உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக நாட்டின் பண தாள்களில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும் மருத்துவம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மைக்கேல் நியூடௌ உள்ளிட்ட பலர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க டாலர் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாக்கியம் கடந்க 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு எதிராக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த வாசகம் கிறிஸ்துவ ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.112 பக்கம் உள்ள அந்த மனுவில் 100க்கும் அதிகமான முறையில் கடவுள் (God) என்ற…
-
- 0 replies
- 475 views
-
-
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 15 பேர் காயம் இஸ்தான்புல் குண்டுவெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ். இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுல்தனாமெட் சதுக்கத்தில…
-
- 2 replies
- 566 views
-
-
-
- 0 replies
- 603 views
-
-
புதுடெல்லி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தர ஆன்லைனிலேயே விசாக்களை பெற வழிவகை செய்யும் இ-டூரிஸ்ட் விசா வசதியை இந்த நிதியாண்டிற்குள் 150 நாடுகளுக்கு வழங்க மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ந்தேதி துவங்கப்பட்ட இந்த வசதி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து மேலும் 37 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது 113 நாடுகளில் இந்த வசதியை இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வசதியின் வாயிலாக சென்ற ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 635.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு இ-டூரிஸ்ட் விசா மூலம் வருகை தரும் டாப்-10 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விபரம் வருமாறு:- …
-
- 1 reply
- 408 views
-
-
மும்பை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று 66.85 காசுகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 44 காசுகள் வரை சரிந்து 67.30-ஆக உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி இந்திய ரூபாய் 67.63-ஆக சரிந்து காணப்பட்டது. பிறகு, அதற்கு மறுநாள் அதாவது செப்டம்பர் 4-ந்தேதி வர்த்தகத்தினிடையே 68.62 காசுகள் வரையும் சரிந்திருந்தது. http://www.dailythanthi.com/News/India/2016/01/14201120/Rupee-tumbles-by-44-paise-to-more-than-2year-low-at.vpf
-
- 0 replies
- 476 views
-
-
ஆஸ்திரேலியாவில் வெடிகுண்டு மிரட்டல்: ஆபெரா ஹவுஸிலிருந்து மக்கள் வெளியேற்றம் ஆஸ்திரேலியாவில் பிரபல சுற்றுலாத்தளமான ஆபெரா ஹவுஸுக்கு சமூக வலைத்தளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மதியம் 2 மணிக்கு ஆபெரா ஹவுஸை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கிருந்து மக்களை வெளியேற்றினர். ஆபெரா ஹவுஸில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வேறு யாரும் அப்பகுதியை நெருங்க முடியாத அளவுக்கு போலீஸார் தடுப்புகளால் தடையை ஏற்படுத்தினர். ஆபெரா ஹவுஸுக்கு சமூக வலைத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது என நியூ…
-
- 0 replies
- 318 views
-
-
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன:- 14 ஜனவரி 2016 இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடனடியாக கிடைத்துள்ள புகைப்படங்களில் குண்டுவெடிப்பில் சிக்கிய பலியானவர்களின் இருவரின் உடல்களை காணமுடிகின்றது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127866/language/ta-IN/articl…
-
- 2 replies
- 488 views
-
-
அகதிகளான அழகு குழந்தைகள்... வாழும் இடத்தை பாருங்கள்! பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு, சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள டுன்கிர்க் (Dunkirk) நகரில் பலத்த மழை மற்றும் காற…
-
- 0 replies
- 810 views
-
-
வடக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! டோக்கியோ: ஜப்பானின் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வடக்கு ஜப்பானில் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது வீடுகளைவிட்டு அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். ஹோக்கைடோ பகு…
-
- 0 replies
- 682 views
-
-
பயணித்த விமானத்தின் சக்கரப் பகுதியில் 11 மணி நேரமாக தொங்கிய சடலம் பிரேசிலிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு பயணித்த விமான மொன்றின் சக்கரப் பகுதி யில் தொங்கிய நிலையில் நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பிரேசிலின் சாயோ போலோ நகரிலிருந்து மேற்படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்பட்ட போது, குறிப்பிட்ட நபர் ஐரோப்பாவுக்கு சட்டவி ரோதமாக செல்லும் முயற்சியில் அந்த விமானத்தின் சக்கரப் பகுதியில் மறைந்து கொண்டிருந்திருக்கலாம் எனவும் அவர் அந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே மரண…
-
- 0 replies
- 545 views
-
-
ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=149169&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 535 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அதிபர் ஒபாமா தனது வருடாந்த உரையில் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை புகழ்ந்ததுடன், தனது ஆட்சியின் சாதனைகளையும் நியாயப்படுத்தினார். - ஜெர்மனியைத் தாண்டி சுவீடனிலும் பெரும்பாலும் குடியேறிகளால் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக புகார்கள் கிளம்பியுள்ளன. - முற்றிலும் தானாக, ஓட்டுனர் இன்றி இயங்கும் கார்களை தெருக்களில் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது என்கிறார் உலக பாட்டரி கார் பெருமுதலாளி.
