Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறி தகவல்களை தர முடியாது சுவிஸ் அரசு திட்டவட்டம் பெர்ன்:'கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது' என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல…

    • 0 replies
    • 294 views
  2. சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு Saturday 2014-05-10 MORE VIDEOS பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொ…

    • 0 replies
    • 352 views
  3. போபாலில், பல்வேறு கனவுகளுடன் மணமேடை ஏறிய மணப்பெண்ணை, சொந்த அத்தை மகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவரான ஜெயஸ்ரீக்கும் (26) ரோஹித் என்ற முதுநிலை மருத்துவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று மணமேடையில் இருவரும் அமர்ந்திருந்த போது, ஜெயஸ்ரீயின் அத்தை மகன் அனுராக் (31) நாட்டுத் துப்பாக்கியால் மணமகளை சுட்டுக் கொன்றான். கையில் அட்சதையுடன் காத்திருந்த உறவினர்கள், வெடிகுண்டு சப்தத்தால் அதிர்ந்து போயினர். கைதான கொலையாளி அளித்த வாக்குமூலத்தில், தனது சொந்த மாமன் மகளான ஜெயஸ்ரீயை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், ஒரு சாதாரண பணியில் இருந்த என்னுடைய காதலை மருத்துவரான ஜெயஸ்ரீ ஏற்றுக் கொள்ளவில்லை. இத…

    • 0 replies
    • 459 views
  4. புதுடெல்லி::காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பயணம் செய்த விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை உத்தரபிரதேசத்தில் இருந்து தனியார் விமானம் மூலமாக டெல்லி வந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய இறங்கு தளம் பகுதியில் கடுமையான காற்று வீசியது. இதனால் விமானத்தை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து ஆக்ராவுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. அங்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கான தகவலை விமானி தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானியின் தகவலையடுத்து ஆக்ராவில் அவசரமாக தரையிறக்குவதற்கான ஏ…

  5. பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்காவுக்கு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி வழியாக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் ரயில் இருப்பு பாதைகளை அமைத்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா நீரிணைப்பு வழியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக பறக்கும் ரயிலை விடுவதற்கு சீன பொறியியல் அகடமி திட்டமிட்டு உள்ளது. சீனாவில் இருந்து ரஷ்யா மற்றும் அலாஸ்கா வழியாக கடலுக்கு அடியில் 200 கிலோ மீட்டர் தூரம் தொடர் சுரங்க ரயில் பாதை அமைத்து, 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவை இணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் …

  6. மும்பை: கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை கடலில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எல். கங்கா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. http://news.vikatan.com/article.php?module=news&aid=27749

  7. சர்வதேச உணவகப் பட்டியலில் பாங்காக் இந்திய உணவகம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச விழாவில், 2013ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இந்தியாவில் உள்ள உணவகங்கள் ஒன்றுக் கூட அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனினும் இந்திய வகை உணவைப் பரிமாறும் ஒரே ஒரு உணவகம் அந்தப் பட்டியலில், 17ஆம் இடத்தை பிடித்துள்ளது. ‘ககன்’ என்ற அந்த உணவகம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் அமைந்துள்ளது. சர்வதேச சமையல்காரர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் உணவக விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் ஒரு கருத்து கணிப்பின் அடிப்படையில், ‘ரெஸ்டாரண்ட்ஸ்’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை இந்த வருடாந்திர பட்டியலை வெளியிடுகின்றது. டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் …

    • 0 replies
    • 435 views
  8. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 8000 மைல் தூரம் கொண்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 125 மைல் தூரம் கடலுக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கு அடியில் 125 மைல் தூரம் சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்லும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு நாட்களில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரயில் சைபீரியா, ரஷ்யா வழியாக சென்று பின்னர் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக அமெரிக்க மாகானமாகிய அலாஸ்காவை அடையும். அலாஸ்க…

