Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவை கலக்கும் மருத்துவ மாணவர் தேர்வு மோசடி! 36 பேர் பலி! மத்திய அரசு ஆட்டங்காணுமா? [ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 09:04.35 AM GMT ] வியாபாரம் என்ற மத்திய பிரதேச மாகாண மருத்துவ பரீட்சை மையத்தில் இடம்பெற்ற மாபெரும் பரீட்சை முறைக்கேட்டு ஊழலில் 2,000 பேர் கைது செய்யப்பட்டாலும் மருத்துவர்களின் தராதரம் பற்றிய கேள்வியை அது எழுப்பியுள்ளது. இப்போது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டுள்ள இந்த விவகாரம் அந்த மாகாணத்தின் ஆளும் கட்சியான பா.ஐ.கட்சியையும், மோடியின் மத்திய அரசையும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது என இவ்வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் குறிப்பிட்டார். http://www.tamilwin.com/show-RUmtyHRXSVnv0H.html#

    • 0 replies
    • 605 views
  2. ஜகார்தா: இந்தோனேசியாவில் 5 எரிமலைகள் வெடித்து வானெல்லாம் புகையும், சாம்பலுமாக உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இருக்கும் மவுண்ட் ரவ்ங் எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள 6 ஆயிரத்து 560 அடிக்கு சாம்பலாக உள்ளது. கடந்த சில நாட்களாக குமுறிய எரிமலை வெடித்துள்ளது. மேலும் மொலுக்காஸ் தீவுகளில் உள்ள கமாலாமா மற்றும் டுகோனோ எரிமலைகள், சுமத்ரா தீவில் உள்ள சினபங் எரிமலை மற்றும் சியாவ் தீவில் உள்ள கரங்கெடாங் எரிமலை ஆகியவை வெடித்து சாம்பலாக கக்கி வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் வானம் இருண்டு, புகைமூட்டமாக உள்ளது. காற்றில் சாம்பல் கலந்து வருகிறது. எரிமலைகள் வெடித்துள்ளதால் அந்த பகுதிகளில் வசித்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகா…

    • 0 replies
    • 780 views
  3. குட்டி ஏலியன்ஸ் வந்தாச்சு...! தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும் 'ஏலியன்ஸ்' என்று செல்லமாகவும் அழைக்கப்படும் டி வில்லியர்சுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்சின் மனைவி டெனிலாநிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் தென்ஆப்ரிக்கா திரும்பி சென்ற டி வில்லியர்ஸ் மனைவி டெனிலாவை அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்,அவரது மனைவி டெனிலா நேற்று ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக உள்ள…

  4. பட்டையை கிளப்பிவரும் சுஷ்மா….. July 22, 20157:58 pm சுஷ்மா சுவராஜை வெளியுறவுத்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் இன்று இரண்டாவது நாளாக பாராளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது. சுஷ்மாவை பதவி நீக்கம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சுஷ்மா சுவராஜின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் இதுநாள் வரை காணப்பட்ட சுயகுறிப்பு விபரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை, அவரது முகப்பு பக்கத்தில் காணப்பட்ட ‘வெளியுறவுத்துறை மந்திரி’ என்னும் அடையாளக் குறியீடு தற்போது மாயமாகி விட்டது. இதில் ஏதோ சூட்சமம் உள்ளதாகவும், ஏதோ ஒரு மாற்றத்துக்கான முத…

    • 0 replies
    • 572 views
  5. பதறும் சிறுவனின் கொலையின் நிஜ காட்சிகள்…. July 22, 201510:44 pm பங்களாதேஷ் நாட்டில் சிறுவனொருவன் அடித்துகொல்லப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. சமியுல் என்ற 13 வயதான சிறுவன் சைக்கிள் ‘ரிக்சா’ ஒன்றை திருட முயன்றதாக க் கூறி அவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தாக்குதலை நடத்தியோரில் ஒருவர் சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தாக்குதலை நட த்தியவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றபோதிலும் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலில் 60 வரையான காயங்கள் இருந்த தாகவு…

    • 0 replies
    • 691 views
  6. திரைத்துறையில் உலக வல்லரசாக வேண்டும் என்பது பாகிஸ்தானின் ஆசை. இந்திய திரைத்துறையில் பதிந்திருக்கும் கண்களை தமது பக்கம் திரும்பச் செய்து, சர்வதேச மட்டத்தில் அத்துறையின் தன்னை முக்கிய பங்காளியாக்கும் நோக்குடன் ஒரு புதிய படத்தை அது வெளியிட்டிருக்கிறது. 'பின்ரோய்' என்ற அந்தப் படம் இந்திய திரைத்துறையின் வழமையான தயாரிப்புச் செலவுகளுக்கு நிகராக செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகள், ஆடல்கள், பாடல்கள் என இந்திய சினிமாவின் பாணியை இது பின்பற்றுகின்றது. இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/07/150722_binroye

