உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
குண்டுப்புரளி, ஜேர்மன் விமானம் அவசர தரையிறக்கம் Ca.Thamil Cathamil December 07, 2015 Canada விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகக் கிடைத்த தொலைபேசி மிரட்டல் ஒன்றின் அடிப்படையில் பெர்லினிருந்து எகிப்து நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஜேர்மனி, கொன்டோர் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. எனினும், விமானத்தை சோதனை செய்த ஹங்கேரி பொலிசார் குண்டு எதுவும் இல்லையென பின்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/53653.html#sthash.iCf6wGWb.dpuf
-
- 0 replies
- 814 views
-
-
ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள் நதியில் ஓடி காவல் நிலையத்தில் உலரும் யூரோ நோட்டுக்கள் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்தார். காவல் நிலையத்தில் காயவைக்கப்பட்ட கரன்ஸி நோட்டுக்கள் இதுகுறித்து வியன்னா நகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் யூரோ நோட்டுக்கள் காயவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த கரன்ஸி நோட்டுக்கள் எங்கிருந்து வந…
-
- 0 replies
- 1.4k views
-
-
300 ஆண்டு மர்மம் விலகியது : 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்ததுள்ளது. கடந்த 1708ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்ற போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பு கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால் அக்கப்பலை கைப்பற்றி தன் வசமாக்க இங்கிலாந்து போரிட்டது. இதில் ஸ்பெயின் கப்பல் கொலம்பியாவில் உள்ள சரூபியன் கடலில் குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது. அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டது. 198…
-
- 0 replies
- 1.2k views
-
-
https://www.facebook.com/bbctamil/videos/10153136683985163/?pnref=story
-
- 0 replies
- 687 views
-
-
ஐ.எஸ். இயக்கத்தை அமெரிக்கா அழிப்பது உறுதி: ஒபாமா பேச்சு ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்கா வேரோடு அழிக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2-ம் தேதி பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு தம்பதியினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார். அப்போது அவர், " கலிபோர்னியாவில் நடைபெற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்…
-
- 0 replies
- 973 views
-
-
தஜிகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: டெல்லி, காஷ்மீரிலும் தாக்கம் படம்: யு.எஸ்.ஜி.எஸ். மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் தாக்கத்தினால் தலைநகர் புதுடெல்லியில் கட்டிடங்கள் குலுங்கின. காஷ்மீரிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. திங்கள் மதியம் இந்திய நேரம் 1.20-க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 28கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முர்கோப் நகருக்கு மேற்கே 109 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக தலைநகர் …
-
- 0 replies
- 805 views
-
-
அமெரிக்கா சான் பெர்னான்டினோ சூடு: கொலையாளிகள் எம்மைப் பின்பற்றுவோரே: ஐ.எஸ் அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள சான் பெர்னான்டினோவில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தம்பதிகள், தங்கள் இயக்கத்தைப் பின்பற்றுவோரே என, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இச்சூட்டுச்சம்பவத்தில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதோடு, 21 பேர் காயமடைந்தனர். விடுமுறை நாள் கொண்டாட்டமொன்றின்மீதே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையினத்தவரொருவரே இத்தாக்குதலை மேற்கொண்டாரெனத் தகவல்கள் வெளியான போதிலும், பின்னர், சையட் றிஸ்வான் பாரூக் என்பவரது பெயர் வெளியாகியிருந்தது. அமெரிக்காவில் பி…
-
- 0 replies
- 917 views
-
-
சிரியாவின் ரக்கா நகர் மீது கடும் வான் தாக்குதல்கள் சிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரக்கா மீது கடும் வான் தாக்குதல்கள் இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது. இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரக்கா நகரில் ஐ எஸ் அமைப்பினர் பலமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது ஆனால், பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி குரூப் எனும் மனித உரிமைகள் அமைப்போ, ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் அதிகம…
-
- 0 replies
- 1.3k views
-
-
தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு வந்தபின்னர் தலீபான் இயக்கத்தில் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகர் அருகே குச்லாக் என்ற இடத்தில் ஆப்கான் தலீபான் தளபதிகள் கூட்டம், கடந்த 2-ந் தேதி நடந்தபோது மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முல்லா அக்தர் மன்சூர் படுகாயம் அடைந்தான் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவன் மரணம் அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. தலீபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக அக்குன…
-
- 0 replies
- 997 views
-
-
