உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26884 topics in this forum
-
மாணவர்களை "கியூ" வரிசையில் வரச் சொல்லி, உறவு கொண்ட ஆசிரியை! விர்ஜீனியா, அமெரிக்கா: தனது வீட்டில் மாணவர்களை வரிசையில் வரச் சொல்லி ஒவ்வொருவராக செக்ஸ வைக்கச் சொன்ன ஆசிரியையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரி்க்காவை இந்த சம்பவம் ஷாக் அடிக்க வைத்துள்ளது. அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை - மாணவர்கள் உறவு தொடர்பான கைதுகள் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாணவர்களை வீட்டுக்கு வரச் சொல்லி அவர்களை வரிசையில் நிறுத்தி ஒவ்வொருவராக உறவு கொண்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் எரிகா லின் மேசா. 28 வயதாகும் இவர் ஸ்டாப்போர்ட் நகரில் உள்ள கலோனியர் போர்ட் உயர்நி…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: கையெழுத்திடும் வல்லரசு நாடுகள்[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 03:10.19 பி.ப GMT ] அமெரிக்காவில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று பல ஆண்டுகளாக வல்லரசு நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஈரான் அதை மறுத்து வந்தது. மின்சார உற்பத்திக்காகத்தான் அணுசக்தி திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருவதாக அந்த நாடு கூறியது. இருந்தபோதிலும், அதை ஏற்காமல் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஈரானின் அணு…
-
- 2 replies
- 676 views
-
-
சாலையில் வாகனங்கள் இனி சிவப்பு விளக்கிற்காக காத்திருக்க தேவையில்லை: பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 06:51.00 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸ் சாலைகளில் சைக்கிள்களில் வரும் நபர்கள் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்கிற்காக காத்திருக்காமல் தொடர்ந்து பயணக்கலாம் என பாரீஸ் அரசு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இரண்டு சக்கர மோட்டார் சைக்கள்கள் மற்றும் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையில் உள்ள சிக்னலை மீறினால், போக்குவரத்து பொலிசாருக்கு அபராதம் செலுத்துவது கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வந்தது. வாகனம் நெருக்கம் அதிகம் உள்ள பாரீஸ் சாலைகளில் இரண்டு சக்கர சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சைக்கிள்…
-
- 0 replies
- 650 views
-
-
ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் கிரேக்கத்துக்கு 'எப்படிப்பட்ட சூழலிலும்' இனிமேல் இன்னொரு கடன்மீட்புத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என்று ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் எச்சரித்துள்ளார். பிரசல்ஸில் யூரோவலய தலைவர்களின் முக்கிய சந்திப்புக்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே, விட்டுக் கொடுப்புக்கு தயாராக இருப்பதாக கிரேகத்தின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கூறியுள்ளார். யூரோவலய நிதியமைச்சர்களின் 'மிகவும் சிரமமான' இரண்டு-நாள் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அரச தலைவர்களின் இந்த சந்திப்பு நடக்கின்றது. கடுமையான புதிய சட்டங்களை கிரேக்கம் புதன்கிழமைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று யூரோவலய நிதியமைச்சர்கள் கூறியு…
-
- 6 replies
- 625 views
-
-
விமானத்தின் கழிவறைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்களை எறிந்த விமானி அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி நோக்கிச்சென்று கொண்டிருந்த விமானமொன்றில் பயணிகளுக்கு எட்டக்கூடியதாக துப்பாக்கித் தோட்டாக்களை வீசிய விமானியொருவர், பின்னர் அவற்றை கழிவறைத் தொட்டியிலிட்டு நீருடன் அடித்துச் செல்லவிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிகளை வைத்திருப்பது தொடர்பில் அமெரிக்காவைவிட ஜேர்மனியின் சட்டங் கள் மிக இறுக்கமானவை. ஜேர்மனிய சட்டப்படி, தோட்டாக்களை விமானத்தில் வைத்திருப்பது குற்றமாகை யால் ஜேர்மனியை அடைவதற்கு முன்னர், மேற்படி தோட்ட…
-
- 0 replies
- 446 views
-
-
இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால்தான் அமெரிக்காவின் ஹாட் டாபிக். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், அமெரிக்க அரசியல் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய லூசியானா மாகாண கவர்னராக உள்ள பாபி ஜிண்டால், தனது தேர்தல் பிரச்சாரத்தை நியு ஆர்லியன்ஸ் நகரில் அதிரடியாகத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், ” அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசிக் கொண்டிருக்காமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன். ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், பணக்கார அமெரிக்கர்கள், ஏழை அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள் என்று யாரும் இல்லை. நாம் அனைவருமே அமெரி…