  7. ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். பிரிட்டனின் காலனியாதிக்கத் தாக்கங்களை தெளிவான புள்ளிவிவரம் மட்டுமின்றி, சுருக்கென குத்தும் நகைச்சுவையுடனும் தார்மிக சீற்றத்துடனும் ஆக்ஸ்ஃபோர்டில், சசி தரூர் எம்.பி. பேசிய வீடியோ, இந்திய இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. | வீடியோ இணைப்பு கீழே. | இந்தியாவின் பொருளாதார பின்னடைவுகளுக்கு சுதந்திரம் பெற்றதற்கு பிறகான ஊழல்கள், மக்கள் தொகை ஆகியவை பெரிதுபடுத்தப்படும் வேளையில், பிரிட்டன் காலனியாதிக்கத் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சியை பெரிதும் முடக்கிய வரலாறுகளை நாம் மறந்திருக்கிறோம். பள்ளிப் பாடப்புத்தகங்களில் நமக்கு போதிக்கப்பட்டதெல்லாம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்களின் தியாகங்கள் போன்றவையே.…

    • 0 replies
    • 577 views
  8. பிள்ளைகளை எப்படிக் கையாளுவது என்பதற்கு கால்பந்தாட்டத்திலும் விதிகள் உண்டு. ஆனால் 14 வயதேயுடைய இளம் கால்பந்தாட்ட வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு ஃபிஃபா விதிகளுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் கொண்டுவரப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பதினையாயிரம் பதின்ம வயது கால்பந்தாட்ட வீரர்கள் வெளியே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் இவர்களில் பலர் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்றனர் என்றும் அரசு சார அமைப்பொன்று மதிப்பிடுகிறது. 18 வயதுக்கு குறைவான வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியில் சேர்த்ததற்காக ஐரோப்பிய சாம்பியன்களான பார்செலோனாவுக்கு வீரர்களைப் பரிமாறிக்கொள்ள ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக கால்பந்தி…

    • 0 replies
    • 265 views
  9. சிறிலங்கா, மியான்மார் தேர்தல்களும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் – அட்மிரல் டெனிஸ் பிளேயர்JUL 22, 2015 | 11:09by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளிலும் வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் ஆசியப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இவ்வாறு அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற தளபதியான அட்மிரல் டெனிஸ் சி பிளேயர்* எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். Pakistan observer நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. உலக வரைபடத்தில் சிறிலங்காவை அல்லது மியான்மாரை பெரும்பாலான அமெரிக்கர்களால் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியாத …

    • 0 replies
    • 368 views
  10. சன் டி.வி.குழுமத்துக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் ஊடக உலகத்தை நடுங்க வைத்துள்ளது. 33 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் 45 வானொலி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்த குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் அண்ணன் என்பதால், இந்தக் குழுமம் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறது. இந்த குழுமம் தொடங்கப்பட்டதிலிருந்தே போட்டியும் பொறாமையும் கூடவே வளர்ந்து வந்தன. அதற்கு ஏற்றாற் போல் அக்குழுமத்தைச் சார்ந்தவர்களில் ஒருவரான தயாநிதி மாறன் மத்திய அமைச்சரானது, அதுவும் தொலைத் தொடர்புத்துறைக்கே அமைச்சரானது சன் டி.விக்கு தலைவலியாக மாறியது. சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந…

  11. ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் அஷ் கார்டர் மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் தலைநகர் ஜெரூஸலத்தில் இடம்பெற்றுள்ளது. ஈரானுடன் சர்வதேச நாடுகள் அணுத் திட்ட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள் இருவரிடையே நடைபெரும் முதலாவது சந்திப்பு இதுவாகும். ஈரானுடனான ஒப்பந்தத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த இஸ்ரேலுடன் மேற்கொள்ளும் இந்த சந்திப்பின்போது, அமெரிக்க, இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ ஆதரவுகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்ட…

    • 0 replies
    • 283 views
  12. தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். July 21, 20153:48 pm மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி யாகூப் மேமன் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி மும்பை நாக்பூர் சிறையில் வரும் 30 ஆம் தேதி காலை 7 மணிக்கு யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை ஏற்கனவே தடா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 53 வயதான யாகூப் அப்துல் ரசாக் மேமன், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிதி உதவி செய்ததாக கைது செய்யப்பட்டார…