-
- 0 replies
- 694 views
-
-
உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடும் என முன்னணி முதலீட்டு வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போல இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் என சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் கூறுகிறார். பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பல வளர்ச்சிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவை நோக்கி தள்ளும் என அவர் எதிர்வு கூறுகிறார். சந்தையில் பணப்புழக்கம் குறைவது, பொருட்களின் விலைகள் இறங்குவது, நுகர்வோர் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்குவதை தாமதப்படுத்துவது, நிறுவனங்கள் முதலீட்டை நிறுத்தி வைத்தல் போன்ற பிரச்சினைகள் அலைபோல மேற்குலக நாடுகளை…
-
- 0 replies
- 324 views
-
-
பதான்கோட் தாக்குதல்:பாகிஸ்தானில் பலர் கைது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விமானப் படைத் தளம் ஒன்று தாக்கப்பட்டது தொடர்பில், தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுவொன்றின் பல உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. பதான்கோட் படை முகாம் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-மொஹமத் எனும் அந்த அமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சோதனைகளை நடத்தியுள்ள அதிகாரிகள், அவற்றை இழுத்து மூடியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமாவர்கள் எனத் தாங்கள் நம்பும் அமைப்பின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு என இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியதை அடுத்து, இந்தக் கைதுகள் இடம்பெ…
-
- 0 replies
- 470 views
-
-
ஸ்வீடன் இசை நிகழ்ச்சியில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சில காலம் முன்பாக நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், பெரும்பாலும் குடியேறி இளைஞர்களால் பெண்கள் மீது பரவலான பாலியல் தாக்குதல் நடந்ததாகத் தெரியவருகிறது. அந்நேரம் வந்த புகார்கள் பற்றி வெளியில் சொல்லத் தவறியதற்காக ஸ்வீடன் பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. http://www.bbc.com/tamil/global/2016/01/160113_sweden
-
- 0 replies
- 509 views
-
-
துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்: ஒபாமா வாஷிங்டன்: துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியது நமது கடமை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், தனது நிறைவு உரையை அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது, ''கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். உலகின் மிகவும் வலிமையான பொருளாதார நிலையில் அமெரிக்கா உள்ளது. சமமான வேலைக்கு சமமான ஊதியம், குறைந்தபட் ஊதியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், துப்பாக்கியால் நிகழும் வன்முறைகளில் இருந்து நம் குழந்தைகளை காக்க வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைக…
-
- 1 reply
- 404 views
-
-
வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா! வாஷிங்டன்: வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததையடுத்து, சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வகை அணுகுண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்க கூடியது எனவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இந்த குண்டுகள் விரைவில் சோதனை செய்யப்பட உள்ள…
-
- 1 reply
- 604 views
-
-
லண்டன், சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை கைபற்றி அவற்றை இணைத்து இஸ்லாமிய அரசாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா உள்பட சில நாடுகள் விமானம் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது அடையாளம் கண்டுபிடிப்பதை தவிர்க்க 58 பக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் வசம் இருக்கும் செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 15 அறிவுரைகள் அடங்கிய கையேடு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிட தக்கது ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளை ஞர்கள் பெருமளவில் இணைகின்றனர். அவர்க ளுக்குபயிற்சி அளித்து த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியின் இஸ்தான்புல் நகரத்து வரலாற்று வட்டகையை உலுக்கியது மாபெரும் குண்டுவெடிப்பு! பத்து பேர் பலி! பலர் காயம்! - சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மதாயா நகரிலிருந்து, பலரை வெளியேற்றி சிகிச்சை அளித்தால்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்! ஐநா வேண்டுகோள்! - பெண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும்! ஊதியத்தில் பாலின சமத்துவத்துக்கு குரல் கொடுக்கும் பிரிட்டனின் ஆண் மாடல்கள்!