-
- 2 replies
- 604 views
- 1 follower
-
-
கணவனை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி: அதிர்ச்சி வீடியோ வெளியானது உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக கேஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இச்சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது. சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன. இந்நிலையில் உறவினர்களின் தூண்டுதல் பேரில் ள் கணவனை மனைவி கேஸ் டியூப்பால் சரமாரியாக தாக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் அவரை அடிக்க தூண்டுவதும், அந்த பெண் அடிக்கும் போது அந்த காட்சிகளை உறவினர்கள் வீடியோ எடுப்பதும் பின்னணி குரலில் பதிவாகியுள்ளத…
-
- 5 replies
- 1.4k views
-
-
கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் அப்பெண்ணுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். த…
-
- 6 replies
- 2.7k views
-
-
ஜெர்மனியில் 18 வயது வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி, 2 பேர் காயம் பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பவாரியாவில் காரில் இருந்தபடி பொதுமக்களைப் பார்த்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் இருக்கும் அன்ஸ்பாக் நகரில் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அவர் திடீர் என்று காரை நிறுத்தி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாலையில் சென்றவர்களை நோக்கி சுட்டார். இதில் மூதாட்டி, சைக்கிளில் சென்ற ஆண் ஆகிய இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டு பேர் மீது குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின்.…
-
- 2 replies
- 369 views
-
-
தாஷ்கண்ட்டில் இந்திய வம்சாவளியினர் மற்றும் அந்நாட்டு மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி. படம் - பிடிஐ பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து நேற்று கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்றார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற் காக மோடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி 8 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினார். முதல்கட்டமாக அவர் உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமூவ்வை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இந்தியர் கள் மத்தியில் மோடி பேசியதாவது: எந்தவொரு நாட்டின் பொருளா தாரம் வலுவாக இருக்கி…
-
- 0 replies
- 162 views
-
-
துவாலு நாட்டின் கரையோர வீடுகள் பல ஏற்கெனவே கடலால் சூழப்பட்டுவிட்டன.| கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் உலகின் 4-வது மிகச் சிறிய நாடான துவாலு, புவி வெப்பமயமாதலினால் முதலில் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதென்று அந்நாட்டு பிரதமர் தனது உருக்கமான வேண்டுகோளை உலக நாடுகளிடம் பதவி செய்துள்ளார். பாரீஸில் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலான பயணத்தை உலகின் 4-வது மிகச் சிறிய நாடான துவாலுவின் பிரதமர் எனிலே ஸ்போகா மேற்கொண்டுள்ளார். பசபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா மற்றும் ஹவாலிக்கு நடுவே குட்டித் தீவுகளை கொண்ட நாடு தான் துவாலு. வெறும் 10 ஆயிரம் பேருக்கான தேசமாக உள்ள துவாலு, பருவ…
-
- 0 replies
- 839 views
-
-
இந்திய அரசு எவ்வளவு சகிப்புத்தன்மையற்று இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருப்பதோடு, வரவர நாம் எவ்வளவு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கே சுட்டிக்காட்டியிருக்கிறது கிறிஸ்டினா மேத்தா விவகாரம். அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியரான கிறிஸ்டினா மேத்தா, ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்புக்கான ஆய்வில் ஈடுபட்டுவந்தவர். காஷ்மீரில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன, அங்குள்ள குடிமைச் சமூகம் என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற ஆய்வில் இறங்கியதன் தொடர்ச்சியாக, அவசர அவசரமாக, வலுக்கட்டாயமாக அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது இந்திய அரசு. கிறிஸ்டினா மேத்தா ஏதோ வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலோ, காஷ்மீர் விவகாரம் சர்வதேசக் கவனம் ப…
-
- 0 replies
- 208 views
-
-
அமெரிக்கா நீதிமன்றில் நண்பரை திருடனாக சந்தித்த பெண் நீதிபதி ஒருவர் அதிர்ச்சி அடைந்ததோடு குற்றவாளி மனம் உருகி அழுத சம்பவம் பார்ப்பவர்களின் மனதை நெகிழவைத்துள்ளது. அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு 49 வயதுடைய ஆர்தர் பூத் என்ற நபர் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி களேசர் என்பவர் விசாரணை செய்தார். குற்ற வாளியாக நின்று கொண்டி நபரை பார்த்த நீதிபதி கிளேசர் அதிர்ச்சியடைந்தார். திருடனாக நின்ற குற்றவாளி அவரது பாடசாலை காலத்தில் நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் மியாமி பகுதியில் உள்ள நயூடிலஸ் நடுநிலைப் பாடசாலையில் ஒன்றாக படித் துள்ளனர். வழக்கில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததும் அடையாளம் …
