உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27050 topics in this forum
-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லிக்கு ஏர்இந்தியா நிறுவனத்தின் ஏ1–105 ரக விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 150 பேர் பயணம் செய்தனர். நேற்று இரவு டெல்லி விமான நிலையம் அருகே வந்த போது விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது. உடனே, விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் ஒரு சக்கர பகுதியில் தீப்பிடித்து ‘குபு குபு’ வென புகை கிளம்பியது. உடனே பயணிகள் வெளியேற விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு கதவு திறக்கப்படவில்லை. இதனால் பயணிகளிடையே பீதி நிலவியது. அதைத் தொடர்ந்து விமானத்தில் உள்ள சறுக்குபாதை வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசரமாக வெளியேற்றப்பட்டதில் 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்ச…
-
- 0 replies
- 226 views
-
-
பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள்பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக உதவ வேண்டும் என்கிற பரவலான, வலுவான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளது. அத்தோடு, வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவில் அங்கம் வகிக்கும் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கடார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை தம் எல்லைக்கதவுகளை இந்த அகதிகளுக்கு திறக்க மறுக்கும் போக்குக்கு எதிர…
-
- 0 replies
- 709 views
-
-
ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும். குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவ…
-
- 0 replies
- 305 views
-
-
படங்கள் 10- அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு சோகத்துடன் ஜெர்மனியின் முனிச் நகரத்தை வந்தடைந்த குழந்தைகள், ஜெர்மானிய மக்களின் வரவேற்பாலும், இனிப்புகளைக் கண்டும் மெல்லச் சிரிக்கின்றனர். சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள காரணத்தால், அங்கு வாழும் மக்கள் அகதிகளாகி, பல்வேறு நாடுகளைத் தஞ்சம் கோரி வருகின்றனர். கடல் மார்க்கமாக பயணித்து கிரீஸ், இத்தாலி நாடுகளில் கரையேறுபவர்களுக்கு அந்நாடுகள் இடம் அளிக்க மறுத்து வருகின்றன. ஆனால் ஜெர்மனி மட்டும் அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. கணக்கில்லாத உணவுப் பொருட்களையும், இனிப்புகளையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சிரியாவில் இருந்து வரும் ஆயி…
-
- 2 replies
- 842 views
-
-
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார். இதன்படி கள்ளப் படகில் பயணமானார் குர்தி. ஆனால் எதிர்பாராத விதமாக அவரது குடும்பம் கடலில் மூழ்கி பலியாகியது. அதில் அவரது மூன்று வயது மகன் அய்லான் கடற்கடையில் பிணமாக ஒதுங்கியது அனைவரது மனதையும் உருக்கிறது. இந்த படம் வெளி…
-
- 8 replies
- 1k views
-
-
உருக்குலைகிறதா உக்ரைன்?1 உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தை நினைவுகூரும் வகையில் தலைநகர் கீவில் அமைக்கப்பட்டுள்ள சிறுமியின் சிலை. உக்ரைன் -ரஷ்யா மோதல் செய்திகளைப் படித்து விட்டு உலக வரைபடத்தில் இந்த இரண்டு நாடுகளையும் பார்ப்பவர்களுக்குப் பெரும் வியப்பு காத்திருக்கும். சோவியத் யூனியன் பிளவு பட்ட பிறகும் ரஷ்யா மிக பிரம் மாண்டமாக இன்னமும் தன் பரப் பளவில் பரந்து விரிந்துதான் இருக்கிறது. அதன் மேற்குப் பகுதி யில், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு தவளைபோல சிறுத்திருக்கிறது உக்ரைன். கருங்கடலைத் தன் தென் எல்லையாகக் கொண்ட நாடு உக்ரைன். முன்பு சோவியத் யூனியன் இணைந்திருந்தபோது அதில் இருந்த நாடுகளில் ரஷ்யாவும் உண்டு, உக்ரைனும் உண்டு. ஆனால் இன்று இந்த இரண்டும் எதிர் துருவங்…
-
- 6 replies
- 1.6k views
-
-
அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடீய கனடாவின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ரொறன்ரோவில் முகாமிட்டு தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வீட்டு உரிமையாளரின் தேனீர்க் கோப்பையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதியின் வேட்பாளர் கட்சியிலிருந்தும் வேட்பாளர் பட்டியலிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கண்சவேட்டிவ் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை பேணவேண்டிய அவசியம் கனடியப் பிரதமரிக்கு ஏற்பட்டுள்ளது.மற்றைய இரு தலைவர்களிற்கும் பாரிய ரொறன்ரோவின் வாக்குவங்கியின் பலத்தை அதிகரிக்கும் ஏதுவான நிலை பல்கலாச்சார சமூகம் என்றரீதியல் ஏற்பட்டுள்ளதால், அந்த வாக்குப் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமான பிரச்சாரத்தில் மற்றைய இரு தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடு…