-
- 0 replies
- 432 views
-
-
மும்பையில் பல இடங்களில் செல்ஃபீ எடுக்கத் தடை இந்தியாவின் மும்பை நகரப் போலிசார் நகரின் பல பிரபல சுற்றுலா இடங்களில் "செல்ஃபீ" (திறன் பேசிகளை வைத்து தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் படங்கள்) எடுத்துக்கொள்வதைத் தடை செய்திருக்கின்றனர். சனிக்கிழமை ஒரு பதின்பருவப் பெண் ஒருத்தி, பண்ட்ரா கோட்டைக்கருகே இரண்டு நண்பர்களுடன் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, கடலுக்குள் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது. அவரைக் காப்பாற்றப் போன மற்றொரு ஆணும் கடலில் மூழ்கி இறந்தார். செல்ஃபீ எடுக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்களில் நகரின் பிரபலமான , மரைன் ட்ரைவ் நடைபாதை, மற்றும் கிர்கோம் சௌபாத்தி கடற்கரை ஆகி…
-
- 0 replies
- 569 views
-
-
இரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடனொன்று மோதி விபத்து : லண்டனில் சம்பவம் இரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் லண்டன் பாராளுமன்ற சதுர்க்கத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எவருக்கும் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/1955
-
- 1 reply
- 632 views
-
-
ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: பிரபல சேனல் விமர்சனம் நியூடவுன் ஹால் உரையில் கண்ணீர் சிந்தி அழுத ஒபாமா. | படம்: ஏபி. துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூட்டினால் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளதையும் 2012-ல் சாண்டி ஹூக் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்…
-
- 0 replies
- 726 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருவூலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பணம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கருவூலத்தை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்ததாகவும் இந்த தாக்குதலில் கோடிக்கணக்கான பணம் தீக்கிரையானதாகவும் தெரியவந்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அவர்கள் பணத்தை சேகரித்து வைத்துள்ள பாதுகாப்பு நிறைந்த கருவூலம் ஒன்றும் இயங்கி வருகின்றது. உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ். படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த கருவூலத்தின்மீது தாக்குதல் நடத்தி அழித்…
-
- 0 replies
- 522 views
-
-
டுபாயில் கொள்ளை: இலங்கையர் ஐவர் கைது தனித்துள்ள கிராமப்புற பங்களாக்களில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவெடுத்ததாகக் கூறப்பட்ட 5 பேர் கொண்ட இலங்கை கோஷ்டியை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேற முன்னரே, அக்குழுவினர் தங்களுடைய கைவரிசையை டுபாய், அல் பாஷா பகுதியில் உள்ள பங்களாக்களில் காண்பித்துள்ளனர். தனது வேலையை முடித்துவிட்டு வீட்டு உரிமையாளர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவு உடைக்கப்படு 25,000 திர்ஹாம் பெறுமதியான கைக்கடிகாரங்களும் 100,000திர்ஹாம் பணமும் காணாமல் போயிருந்தது. இவை தொடர்பில் வீட்டு உரிமையாளர் டுபாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,…
-
- 0 replies
- 408 views
-
-
யூதர்களின் எதிர்ப்பை மீறி பரபரப்பாக விற்பனையாகும் ஹிட்லரின் சுயசரிதை! பெர்லின்: ஹிட்லரின் சுயசரிதையான "மெயின் காம்ப்' (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி உள்ளது. இந்த நூல், யூதர்களின் எதிர்ப்புக்களுக்கு இடையே பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. 1923-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை "மெயின் காம்ப்'. யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதத் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தி உள்ளார். இனவெறி நாஜிக்களின் வேதமாகத் திகழ்ந்த அந்த நூல், இரண்டாம் உலகப் போரில் அவர்களது தோல்விக்குப் பின் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. போரின் முடிவில் …
-
- 0 replies
- 644 views
-