-
- 3 replies
- 358 views
-
-
‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்பது வெறும் பாட்டுக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் உண்மை நிலவரம். சில தெருக்களில் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி சாமானியர்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் சில தெருக்களில் வாழ்வது பற்றி சாமனியர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாரம்பரியம், நவீனம், வாழ்க்கை வசதிகள் அனைத்தும் கொண்ட முதல் தரமான தெருக்கள் இவை. இங்கு உலகின் பிரபலங்கள் வசிப்பதும் ஒரு காரணம். உலக அளவில் பணக்கார தெருக்களை பார்க்கலாம். இந்தியாவின் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதி அலுவலகம் அமைப்பதற்கான அதிக செலவு கொண்ட பகுதியாக சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 162 டாலர்கள் என்கிறது அந்த ஆய்வு. சராசரிய…
-
- 0 replies
- 555 views
-
-
முதல்வர் ஜெயலலிதா நேற்று ஸ்ரீரங்கத்தில் கருணாநிதியை கண்டித்து பேசியதற்கு இன்று கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,””திருவரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பற்றிய செய்திகளைக் கூறுவதைவிட, என்னையும், ஏனைய எதிர்க்கட்சியினரையும் கடுமையாகத் தாக்குவதில்தான் அக்கறை காட்டியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை; நமது முதல் அமைச்சருக்கு வாயைத் திறந்தாலே, மற்றவர்களைத் திட்டுகின்ற வார்த்தைகள் தான் வருகிறதே தவிர, நல்ல வார்த்தைகளே வருவதில்லை. அவருடைய சொந்தத் தொகுதிக்குச் சென்று, அரசு நல்வாழ்வுத் திட்டங்களை வழங்குகின்ற விழா நடைபெறுகிறது. அங்கே நான் எப்படி ஞாபகத்திற்கு வந்தேன்? என்னைத் திட்டுவதற்காக ஒ…
-
- 5 replies
- 5.9k views
-
-
வானில் பறந்து கொண்டிருந்த ராஜ கழுகு மீது காகம் ஒன்று இறங்கிய காட்சி படம் பிடிக்கபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிகழ்வு வாஷிங்டன் கடல் மீது பறந்து கொண்டிருந்த போது நடந்து உள்ளது. இதனை அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் படம் பிடித்து உள்ளார். ஒரு ராஜ கழுகு ஒன்று தனது இரையை தேடி வாஷிங்டன் கடல் பகுதி மேல் பறந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு காகம் பறந்து கொண்டிருந்த கழுகின் மீது இறங்குவதற்கு முயற்சி செய்து இறங்கியும் நின்றது. இந்த நிகழ்வுக்கு சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன.இந்த அபூர்வ காட்சி அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் ( வயது 50) படம் பிடித்து உள்ளார். இது குறித்து பூசான் கூறியதாவது:- ஒரு இரைதேடும் கழுகை படம் பிடிக்க …
-
- 1 reply
- 1k views
-
-
துருக்கியின் ''அய்வசிக்'' நகர கடற்கரையோரமாக கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்றை கரையோரக் காவற்படை மீட்டுள்ளது. மிதவை இருக்கை ஒன்றில் கரையோரமாக இருந்த இந்த 10 மாதக் குழந்தை, அதனது பெற்றோருக்கு தெரியாமலேயே கடலின் அலைகளால் அடித்து நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்கள் இது கடலுக்குள் சென்று விட்டது. மெல்டா இல்கின் என்னும் இந்தக் குழந்தை கடலில் மிதப்பதை பார்த்து காவலர்களிடம் ஏனையவர்கள் முறையிடும்வரை அதனது பெற்றோருக்கு அதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. குழந்தையை கடலோரக் காவற்படையின் படகு மீட்டதும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/07…
-
- 2 replies
- 418 views
-
-
சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டுமெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். சமஸ்கிருத மொழியை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய சுஷ்மா இவ்வாறு கூறியிருக்கிறார். 60 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சமஸ்கிருத வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பேசிய அவர், கங்கை அதனுடன் இணையும் நதிகளை புனிதமாக்குவது போல, சம்ஸகிருதமும் தூய்மைப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். பழைய மொழிகளில் ஒன்றான சம்ஸகிருதம் இந்தியாவில் மிகக் கு…
-
- 2 replies
- 317 views
-
-
