Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளன…

  2. மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் கு…

  3. Published By: Digital Desk 1 27 Oct, 2025 | 02:13 PM தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினையால் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் (ASEAN Summit) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.இரு நாட்டுப் படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், எல்லைப் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெ…

  4. இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை! இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது. இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் அடுத்த பொத…

  5. மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 26 Oct, 2025 | 11:06 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்றைய தினம் முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார். அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினை…

  6. வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்! அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரிகளை அதிகரிப்பதையும் சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் இடைநிறுத்துவதையும் நோக்காக்க கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பேச்சுவார்த்தைகள், நவம்பர் 1 முதல் சீன இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 100% வரிகளின் அச்சுறுத்தலை நீக்கியதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் கவன…

  7. கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்! உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வர…

  8. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம் கட்டுரை தகவல் இயன் ஐக்மேன் ரேசல் ஹாகன் 20 அக்டோபர் 2025, 04:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர். சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளத…

  9. உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும். சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்து…

  10. 25 Oct, 2025 | 10:40 AM அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்ட…

  11. போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் 25 Oct, 2025 | 12:15 PM போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம…

  12. Published By: Digital Desk 3 24 Oct, 2025 | 03:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், உலகளாவிய சவால்களின் காலத்தில…

  13. ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு! உக்ரேனில் போரை தீர்ப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். இந்த சந்திப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அது ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான அழைப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ட்ரம்ப் – புட்டின் இடையிலான எதிர்கால சந்திப்பு தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்…

  14. உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை. Ulyana Krychkovska, Tetyana Vysotska, Anastasia Protz — 22 அக்டோபர், 14:32 பெல்ஜியக் கொடி. ஸ்டாக் புகைப்படம்: பெல்ஜியக் கொடி 1332 தமிழ் உக்ரைனுக்கு €140 பில்லியன் இழப்பீட்டுக் கடன்களை வழங்க, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஆணையம் பெல்ஜியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஆனால் பிரஸ்ஸல்ஸ் இன்னும் இந்த முயற்சியை அங்கீகரிக்கவில்லை. மூலம்: ஐரோப்பிய பிராவ்தா , பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்களை மேற்கோள் காட்டி. ஒரு EU தூதரின் மேற்கோள்: "ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூட்டம் தற்போது நடந்து வருகிறது, அங்கு உக்ரைனுக்கு ஆதரவாக முடக்…

    • 0 replies
    • 101 views
  15. 23 Oct, 2025 | 11:04 AM பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டது. துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன…

  16. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு! உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை (22) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையேயான உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் முறிந்த ஒரு நாளுக்குப் பின்னர் புதிய தடைகள் வெளியிடப்பட்டன. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மொஸ்கோவின் போர் நடவடிக்கைக்கு நிதியளிக்கும் திறனை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி கூறியது. இந்த நடவடிக்கை, மொஸ்கோவிற்கு அழுத்தம…

  17. 22 Oct, 2025 | 01:00 PM நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீ…

  18. பட மூலாதாரம், Getty Images 21 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அ…

  19. உகாண்டாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 63 பேர் உயிரிழப்பு! உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில்.. இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர். தலைநகர் கம்பாலாவிற்கும் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் நள்ளிரவுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது. எதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகள், ஒரு லொரி மற்றும் பரிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1450863

  20. போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 22 Oct, 2025 | 11:21 AM இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எ…

  21. 21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்…

  22. ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் …

  23. பட மூலாதாரம், AFP via Getty Images கட்டுரை தகவல் நிக் மார்ஷ் பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர். சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும். 2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும். முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும். ஆனால், வரும…

  24. பட மூலாதாரம், FREDERIC J. BROWN/AFP via Getty Images படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்ப் உருவிலான பலூன்களை போராட்டக்காரர்கள் எடுத்து வந்தனர். 19 அக்டோபர் 2025, 07:15 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மயாமி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை காலை நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தெருக்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல்களிலும், "மன்னராட்சி அல்ல, ஜனநாயகம்," மற்றும் "அரசியலமைப்பு விருப்பத்தேர்வு அல்ல," என்கிற பதாக…

  25. 18 Oct, 2025 | 01:39 PM இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தல் குறித்த விசாரணைகளுக்காக அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படையில் மஹ்மூத் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது. அமெரிக்க விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.