உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27057 topics in this forum
-
`ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' `ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபு அல்-ஹய்ஜா அல்-ருனுசி என்ற பெயரால் அவர் அறியப்பட்டவர் என தெரிவிக்கும் பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் நிறுவனமாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், அவர் ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்டாதியின் பிரதிநிதி என வர்ணித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அவரை ஆளில்லா விமானம் மூலம் இலக்கு வைத்ததாக நம்பப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க படையினர் இதுவரை எ…
-
- 0 replies
- 556 views
-
-
கத்தாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர் - அம்னெஸ்டி 2022 இல் கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது. கத்தாரில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கால்ப்பந்து உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு அங்கு கட்டட வேலைகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் திட்டமிட்ட வகையில் பரவலான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. சில சமயங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறித்த மனித உரிமைகள் குழு சாடியுள்ளது. கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொழில் இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமது கடுமையான கவலைகளை முன்னர் மனித உரிமைகள் குழு வெளியிட்டிருந்தாலும், உலகக்கோப்பை …
-
- 0 replies
- 381 views
-
-
முஸ்லிம் யுவதிகள் 15 வயதில் பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்! - டெல்லி உயர்நீதிமன்ற தீா்ப்பு! [Tuesday 2016-03-29 20:00] பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வயது மகளை பையன் வீட்டார் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி பெண்ணுடைய பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். …
-
- 2 replies
- 864 views
-
-
துபாய், துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார். இந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பய…
-
- 0 replies
- 521 views
-
-
ஆன்சான் சூ கீகிக்கு பிரதமருக்கு நிகரான பதவி- மியன்மார் ஜனநாயக தேசிய லீக்கின் தலைவி அன் சான் சூ கீக்கு பிரதமருக்கு நிகரான பதவியொன்று வழங்கப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சூ கீயின் கட்சி வெற்றியீட்டியது. எனினும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சூ கீயினால் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கட்சியின் ரின் கியாவ் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தற்போது நாட்டின் பிரதமர் பதவிக்கு நிகரான ஓர் பதவியை ஆன் சான் சூ கீக்கு வழங்க புதிய அரசாங்கம் திர்மனரித்துள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட மூலமொன்றும் வரையப்பட்டுள்ளது. நாட்டுக்கான ஆலோசகர் என்ற பெயரில் இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…
-
- 0 replies
- 509 views
-
-
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் அகஸ்தியர் மலை! [Wednesday 2016-03-30 07:00] உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் அகஸ்தியர் மலை இணைந்ததின் மூலம் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிர…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலா(ந்) அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் இடம்பெற்றத் தாக்குதல்களை அடுத்து, குடியுரிமையை பறிக்க அரசியல் சாசனத்தில் மாறுதலைக் கொண்டுவரும் திட்டம் முன்வைக்கப்பட்டது.ஆனால் அத்திட்டமானது அவரது சொந்தக் கட்சியான சோஷலிஸ கட்சிக்குள் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தி, நீதியமைச்சர் பதவி விலகவும் காரணமாக அமைந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒலா(ந்) அறிவித்துள்ளார்.யதார்த்த ரீதியில் மிக்குறைந்த தாக்கதத்தையே ஏற்படுத்தியிருக்கக் க…
-
- 0 replies
- 378 views
-
-
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், இந்த வருட மத்திக்குள் 4,500 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.புதிய விமானங்களுக்கான ஆர்டர்கள் குறைந்திருப்பதால் போயிங் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.இதில் 1,600 பணியிடங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் பிற இடங்கள் நீக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.வாடிக்கையாளர்கள் விமானங்களை வாங்குவதைக் குறைத்துக்கொண்டிருப்பதால், வணிக ரீதியான விமான தயாரிப்புப் பிரிவிலேயே பெரும் பணி இழப்புகள் இருக்கும்.நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இதன் மூலம் பணியை இழப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் போயிங் நிறுவனத்தில் 1,61,000…
-
- 0 replies
- 373 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… தற்கொலை அங்கியை அணிந்திருப்பதாக கூறிய எகிப்திய பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று சைப்ரஸில் தரையிறக்கிய நபர் சரணடைந்திருப்பது குறித்த நேரடித் தகவல்கள்; சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையின் பெரும்பகுதியை சிரியாவுக்குள் இருக்கும் குர்துப் படைகள் காவல் காக்கும் பின்னணியில் சிரியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் பிரத்யேகச் செய்திகள்; யேல் பல்கலைகழக ஆய்வின்படி அமெரிக்காவில் விளையும் முப்பத்து நான்கு சதவீத உணவு, அதாவது அறுபது பில்லன் கிலோகிராம் உணவு வீணாக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த உலகின் பட்டினியைப் போக்க தேவையான உணவின் அளவை விட இது மிக அதிகம் என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், உணவு வீணாவதைக் குறைக்க தென் கொரியாவில் கடைப…
-
- 0 replies
- 506 views
-
-
இந்தியா முழுவதும் அவசர அழைப்புக்கென இனி ஒரே எண் இந்தியாவில் நாடு முழுவதும் அவசர அழைப்புக்கென 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவசர அழைப்புக்கு பல்வேறு எண்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஒரே எண்ணின் மூலம் காவல்துறை, அவசர மருத்துவசேவை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் தொடர்புகொள்ள முடியும். இந்தத் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததும் இந்தத் திட்டம் சில மாதங்களிலேயே நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அவசர கால அழைப்புகளுக்கென …
-
- 0 replies
- 330 views
-
-
தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.…
-
- 0 replies
- 476 views
-
-
