உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது. மூட்டைக்கடி தாங்கேலாமல் மருந்தடிக்க கூப்பிட்டு உள்ளே போனவர்கள் சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பொலிசுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து நடந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இதற்குப் பின்னால் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மருந்தடிக்கிறவர்கள் வந்து பார்த்த போது 4-5 பெண்கள் நிலத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். பெரியபெரிய பொதிகள் அறையில் இருந்துள்ளன. 100 பேருக்கு மேற்பட்டவர்கள் இதில் சமபந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கார் திருட்டைத் தடுப்பதற்காக டொரண்டோவில் தனியார் வாகனப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள தானாக இயங்கும் தடுப்பு அமைப்புகள். கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் பதவி, பிபிசி நியூஸ், 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2022, அக்டோபர் மாதத்தின் ஒரு காலை வேளையில் லோகன் லாஃபிரெனியெர் தன்னுடைய வாகன நிறுத்தும் இடம் காலியாக இருப்பதை பார்த்தார். அவருடைய புதிய ரேம் ரெபெல் டிரக் கார் காணாமல் போயிருந்தது. ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மில்டன் நகரத்தில் அமைந்துள்ள அவருடைய வீட்டுக்குள் நடுநிசியில் முக்காடு அணிந்திருந்த இரு நபர்கள் உள்ளே நுழைந்து அவரின் காரை எளிதாக ஓட்டிச் செல்வது ப…
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 04:02 PM காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள…
-
- 1 reply
- 503 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 01:06 PM (ஆர்.சேதுராமன்) 737 மெக்ஸ் ரக விமானங்கள் தொடர்பில் அமெரிக்க அரசை ஏமாற்றுவதற்கு சதி செய்தமை தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டு ஒன்றில், தான் குற்றவாளி என ஒப்புக்கொள்வதற்கு போயிங் நிறுவனம் சம்மதித்துள்ளது என அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. டெக்ஸாஸ் நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்த மனுவில் நீதித் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. விமான அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 487 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. போயிங் நிறுவனம் தயாரித்த 737 மெக்ஸ் ரக விமானங்கள் 2018…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 10 JUL, 2024 | 05:43 PM ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன. 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு தீர்வு…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் இடையே ஜூன் 27-ஆம் தேதி நடந்த நேருக்கு நேர் விவாதம், அமெரிக்க அரசியல் களத்தில் பல கேள்விகளையும், குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவா…
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 11:19 AM உக்ரைனின் சிறுவர் மருத்துவமனை உட்பட பல பகுதிகள் மீது ரஸ்யா தாக்குதல் மேற்கொண்ட தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதை காண்பது கடும் ஏமாற்றமளித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ரஸ்ய ஜனாதிபதியை மொஸ்கோவிற்கு வெளியே உள்ள நோவோ ஓகாரியோவோ என்ற இடத்தில் சந்திப்பில் ஈடுபட்டிருந்த அதேவேளை உக்ரைன் நகரங்களை காலைவேளையில் ரஸ்யாவின் ஏவுகணைகள் தாக்கின. இந்த தாக்குதல்கள் காரணமாக 37 கொல்லப்பட்டுள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். ரஸ்யா உக்ரைனின் மீது இரண்டு வருடங்களிற்கு முன்ன…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோதி முதன்முறையாக ரஷ்யா சென்றுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக லண்டனிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப…
-
-
- 7 replies
- 805 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 08 JUL, 2024 | 06:30 AM பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலாவது சுற்று தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதும் அதில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பிரான்சில் இரண்டாம் உலக யுத்தத்…
-
-
- 6 replies
- 614 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கெய்வன் ஹொசைனி பதவி, பிபிசி பாரசீகம் 7 ஜூலை 2024 50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் …
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்தத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுவலூஃப் மற்றும் டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, மத்திய காஸாவில் உள்ள நுசேராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டடம் தங்குமிடமாக இருந்தது. இஸ்ரேல் பாதுகா…
-
- 1 reply
- 647 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 07 JUL, 2024 | 10:28 AM புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசி சுனாக் அரசாங்கத்தின் திட்டத்தினை தனது அரசாங்கம் தொடராது என பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டம் அது ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது அது ஒரு போதும் ஒரு தடுப்பு நடவடிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையை உண்மையில் கட்டுப்படுத்த எந்த போலியான நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு நான் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டத்தினை நாங்கள் உள்வாங்கும் பிரச்சினை என அவர் விபரித்துள்ளார். ருவாண்டா திட்டம் தோல்வியட…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மைக் வென்ட்லிங் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது வேட்புமனு மீதான ஜனநாயகக் கட்சியின் கவலையைத் தணிக்கும் முயற்சியாக ஒரு பிரைம் டைம் நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார். அந்த பேட்டியில், "சர்வவல்லமை படைத்த இறைவன்" மட்டுமே அவரை மறுதேர்தலுக்கான வேட்பு மனுவைத் திரும்பப் பெற வற்புறுத்த முடியும் என்று கூறியுள்ளார். பைடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவர் மற்றொரு பதவிக் காலத்துக்கு பணியாற்றத் தகுதியானவர் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் அறிவாற்றல்…