மார்க்கின் ஒரு நாள்! ஃபேஸ்புக்ல தூங்கி ஃபேஸ்புக்ல கண் விழிக்கிற நாம ஒரு நாளாச்சும் மார்க் ஸுக்கர்பெர்க்கைப்பற்றி சில வித்தியாசமான தகவல்களைத் தெரிஞ்சுக்காட்டா எப்பிடி? நம் எல்லோரையும் போல 10 டு 5 தான் அவருடைய வேலை நேரம். சில நேரங்களில் 8 மணி வரை உட்கார்ந்திருப்பார். ஃபேஸ்புக்கில் ரவுண்ட் வருவது அவருடைய ஹாபி. தன் அதிகாரப்பூர்வத்தளத்தில் (https://www.facebook.com/zuck) புதிதாக அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பத்தை தன் கைப்படவே ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்! ஒரே மாதிரியான க்ரே கலர் வட்டக்கழுத்து டி ஷர்ட்களைத்தான் தன் வார்ட்ரோபில் நிறைய அடுக்கிவைத்திருக்கிறார். முக்கியமான மீட்டிங்கிற்குக்கூட ட்ரெஸ்கோட் கட்டாயம் என்ற நாட்களில் மட்டும் கோட் சூட் அணிந்துகொள்கிறார். ‘எனக்கு இப்படி ஒ…
-
- 0 replies
- 938 views
-
-
சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் திருமணம் செய் வதற்கான தனது விருப்பத்தை வெளியிடவுள்ளதாக வேடிக்கையாகத் தெரிவித்துள் ளார். அமெரிக்காவில் 50 மாநிலங்களில் தன்னினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து கேலி செய்யும் வகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். பராக் ஒபாமா தன்னினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதையடுத்து தான் முடிவொன்றுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த ரொபேர்ட் முகாபே, “தேவைப்படும் பட்சத்தில், நான் வோஷிங்டனுக்குச் சென்று பராக் ஒபாமாவின் முன் முழந்தாளிட்டு அவரது கையை…
-
- 1 reply
- 314 views
-
-
கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்தில் மூடப்பட்டிருக்கும் வங்கிகளின் முன்பு நிற்கும் பொதுமக்கள். கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன. இன்றைய தொடக்க வணிகத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டதட்ட 4 சதவித அளவுக்கு வீழ்ச்சி கண்டன. எனினும் சிறிது நேரம் கழித்து சிறு முன்னேற்றம் இருந்தது. முன்னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டன. இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்…
-
- 1 reply
- 318 views
-
-
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கேமிராவில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெலி ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, போட்டோகிராபியை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள…
-
- 0 replies
- 333 views
-
-
முக எலும்பில் வளர்ச்சியடைந்த புற்றுநோய்க்கட்டியை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு பண வசதியற்ற நபரொருவர், தனக்குத் தானே சுயமாக சத்திரசிகிச்சைகளை செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்ஸொயு நகரில் வசிக்கும் யு யி பேயி என்ற மேற்படி நபர், கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் 10 தடவைகள் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட உபகரணங்களையும் தனது கையட க்கத்தொலைபேசியையும் பயன்படுத்தி தனது குளியலறை கண்ணாடியின் முன்பாக இந்த அறுவைச்சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். தனது அறுவைச் சிகிச்சைகள் ஒவ்வொன் றுக்கும் 30 நிமிடங்களை செலவிட்டுள் ளார். வறுமையி…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழ் செய்திகள் 1) இஸ்லாமியர்களுக்கு ஜப்பான் நாட்டில் குடியுரிமை கொடுப்பதில்லை ... 2)இஸ்லாமியர்கள் ஜப்பான் நாட்டில் நிரந்தரமாக வசிக்கவும் அனுமதி இல்லை 3) ஜப்பானில் இஸ்லாம் மதம்பரப்ப கடும் தடை உள்ளது 4) ஜப்பான் நாட்டின் பல்கலை கழகங்களில் அரபி அல்லது இஸ்லாமியர்களின் மொழிகள் எதையும் கற்றுகொடுக்கபடுவதில்லை 5) அரபி மொழியில் இருக்கும் குரான் இறக்குமதி செய்ய தடை 6)ஜப்பான் நாட்டின் புள்ளிவிவரங்களின் படி 2 லட்சம் இஸ்லாம்மியர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டும் அனுமதிகொடுக்கப்ட்டுள்ளது அவர்களும் ஜப்பானிய நாட்டின் சட்டதிட்டபடியே வாழவேண்டும் 7)உலகின் உள்ள நாடுகளில் மிக குறைந்த அளவு தூதரகங்களை இஸ்லாமிய நாடுகளில் வைத்துள்ளது ஜப்பான் 8)ஜப்பான் மக்கள் இஸ்லாத்தால் எப்போதும் கவரப…
-
- 19 replies
- 4k views
-
-
ருவாண்டாவில் இனப்படுகொலையோடு சிங்கங்களும் ஒழிந்தன ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சிங்கங்கள் முதல்தடவையாக நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக வனவிலங்குத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு 1994-ம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், சிங்கங்களும் ஒழிந்துபோயின. இரண்டு ஆண் சிங்கங்களும் ஐந்து பெண் சிங்கங்களும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திங்களன்று விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன. இந்த சிங்கங்கள் அக்காகேரா தேசிய வனப்பகுதிக்குள் விடப்படும். நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இந்த சிங்கங்கள் மீள்-அறிமுகத்தை அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். இனப்படுகொலைக்குப் பின்னர், இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இந்த வனப்பகுதிக்குள் கு…
-
- 0 replies
- 160 views
-