சைப்ரஸில் அரசியல் தஞ்சம் வேண்டும்... எகிப்து விமானத்தைக் கடத்திய சமஹா கோரிக்கைஎகிப்து பயணிகள் விமானத்தை கடத்திய இப்ராஹிம் சமஹா தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது. எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விம…
-
- 6 replies
- 1.1k views
-
-
முடிவுக்கு வந்தது ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தல் விவகாரம் - கடத்தியவர் சரண் ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விமானத்தின் படிகளில் ஒடி இறங்கி தப்பிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின. …
-
- 0 replies
- 402 views
-
-
இஸ்லாமியவாதியின் ஐபோன் தரவுகளை ஆராய்கிறது அமெரிக்க நீதித்துறை அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிர இஸ்லாமியவாத நபருக்கு சொந்தமான ஐபோனின் தரவுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த இஸ்லாமியவாத நபரால், அமெரிக்காவின் சான் பெர்னாடினோவில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கவிருந்த சட்ட நடவடிக்கை கைவிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐபோனுக்குள் இருக்கின்ற உள்ளடக்க தகவல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் உதவிய…
-
- 1 reply
- 466 views
-
-
கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தில் இருந்த 7 பேரைத் தவிர அனைவரும் விடுவிப்பு கடத்தப்பட்டு சைப்ரஸுக்கு திருப்பிவிடப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்தவர்களில் ஏழு பேரைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட விமானம் லார்னாகா விமான நிலையத்தில் உள்ளது அலெக்ஸாண்ட்ராவிலிருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றைத் தான் அணிந்திருந்ததாகக் கூறி விமானத்தை கடத்தினார். இதையடுத்து அந்த விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தற்போது சைப்ரஸில் தஞ்சம்கோரியுள்ள அந்த நபர், அந்நட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மனைவியைக் காணவேண்டும் எனக் கோரியுள்ளார். …
-
- 1 reply
- 330 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்களே காரணம் ஒபாமா குற்றச்சாட்டு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்காததே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் ஆபாச உரைகள், தேர்தல் கூட்டங்களில் வன்முறைகள் இடம்பெறுவது மற்றும் யதார்த்தத்திற்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்து ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ள…
-
- 0 replies
- 340 views
-
-
மூர்க்கமான வன்முறைமிக்க தீவிரவாதத்தை அன்பெனும் ஆயுதத்தின் துணையுடன் எதிர்த்துப் போராடுவோம் பாப்பரசர் பிரான்சிஸ் குடியேற்றவாசிகளுக்கு உதவத் தவறுபவர்கள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆற்றிய தனது பாரம்பரிய உரையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் அவர்களுக்கு வரவேற்பும் உதவியும் அளிக்கப்பட வேண்டியவர்களால் எப்போதும் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் தீவிரவாதத்தை குருட்டுத்தனமான மூர்க்கமான வன்முறையொன்றாகக் குறிப்பிட்ட பாப்பரசர், அதற்கு எதிராக அன்பு எனும் ஆயுதத்தின் துணையு…
-
- 0 replies
- 254 views
-
-
பெல்ஜியம்: பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம்சாட்டப்பட்ட ஃபைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட ஒரு நபரும் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென அரசுத் தரப்புத் தெரிவித்திருக்கிறது. ஜாவெண்டம் விமான நிலையத்தில், இரு தற்கொலைப்படை தாரிகளுடன் வந்த மூன்றாவது நபர் இவர் எனக் கருதப்பட்டது. தற்போது மேலும் நீண்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கும் பெல்ஜியம் காவல்த…
-
- 0 replies
- 270 views
-
-
பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக பெல்ஜியம் நாட்டு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது பிரஸ்ஸல்ஸில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து வந்தது. இந்நிலைய…
-
- 0 replies
- 562 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… லாஹூரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 71 பேரின் குடும்பங்கள் இறுதிச் சடங்குகள் செய்து கொண்டிருக்க, பஞ்சாப் மாகணாத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது பாகிஸ்தான். இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பிடமிருந்து சிரிய நாட்டு இராணுவம் மீட்டிருக்கும் பழம்பெரும் நகரான பல்மைராவின் இன்றைய நிலவரம் என்ன? சீனாவின் லட்சக்கணக்கான கிறித்தவர்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடினாலும் எந்த தேவாலயத்துக்கு செல்வது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அரசின் தலையீட்டுக்கு எதிராக அதிகரிக்கும் விமர்சனம்
-
- 0 replies
- 332 views
-
-
ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மீது தாலிபான்கள் ராக்கட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆஃப்கான் புதிய நாடாளுமன்ற கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் குறித்த தாக்குதலில் கட்டடம் ஒன்றின் ஜன்னல்கள் சிதறடிக்கப்பட்டுளன. ஆனால் எவரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலைகுலைந்து போயுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆஃப்கன் உளவுத்துறை தலைமை அதிகாரி மக்கள் அவையில் பேச ஆயத்தமாகும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவினால் 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத் தொகுதி டிசம்ப…
-
- 0 replies
- 233 views
-
-
கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன. லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே – டோனி அப்போட் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது இரண்டு ஆண்டு கால ஆட்சி தொடர்பில் அபோட் கட்டுரையொன்று அப்போட் வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமை குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் தாம் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தவே முயற்சித்ததாகத் தெரி…
-
- 0 replies
- 372 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில், ''ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆத…
-
- 0 replies
- 392 views
-
-
லாகூர் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் அடங்கலாக 50 பேர் பலி பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிறார்கள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த இந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும், மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய நிலையில், சிறார்கள் தமது பெற்றோரை காண முடியாமல் பிரிந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என ப…
-
- 1 reply
- 630 views
-