    • 0 replies
    • 650 views
  13. மோதல் ஓய்ந்தது... 54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா - கியூபா தூதரகங்கள் திறப்பு! நியூயார்க்: கடந்த 54 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையே இருந்துவந்த மோதல் ஓய்ந்துள்ளதை அடுத்து இருநாடுகளின் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதத்துக்கு உதவும் நாடுகள் பட்டியலில் கம்யூனிஸ நாடான கியூபா சேர்க்கப்பட்டதை அடுத்து, 1961 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகமும், கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் மூடப்பட்டன. அதன் பிறகு இருநாடுகளிடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை தொடர்ந்து வந்தது. கியூபாவை வீழ்த்தவும், அந்நாட்டு அதிபராக இருந்த பிடல் காஸ்ட் ரோவை கொலை செய்யவும் அமெரிக்கா பல்வேறு சதிகளைத் தீட்டி அவை தோல்வியில் முடிந்தன. எனினும் சமீப…

  14. துருக்கியில் பயங்கர வெடி குண்டு தாக்குதல்: 27 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்[ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 10:34.57 மு.ப GMT ] துருக்கி நாட்டில் உள்ள கலாச்சார மையம் ஒன்றில் சற்று முன்னர் நிகழ்ந்த பயங்கர வெடி குண்டு தாக்குதலில் 27 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லைகளுக்கு அருகே உள்ள Suruc என்ற நகரில் அமைந்துள்ள Amara கலாச்சார மையத்தில் தான் இந்த வெடி குண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் தற்போது வரை சுமார் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. Suruc நகரிலிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள Ko…

    • 0 replies
    • 352 views
  15. கிரேக்கத்தில் வங்கிகள் மீண்டும் திறந்தன கிரேக்கத்தில் மூன்று வாரங்களில் முதல்முறையாக வங்கிகள் திறந்துள்ளன. வங்கிகள் திறந்தாலும், கட்டுப்பாடுகள் தொடருகின்றன இதையடுத்து தலைநகர் ஏதன்ஸின் மத்தியப் பகுதியில், நுகர்வோர் நீண்ட வரிசைகளில் நின்று தமது காசோலைகளை செலுத்தவும், கட்டணங்களைச் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்குமான கட்டுப்பாடுகள் தொடருகின்றன. தற்போதைய சூழலில் வாரமொன்றுக்கு ஒருவர் 420யூரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும். கடன் சுமையில் சிக்கியுள்ள கிரேக்கத்தை அதிலிருந்து மீட்கும் நோக்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கடந்த வாரம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலைய…

  16. கனடா- மொன்றியலில் ஒரு றோனா கடையில் பணிபுரியும் 20பேர் லொட்டோ மக்ஸ் லாட்டரியில் 55மில்லியன் டொலர்களை வென்றுள்ளனர்.20 பேரும் ஒவ்வொருவரும் 2.75மில்லியன் டொலர்களை பெறுகின்றனர்—வரி அற்ற.இவர்களது சில சக-ஊழியர்கள் குறைந்த அதிஷ்டமுடையவர்கள். ஒவ்வொரு வாரமும் 20 பேர்களின் பெயர்கள் பதியப்படும். ஒவ்வொரு வாரமும் அதே 20பேர்களின் பெயர்கள் பதிவாகப்படுவதில்லை.55மில்லியன் டொலர்கள் பரிசு தொகை மாகாணத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட பரிசுத் தொகைகளில் மிக அதிகமான தொகையாகும்.சீட்டு விற்பனையாகிய எரிவாயு நிலையம் ஜக்பொட் தொகையின் 1சத விகிதத்தை பெறுகின்றது.பரிசை வென்ற 20 ஊழியர்களில் சிலர் தாங்கள் வேலையில் இருந்து இளைப்பாற போவதாக தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canad…

    • 0 replies
    • 594 views
  17. கனடா- ஆர்சிஎம்பியின் வலையத்தளம் ஞாயிற்றுகிழமை பல மணித்தியாலங்களிற்கு செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலிழப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.ஞாயிற்றுகிழமை மாலை தளம் மீண்டும் வழமைக்கு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் RCMPஅதிகாரி சம்பந்தப்பட்ட ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த படையினரை குறிவைத்து சைபர் குழு இணையம் அனாமதேய சூழுரைப்பு ஒன்றை விடுத்துள்ளது. இந்த சூழுரைப்பு விடுத்த மறு நாள் வலைத்தள செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஆர்சிஎம்பியனர் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.நிலைமையை கண்காணித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்Steven Blaney-யின் காரியாலயம் தெரிவித்துள்ளது.அண்ம…

    • 0 replies
    • 539 views
  18. கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள Semiahmoo என்ற நூலகத்திற்கு அருகே 3 பொலிசார் நபர் ஒருவரை சுற்றி நின்றிருந்ததை கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய Mike Bhatti என்ற பொலிசார், அருகே சென்று பார்ப்பதற்குள் அந்த நபர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர், இறந்து க…