பிரிட்டனின் வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை:சிரிய அதிபர் அஸத் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் மீது பிரிட்டன் நடத்திய வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளார். சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்த் பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், இப்படியான வான் தாக்குதல்கள் 'பயங்கரவாதப் புற்றுநோய்' மேலும் அதிகரிக்கவே வழி செய்யும் எனக் கூறியுள்ளார். பிரிட்டிஷ் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை, ரஷ்யா எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுள்ள அவர் இரண்டிலும் உள்ள மாறுதல்களையும் அப்பேட்டியில் சுட்டிக்காட்டினார். ஐ எஸ் அமைப்பின் மீ…
-
- 0 replies
- 814 views
-
-
சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் முழுவதும் நிரம்பியதால், அதிலிருந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. அதனால் கூவம் ஆற்றை ஒட்டிய குட…
-
- 0 replies
- 790 views
-
-
லண்டன் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 'தீவிரவாதச் செயல்' லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தை ஒரு தீவிரவாத சம்பவமாகக் கருதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற ரயில் நிலையம் கிழக்கு லண்டனில் பெருமளவுக்கு ஆட்கள் வந்து செல்லும் லேட்டன்ஸ்டோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை இச்சமவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை நடத்திய நபர் "இது சிரியாவுக்காக" எனக் கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் இத்தாக்குதலை நடத்திய நபரை செயலிழக்கச் செய்யும் வகையில் குறைந்த சக்தி மின்சாரத்தை துப்பாக்கி மூலம் செலுத்தி, அவரை கைது செய்தனர்…
-
- 0 replies
- 973 views
-
-
சென்னை ஒரு படிப்பினை: அமெரிக்க நிபுணர்கள் கருத்து 'கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது, சரியான நகர திட்டமிடல் இல்லாததே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், எதிர்கால நகர திட்ட மிடலுக்கு சென்னை ஒரு படிப்பினை’ என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியரான கட்டடவியல் நிபுணர் நம்பி அப்பாதுரை கூறியபோது, பருவநிலை மாறுபாட்டில் சென்னையில் 17 நாட்களுக்கு இடைவிடாது மழை பெய்கிறது. இந்த மழை, மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்வின் கூறியபோது, சென்னை மழை வெள்ளத்துக்கு சரியான நகர திட்டமிடல் இல்லாததே முக்கிய காரணம், இது ஒரு படிப்பினை. இயற்கை பேரழிவுக…
-
- 0 replies
- 925 views
-
-
ஆப்ரிக்காவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்! - 27 பேர் பலி [Sunday 2015-12-06 08:00] ஆப்ரிக்கவிலுள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான சாட் ஏரியில் இருக்கும் தீவு ஒனறில், மூன்று பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.நைஜிரியாவை ஒட்டிய நாடுகளில் போக்கோ ஹராமின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.லூலூ ஃபௌ எனும் அந்தத் தீவில் நடைபெறும் வாராந்திரச் சந்தையை இலக்கு வைத்தே இந்தத் தக்குதலகள் நடத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். பன்னாட்டுப் படைகள் போக்கோ ஹராமை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமால் கடந்த மாதம் அந்தப் பிராந்தியத்தில் தொட…
-
- 0 replies
- 674 views
-
-
வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பொது மக்கள் தயாரித்து அனுப்பும் நிவாரணப் பொருட்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அதிமுக வினர் வலுக்கட்டாயமாக ஒட்டி அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பெய்த கனமழையால், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் வீட்டிற்குள்ளேயே வெள்ளம் புகுந்துவிட்டது. அதனால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்கள் முழுவதும் வெள்ளம் நிரம்பியுள்ளதால், வெளியே வரமுடியாமல், சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவர்களுக்கு உதவும் வகையில் பல ஊர்களிலிருந்து பொது மக்கள் உணவு தயாரித்து அனுப்பி வருகிறார்கள். அப்படி நிவாரண…
-
- 3 replies
- 1.3k views
-
-
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுக்கழிவுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது இந்த அணுக்கழிவுகள் மெல்ல மெல்ல நகர்ந்து ஜப்பானில் இருந்து 2,574 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்காவின் சென்பிரான்சிஸ்கோ நகர கடற்கரையோர பகுதிக்கு சென்று உள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் கவலை அடைந்துள்ளது. ஏனெனில் இந்த அணுக்கழிவு பொருட்களில் சிறிதளவு கதிரியக்கத் தன்மை இன்னும் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இது அமெரிக்க கடற்பரப்புடன் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவத…
-
- 1 reply
- 1.3k views
-
-
160 பள்ளிவாசல்களை மூடுகிறது பிரான்ஸ் நவம்பர் 13ஆம் திகதி பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸிலுள்ள ஏறத்தாழ 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடிப்படைவாத, தீவிரவாதக் கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பும் பள்ளிவாசல்களும் அனுமதிபெறாத பள்ளிவாசல்களுமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளன. பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான இமாம்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் ஹஸன் எல் அலோவுய், இந்தத் தகவலை வெளியிட்டார். உள்விவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில், 100 தொடக்கம் 160 வரையிலான பள்ளிவாசல்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித…