    • 0 replies
    • 495 views
  9. பாகிஸ்தானின் இடைசேவைகள் உளவுத்துறை இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதால் மூன்று கடற்படை ரோந்து படகுகள் இராமேஸ்வரத்திலுள்ள கடற்படை துறைக்கு வந்துள்ளன. இது தொடர்பாக மேலும் தகவல் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இப்பிராந்தியத்தில் கடற்படையின் பலத்தை அதிகரிப்பது பாகிஸ்தான் இடைசேவைகள் உளவுத்துறையின் ஊடுருவலை தடுப்பது இதன் நோக்கமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் இடைசேவைகள் உளவுத்துறை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததனால் கரையோர பாதுகாப்பு அணி இப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஊடுருவலை பூரணமாக தடுப்பதற்காக புதியதொரு பாதுகாப்பு முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என க…

  10. சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மே 18ஆம் தேதி சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் விளையாட இருந்தன. அதேபோல், 22ஆம் தேதி சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னையில் விளையாட இருந்தன. மேலும், மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐ.பி.எல். இரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த 4 ஐ.பி.எல். போட்டிகளும் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றத்துக்கான காரணம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேலரிகள் திறப்பு பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதாலும், இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளி…

  11. அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர் news தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக்துறை அமைச்சராக இருந்த நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் இடைக்காலப் பிரதமராக நியமிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக, தாய்லாந்து நீதிமன்றில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரதமர் பதவியை பயன்படுத்தி, மூத்த அதிகாரியை பதவி மாற்றம் செய்ததன் மூலம் ஷினாவத் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இ…

  12. கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்! [Thursday, 2014-05-08 21:28:50] கனடா நாட்டில் - ஒன்றாரியோ மாகாணத்தில் உத்தியோகபூர்வமாகத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வைன் கத்லீனால் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டவுடன் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆங்காங்கே ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. யூன் மாதம் 12ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக் கனடியன் பிறஸ் என அழைக்கப்படுகின்ற செய்தித் தாபனமானது தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவில் 3 முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் கடந்த கிழமையிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் வைன் கத்லீன் கிச்சினர் பகுதியில…

  13. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர், மோனிக்கா லூயின்ஸ்கி, அவ்விவகாரம் குறித்து ,தனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து, மனம் திறந்திருக்கிறார். அமெரிக்காவின் 'வேனிட்டி பேர்' என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், இப்போது 40 வயதாகும் மோனிக்கா, கிளிண்டனுடன் நடந்த இந்த பாலியல் தொடர்பு குறித்து தான் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். "பலியாடாக்கப்பட்டேன்"அதிபர் கிளிண்டன் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கூறியிருக்கும் மோனிக்கா, ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு என்பது இருவரும் மனதொப்பி நடந்ததுதான் என்றும் கூறியிருக்கிறார். 1998ல் பில் கிளிண்ட்ன் அதிபர் காலத்தின் முடிவில் நடந்த இந்த பாலியல் சம்பவம், பில் கிளிண…

  14. புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அணை தொடர்பாக கேரளா அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, அதன் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரள அரசு தடை விதித்தது. அணை பலமாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை தவிர்க்க, அணை பாதுகாப்பு சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு சொந்தம் எனவும் கூறியது. இதையடுத்து, கேரள அரசை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. …

  15. சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி காலை சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுவாதி என்ற ஆந்திர இளம்பெண் பலியானதோடு, 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு குறித்து துப்பு கொடுத்தால், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி. அறிவித்துள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=27678

  16. ஜெனீவா: பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தபோது, சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர் ஆர்ச்பிஷப் சில்வானோ தொமாசி கலந்து கொண்டார். அப்போது, பாலியல் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பித்தார். அதில், ''கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி ந…

    • 2 replies
    • 1.4k views
  17. பிரிட்டன் மக்கள்தொகையில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர் உள்ளிட்ட ஆசிய நாட்டவர், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளைச் சேர்ந்த கறுப்பு இனத்தவர் அதிகரித்து வருகின்றனர். இப்போது பிரிட்டன் மக்கள் தொகையில் 14 சதவீதமாக அதாவது 80 லட்சமாக உள்ள இவர்கள், 2050-ம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததைவிட ஆசியர்களும், கறுப்பு இனத்தவரும் இரு மடங்காக அதிகரித்துள்ளனர். அதேநேரத்தில் இந்தியர்கள் தவிர பிற ஆசிய ஆப்பிரிக்க நாட்டவரின், வேலையின்மை தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளை இனத்தவருடன் ஒப்பிடும்போது ஆசிய, ஆப்பிரிக்க மாணவர்கள் பள்ளி யில் இருந்து இடைநின்று விடுவது அதிகம் http://tamil.thehindu.com…