-
- 0 replies
- 327 views
-
-
சிரியாவில் உள் நாட்டு போர் காரணமாக அங்கிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறுகின்ற நிலையில், அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து கோடிஸ்வரர் ஒருவர் கிரேக்கம் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதனால், மத்திய தரைக்கடலில் செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் மரணம் அடைகின்றனர். ஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்ச…
-
- 0 replies
- 422 views
-
-
ராஜீவ் காந்தி அழகான இளைஞராக இருந்த காரணத்தினால்தான் சோனியா காந்தி அவரைத் திருமணம் செய்தார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் குர்ஷித் கசூரி குறிப்பிட்டார். இவர் கடந்த 2005-ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபின் இந்தியப் பயணம் குறித்து சோனியாவை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து தற்போது தான் எழுதியுள்ள "நெய்தர் எ ஹாக் நார் எ டவ்' என்ற புத்தகத்தில் குர்ஷித் கசூரி கூறியிருப்பதாவது: சோனியா காந்தியுடன் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு முன்னதாக காத்திருப்பு அறையிலேயே அவரைச் சந்தித்தேன். அவர் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்குடன் வந்திருந்தார். அப்போது, சோனியாவிடம் கை குலுக்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக…
-
- 0 replies
- 722 views
-
-
உயிருடன் இருக்கனுமா?.. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் போடும் 11 நிபந்தனைகள். சனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக் மற்றும் சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள அல் கர்யாதீன் நகரில் வசிக்கும் ஏராளமான கிறிஸ்தவர்கள் உயிருக்கு பயந்து திம்மா என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெற பிற மதத்தவர்கள் திம்மா எனப்படும் 11 விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன் ஜிஸ்ய…
-
- 0 replies
- 650 views
-
-
கனடா- பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் போலி வெடிகுண்டு அலார கடிகாரம் உண்மையான பிரச்சனையை ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் தரித்து நின்ற வாலிபன் ஒருவன் தனது கையில் எடுத்து செல்லும் பைக்குள் வெடிக்கு கருவி ஒன்றின் வடிவில் அலாம் மணிக்குகூடு ஒன்றை வைத்திருந்தான்.வெடிகுண்டு போன்று காட்சியளித்ததால் இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்களிற்கு மேலாக பலத்த பாதுகாப்புடன் புலன்விசாரனை நடாத்தினர். எக்ஸ்-றே சோதனை மூலம் பொருள் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.அடையாளம் தெரியாத வாலிபன் மீது குறும்புத்தனம் மற்றும் மற்றவர்களின் சட்டபூர்வமான சந்தோசத்திற்கு குறுக்கீடு செய்தது போன்ற குற்றச்சாட்டுக்களை பொலிசார் சுமத்தியுள்ளனர். - See more at: http://www.canadamirror.c…
-
- 0 replies
- 338 views
-
-
குடியேறிகளின் பிரச்சனைக்கான பொது யுக்தியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரண்டு லட்சம் அகதிகளை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டிருக்கிறது. ஆனால் அகதிகளை பகிர்ந்துகொள்வதில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மத்தியில் முரண்பாடு நிலவுகின்றது. ஹங்கேரியில் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், பூடாபெஸ்டுக்கு மேற்கே அகப்பட்டிருக்கிறார்கள். பூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்கு திரும்பிய சிலர் இப்போது ஆஸ்திரியாவுக்கு ''நடந்தே செல்ல'' முயற்சிக்கிறார்கள். கடுமையான சட்டம்: எல்லைகளில் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சட்டத்தை ஹங்கேரிய நாடாளுமன்றம் இப்போது அங்கீகரித்திருக்கிறது. ஐரோப்பாவுக்கு படகில் செல்லும் முயற்சியில் லிபிய கரையோர…
-
- 2 replies
- 502 views
-
-