-
- 8 replies
- 2.6k views
-
-
அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம்:ஒபாமா கவலை அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாராம் குறித்து அதிபர் ஒபாமா ஆழமான கவலையை வெளியிட்டுளார். நாட்டு மக்களுக்கான தனது வாராந்திர உரையில் இது தொடர்பில் அவர் பேசினார். அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார் சில தினங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில், படையினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அமெரிக்காவில் ஆபத்தானவர்களின் கைகளில் துப்பாக்கிகள் கிடைப்பது மிகவும் சுலபமானது என்ற துக்ககரமான விஷயத்தை நினைவுபடுத்துவதாக, அதிபர் ஒபாமா தெரிவித்தார். கலிஃபோர்னியா படுகொலைகளை நடத்திய தம்பதிய…
-
- 0 replies
- 664 views
-
-
விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்றும் அதுவரை அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமாண நிலையமாக செயல்படும் என்று இந்திய விமான ஆணையம் அறிவித்தது. விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளிய…
-
- 0 replies
- 716 views
-
-
"கலிஃபோர்னியா தாக்குதலாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியில்..." அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமூக சேவைகள் மையம் ஒன்றில் தாக்குதல் நடத்தி பதினான்கு பேரைக் கொன்ற தம்பதியரின் குடும்பம் தொடர்ந்தும் அதிர்ச்சியில் இருப்பதாக அவர்களுடைய வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். செய்யது ரிஸ்வான் ஃபாரூக்கினாலும் அவரது மனைவி தஷ்ஃபீன் மாலிக்கினாலும் இப்படி ஒரு தாக்குதலை நடத்த முடியும் அவர்களால் அறவே நம்பமுடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமையன்று அவர்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரித்து வருவதாக மத்திய புலனாய்வுத்துறையான எஃப் பி ஐ கூறுகிறது. ஆனாலும் ஒரு வலயமைப்பின் அங்கமாக இவர்கள் செயல்பாட்டார்கள் என்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! நியூயார்க்: ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. http://www.vikatan.com/news/world/55943-earthquake-southeast-indian-ridge.art
-
- 0 replies
- 934 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் அடுத்த இலக்கு லண்டன்: பிடிபட்ட தீவிரவாதி அதிர்ச்சி தகவல் சலா அப்தேசலாம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அடுத்ததாக பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு பாரீஸின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். சலா அப்தேசலாம் என்ற தீவிரவாதி மட்டும் சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டார். அவரிடம் பிரான்ஸ் பாதுகாப் புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன…
-
- 0 replies
- 996 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முகாமிட்டுள்ள படையினரை சந்திக்க சிரியா விரையும் பிரான்ஸ் அதிபர்! [Friday 2015-12-04 21:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்திவரும் பிரான்ஸ் நாட்டின் விமானப்படையினருக்கு ஆதரவாக சிரியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ள விமானம்தாங்கி கப்பலை பார்வையிட பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே விரைந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே சபதமேற்றார். இதையடுத்து, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீ…
-
- 0 replies
- 2k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் ஐஎஸ் மீதான தாக்குதல்களுக்கு ஒத்துழைக்க ஜெர்மனியும் முடிவு- ஐஎஸ்-இன் கோட்டையான ரக்காவிலிருந்து அரிதாக கிடைத்துள்ள காட்சிகள் பிபிசியிடம்! - ஆப்பிரிக்காவின் அபிவிருத்திக்கு உதவ 60 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதாக சீனாவின் அதிபர் க்ஷி ஜின்பிங் அறிவிப்பு! - 1960கள்- 70 களில் கலாச்சார புரட்சியிலிருந்தும் தப்பித்த கலைவடிவம்- சீனாவின் கண்டோனிய ஓப்பராவை காப்பாற்ற முயலும் இளைய தலைமுறை பற்றி ஆராய்கிறது பிபிசி! https://www.facebook.com/bbctamil/videos/10153132046015163/?pnref=story
-
- 0 replies
- 765 views
-
-
ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்:ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதம் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொண்டு சிரியாவிலிருந்து செயல்படும் அமைப்பினர் மீது, வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஆதரிப்பது குறித்து ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதங்களை தொடங்கியுள்ளன. I ஜெர்மன் நாடாளுமன்றத்தில் அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் உரையாற்றுகிறார் கடந்த மாதம் பாரிஸில் நடைபெற்றத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஐ எஸ் அமைப்பின் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவு தேவை என பிரான்ஸ் கோரியதை அடுத்து, இந்த விவாதம் ஜெர்மனியில் நடைபெறுகிறது. இந்த விஷயத்துக்கு ஜெர்மனிய நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளிக்குமாயின், ஜெர்மனி ஐ எஸ் அமைப்ப…
-
- 1 reply
- 798 views
-