Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்! Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆதரவு போராளி ஹெஸ்பொல்லாவை குறிவைத்து, லெபனானில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் எரித்து, ஈரான் இப்பொது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவ…

  2. பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி October 3, 2024 லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிகளவிற்கு பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டு…

  3. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானிய ஏவுகணைகள் அக்டோபர் 1 அன்று இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மூலம் இடைமறிக்கப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெரெமி பொவன் பதவி,சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி 28 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று அந்தத் தாக்குதல் குறித்தும், அது நடத்தப்பட்ட முறை குறித்தும் இரான் வெளிப்படையாக அறிவித்தது. இரானின் ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில…

  4. கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக கனடாவில் உணவகங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவோருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டிய நிலை ஏற்படும் என, பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக பணியாளர் விசா பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாகவுள்ளது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்க முடியாத…

  5. 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது. இதற்கிடையே, இரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி இன்று (அக்டோபர் 2) தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யாக கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். ''அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடு…

  6. மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஷெயின்பாம் பதவியேற்க உள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷேன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார். இதையடுத்து மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதான கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு மெக்சிகோவின் ஜனாதிபதியாக கிளாடியா ஷேன்பாம் தொடருவார். ரோமன் கத்தோலிக்க சமூகப் பிரிவைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மெக்சிகோவில் (உலகின் 2-ஆவது…

  7. உளவு குற்றச்சாட்டில் சீன பெண் ஜேர்மனியில் கைது! ஜேர்மனியின் லைப்சிக் (Leipzig) நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். Yaqi X என பெயரிடப்பட்ட சந்தேக நபர், கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ள Leipzig/Halle விமான நிலையத்தில் தளவாட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பெறப்பட்ட தகவல்களை சீன இரகசிய சேவையின் உறுப்பினருக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த தகவலில் விமானங்கள், பொருட்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் இராணுவ தளவாடங்களின் போக்குவரத்து பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்பட…

  8. 01 OCT, 2024 | 02:39 PM தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22 மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மீட்பு நடவடிக்கைகளிற்காக உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகின்றது. தாய்லாந்தின் வடமாகாணத்தில் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த …

  9. 01 OCT, 2024 | 12:28 PM ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான சிகெரு இசிபாவை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக சில நாட்களிற்கு முன்னர் இசிபா தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமர் இன்று தனது அமைச்சரவையை அறிவிப்பார். புதிய பிரதமர் ஒக்டோபர் 27 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/195221

  10. ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி! ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும். 10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்று முதலிடத்தை…

  11. 30 SEP, 2024 | 01:31 PM காலித் ரிஸ்வான் அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம், போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாண்…

  12. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹெஸ்பொலா மீதான இஸ்ரேல் தாக்குதல் - இரானின் நிலைப்பாடு என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ஜியர் கோல் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட கால நண்பனும், அண்டை நாடுமான லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக் குழு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிராக இரான் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது அந்த நாட்டில் உள்ள பழமைவாதிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது. இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் பேசிய போது காஸா மீதான இஸ்ரேல் போரை விமர்சனம் செய்தார். லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு…

  13. மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401211

      • Thanks
      • Like
    • 8 replies
    • 926 views
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் ஐநா பேரவையில் உரையாற்றுகையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தார் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற ஐ.நா. பேரவையின் 79-வது கூட்டத்தில் மக்ரோங் உரையாற்றினார். பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு சபையில் இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத…

  15. புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து! அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில் மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 3-டி முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையையும், கண்மூடித்தனமான பயன்பாட்டையும் கண்காணிக்க அதிரடிப…

  16. சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது! சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானத…

  17. 27 SEP, 2024 | 12:06 PM ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஏவுகணைகள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்.ஜி & ஃப்ரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த புதன்கிழமை அன்று (செப்டம்பர் 25) இத்தகைய சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சோதனை ஓட்டம் தான் …

  19. படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான். 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்கோ சாதனத்தின் சமீபத்திய மாடல் - ஜூலை மாதம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.) சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது. திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உ…

  21. பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்! இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்னை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல் முறையாக வெளியிடாத காரணத்தினால் அவற்றை பெறுப்பேடுப்பதற்கு ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சு மறுத்து விட்டது. இது குறித்து காசா சுகாதார அமைச்சின் ஊடக அதிகாரியான இயாத் கதீஹ் தெரிவிக்கையில் அடையாளம் தெரியாத சடலங்களுடன் ட்ரக் வண்டி காசாவுக்குள் வந்தமை இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும் என்றும் இனிமேல் சுகாதார அதிகாரிகள் எந்த ஒரு உடலையும் அடையாளம் காணாத நிலையில் ஏற்றுக்கொ…

  22. தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்! தாய்லாந்தின் அரசர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரே பாலின திருமண சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், தென்கிழக்கு ஆசியாவில் அதிகாரப்பூர்வமாக குறித்த சட்டம் அமுல்படுத்தபடும் முதல் நாடாகவும், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும் தாய்லாந்து மாறியுள்ளது. புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம் 2025 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். இரண்டு தசாப்தகால முயற்சிகளுக்கு பின்னர் ஒரே பாலின சட்டமூலம், ஜூன் மாதம் செனட்டால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400989

  23. 24 SEP, 2024 | 04:28 PM செனெகலின் கரையோர பகுதியில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தாக தெரிவித்துள்ள செனெகல் கடற்படை இதனை தொடர்ந்து மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது. உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் மீட்பு அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது. செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை அதிகரித்துள்ள நிலையிலேN இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்…

  24. அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமா…

  25. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இருதரப்பும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவியது. போரிலிருந்து பின்வாங்குமாறு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுமார் 150 ராக்கெட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.