    • 0 replies
    • 896 views
  19. அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் .வின்ஸ்டன் சலேம் இந்து கோவில் கட்ட அங்கு வாழும் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக கிளாமென்ஸ் என்ற இடத்தில் 7.6 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். அங்கு 3,600 சதுர அடியில் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்கான அறிவிப்புடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெயர் பலகையின் மீது யாரோ சில சமூகவிரோதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அதில் 60-க்கும் மேற்பட்ட துளைகள் உள்ளன. இச்சம்பவம் கடந்த 4-ந்தேதி நடந்துள்ளது. இதுகுறித்து போலீ சில் புகார் செய்யப்பட் டுள்ளது. சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர் களுக்கு எதிராக இனவெறி காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்து கோவிலில் இ…

    • 0 replies
    • 516 views
  20. சாட் நாட்டின் முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை தொடக்கம் சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிசேனி ஹாப்ரோவுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்க்குற்ற வழக்கு இன்று செனகலில் ஆரம்பமாகியுள்ளது. விசாரணை போலியானது என்கிறார் ஹாப்ரே எனினும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில், அதைப் போலியானது என்று அவர் கூறி கூச்சலிட்டத்தை அடுத்து அவர் நீதிமன்ற அறையிலிருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து அவர் இல்லாமலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின என வழக்கு விசாரணை அறையிலிருந்த பிபிசியின் தாமஸ் ஃபெஸ்ஸி கூறுகிறார். 1980ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொலைகள் மற்றும பரந்தளவிலான சித்திரவதை போன்றவற்றுக்கு அவர் அனுமதி வழங்கினார் என்று அவர் மீது கு…

    • 0 replies
    • 314 views
  21. ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள் புதிதாகக் குடிவரக் கூடாது என்று கோரும் அமைப்பினர் பெர்த், பிரிஸ்பேன், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர். தங்களை 'தேசியவாதிகள்' என்று அழைத்துக்கொள்ளும் அவர்கள் இராக், சிரியா ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ். அமைப்பைக் கண்டிக்கின்றனர். முஸ்லிம்கள் குடியேற அனுமதி தரக் கூடாது என்று கூறுவோரை 'நிறவெறியர்கள்' என்று எதிர்த் தரப்பார் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆஸ்திரேலியாவின் சமூக நிலையில் ஏற்பட்டுவரும் அமைதியின்மையை இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. http://tamil.thehindu.com/world/பேசும்-படம்-அமைதியற்ற-ஆஸ்திரேலியா/article7443377.ece?ref=omnews

    • 3 replies
    • 558 views
  22. டெல்லி: இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300 கடன் கேட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய உமேஷ், பணம் கொடுத்தார். கடையில் பொருள் வாங்கிய அப்பெண், மீண்டும் ஆட்டோவில் ஏறி தனது வீட்டுக்கு வந்தடைந்தார். மேலும், பணத்தை வாங…

    • 16 replies
    • 2.5k views
  23. நாஜி வணக்கம் செலுத்தும் ராணி எலிசபெத் புகைப்படத்தால் சர்ச்சை பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் சிறுமியாக இருந்தபோது நாஜிக்கள் பாணியில் வணக்கம் செலுத்தும் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது. 80 ஆண்டு களுக்கு முந்தைய அந்த புகைப்படத்தால் பிரிட்டனில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்’ நாளிதழ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நேற்று வெளியிட்டது. 7 வயது சிறுமியான ராணி எலிசபெத்தும் அவரது தங்கை மார்க ரெட்டும் தாயார் எலிசபெத்துடன் இணைந்து நாஜிக்கள் பாணியில் வணக்கம் செலுத்த பயிற்சி மேற்கொள்வது போல அந்த புகைப்படங்கள் உள்ளன. அவர்களுக்கு அப்போதைய இளவரசர் எட்வர்ட் நாஜி வணக்கம் செலுத்த பயிற்சி அளிக்கிறார். இந்த புகைப்படங்கள் 1933-ல் …

    • 7 replies
    • 884 views
  24. மதமாற்றம் செய்தால் கொன்றுவிடுவோம்.. ரவி சங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல். டெல்லி: வாழும் கலை என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தெரிக் இ தாலிபான் தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை: இந்த ஆண்டு மார்ச் மாதம், மலேசியாவுக்கு ரவிசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் தங்கியிருந்த ஜென் ஹோட்டலின் மேலாளருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடிதம் அனுப்பினர். அதில், "இந்து மதக் கொள்கைகளை ரவிசங்கர் பரப்ப முயன்ற…

  25. அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 09:51.01 AM GMT +05:30 ] இந்தியாவில் அரசு கட்டுமான துறை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம் என அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த கட்டுமான நிறுவனமான லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல், இந்தியாவில் கோவா மற்றும் கவுகாத்தியில் மேற்கொள்ப்பட்ட 2 மிகப்பெரிய நீர்வளர்ச்சி திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகள் பலருக்கும், 1998ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கோடிக்கணக்கில் லஞ்சம் கொடு…

    • 0 replies
    • 425 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.