உலகை உலுக்கிய புகைப்படம் : உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி ஜாம்பவான் கால்பந்து அணி! சிறுவன் ஆயலான் கடற்கரை ஓரத்தில் இறந்து கிடந்த புகைப்படம் வெளியானதையடுத்து, ஜெர்மனியில் கால்பந்து ரசிகர்கள், அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன், ரசிகர்கள் போட்டியை காண வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியான அடுத்த நாளே, ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச், ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்யும் அறிவிப்பை வெளியிட்டது. நட்புமுறையிலான போட்டிகளில் பங்கேற்று, அதில் வரும் நிதியையும் அகதிகள் நல்வாழ்வுக்காக வழங்க முடிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஏமன் ஆயுதக் கிடங்கில் ராக்கெட் வீச்சு: 45 ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் பரிதாப பலி! ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் ஆயுதக் கிடங்கில் ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியதில், 45 ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஏமன் நாட்டில் கடந்த 6 மாதங்களாக உள்நாட்டு போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட் ராணுவம் முகாமிட்டு, கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்காக, ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாரிப் ராணுவ தளத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில்…
-
- 1 reply
- 763 views
-
-
ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 1 ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெவ்வேறு விதமான தலைப்பாகைகளுடன் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள். (கோப்பு படம்) ஆப்கானிஸ்தான் நமக்கு அப்படியொன்றும் அந்நியப் பிரதேசம் அல்ல. ஒரு காலத்தில் அதன் ஒரு பகுதி நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் கையில் இருந்தது. வேறொரு காலத்தில் இந்தியாவின் சில பகுதிகள் ஆப்கானியருக்கு வசப்பட்டது. பாகிஸ்தான் மட்டும் உருவாகவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நமது அண்டை நாடு! துரியோதனனின் மாமன் சகுனியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? அவன் இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தார தேசத்து இளவரசன். ரிக்வேதம் தோன்றியது ஆப்கானிஸ்தானில் என்கிறார்கள். கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கஜினி முகம்மது …
-
- 11 replies
- 2.3k views
-
-
புதுடெல்லி, இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், ஆளில்லா விமானம் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளின் இந்த சதிதிட்டங்களை முறியடிக்கும் வகையில், பாராகிலிடர்ஸ், ஏர் பலூன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவிகள் மைக்ரோலைட் ஏர்கிராப் போன்றவைகள் பறக்கவிடுவதற்கு தடைவிதித்து கடுமையான விதிமுறைகளை பாதுகப்புத்துறை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த சையது ஸாபிபுதின் அன்சாரி என்ற அபு ஜுண்டால் , இந்தியன் முஜாகீதின் சையது இஸ்மாயில் அபாக் லங்கா காலிஸ்தானி தீவிரவாத இயக்கத்த தலைவர் ஜகாதர் சிங் தாரா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், பாராகிலி…
-
- 0 replies
- 452 views
-
-
அரங்கில் விழுந்த விமானம்: யு.எஸ்., ஓபனில் பதட்டம் நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ஆளில்லாத குட்டி விமானம் அரங்கில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது, வெடிகுண்டு தாங்கி வந்த விமானம் என வீராங்கனைகள் பதட்டம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் லுாயிஸ் ஆர்ம்ஸ்டிராங் மைதானத்தில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இத்தாலியின் பிளாவியா பெனிட்டா, ருமேனியாவின் மோனிகா மோதினர். இதில் பெனிட்டா 6–1, 5–4 என, முன்னிலையில் இருந்தார். குட்டி விமானம்: அப்போது திடீரென ‘ரிமோட் கன்ட்ரோல்’ உதவியால் இயக்கப்படும் ஆளில்லாத குட்டி உளவு ரக விமானம், அரங்கின் ஒரு பகுதியில் வந்து விழுந்தது. இங்கு…
-
- 0 replies
- 1k views
-
-
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் சட்டத் திருத்தம் செய்கிறது சுவிஸ் அரசு [Thursday 2015-09-03 21:00] வரி தொடர்பான குற்ற வழக்குகளில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், சுவிட்சர்லாந்து அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரவுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மசோதாவுக்கு சுவிஸ் நாட்டு அரசின் அதிகாரமிக்க திட்டக் குழுவான "சுவிஸ் ஒன்றிய கவுன்சில்' புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா தொடர்பாக, வரும் டிசம்பர் மாதம் வரை பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். பின்னர் சுவிஸ் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட…
-
- 2 replies
- 412 views
-
-