-
-
- 3 replies
- 771 views
- 1 follower
-
-
05 JUL, 2024 | 05:08 PM தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகியுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராகியுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் டவுனிங் வீதியிலிருந்து பிரிட்டன் மக்களிற்கு உரையாற்றுவார். முன்னதாக மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் ரிசி சுனாக் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். https://www.virakesari.lk/article/187773
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம் கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்ற…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:26 AM அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுக…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி. பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2024/1391016
-
-
- 11 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பானில் கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 2018இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் 1950கள் மற்றும் 1990களுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,500 மாற்றுத் திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் அப்போது ஜப்பானில் அமலில் இருந்த யூஜெனிக்ஸ் (Eugenics) சட்டம். இந்தச் சட்டமும், அதன் மூலம் நடத்தப்பட்ட கட்டாயக் கருத்தடைகளும் அரசமைப்பிற்கு எதிரானது என்று ஜப்பான் உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
யானைத் தந்தத்தில் பவுடர், காண்டாமிருக கொம்புகளில் கூழ் - கடத்தல்காரர்களின் புதிய உத்திகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யானை தந்தங்களை ஆபரணங்களாக மாற்றி கடத்தல்காரர்கள் ஏற்றுமதி செய்கின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் நிருபர், பிபிசி உலக சேவை 6 மணி நேரங்களுக்கு முன்னர் யானையின் தந்தங்கள் பவுடராக மாறுகிறது, காண்டாமிருக கொம்புகள் அரைக்கப்பட்டு கூழாக்கப்படுகிறது, பாம்புகள் உருளைக் கிழங்கு சிப்ஸ் கேன்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன. காட்டுயிர் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சில கடத்தல் நுட்பங்கள் இவை. இதை அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் வெளிய…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,API கட்டுரை தகவல் எழுதியவர், வில் கிராண்ட் பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ 3 ஜூலை 2024, 15:00 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் ’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார். கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார். “பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூ…
-
- 2 replies
- 716 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் களம் காண்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் திகதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார். எனவே இந்த விவ…
-
-
- 3 replies
- 710 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 11:15 AM பிரிட்டனில் நாளை பொதுத்தேர்தலில்மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்தும் தொழிற்கட்சி அதிக ஆதரவு காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளி;ல் காணப்பட்ட நிலையில் மாற்றமில்லை தொழில்கட்சிக்கான ஆதரவு சிறிய அளவில் குறைந்துள்ளது என தெரிவித்துள்ள கார்டியன் எனினும் அந்த கட்சியே தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சியின் 14 வருடகால ஆட்சியின் பின்னர் கெய்ர் ஸ்டாமெரின் தொழில்கட்சி2022 முதல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்…
-
-
- 28 replies
- 1.5k views
- 1 follower
-
-
01 JUL, 2024 | 09:22 PM அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளிற்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு தொடர்பான முக்கிய அதிகாரங்கள் தொடர்பில் விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்சிகளின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆறுகென்சவேர்ட்டிவ் நீதிபதிகள் விடுபாட்டுரிமையுள்ளது என தெரிவித்துள்ளனர். எனினும் முன்னாள் ஜனாதிபதிகள் தனிப்பட்டரீதியில் எடுத்த நடவடிக்கைகளிற்கு வழக்கு தொடர்வதில் எந்த விடுபாட்டுரிமையும் இல்லை என ந…
-
- 1 reply
- 370 views
- 1 follower
-
-
01 JUL, 2024 | 09:01 PM தென்கொரிய தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் ஒன்றுமோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கார்கள் மீது மோதிய பின்னர் குறிப்பிட்ட கார் பொதுமக்கள் மீது மோதியுள்ளது. 60 வயது நபர் ஒருவரே குறிப்பிட்ட காரை செலுத்தியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187434
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
பிரான்ஸில் வெடித்தது கலவரம்! பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊ…
-
- 0 replies
- 343 views
-