    • 0 replies
    • 350 views
  18. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜாகீர் உசைனை 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் செயல்பட்டதாகக் கூறி இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசைன் என்பவரை கடந்த மாதம் 29 ஆம் திகதி சென்னையில் க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை புழல் மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், எழும்பூர் பெருநகர 13 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாகீர் உசைனை திங்கட்கிழமை ஆஜர்படுத்திய க்யூ பிரிவு பொலிஸார் அவரை 9 நாட்கள் பொலிஸ் காவலில் எடு…

  19. தோமரியான்கன்ஞ்ச்: தாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதாலேயே தம்மை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான வார்த்தை போர் தீவிரம் அடைந்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி நடந்து வரும் பிரச்சாரத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் உருவாகியுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மோடி மீதும், அவர்கள் மீது மோடியும் மிக கடுமையான விமர்சனங்களை பிரசாரத்தில் முன்வைத்து வருகின்றனர். இதனிடையே அமேதி தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானிக்கு…

  20. மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மோடியின் இடுப்பில் கையிற்றை கட்டி அவரை சிறையில் அடைக்கவேண்டுமென ஆவேசமாக பேசியுள்ளார். இந்திய-வங்கதேச எல்லையில் இருந்து சில கி.மீ தூரம் உள்ள போங்கோவன் என்னும் இடத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெங்காலி பேசுபவர்களுக்கும் பெங்காலி மொழி பேசாதவர்களுக்கும் இடையே பிளவு உண்டாக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. மக்கள் மத்தியில் வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரம் உண்டாக்க திட்டமிடும் இவருக்கு பிரதமர் ஆக எந்த உரிமையும் இல்லை. தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறும் இவரின் இடுப்பை சுற்றி கையிற்றை கட்டி சிறையில் அடைக்கவேண்…

  21. புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்கினால் மருத்துவம் தொடர்பான தகவல்கள் முடக்கப்பட்டு விடும் என்றும், எனவே ஆபாச இணைய தளங்களை முடக்கும் சாப்ட்வேரை நிறுவிய பின்னரே கம்யூட்டரை விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கமலேஷ் பஞ்ச்வானி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர…

  22. காணாமல் போன மலேசிய விமானம் கடத்தல்?: கோலாலம்பூரில் 11 தீவிரவாதிகள் கைது [sunday, 2014-05-04 09:26:26] மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த எப்.பி.ஐ மற்றும் ரகசிய புலனாய்வு மையம்(எம்.ஐ.6), இத்தீவிரவாதிகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தது. இதன் மூலம் தீவிரவாதிகள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தீவிரவாதிகளிடம் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த முக்கிய உளவு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென் இந்தி…

  23. கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் : ஐரோப்பியசெய்தியாளர் லெனின் பாதச் சுவடுகளைப் பின்பற்றிக் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புரட்சியை நிறுத்தி அரசியற் கட்டுமான அமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியமெனக் கருதப்படுகிறது. வருங்காலங்களில், மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்ட கூட்டு வேலைத் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரையில் பேச்சு மட்டுமிருந்த டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு மலர, லெனினின் பாதை பின்பற்றப்படவும் உள்ளது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம் பெற்ற மாபெரும் புரட்சிக் காலத்தில், லெனினால் எழுதப்பட்ட "தேசமும் புரட்சியும்" எனும் நூலில…

  24. This picture is haunting and it’s been floating around the internet with the sentence: The last sentence a 3-year-old Syrian said before he died: “I’m gonna tell God everything” And that’s equally haunting. It’s impossible to verify but the picture tells a story about the pain and suffering that exists in Syria right now. There are many in the media who would like to say this is because president Bashar al-Assad is a ruthless killer. And that’s half true. Like other government leaders – he has engaged in war and with that war has come the death of tens of thousands and the displacement of over 1 million Syrians now living in refugee camps. But this hasn’t alw…

    • 0 replies
    • 1.6k views
  25. காபூல்: ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.