின் 4 இலக்குகளை குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது. காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 4 ராக்கட்கள் இஸ்ரேலிய நகரான ஸ்தெரோவுக்கு அருகே உள்ள திறந்த வெளியில் வெடித்ததாக இஸ்ரேல் படை மேலும் தெரிவித்துள்ளது. http://www.bbc.com/tamil/glo…
-
- 0 replies
- 276 views
-
-
தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக ஃப்ரான்சில் இரு பெண்கள் கைது கடந்த நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலைத் திட்டமிட்டதாக இரு பதின்ம வயதுப் பெண்களை ஃப்ரான்ஸ் நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலை இப்பெண்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்). இந்தத் தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் அவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகவும் ஆரம்ப நிலையில் இருந்ததாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ, வெடிமருந்துகளோ பறிமுதல் செய்யப்படவில்லையென்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மேலும் இரண்டு பெண்களும் இது தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டாலும் அவர்கள் பிறகு…
-
- 0 replies
- 372 views
-
-
காசியாபாத், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய உள்முறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என தெரிவித்தார். இதுபற்றி, உள்விவகாரத்துறை இணை மந்திரி கிரெண் ரிஜ்ஜூ தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட…
-
- 0 replies
- 234 views
-
-
ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை... - இப்படியும் ஒரு அநியாயம்! ஜெனீவா: ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ள சூடான் அரசாங்கமே அனுமதி கொடுத்ததாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் மூலம் கடுமையாகன தண்டனைகளை வழங்கியதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம்…
-
- 0 replies
- 582 views
-
-
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ளChieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் கமெரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 324 views
-
-
தென் சீனக் கடல் சர்ச்சை: அமெரிக்கா எச்சரிக்கை தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு பயணிகள் விமானப் போக்குவரத்தை துவங்க சீனா திட்டமிட்டிருப்பது குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது. தென் சீனக் கடல் தீவுகளுக்கு பல நாடுகள் உரிமை கோரி வருகின்றன. அந்தத் தீவுகளுக்கு உரிமை கோரும் பிற நாடுகளுடன் மோதலை அதிகரிக்கவே இது வழிவகுக்கும் என அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கப்போவதாக முன்பு சீனா அளித்த வாக்குறுதியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், வியெட்னாம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் இந்தத் தீவுகளின்…
-
- 0 replies
- 390 views
-
-
வட கொரியாவின் நீர்மூழ்கி மாயம் வடகொரியா காணாமல் போன தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நீர்மூழ்கி ஒன்றில் வடகொரிய அதிபர் கிம் யோங் உன் (கோப்புப் படம்). இவ்வாரத் துவக்கத்தில் இந்தக் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. வடகொரிய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இந்தக் கப்பல் நீண்ட காலமாக இயங்கிவந்தது. தென் கொரியாவும் அமெரிக்காவும் மிகப் பெரிய அளவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்தக் கப்பல் தொலைந்து போயுள்ளது. தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான அறிகுறிகள் தென்பட்டால்கூட, முன்கூட்டியே தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா தெரிவித்திருக்கிறது. http://www.bb…
-
- 0 replies
- 744 views
-
-
குஜராத் அணு உலை கசிவால் மூடல்: ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து தண்ணீர் கசிந்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் கூறும்போது, ''முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை. குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
லிபிய விவகாரம்: வெளியில் வந்தது அமெரிக்க-பிரிட்டன் மோதல் ------------------------------------------------------------------------------------------------------------------------------ லிபியாவில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அட்லாண்டிக் சஞ்சிகைக்கு பேட்டியளித்த ஒபாமா, இரண்டாயிரத்து பதினொன்றில் லிபியாவில் இராணுவ ரீதியில் தலையீடு செய்த பிறகு டேவிட் கமரென்னின் கவனம் சிதறிவிட்டதாக கூறியுள்ளார். இது பிரிட்டனில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. அதைத் தொடந்து தற்போது விளக்கமளித்திருக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, பிரிட்டனுடனான உறவின் பலத்தை வலியுறுத்தியுள்ளது. …
-
- 1 reply
- 582 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - லிபியாவில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். - சிரியா உள்நாட்டு போர் ஆரம்பித்து ஐந்து வருடங்களின் பின்னர், கிளர்ச்சி முதன் முதல் வெடித்த டெர்ரா நகருக்கு பிபிசி சென்றது. - ஆளில்லாமல் ஓடும் கார். ஓட்டுனர் இல்லாத தமது காரை சுவீடனின் வொல்வோ நிறுவனம் சோதிக்கிறது.
-
- 0 replies
- 282 views
-
-
'முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை': டோனல்ட் ட்ரம்ப் மிச்சிகனில் நடைபெற்ற விவாதம் ஒன்றில்சக போட்டியாளர்களுடன் ட்ரம்ப் (மார்ச் 3) அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கின்ற டோனல்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை மீண்டும் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார். நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவரது போட்டியாளர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே, டோனல்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் நியாயப்படுத்தி பேசியுள்ளார். "இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது" என்ற ட்ரம்ப்-இன் கோசத்தை சவாலுக்கு உட்படுத்திய அவரது போட்டியாளரான ஃபுளோரிடா மாநில செனெட்டர் மார…
-
- 0 replies
- 300 views
-
-
அமெரிக்காவில் முஸ்லிம் என நினைத்து பவுத்தத் துறவிக்கு சரமாரி அடி உதை அமெரிக்காவின் ஆரிகன் மாகாணத்தில் கோஸென் சாம்ப்சன் (66) என்ற பவுத்த துறவி மீது அவர் முஸ்லிம் என்று தவறாக நினைத்து தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. ஹூட் ரிவர் பகுதியில் பவுத்தத் துறவி கார் கதவை நபர் ஒருவர் எட்டி உதைக்க அது அவரது தலையை பதம் பார்த்தது. பிறகு பவுத்தத் துறவியை அந்த மர்ம நபர் கடும் வசைச்சொற்களால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு செய்தி கூறுகிறது. தாக்குதல் நடத்தியவர் பிரவுன் நிற தலைமுடி கொண்ட வெள்ளை ஆண் நபர் என்று போலீஸ் கூறுகிறது, பிப்ரவரி 29-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் மீதான விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இது இன…
-
- 1 reply
- 427 views
-
-
இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது ஹைதரபாத்தில் அதற்காக பயிற்சியும் பெற்று வருகின்றனர். தற்போது ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.முதல் கட்ட பயிற்சி முடிந்து 2வது கட்ட பயிற்சி கிரண் எம்.கே 2 ரக போர் விமானங்களில் பயிற்சி பெறவுள்ளனர். 2வது கட்ட பயிற்சி முறைதான் மிக முக்கியமானது.இந்த பயற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் விமானிகளும் நிச்சயம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயராகியிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்…
-
- 3 replies
- 577 views
-