ஐரோப்பாவில் அகதிக் குடிவரவாளர்களின் பிரச்சினை அதிகரித்துவரும் நிலையில், அது சம்பந்தமாக கனடா போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்ற கேள்வி கனடாவின் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதான பேசுபொருளாக மாறிவரும் நிலையில் ஆயிரக்கணக்கான அகதிகள் இவ்வாறு ஐரோப்பாவிற்குள் குடிபுகும் நிலையில் கனேடிய அரசாங்கம் இது சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கையை எடுக்க வேண்டுமென என்.டி.பி மற்றும் லிபரல் கட்சிகள் நேற்று வலியுறுத்தின.சர்வதேச அரங்கில் கனடாவின் பங்கை இந்த விடயத்தில் கட்டாயம் வழங்க வேண்டுமென என்.டி.பி தலைவ்ர ரொம் முல்க்கெயர் தெரிவித்தார். லிபரல் அரசாங்கம் கனடாவில் ஆட்சியை ஏற்படுத்தினால், புதிதாக சிரியாவைச் சேர்ந்த இருபத்தையாயிரம் அகதிகளை ஏற்றுக் கொள்ளப் போவதாக லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்ர…
-
- 0 replies
- 651 views
-
-
அமெரிக்காவும் நேச நாடுகளும் உக்கிரைன் பிரச்சினையை சாட்டாக வைத்து 12 ஆயிரம் துருப்புக்கள், பல நூற்றுக்கணக்கான விமானங்கள், கனரக ஆயுதங்கள், கடற்படைக் கப்பல்கள் என ரஸ்யாவை சுற்றி நின்றுள்ள நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று ரஸ்யா தனது அணு ஆயுதங்கள் தாங்கிய விமானங்களை அமெரிக்கக் கரைக்கே கொண்டு வந்து மிரட்டிச் சென்ற விடயம் தொடர்பாக இன்றைய நிஜத்தின் தேடலில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். - See more at: http://www.canadamirror.com/canada/48510.html#sthash.p0nCW6Lx.dpuf
-
- 1 reply
- 571 views
-
-
கனேடியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மந்த கதியில் செல்வதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஏப்ரல் – ஜீன் ஆகிய மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ச்சியாக கடந்த இரண்டு காலாண்டுகளாக வீழ்ச்சிப் போக்கைக் கொண்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, முதலாவது காலாண்டில் 0.8 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 19 இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இவ்வீழ்ச்சி நிலையானது பாரிய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் தேர்தல் பிரசார நேரடி விவாதங்களில் கனேடியப் பொருளாதாரம் முக்கிய விடயமாகக்…
-
- 0 replies
- 549 views
-
-
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றை புகைப்படம் ஒன்று சொல்லி விடும். வியட்னாம் போர், ஆபிரிக்காவின் வறுமை என்பன இதற்கு சான்று. இந்நிலையில் பார்ப்பவர்களின் மனதை நிலைகுலைய வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக மக்களை துயருற வைத்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன குழந்தை ஒன்றின் புகைப்படமே இது. இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு கனம் மனம் மௌனிக்கின்றது. சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் அந் நாட்டு மக்கள் அகதிகளாக செல்கின்றனர். எனினும் உயிரை பாதுகா…
-
- 0 replies
- 805 views
-
-
புதிதாய் பிறந்த 'நியூ'சிலாந்து 1 நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம். எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன. தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு…
-
- 8 replies
- 2.6k views
-
-
கனடாவில் நடைபெறும் தமிழர்களது தெரு திருவிழாவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். [Sunday 2015-08-30 21:00] கனடா ரொறன்ரோவில் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற்று வருகிறது நேற்றுநடைபெற்ற நிகழ்வில் சுமார் ஓரு மைல் துாரத்திற்கு வீதி மூடப்பட்டு நண்பகல் 12 மணிமுதல் இரவு 11 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்தனர். தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன. இன்றும் இரண்டாம் நாள் நிகழ்வு ஆரம்பமாகி கோலாகலமாக பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் தெரு நீளத்திற்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.. நிகழ்வுபற்றிய விரிவான செய்தி தொடரும்... http://www.sei…
-
- 2 replies
- 1.5k views
-
-
பதற்றங்கள் நிறைந்த வங்கதேசம் - 1 கடந்த ஜூன் மாதம் வங்கதேச பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பிரதமர் மோடி. கொஞ்சநஞ்சமல்ல, நாற்பது ஆண்டுகள்! தங்களுக்கிடையே உண்டான எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இந்தியாவுக்கும் வங்கதேசத் துக்கும். என்றாலும் இப்படி ஒர் ஒற்றுமையை இப்போது கண்டதே கூட ஒரு சாதனைதான். வங்கதேச தலைநகரான டாக்காவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டனர். 1974-லிலேயே இது தொடர்பான கோணங்கள் வரையறுக்கப்பட்டன. என்றாலும் சமீபத்தில்தான் இந்திய நாடாளுமன்றம் இதை ஏற்றுக் கொண்டது. அந்த விதத்தில் உலக அரங்கில் இது தற்போதைய இந்திய அரசின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.…
-
- 22 replies
- 5.6k views
-